Friday, April 12, 2013

கூட்டுறவுத் தேர்தல் எனும் கேலிக் கூத்து!


தமிழ்நாட்டில் கூட்டுறவுத் தேர்தல்(?) முதல் கட்டம் ஏப்ரல் 5ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இரண்டாவது கட்டம் 12ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 22,532 கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டங் களாக தேர்தல் நடைபெற அறிவிப்பு வெளி யிடப்பட்டது. முதற்கட்டத்தில் 5499 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் 4735 சங்கங்களுக்கு தேர்தலே நடைபெறாமல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப் பட்டது.

தேர்தல் நடைபெற்ற 410 சங்கங் களில் வாக்களிக்க விடாமல் தடுத்தது, வாக்குப் பெட்டிகளில் மை ஊற்றியது, கள்ள ஓட்டு என பல்வேறு முறைகேடு கள் நடைபெற்றுள்ளன. இரண்டாம் கட்ட மாக 5269 சங்கங்களுக்கு தேர்தல் நடை பெறவேண்டும். ஆனால், 4575 சங்கங் களுக்கு தேர்தலே நடைபெறாமல் போட்டி யின்றி இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 283 சங் கங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் 22532 சங்கங்களில் சுமார் 1000 சங்கங் களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும் போலும். 

இந்த நிலை எப்படி ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? தமிழ்நாட்டில் உள்ளவர்களெல்லாம் தேர்தலில் போட்டி யிடுவது இல்லை என்று முடிவெடுத்து விட்டார்களா? பதவி எனும் ஆசையை துறந்துவிட்டார்களா?கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கூட்டுறவுத் தேர்தலில் மோசடி, அதிகாரி களின் அத்துமீறல் போன்ற காரணத்தால் தான், நடத்தப்பட்ட தேர்தலே செல்லாது என்ற நிலை உருவானது. ஆகவே தான் கூட்டுறவுத் தேர்தலை நடத்துவதற் கென்ற தனி தேர்தல் ஆணையத்தை உரு வாக்க வேண்டுமென முற்போக்கு இயக்கங்கள் குரலெலுப்பினர்.

ஆனால் அந்த ஆணையத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதுதான் அனுபவத்தில் தெரிகிறது. அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையம் உயிரும், உணர்ச்சியுமற்ற ஒரு பொம்மை யைப்போல் அசையாமல் இருக்கிறது.கூட்டுறவுத் தேர்தலில் இதுவரை இல்லாத பல புதிய தந்திரங்களை மேற் கொண்டு, ஆளும் அதிமுகவைச் சார்ந்த வர்கள் மட்டுமே மொத்தப் பொறுப்புக் களையும் கைப்பற்றிக்கொள்வது, அதற் குரிய முறையில் அனைத்துவிதமான அடாவடித்தனத்திலும் அமைச்சர்கள் முதல் அதிமுக கிளைச் செயலாளர்கள் வரை ஈடுபட்டுள்ளனர். 

மோசடிகளில் இத்தனை விதங்களா என வியக்க வைக்கும் இவர்களின் நடவடிக்கை களைப் பாருங்கள்!தேர்தல் அதிகாரிகள், அதிமுகவைச் சார்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு வேட்பு மனுவை வழங்கமறுப்பது, வற்புறுத்தி அல்லது போராடி வேட்பு மனுவை பெற்று, மனுவை தாக்கல் செய்தால், வேட்பு மனுவை பெற்றுக்கொண்டதற் கான ரசீது வழங்க மறுப்பது, ஒரு சில இடங்களில் ரசீது வழங்கினாலும் வேட் பாளர் பட்டியல் ஒட்டும்போது ஆளும் கட் சியைச் சேர்ந்தவர்களின் பெயர்களை மட் டும் ஒட்டுவது, மீறி ஒட்டினால் ஆளுங் கட்சியை சார்ந்தவர்கள் ஒட்டப்பட்ட போட்டி வேட்பாளர் பட்டியலை கிழித் தெறிவது, வேட்பு மனு வழங்கவே அதி காரிகள் வராமல் இருப்பது, அதிமுகவி னருக்கு மட்டும் வேறு இடத்தில் வேட்பு மனு வழங்குவது, வேட்பு மனுவை பெற்றுக் கொண்டு ரசீது வழங்காமல் கழிவறைக் குச் சென்று வருவதாகக் கூறி காணாமல் போவது,

சில சங்கங்களில் உள்ள வாக் காளர் எண்ணிக்கையைவிட ஆளுங்கட் சியினர் ஏற்பாட்டில் வேட்புமனு தாக்கல் செய்ய வரிசையில் நிற்பவர்களின் எண் ணிக்கையை அதிகமாக நிற்க வைத்து, மற்றவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யவிடாமல் தந்திரமாக தடுப்பது, இவ் வளவையும் மீறி தேர்தலில் நின்றால் தாக்கி காயம் ஏற்படுத்தி மருத்துவமனை யில் படுக்க வைத்துவிடுவது என “கூட் டுறவு தேர்தலில் புதிய பார்முலா” வை அதிமுக உருவாக்கி உலகுக்கே வழி காட்டியிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் முறைகேடாக நடந்துகொள்வது, அதிமுக வினரின் அத்துமீறல், அடாவடித்தனத் திற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என அமைச்சர்கள் சொல்கிறார்கள். நம்பி னால் நம்புங்கள், நம்பாவிட்டால் உங்கள் பாடு!இப்படி சகலவிதமான தகிடுதத்தங் களிலும் ஈடுபட்டு ஆளுங்கட்சியினர் கூட்டுறவு அமைப்புகளை கைப்பற்றுவது எதற்காக? எப்படியாவது மக்களுக்கு சேவை செய்தே தீரவேண்டும்” என்ற தீராத தாகத்தாலா? இல்லை! ஏற்கெ னவே, சட்டமன்றம், உள்ளாட்சி மற்றும் கட்சி பொறுப்புகளில் இருப்பவர்கள் ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தை பயன் படுத்தி கோடி கோடியாய் கொள்ளை யடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாய்ப் புக் கிடைக்காதவர்கள் வயிறெரிந்து கொண்டிருக்கிறார்கள். எரியிற வயிறை அணைக்க வந்த மாமருந்துதான் கூட்டு றவுத் தேர்தல் என உற்சாகமாக கிளம்பி யிருக்கிறார்கள் என்பதே உண்மை!கூட்டுறவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு 2001ம் ஆண்டு கலைக்கப்பட்டு விட்டது. கடந்த 13 ஆண்டுகாலமாக அதி காரிகளின் கொள்ளைக்களமாக கூட் டுறவு அமைப்பு இருந்து வந்துள்ளது. அதி லிருந்து கூட்டுறவை மீட்க தேர்ந்தெடுக் கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் பொறுப் புகள் மாற்றப்படுவது அவசியம் என்ற அடிப்படையிலேயே தேர்தலை அனை வரும் வரவேற்றனர். ஆனால் ஆளுங்கட் சியினர் நடத்துகிற கூத்துக்களையெல் லாம் பார்த்தால், ஏன் இந்த தேர்தல் வந்தது என நொந்துகொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கூட்டுறவே நாட்டுயர்வு என்பதற்கு பதிலாக, கூட்டுறவே ஆளுங்கட்சி யினரின் உயர்வுக்குத்தான் என ஆகி விடும் போலும்! இதை எப்படித் தடுப்பது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.திமுக தலைமை, “எனக்கு அப்பவே தெரியும். அதனால்தான் நாங்கள் தேர்த லிலிருந்து ஒதுங்கிக்கொண்டோம்” என்று பெருமையடித்துக்கொண்டிருக்கிறது. பிர தானமான பெரிய எதிர்க்கட்சி ஜனநாய கத்தைக் காப்பாற்றும் லட்சணம் இது தானா? போட்டியிடாமல் ஒதுங்கிக்கொள் வதன் மூலம் எந்த விதத்தில் கூட்டுறவு அமைப்பைப் பாதுகாக்க திமுக உதவப் போகிறது. என்ன அக்கிரமம் நடந்தாலும் வேடிக்கை பார்ப்போம் என்பது ஒரு கட்சிக்கு அழகா? ஒரு வேளை தங் களுக்கு அந்த யோக்யதை இல்லை என்று ஒதுங்கிக்கொண்டதா திமுக? தேமுதிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இப்படி ஒன்று நடந்துகொண்டிருக்கிறதா என ஆச்சரியமாக கேட்கும் வகையில் தான் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. 

இதற்கு மாறாக, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே தங்களின் சக்திக்கேற்ப மல்லுக்கட்டிக்கொண் டிருக்கின்றன. சாலை மறியல், ஆர்ப் பாட்டம், கூட்டுறவு சங்கங்கள் முற்றுகை, அதிகாரிகளை கெரோ செய்வது என வந்துகொண்டிருக்கும் செய்திகள் எல் லாம் இடதுசாரிக் கட்சியினர் நடத்தும் போராட்டங்களே!இது ஒருபுறமிருக்க, சின்னஞ்சிறிய குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் கொதித் தெழுந்து பதில் சொல்லும் முதலமைச் சர், கூட்டுறவுத் தேர்தல் மோசடி சம் பந்தமாக இவ்வளவு குற்றச்சாட்டுகள் வெளிவந்த பிறகும் மவுனமாக இருப்பது ஏன்? முதல்வரின் ஆசியில்லாமல் ஆளுங்கட்சிக்காரர்களால் இதுபோன்ற செகளில் ஈடுபட முடியுமா? அதிகாரிகள் அனைவருமே ஆளுங்கட்சியினர்க்கு ஒத் துழைப்பார்களா? முதலமைச்சர் நினைத் தால் தன்னுடைய கட்சிக்காரர்களை தடுத்து நிறுத்த முடியாதா? அல்லது அதிமுக காரர்களெல்லாம் தலைமைக் குக் கட்டுப்படாதவர்களாக மாறிவிட்டார் கள் என்று எடுத்துக்கொள்வதா? ஆனா லும், சொல்லுகிறோம், அரசுக்கும், தேர் தலுக்கும் சம்பந்தமில்லை நம்புங்கள்.

இந்த அக்கிரமத்திற்கு முடிவு கட்ட வேண்டுமென்றால், மக்கள், கூட்டுறவு நமக்கான அமைப்பு; அதை கொள்ளை யடிக்க அனுமதிக்க மாட்டோம் என்ற முறை யில் அணிதிரள வேண்டும். மோசடியாக நடைபெற்றுள்ள கூட்டுறவுத் தேர்தல்கள் ரத்து செய்யப்பட வேண்டும். நேர்மை யான, முதுகெலும்புள்ள தேர்தல் ஆணை யத்தின் மேற்பார்வையில் தேர் தல் நடை பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

-பெ.சண்முகம்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)