கோக்
போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுடைய இலாபத்தினை
அதிகரிப்பதற்காக "எதனைச் செய்வதற்கும்" தயாராக இருக்கின்றன. அதற்காக
அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வெவ்வேறு விதமான
உத்திகளைக் கையாண்டு வந்திருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப்போரில், அமெரிக்காவின் தேசியபானம் என்று முழங்கியபடியே அமெரிக்க போர்வீரர்களுக்கு ஒருபுறம் விற்றுக்கொண்டே, மறுபுறம் இட்லருக்கு நெருக்கமானவர்களை நிறுவனத்தின் உயர்பொறுப்புகளில் நியமித்து , நாஜிப்படைக்கும் தங்களது பானத்தை விற்றார்கள்.
இஸ்ரேலில் கோக் பானத்தை விற்றால், மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கும் மக்கள், 'கோக்'கை புறக்கணித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில், இஸ்ரேலில் 'கோக்'கை பல ஆண்டுகளாக விற்காமலே இருந்தார்கள். இப்படியாக அவர்களின் 'வியாபார தந்திரங்களை' சொல்லிக்கொண்டே போகலாம்.
வியாபார தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தி எவ்வளவு அதிகமாக இலாபம் சம்பாதித்தாலும், தொழிலாளர்களை வெறும் அடிமைகளாக நடத்துவதென்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறது கோக் நிறுவனம். கோக் நிறுவனத்தின் இலாபம் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் இருந்தாலும், அதற்குக் காரணமான (கேள்வி கேட்க ஆளில்லாத ஏழை நாடுகளின்) ஊழியர்களோ மிக மோசமான பணிச்சூழலில், மிகமிகக்குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு வேலைசெய்கிற நிலைதான் இன்றளவும்.
ஆகிய மூவரும் களமிறங்குகிறார்கள்.
துருக்கி, குவாட்டிமாலா, இந்தியா என எங்கெல்லாம் அவர்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களோ அவையனைத்தையும் வழக்காக மாற்றத் திட்டமிடுகிறார்கள். இதன் மூலம் தொழிலாளர்களின் பிரச்சனையின் வீரியத்தை உலகறியச்செய்வதுதான் நோக்கம். (கோக்கின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக துருக்கி நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் தொடுத்த வழக்கில், துருக்கி அரசும் நீதிமன்றமும் தொழிலாளர் விரோத போக்கினால், கோக் நிறுவனம் கேள்விகேட்பாரின்றி தொடர்கிறது தன்பணியினை.) துருக்கியில் தொழிலாளர்களின் பிரச்சனையையும் அமெரிக்க நீதிமன்றத்தில் கொண்டுவர முடிவெடுக்கிறார்கள் டேனியல் மற்றும் குழுவினர். இப்படியாக பல வழக்குகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது கோக் நிறுவனம்.
தொழிலாளர் விரோத, மனிதவிரோத கோக் பானத்தை புறக்கணித்து, நம்முடைய உழைப்பாளர் சகோதரர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிப்போம்...
இரண்டாம் உலகப்போரில், அமெரிக்காவின் தேசியபானம் என்று முழங்கியபடியே அமெரிக்க போர்வீரர்களுக்கு ஒருபுறம் விற்றுக்கொண்டே, மறுபுறம் இட்லருக்கு நெருக்கமானவர்களை நிறுவனத்தின் உயர்பொறுப்புகளில் நியமித்து , நாஜிப்படைக்கும் தங்களது பானத்தை விற்றார்கள்.
இஸ்ரேலில் கோக் பானத்தை விற்றால், மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கும் மக்கள், 'கோக்'கை புறக்கணித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில், இஸ்ரேலில் 'கோக்'கை பல ஆண்டுகளாக விற்காமலே இருந்தார்கள். இப்படியாக அவர்களின் 'வியாபார தந்திரங்களை' சொல்லிக்கொண்டே போகலாம்.
வியாபார தந்திரங்களை எல்லாம் பயன்படுத்தி எவ்வளவு அதிகமாக இலாபம் சம்பாதித்தாலும், தொழிலாளர்களை வெறும் அடிமைகளாக நடத்துவதென்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறது கோக் நிறுவனம். கோக் நிறுவனத்தின் இலாபம் பல்லாயிரக்கணக்கான கோடிகளில் இருந்தாலும், அதற்குக் காரணமான (கேள்வி கேட்க ஆளில்லாத ஏழை நாடுகளின்) ஊழியர்களோ மிக மோசமான பணிச்சூழலில், மிகமிகக்குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு வேலைசெய்கிற நிலைதான் இன்றளவும்.
'கோக்
கேஸ்' என்கிற திரைப்படத்தின் இயக்குனர்கள் கொலம்பிய நாட்டிலிருக்கும் கோக்
நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞர்களை தனியாக சந்தித்து சில கேள்விகள்
கேட்கிறார்கள்.
ஆவணப்பட இயக்குனர் : "கோக் நிறுவனத்தில் வேலை செய்ய என்ன வேண்டும்?"
கோக் நிறுவன ஊழியர்கள் : "முதலில் யாரேனும் ஒருவர் நமக்கு உத்திரவாதம் கொடுக்கவேண்டும். பிறகு, கோக் பாட்டில்களை டிரக்கில் எடுத்துக்கொண்டு செல்லும் பாதையில், என்ன நடந்தாலும் நாங்கள்தான் பொறுப்பு. வழியில் நம்மை யாராவது தாக்கினாலோ, கோக் பாட்டில்கலையோ அல்லது நம்முடைய பணத்தையோ யாரேனும் கொள்ளையடித்தாலோ, அதற்கும் நாங்களே பொறுப்பு. எங்களுடைய சொந்தப் பணத்தைதான் இழக்கவேண்டும். எங்களோடைய காப்பீட்டிற்கு, சீருடைக்கு எல்லாம் நாங்களே பணம் செலுத்த வேண்டும். இன்னும் சொல்லப்போனால், கோக் நிறுவனத்தில் ஊழியர்களாக இருந்தாலும், கோக் பாட்டில்கள் கொண்டு செல்லும் டிரக்கிற்கு நாங்கள் தினமும் வாடகையும் செலுத்தவேண்டும்."
ஆவணப்பட இயக்குனர் : "கோக் நிறுவனம் என்னதான் உங்களுக்குத் தருகிறது?
கோக் நிறுவன ஊழியர்கள் : (நீண்ட நேரம் யோசித்தபிறகு) "எதுவுமே இல்லை... எல்லாவற்றிற்கும் நாங்களே பொறுப்பு...கோக் நிறுவனம் எதுவுமே வழங்குவதில்லை."
ஆவணப்பட இயக்குனர் : "நீங்கள் சங்கம் அமைத்திருக்கிறீர்களா?
கோக் நிறுவன ஊழியர்கள் : "சங்கத்தில் எல்லாம் சேரவே முடியாது. சேர்ந்தால், வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள். நிர்வாகத்தைப் பொறுத்தவரை, சங்கம் இருக்கவே கூடாது."
தொழிற்சங்கம் அமைத்தால் "ஆயுதம் ஏந்திய அடியாட்களை" வைத்து
ஊழியர்களைக் "கொல்வது", தொழிற்சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினரை
கடத்திவைத்து மிரட்டுவது/கொல்வது என மனிதவுரிமை மீறல்களின் எல்லைக்கே
செல்கிற இலாபவெறி பிடித்தவர்கள்தான் இவர்கள்....
கொலம்பியாவில்
மட்டும், பன்னாட்டு நிறுவன முதலாளிகள் கடந்த பத்து ஆண்டுகளில் தொழிற்சங்க
நடவடிக்கைகளை அழிக்கும்நோக்கில் 'ஆயுதம் ஏந்திய அடியாட்கள்' மூலமாக 470
தொழிற்சங்கவாதிகளை கொன்றிருக்கிறார்கள். சராசரியாக வாரத்திற்கு ஒரு
தொழிற்சங்கவாதி என்கிற அளவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
தொழிற்சங்கவாதிகளின் கொலைகளின் எண்ணிக்கைப்படி உலகிலேயே முதன்மை நாடாகத்
திகழ்கிறது கொலம்பியா. கொலம்பியாவிலிருக்கும் கோக் தயாரிக்கும்
நிறுவனத்தில் தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்போரையும்
அவர்களது குடும்பத்தினரையும் கொன்றுகுவிப்பது, கடத்துவது, கடத்தி
சித்திரவதைக்குள்ளாக்கிக் கொல்வது போன்றவை தொடர்கதையாகவே இருந்துவருகிறது
குவாட்டமாலா
என்கிற நாட்டிலுள்ள கோக் நிறுவன தொழிற்சாலையில், தொழிற்சங்கத்தலைவர்
கொல்லப்பட்டிருக்கிறார். அதன்பிறகு அவருக்கு பதிலாக வேறொருவரை தொழிற்சங்கத்
தலைவராக தேர்ந்தெடுத்தார்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள். அவரும்
கொல்லப்பட்டார். இப்படியாக அத்தொழிற்சாலையில் தொடர்ச்சியாக 8 தொழிற்சங்கத்
தலைவர்களைக் கொன்றிருக்கிறார்கள். அக்கொலைகளுக்கும் தங்களுக்கும்
எவ்விதத்தொடர்பும் இல்லை என்று இன்றளவும் சொல்லிவருகிறார்கள் கோக்
நிறுவனத்தினர்.
திரைக்கதை:
தொழிலாளிகளின்
அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட கோக் நிறுவனத்தில், அவற்றை
மீட்டெடுக்கும் நோக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இசிட்ரோ என்கிற
தொழிற்சங்கத் தலைவரை "ஆயுதமேந்திய அடியாட்கள்" மூலமாக கொன்றது கோக்
நிறுவனம்.
தொழிற்சங்கம் அமைத்த குற்றத்திற்காக இசிட்ரோவையும் சேர்த்து இதுவரை ஏராளமானோரை ஆயுதமேந்திய அடியாட்களை வைத்து கொலை செய்திருக்கிறார்கள்.
தொழிற்சங்கம் அமைத்த குற்றத்திற்காக இசிட்ரோவையும் சேர்த்து இதுவரை ஏராளமானோரை ஆயுதமேந்திய அடியாட்களை வைத்து கொலை செய்திருக்கிறார்கள்.
இசிட்ரோவின் சகோதரர் : "நானும் என்னுடைய சகோதரர் இசிட்ரோவும் தொழிலாளிகளின் அடிப்படை உரிமைகளுக்காக சினல்டிரைனல் தொழிற்சங்கம் சார்பாக கோலா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிற குழுவில் இடம்பெற்றிருந்தோம். ஒரு நாள் தொழிற்சாலையின் வாயிலில் நின்றுகொண்டிருந்தவர்களிடம், 'இங்கே இசிட்ரோ யார்?' என்று சில அடியாட்கள் கேட்டிருக்கிறார்கள். அந்நேரம் கோக் பானங்களை ஒரு ட்ரக்கில் ஏற்றிவிட்டு தொழிற்சாலையின் கதவினைத் திறந்திருக்கிறார் எனது சகோதரர். அவ்வேளையில் உள்ளே நுழைந்து எனது சகோதரை ஒன்பது முறை சுட்டார்கள். சுட்டுவிட்டு இசிட்ரோவை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்."
இசிட்ரோவின் சகோதரர் : "தொழிற்சங்கம் துவங்கியதிலிருந்தே எங்களுக்கு எல்லாப் பிரச்சனைகளும் வரத்துவங்கிவிட்டன. தொழிற்சங்கத்தை ஒழிப்பது ஒன்றுதான் நிர்வாகத்தின் குறிக்கோள். நவம்பர் 30 ஆம் தேதி நாங்கள் கொடுத்த கோரிக்கையினை பரிசீலிக்க டிசம்பர் 5 ஆம் தேதி வரை அவர்களுக்குக் கெடு இருந்தது. எங்களுடைய கோரிக்கைக்கு பதிலடியாக, கோரிக்கை வைத்தவர்களில் ஒருவரையே கொன்றிருக்கிறார்கள். அவர்களின் அடுத்த குறி நானாகத்தான் இருந்தேன். என்னுடைய சகோதரரை கொன்று துவங்கிய அவர்களின் மனித வேட்டை, அடுத்து மற்றொரு தொழிலாளியான அடோல்போ கார்டோனாவையும் தாக்கினார்கள். ஆனால் அவர் தப்பித்துவிட்டார்."
நீண்ட நெடுங்காலமாக நடக்கிற இது போன்ற எண்ணற்ற மனிதவிரோதச் செயல்களை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறது கொலம்பியாவில் இருக்கும் 'சினல்டிரைனல் தொழிற்சங்கம்'.
அதனால் கோக் நிறுவனத்தினர் சினல்டிரைனல் தொழிற்சங்கத்தின் தலைவர் 'ஜவீர்
கொரியாவை' இரண்டு முறை கொல்ல முயற்சித்திருக்கிறார்கள், அவரது மனைவியையும்
மூன்று குழந்தைகளையும் கடத்த முயன்றிருக்கிறார்கள், பல பொய்வழக்குகளை
போட்டு பத்து முறைக்கும் மேலாக அவரை நீதிமன்றத்திற்கு
வரவைத்திருக்கிறார்கள். தொழிலாளர்களின் நிலையினை கொலம்பிய அரசின்
கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்விதப்பலனும் இல்லை.
இச்சூழலில்தான்,
அமெரிக்க நிறுவனமொன்று வேறொரு நாட்டில் தவறிழைத்தால் அதனை அமெரிக்க
நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பளிக்கிற "ஏலியன் டோர்ட் க்ளைம்ஸ் ஆக்ட்"
(ATCA ) என்கிற சட்டம்குறித்து கேள்விப்படுகிறது சினல்டிரைனல்
தொழிற்சங்கம். அதற்காக மூவரின் உதவியை நாடுகிறார் சினல்டிரைனல்
தொழிற்சங்கத்தின் தலைவர் ஜவீர் கொரியா.
'டேனியல் கொவலிக்' - வழக்கறிஞர், யூனைடட் ஸ்டீல் வொர்க்கர்ஸ் ஆப் அமெரிக்கா,
'டெர்ரி கொலிங்க்ஸ்வொர்த்' - வழக்கறிஞர், சர்வதேச தொழிலாளர் நல நிதியம்,
'ரே ரோஜர்ஸ்' - தொழிலாளர் நல ஆர்வலர்
ஆகிய மூவரும் களமிறங்குகிறார்கள்.
முதல்
இருவரும் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிப்பதும்,
மூன்றாமவர் கோக் நிறுவனத்தின் தொழிலாளர் விரோத மனிதவுரிமை மீறல்களை
மக்களிடையே "கொலைகார கோக்" என்கிற பிரச்சாரம் மூலமாக கொண்டுசெல்வதென்றும்
முடிவெடுக்கிறார்கள்.
தொழிற்சங்கத்தில்
சேர்ந்தாலே கொல்வது, அடியாட்களை வைத்து மிரட்டி வேலையைவிட்டு அனுப்பியது,
அடித்து சித்திரவதைப்படுத்துவது, குடும்ப உறுப்பினர்களைக் கடத்துவது போன்ற
குற்றங்களை முன்வைத்து கோக் நிறுவனத்தின்மீது நான்கு பிரிவுகளில்
அமெரிக்காவில் வழக்கு தொடுத்தனர்.
டேனியலும்
டெர்ரியும் கோக்கிற்கு எதிராக வழக்கை நடத்துவதில் மும்முரமாக இருக்க,
கோக்கினை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்யத்துவங்கினார் ரே ரோஜர்ஸ்.
அமெரிக்காவில் அட்லாண்டா, வில்மிங்டன் போன்ற மாகாணங்களில் தெருவில் இறங்கி
போராடத்துவங்கினர். கோக் நிறுவன அலுவலகங்களை முற்றுகையிட்டு முழங்குவதும்
அதில் ஒரு பகுதி. மக்களின் மனதைத்தொடுகிற விளம்பரங்களைத் தயாரித்து, கோக்
நிறுவனம் எவ்வாறு மக்களின் மனங்களில் இடம்பெறுகிறதோ, அதே போன்று கோக்
நிறுவனத்தின் வண்டவாளங்களை மக்களின் முன் தண்டவாளத்தில் ஏற்றவேண்டுமென
நினைக்கிறார் ரே. கோக் நிறுவனத்தின் மனிதவிரோத செயல்களை எடுத்துரைக்க,
"கொலைகார கோக்" என்கிற இணையதளத்தை உருவாக்குகிறார்கள்.
வில்மிண்டன் நகரிலுள்ள டூபுன்டூ என்கிற ஓட்டலில் கோக் நிறுவன பங்குதாரர் கூட்டம் நடந்தது. அவ்வோட்டலின் முன்பும் பெரும்திரளாக
மக்கள் திரண்டு "கொலைகார கோக்" பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.
பங்குதாரரின்
கூட்டத்தில் கோக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நெவிலே இஸ்டேல்
பேசுகையில், "கொலம்பியாவில் தொழிற்சங்க உறுப்பினர்கள் படுகொலை
செய்யப்பட்டதற்கு கோக் நிறுவனம்தான் காரணம் என்று சிலர் நினைக்கிறார்கள்.
நான் திறந்த மனதுடன் அது குறித்து விசாரணை நடத்தினேன். கொலம்பியாவின்
நீதிமன்றமும் காவல்துறையும் சொல்வதைப்போல அக்கொலைகளுக்கும் கோக்
நிறுவனத்திற்கும் எவ்விதத் தொடர்புமுமில்லை என்கிற முடிவுக்கும்
வந்திருக்கிறேன்" என்று தங்கள் நிறுவனத்தின் குற்றச்செயல்களை
ஒப்புக்கொள்ளக் கூட மறுக்கிறார்.
கொலம்பியாவில் கோக் நிறுவனத்திற்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் என்ரிக் டோரசை சந்திக்கிறார் டேனியல்.
வழக்கறிஞர் என்ரிக் டோரஸ் : "சில நேரங்களில் கோக் பானங்களை ஏற்றிச்செல்லும் ட்ரக்கில்கூட தொழிற்சங்க உறுப்பினர்கள் கொள்ளப்பட்டு கிடப்பார்கள். சில நேரம் கோக் நிறுவனத்தின் உள்ளேயே சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் தாங்கள் பொறுப்பில்லை என்றுமட்டும் எப்போதும் சொல்லிவருகிறார்கள். இவ்வாறு இறந்த எந்தத்தொழிலாளியின் குடும்பத்திற்கும் எவ்வித பொருளாதார உதவியும் செய்ததில்லை கோக் நிறுவனம். இதையெல்லாம் அமெரிக்காவில் நீங்கள் வாதாடப்போகும் வழக்கில் சேர்த்து அம்மக்களுக்கு நட்டஈடு வாங்கிக்கொடுங்கள்."
"கொலைகார கோக்" என்கிற
பிரச்சாரம் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது கண்டு, கோக் நிறுவனம் சற்றே
பயம்கொள்ளத்துவங்கியது. கோக் நிறுவனம் தொழிலாளர் விரோதச் செயல்களை
செய்கிறதா இல்லையா என்பதனை ஐ.நா. சபையின் ஒரு அங்கமான "சர்வதேச தொழிலாளர்
அமைப்பு" விசாரணை செய்யும் என்று கோக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி
அறிவிக்கிறார். (ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அமெரிக்காவிற்கான
பிரதிநிதி "எட் போட்டர்" என்பவர் கோக் நிறுவனத்தின் சர்வதேச தொடர்பு
இயக்குனராக இருக்கிறார்). பல மாதங்கள் கழித்து ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர்
அமைப்பில் விசாரித்துப்பார்த்தால், கோக் நிறுவனம் மீது விசாரணை
நடத்தக்கோரி எவ்வித கோரிக்கையும் தங்களுக்கு வரவேயில்லை என்கிறார்கள். ஆக இதுவும் கோக் நிறுவனத்தின் விளம்பர யுக்திதான் என்பதனை ரே ரோஜர்ஸ் புரிந்துகொள்கிறார்.
கோக்
நிறுவனத்தின் மீதான இவ்வழக்கு குறித்து எந்த ஊடகமும் வாய்திறக்காத
சூழலில், கொலம்பியாவில் மிக அதிகமான மக்களால் வாசிக்கப்படும் "எல் டியம்போ"
என்கிற பத்திரிகை ஒரு கவர் ஸ்டோரி எழுத முன்வருகிறது. இரண்டு தொழிற்சங்கத்
தலைவர்களைக் கொள்வதற்காக "ஆயுதம் ஏந்திய அடியாட்களுக்கு" பணம் கொடுத்ததை
கண்ணால் பார்த்த சாட்சியும் டேனியலுக்கு கிடைக்கிறது. வழக்கிற்கு
பயன்படுமென்பதால் அவரையும் அழைத்துக்கொண்டு அமெரிக்க செல்கிறார் டேனியல்.
அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவங்குகிறது....
தலைமை நீதிபதி : "அமெரிக்க நிறுவனங்கள் கொலம்பியாவில் சட்டவிரோதமாக ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கு பணம் கொடுத்து தொழிற்சங்க உறுப்பினர்களை கொன்றிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகளை இப்போது விசாரிக்கப்போகிறது இந்நீதிமன்றம். கொலம்பிய வழக்கறிஞரை முதலில் பேச அழைக்கிறேன்."
கொலம்பிய வழக்கறிஞர் : "நான் கொலம்பியாவில் கடந்த 16 ஆண்டுகளாக தொழிற்சங்கத் தலைவராக இருக்கிறேன். இப்பதினாறு ஆண்டுகளில் என்னுடன் வேலை பார்த்த பத்து சக தொழிற்சங்கவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் யாவும் தங்களுடைய இலாபத்தினை அதிகரிக்க, தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களை கொல்வதை வழக்கமாகவே மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் எட்டு தொழிற்சங்கவாதிகளைக் கொன்றிருக்கிறார்கள் கோக் நிறுவனத்தினர்"
தலைமை நீதிபதி : "அடுத்தபடியாக கொலம்பியாவின் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாகவும் கோக் நிறுவனத்திற்கு எதிராகவும் வாதாட வந்திருக்கும் 'யூனைடட் ஸ்டீல் வொர்க்கர்ஸ் ஆப் அமெரிக்காவைச்' சேர்ந்த டேனியலை பேச அழைக்கிறேன்."
டேனியல் : "2001 மார்ச் 12 இல் கொலம்பியாவில் பல்வேறு சுரங்கத்தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு சென்ற நிறுவனத்தின் பேருந்தை "ஆயுதம் தாங்கிய அடியாட்கள்" நிறுத்தி பேருந்தினுள்ளே நுழைந்தார்கள். தொழிற்சங்கத்தலைவர் (வால்மோர் லோகார்னோ) மற்றும் தொழிற்சங்கத் துணைத்தலைவர் (விக்டர் ஆர்காசிடஸ்) ஆகியோரின் பெயரைச் சொல்லி பேருந்திலிருந்து வெளியே வரச்செய்தார்கள். வால்மோர் லோகார்னோ அதே இடத்தில் சுட்டுக்கொன்றார்கள். விக்டர் ஆர்காசிடசிடம் நிர்வாகம் பேச விரும்புகிறது என்று சொல்லி அழைத்துச்சென்றார்கள். ஆனால் ஒரு 20 மைல் தொலைவில் ஆர்காசை சித்திரவதை செய்து கொன்றுபோட்டிருக்கிறார்கள்."
டேனியல் பேசிக்கொண்டிருக்கும்போதே நீதிபதி இடைமறித்தார்....
நீதிபதி : "நீங்கள் மேலும் தொடர்வதற்கு முன், ஒன்று சொல்ல விருப்பபடுகிறேன். உங்கள் அலுவலக சுவற்றில் பெரிய அளவிலான 'சே குவேரா' வின் புகைப்படம் ஒட்டியிருக்கிறீர்கள். சே குவேரா மாதியான ஆட்களையெல்லாம் நீங்கள் மதிக்கிறீர்களா?....."
டேனியல் : "ஆமாம்"
நீதிபதி : "டேனியல்! சே குவேராவை பின்பற்றுவதால், இன்று நீங்கள் உங்களுடைய நம்பகத்தன்மையினை இழந்துவிட்டீர்கள்"
வழக்கை
திட்டமிட்டு திசைதிருப்பி அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி
அவமானப்படுத்தமுயன்றதை டேனியலால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்து டேனியல் பேசுகிறார்...
டேனியல் : "சே குவேராவின் போஸ்டருக்கு முன்னாள் நான் இருப்பதைப் போன்ற புகைப்படத்தைக்காட்டி கேள்வி கேட்டனர்.... அக்கேள்விக்கு பதில் சொல்லமுடியாதென மறுத்திருக்கமுடியும். ஆனால் நான் ஒப்புக்கொண்டேன். எல்லாவற்றிலும் இல்லையென்றாலும்கூட, "சமூக நீதிக்காக" சே குவேரா கண்ட கனவுகளை நான் மதிக்கிறேன். பலவற்றில் அவரின் கருத்துகளை ஆமோதிக்கிறேன். அதற்காக இவ்வழக்கில் என்னுடைய நம்பகத்தன்மையின் மீது கேள்வி எழுப்புவது எந்த வகையில் நியாயம்? நான் இப்போது வீட்டிற்கு போகணும். என்னுடைய குழந்தைகளோட விளையாடனும்.. இப்போதைக்கு வேறெதையும் யோசிக்கமுடியவில்லை.."
என்று சொல்லியபடியே கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீரை ஒளித்துவைத்துக்கொண்டே நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறுகிறார் டேனியல்.
எல்லோரும்
எதிர்பார்த்தபடியே, கோக் நிறுவனத்திற்கும் கொலம்பியாவில் கோக்
நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளிகளின் கொலைகளுக்கும் எவ்விதத்தொடர்பும்
இல்லை என்றே வழக்கில் தீர்ப்பு வழங்கினர் நீதிபதிகள்.
நீதிமன்ற
தீர்ப்பினாலெல்லாம் சோர்ந்து விடாமல், "கொலைகார கோக்" பிரச்சாரத்தை
தொடர்ச்சியாக உலக மக்களிடையே கொண்டு செல்கின்றனர். "கொலைகார கோக்"
பிரச்சாரத்தை பெரும் தலைவலியாக நினைக்கத்துவங்கியது கோக் நிறுவனம். அதனால்
கொலம்பியாவில் தொழிற்சங்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக
சினல்டிரைனல் தொழிற்சங்கம், டேனியல், டெர்ரி மற்றும் ரே அடங்கிய குழுவினை
பேச்சுவார்த்தைக்கு வருமாறு கோக் நிறுவனம் அழைக்கிறது.
பேச்சுவார்த்தையின்போது, "கொல்லப்பட்டவர்கள்
அமெரிக்கர்கள் என்றால் இழப்பீடு நிறைய கொடுக்கலாம். ஆனால் அவர்கள்
கொலம்பியர்கள்தானே. அதனால் மிகச்சிறிய அளவில்தான் இழப்பீடு
கொடுக்கமுடியும்" என்று
சொல்லி இதுவரை கொலம்பியாவில் கொல்லப்பட்ட அனைத்து தொழிற்சங்க
உறுப்பினர்களின் குடும்பத்திற்கும் சேர்த்து மிகச்சிறிய
தொகையொன்றைத்தருவதாக கோக் நிர்வாகம் தெரிவிக்கிறது.
டேனியல்
உள்பட அனைவரும் இதனை வன்மையாகக்கண்டித்து பேச்சுவார்த்தையிலிருந்து
வெளியேறுகிறார்கள். "கொலைகார கோக்" பிரச்சாரத்தை உலகளாவிய பிரச்சாரமாக
மாற்றி, இனிமேல் கோக் நிறுவனம் உலகில் எங்கு குற்றமிழைத்தாலும் உடனே வழக்கு
தொடுப்பது என்றும் முடிவெடுக்கிறார்கள்.
துருக்கி, குவாட்டிமாலா, இந்தியா என எங்கெல்லாம் அவர்கள் தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்களோ அவையனைத்தையும் வழக்காக மாற்றத் திட்டமிடுகிறார்கள். இதன் மூலம் தொழிலாளர்களின் பிரச்சனையின் வீரியத்தை உலகறியச்செய்வதுதான் நோக்கம். (கோக்கின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக துருக்கி நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் தொடுத்த வழக்கில், துருக்கி அரசும் நீதிமன்றமும் தொழிலாளர் விரோத போக்கினால், கோக் நிறுவனம் கேள்விகேட்பாரின்றி தொடர்கிறது தன்பணியினை.) துருக்கியில் தொழிலாளர்களின் பிரச்சனையையும் அமெரிக்க நீதிமன்றத்தில் கொண்டுவர முடிவெடுக்கிறார்கள் டேனியல் மற்றும் குழுவினர். இப்படியாக பல வழக்குகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது கோக் நிறுவனம்.
மிகப்பிரபலமான
வழக்கறிஞர்கள் பலரை வைத்துக்கொண்டு வாதாடும் கோக் நிறுவனத்திற்கு வழக்கு
செலவு பல மில்லியன் டாலர்களாக உயர்ந்து கொண்டிருந்தது. ஒரு புறம் "கொலைகார
கோக்" பிரச்சாரமும் மறுபுறம் பல்வேறு வழக்குகளால் உயரும் செலவுகளும், கோக்
நிறுவனத்திற்கு தலைவலியாகவே மாறுகிறது.
கோக்
நிறுவனத்திற்கு எதிராக இன்றைய தலைமுறை மாணவர்களை கிளர்ந்தெழச்
செய்யவேண்டுமென்பதற்காக ரே ரோஜர்ஸ் ஒவ்வொரு பல்கலைக்கழகமாக, ஒவ்வொரு
கல்லூரியாகச் சென்று "கொலைகார கோக்" பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அவர்
உரையாற்றுகிற நிகழ்வில் பங்கெடுக்கிற மாணவர்களுக்கு கோக் நிறுவனம் இலவசமாக
கோக் பானங்களை வழங்கியும், மாணவர்களின் படிப்பிற்கு ஊக்கத்தொகை வழங்குவதாக
தந்திரமாக அறிவித்தும், தன்னுடைய கொலைகார பிம்பத்தை மாற்ற முயற்சிக்கிறது.
கோக்
நிறுவனம் இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. இம்முறை
கொலம்பியாவில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நியாயமான இழப்பீடு தர
முன்வருகிறது கோக் நிறுவனம். ஆனால் அதற்காக கோக் நிறுவனத்திற்கு
தொழிற்சங்கங்கள் செய்யவேண்டியது,
"கோக் நிறுவனத்தில் இருக்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் கலைக்கப்பட வேண்டும்."
"கோக் நிறுவனத்தில் வேலைசெய்யும் தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக வேலையை விட்டு விலக வேண்டும்."
"கோக் நிறுவனம் தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்று பிரச்சாரம் செய்யவே கூடாது"
"குறிப்பாக 'கொலைகார கோக்' பிரச்சாரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்"
"நெஸ்லே, பிபி, ஒக்சிடேண்டல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்தும் குரலெழுப்பக் கூடாது"
கோக்
நிறுவனம் முன்வைத்த இவ்வுடன்பாட்டினை அறிந்த சினல்டிரைனல்
தொழிற்சங்கத்தினர் அதிர்ந்து போகின்றனர். இந்த ஒட்டுமொத்த போராட்டமே,
தொழிலாளிகளின் நியாயமான அடிப்படை உரிமைகளை பாதுகாக்கத்தான். ஆனால் கோக்
நிறுவனமோ, பணத்தைக் கொடுத்து அனைத்தையும் வெட்டியெறிய முயற்சிக்கிறது.
சினல்டிரைனல்
தொழிற்சங்கம் சார்பாக பேச்சுவார்த்தைக்கு நியமிக்கப்பட்ட எட்கர் பேஸ்
கடும் கோபத்துடனேயே அமெரிக்க வழக்கறிஞர்களிடம் தன் கருத்தை
முன்வைக்கிறார்....
எட்கர் பேஸ் : "தொழிற்சங்க உரிமைகளுக்காக போராடிய தொழிலாளிகளின் பிணத்தின் மீது பணம் பார்க்கிற எண்ணமில்லை எங்களுக்கு. கடந்த காலத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு கோக் நிறுவனம் இழப்பீடு கொடுக்கிற அதேவேளையில், இக்குற்றங்களையெல்லாம் அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று ஒப்புக்கொள்ளவும் வேண்டும். தொழிற்சங்க உறுப்பினர்களை கொன்றதன்மூலம் எவ்வாறு அவர்கள் பயனடைந்தனர் என்பதையும் வெளிப்படையாக சொல்லவேண்டும். இதையெல்லாம் செய்யாமல், அவர்கள் கொடுக்கிற எந்தப்பணமும் எங்களுக்குத் தேவையில்லை."
எட்கர் பேஸ் : "நிரந்தமில்லா வேலை, உழைப்பிற்கு சம்பந்தமில்லாத குறைவான ஊதியம், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுப்பு போன்றவற்றை பரவலாக்கும் புதிய தாராளமயக்கொள்கைகளை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில் நாம் வெற்றி பெறுவது மிக முக்கியமானதாகும். இப்பேச்சுவார்த்தைகள் எல்லாமே வெறும் பொருளாதாரப் போராட்டம் குறித்ததல்ல; அரசியல் போராட்டம்"
எட்கர் பேஸ் : "உலகளவில் கோக் நிறுவனம் மீது போடப்பட்டிருக்கிற அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டு 'கோக் ஒரு நல்ல மதிக்கத்தக்க நிறுவனம்' என்று ஊடகத்தின் முன்வந்து சான்றிதழ் வழங்க வேண்டுமாம். வெறும் பணம்தான் பிரச்சனை என்றால், காலி பெட்டியை கொண்டு வந்து அவர்கள் கொடுக்கிற பணத்தை அள்ளிப் போட்டுக்கொண்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பியிருப்போம்"
எட்கர் பேஸ் : "கோக் நிறுவனத்தோடு நடந்த இப்பேச்சுவார்த்தையின் போதே, எங்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து கொண்டேதான் இருந்தது. எங்களில் பல தொழிலாளிகளை வேலையை விட்டு அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். பல தொழிலாளிகளின் குடும்பங்களை வீட்டிற்கே வந்து மிரட்டியிருக்கிறார்கள். எங்கள் குழந்தைகளை கடத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் நாங்கள் எதற்காக அவர்களுடன் உடன்பாட்டுக்கு வரவேண்டும். உலகளவில் கோக் நிறுவனத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிற வேளையிலேயே இவ்வளவு மோசமான நிலைதான் எங்களுக்கு. நாங்கள் மட்டும் அவர்கள் முன்மொழிகிற உடன்பாட்டினை ஒப்புக்கொண்டுவிட்டால், அன்றே நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிடுவோம்"
இவையெல்லாம்
நடந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் கோக் நிறுவனம்
தன்னுடைய தொழிலாளர் விரோத போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும் சிலநூறு
தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காணாமல்
போவதும், கடத்தப்படுவதும், சித்திரவதைக்குப்பின் கொல்லப்படுவதும்
தொடர்கிறது.
"கொலைகார
கோக்" பிரச்சாரத்தின் பலனாக, மிச்சிகன் பல்கலைக்கழகம், நியூயார்க்
பல்கலைக்கழகம் உள்பட உலகெங்கிலுமுள்ள நூற்றுக்கணக்கான கல்விநிலையங்களில்
கோக் பானங்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது.
ஆனாலும்
முன்னெப்போதையும்விட அதிக கவனத்துடனும் மிகுந்து உத்வேகத்துடனும் போராட
வேண்டிய காலகட்டமிது என்பதை சினல்டிரைனல் தொழிற்சங்கத்தின் தலைவர் நமக்கு
மிகச்சரியாக நினைவூட்டுகிறார்...
"இப்போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவது அவசியம். நாம் தோற்றுப்போவோமேயானால், முதலில் இழக்கப்போவது நமது தொழிற்சங்கங்களை; அடுத்தது நாம் இழக்கப்போவது நமது வேலையினை; அதற்கடுத்தது நாமெல்லாம் இழக்கப்போவது நமது வாழ்க்கையை, உயிரை.... எனவே இப்போராட்டத்தில் நாம் வெற்றி பெறுவது அவசியம்."
தொழிலாளர் விரோத, மனிதவிரோத கோக் பானத்தை புறக்கணித்து, நம்முடைய உழைப்பாளர் சகோதரர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிப்போம்...
- இ.பா.சிந்தன்
கொக் பற்றி நிறைய விடயங்கள் அறிந்து கொண்டேன். எலலோரும் வாசிக்க வேண்டிய நல்லதோர் பதிவு..
ReplyDeleteஅருமை விமர்சனம் சார்..நிறைய நல்ல தகவல்களை அறிந்துக்கொள்ள முடிந்தது.மிக்க நன்றி.
ReplyDeleteபணம் பாதளம் வரை பாயும் என்பதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் தொழிலாளர் விரோத கொள்கையுடன்தான் நடந்து கொள்கிறன. சென்னை `நோக்கியாவில்` பணியின் போது ஒரு பெண்ணின் தலையில் அடிபட்ட பின்பும்,கன்வேயர் பெல்ட்டை(வேலை பாதிக்கும் என்பதால்) நிறுத்தாததால் இறந்த நிகழ்வு ஒரு உதாரணம்.
ReplyDeleteகோக் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு விளம்பரம் தந்து அதன் வியாபரத்தை அறியாமக்களிடம் அதிகரிக்கும் இந்த சினிமா, கிரிகெட் ஸ்டார்களையும் இதற்கு பொறுப்பேற்க செய்ய வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிப்பதன் மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்று கபட நாடகம் ஆடும் அரசியல் வாதிகள் மக்களால் பதவியில் இருந்து ஓடவைக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை அரசியல் வாதிகளே உஷார் !!
ReplyDeleteநான் எப்போதோ கோக் குடிப்பதை நிறுத்திவிட்டேன். என் குழந்தைகளுக்கும் இது ஆரோக்கிய கேடு என்பதை புரிய
ReplyDeleteவைத்திருக்கிறேன். இதனை படிக்க நேரும் அனைத்து பதிவுலக நண்பர்களும் இது ஆரோக்கிய கேடு என்பதை இளம் தலைமுறைக்கு புரிய வையுங்கள்.