ஒரிஸா மாநிலம் காந்தமால் – கஞ்சம் பழங்குடியினர் மிகுந்த பகுதியை சுற்ரிபார்க்கச் சென்ற இரு இத்தாலியர்களைக் மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றுள்ளனர்.
இப்பகுதியில் நடைபெற்று வரும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், கைது செய்யப்பட்டுள்ள பழங்குடியினரை விடுதலைச் செய்யவும் காலக்கெடுவுடன் நிபந்தனை விதித்துள்ளனர்.
இப்பகுதியில் நடைபெற்று வரும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும், கைது செய்யப்பட்டுள்ள பழங்குடியினரை விடுதலைச் செய்யவும் காலக்கெடுவுடன் நிபந்தனை விதித்துள்ளனர்.
இந்த கடத்தல்களுக்கு மாவோயிஸ்டுகள் பொறுப்பேற்று, தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு சனிக்கிழமை நள்ளிரவு செய்தி அனுப்ப்பியிருந்தனர். அந்த இத்தாலியர்களும் இருவரும் கடந்த 14-ம் தேதியே கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
கடத்தப்பட்ட ஒருவரில் (பௌஸ்கோ ஹௌலா) பூரியில் கடந்த 10 ஆண்டுகளாக சுற்றுலா முகவராக செயல்பட்டு வருகிறார். மற்றொருவரின் பெயர் கிளாடியோ கொலஞ்ஜெலோ என்றும் தெரிய வந்துள்ளதாகவும், மாவோயிஸ்டுகளிடமிருந்து இது வரை எந்த தகவலும் வரவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே தனியார் தொலைக்காட்சியை மவோயிஸ்டுகள், காட்டுக்குள் இருந்த பழங்குடியினரை அந்த இத்தாலியர்கள் ஆபசமாக புகைப்படம் எடுத்த்தாகவும், அதற்காகவே அவர்கள் கடத்தப்பட்டு பிணையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரிஸா மாநிலத் தலைமை செயலாளர் பி.கே. பட்நாயக் கூறுகையில்,
இத்தாலியர்களைக் காட்டுக்குள் போக வேண்டாம் என தரிங்கிபாடி போலீஸார் எச்சரித்தனர். அதை மீறி அவர்கள் காட்டுக்குள் சென்றனர். அவர்களுடன் சென்ற டிரைவர், சமையல்காரன் ஆகியோரை வண்டியோடு விட்டுச் சென்றுள்ளனர்.
காட்டிலிருந்து திரும்பிய டிரைவர் கார்த்திக் பரிதா, சமையல்காரன் சந்தோஷ்
ஆகிய இருவரையும் போலீஸார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.
ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வேண்டுகோள்:
கடத்தப்பட்டுள்ள இரு இத்தாலியர்களையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிக்க வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு பேச்சுவார்த்தைக்கு மாநில தயார். அவரசப்பட்டு எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டாம்.
இத்தாலிய உயர் அதிகாரி ஒரிஸாவுக்கு விரைவு:
இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க
இத்தாலிய கவுன்சில் ஜெனரல் ஜோயல் நொச்சியோரி புவனேஸ்வர் விரைந்துள்ளார். இந்த பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டு, கடத்தப்பட்ட இருவரும் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவார்கள் என நம்பிக்கையுடன் மேலும் அவர் தெரிவித்தார்.
ம்ல்கனாகிரி கலெக்டர் ஆர். வீனெல் கிருஷ்ணன், இளம் பொறியாளரோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதே மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டதும். அரசுக்கு விதித்த நிபந்தனைகளை ஏற்றவுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் நினைவு கொள்ளத்தக்கது.
ஒரிஸா மாநிலத் தலைமை செயலாளர் பி.கே. பட்நாயக் கூறுகையில்,
இத்தாலியர்களைக் காட்டுக்குள் போக வேண்டாம் என தரிங்கிபாடி போலீஸார் எச்சரித்தனர். அதை மீறி அவர்கள் காட்டுக்குள் சென்றனர். அவர்களுடன் சென்ற டிரைவர், சமையல்காரன் ஆகியோரை வண்டியோடு விட்டுச் சென்றுள்ளனர்.
காட்டிலிருந்து திரும்பிய டிரைவர் கார்த்திக் பரிதா, சமையல்காரன் சந்தோஷ்
ஆகிய இருவரையும் போலீஸார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.
ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வேண்டுகோள்:
கடத்தப்பட்டுள்ள இரு இத்தாலியர்களையும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிக்க வேண்டும். சட்டத்துக்கு உட்பட்டு பேச்சுவார்த்தைக்கு மாநில தயார். அவரசப்பட்டு எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டாம்.
இத்தாலிய உயர் அதிகாரி ஒரிஸாவுக்கு விரைவு:
இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க
இத்தாலிய கவுன்சில் ஜெனரல் ஜோயல் நொச்சியோரி புவனேஸ்வர் விரைந்துள்ளார். இந்த பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டு, கடத்தப்பட்ட இருவரும் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவார்கள் என நம்பிக்கையுடன் மேலும் அவர் தெரிவித்தார்.
ம்ல்கனாகிரி கலெக்டர் ஆர். வீனெல் கிருஷ்ணன், இளம் பொறியாளரோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இதே மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டதும். அரசுக்கு விதித்த நிபந்தனைகளை ஏற்றவுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் நினைவு கொள்ளத்தக்கது.
சுற்றிப்பார்க்க எத்தனை இடம் இந்தியாவில் இருக்கு. இவன்களுக்கு இந்தப் பழங்குடியினர் வாழும் காடுதான் கிடைத்ததா?
ReplyDeleteவேற என்னமோ விஷயம் இருக்கணுமுங்க.
பழங்குடியினர் மீதே கடுப்பு கொண்டுள்ள இவ்வியக்கம் அவர்களை ஆபாசமாக படம் எடுத்ததால்தான் கடத்தினோம் என்றால் நம்ப முடியாதுக்கது.
ReplyDelete