சங்கரன்கோவில் இடைத்தேர்தல் விறு விறு வாக்குப்பதிவு
சங்கரன்கோவில் இடைத்தேர்தலலுக்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அங்குள்ள அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
242 வாக்குச் சாவடிகளைக் கொண்ட இந்த தொகுதியில் பலத்து பாதுகபாப்புடன் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வகுகிறது. தற்போது 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் பணியில் ஆயிரத்துக்கும் அதிமான அலுவலர்கல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதை சமாளிக்க மாற்று வாக்குப்பதிவு இயந்திரIங்கள் தயாரிநிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது நடைபெற்றும் வரும் இந்த இடைத்தேர்தல் பெரும்
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது..
ஆந்திர மாநிலத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுத்திகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை பலத்து பாதுகாப்புடன் தொடங்கியது.
கோலப்பூர், நாகர்கர்னுல், மஹபூப்நகர், கமாரெட்டி, அதிலபாத், ஸ்டேஷன்கான்பூர் ஆகிய தொகுதிகள் தெலுங்கானா பகுதியிலும், கோவூர் தொகுதி கடலோர ஆந்திரப் பிரதேதச்சிலும் உள்ளன. இவை 13 லட்சம் வாக்களார்களைக் கொண்டுள்ளன.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்படுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அம்மாநில தேர்தல் ஆணையர் பன்வார் லால்தெரிவித்தார்.
ஐந்து தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தனித் தெலுங்கானா
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பதவியை ராஜினமா செ்ய்தனர். மஹபூப்நநகர் எம்,எல்.ஏ. காலமானார். தெலுங்கு தேசம் கட்சி கோவூர் எம்.எல்.ஏ. ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்து ராஜினமா செய்தார். இந்த சம்பவங்களை அடுத்து மேற்கண்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment