வாக்களார்கள் அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள் என்பதை அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் நிருபித்தவிட்டனர் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்ட் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சனிக்கிழமை தில்லி வந்த அவர் விடுதலைக்கு எதிரான என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:
சில அரசியல், தேர்தல் காரணங்களுக்கு எனக்கு ஜெய்ப்பூரி இலக்கிய விழாவில்பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது பயனற்ற ஒன்று. இதனால் தேர்தலில் தோல்விஅடைந்த்து காங்கிரஸ் கட்சிதான். இந்தியாவுக்கு தற்போது இருக்கும் தலைமையைவிட சிறந்த தலைமை அவசியமாகிறது. 95 சதவீதமான இஸ்லாமியர்கள் வன்முறையைவிரும்புவதில்லை. இது இந்துகளுக்கும் பொருந்தும். இந்தியாவில் கருத்துசுதந்திரம் நாளுக்குநாள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொருநாளும், இந்து, இஸ்லாமிய ஆகிய மதங்களின் குழுக்கள் புது புது
அச்சுறுத்தல்களை வெளிப்படுத்துகின்றனர். கருத்து சுதந்திரத்துக்கு எதிராக
நிகழ்த்தப்படும் அச்சுறுதல்களைக்கு எதிர்வினைக்கு பதிலாக பலத்த மௌனமேமிஞ்சுகிறது. இவ்வாறு உறங்கிக் கொண்டிருக்கும் மக்களை விழிப்புக் கொள்ளச்செய்ய வேண்டும். சுதந்திரம் என்பது தேநீர் விருந்தல்ல. அது போருக்குநிகரானது. சுதந்திரம் என்பது முழுமை பெறாத ஒன்று என்பதால் யார் வேண்டுமானலும் தவறாக பயன்படுத்த இயலும். நாம் பெற்ற சுதந்திரத்தை காக்கத்தவறினால், அதை இழந்தவிடுவோம் என் மீது தாக்குதல் நடத்தும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
சுதந்திரமான கருத்துகளுக்கு இந்தியா பாரம்பரியமாக இடம் அளித்து வந்துள்ளது. ஆனால் தற்போது அது போன்ற கருத்துகளுக்கு இடமளிக்கும் போக்கு குறைந்து வரைகிறது. வாக்கு வங்கி அரசியல் வெட்கி தலைகுனிகிற அளவுக்கு வளர்ந்துள்ளது.
இணையதள யுகத்தில் என்னுடைய புத்தகங்களுக்கு தடை விதிப்பதால் எந்தப்
பயனும் இல்லை என்றார்.
0 comments:
Post a Comment