ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் நெருங்குகிறபோதெல்லாம் இந்துத்துவா கூடாரம் கூச்சல் எழுப்புவதும், அடாவடி நடவடிக்கைகளில் இறங்குவதும், வன்முறைத் தாக்குதல்கள் தொடுப்பதும் வழக்கம்தான். ஆர்எஸ்எஸ், பாஜக தலைமைகள் “அந்நியக் கலாச்சார ஊடுருவல்” என்று கருத்துப் பிரச்சாரமாகச் செய்வார்கள், பஜ்ரங்தள், ராம் சேனா, இந்து முன்னணி போன்ற உதிரி அமைப்புகள் களக்கலவரங்களில் ஈடு படுவார்கள்.
காதலர் தினத்தன்று “வரம்பு மீறினால்” அதை அனுமதிக்கப் போவதில்லை என்று மத்தியப் பிரதேச மாநில பஜ்ரங்தள் அறிவித்திருக்கிறது. கிட்டத்தட்ட இதே தொனியில் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களும் அறிவித்திருக்கிறார்கள். சிலர் சொல்லாமல் செய்வதே பெருமை என்ற நினைப்பில் இப் படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடாமலே ஆயுதங்களைத் தயார் செய்துகொண்டிருக் கிறார்கள்.
உருட்டுக்கட்டைகளும் ஈட்டிகளும் வாள்களும் மட்டுமல்ல இந்த சுயநியமன கலாச்சாரக் காவல்காரர்களுடைய ஆயுதங்கள் - தாலி, ரக்சா பந்தன் போன்றவையும்தான். காதலர் தினம் கொண்டாடப்படும் உணவகங்கள், வாழ்த்துப் பொருள் விற்கிற கடைகள் ஆகியவற்றின் மீது முதல் வகை ஆயுதங்களால் தாக்குதல் தொடுக் கப்படும். சாலையில், தெருவோரத்தில், பூங்காவில், கடற்கரையில் என எந்தப் பொது இடத்திலும் ஆணும் பெண்ணுமாய் இருவர் நெருங்கிப் பேசிக்கொண்டிருந்தால் அங்கே இரண்டாவது வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்.
காதல் என்பது அந்நியக் கலாச்சாரமா? மனத் தளவில் ஈர்க்கப்பட்ட இருவர் காதல் வயப்படு வதும் ஒருவருக்காக இன்னொருவர் என கரம் கோர்ப்பதும் உலகில் எந்தவொரு நாகரிகமும் தனது பண்பாடல்ல என்று கூற முடியாது. ஆனால் இவர்கள் எதற்காக இதை எதிர்க்க வேண்டும்? அந்நிய நிறுவனத்தின் கைப்பேசி யில் சட்டமன்றத்தில் ஆபாசப்படம் பார்த்த அமைச்சர்களையே வைத்திருந்தவர்கள்.
இயற்கையான காதல் உறவுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்?
ஒரே காரணம்தான். இந்துத்துவம் என்பது எதன் மீது கட்டப்பட்டிருக்கிறதோ அந்த சாதிப் பாகுபாட்டுச் சமூக அமைப்பின் மீது தொடுக்கப்படுகிற தாக்குதலாகவே காதலைக் காண்கிறார்கள். இந்தியாவின் பல சமூகங்கள் நவீன வளர்ச்சிகளோடு சம்பந்தமில்லாதவர்களாகப் பின்தங்கியிருப்பதற்குக் காரணம், குடும்ப உறவுகளுக்கு உள்ளேயே திருமணம் என்ற சாதி வரப்புகள்தான் என்று சமூக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் மாற்றம் ஏற்படு வதை இந்துத்துவ சூலாயுதங்களால் ஏற்க முடியவில்லை என்பதுதான் பிரச்சனையே.
இந்துத்துவத்தின் இன்னொரு அடித்தள மாகிய பெண்ணடிமைத்தனத்தைப் பாதுகாத்தல், சிறுபான்மை சமயங்களைச் சேர்ந்த மக்களோடு கலப்பு ஏற்படுவதைத் தடுத்தல் என்ற வக்கிரம் மிகுந்த நோக்கங்களும் இவர்களது மிரட்டலின் சாராம்சங்களாக இருக்கின்றன. யாரும் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க இயலாது என்று காவல்துறையினர் பொத்தாம் பொதுவாக எச்சரித்திருப்பதைக் கண்டு, மூளைச்சலவை செய்யப்பட்டுள்ள கும்பல்கள் பின்வாங்கிவிடாது. சமூக மாற்றத்திற்கு ஒரு வகையில் பங்களிக்கிற இளம் காதலர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் அளிக்கிற கடமை மாநில அரசுகளுக்கு இருக் கிறது. முற்போக்கு சக்திகளிடமிருந்தும் காதலர்களுக்கு அந்த நம்பிக்கையும் பாதுகாப்பும் கிடைத்திட வேண்டும்.
மிகச்சரியான வாதம். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களின் வாழ்வியல் முறை மாறுபடுகிறது சாதீ மத அடிப்படை வாதிகளால் சமத்துவத்தை ஜீரணிக்க முடியாமல் அவர்களால் நடத்தப்படும் கோமாளித்தணங்கள் வரும் காலங்களில் நீர்த்துப்போகும் என்பது உறுதி
ReplyDeleteஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களின் வாழ்வியல் முறை மாறுபடுகிறது சாதீ மத அடிப்படை வாதிகளால் சமத்துவத்தை ஜீரணிக்க முடியாமல் அவர்களால் நடத்தப்படும் கோமாளித்தணங்கள் வரும் காலங்களில் நீர்த்துப்போகும் என்பது உறுதி
ReplyDelete