Monday, February 6, 2012

உலக கொள்ளையர்களும் இந்தியாவின் அலுவாலியாவும் ஒருவரே -அதிரடி கட்டுரை



ஒரு காலாவதியான முறை, எப்போதோ பெரும் போராட்டத்தைச் சந்தித்து சரித்திரத்தில் மாறா வடுவாக எழுத்துக்களுள் புதைந்திருந்து சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் கொதித்தொழும் பல கதைகள் உலகில் நிகழ்ந்திருப்பது அனைவரும் அறிந்திருக்க, அந்நியர்கள் போட்டு கழட்டி எறிந்த நாற்றமடிக்கும் பழந்துணிக்கு இஸ்திரிப்போட்டு செண்டடித்து மாட்டிக்கோ மாட்டிக்கோ என கொஞ்சிக்குழையும் அரசியல் கோட்டைக்குள்ளிருந்து வெளியே வராமல் மைக்கில் மொழியும் புதிய கழனிப்பானைச் சிந்தனையாளர்களின் பல அறிக்கைகள் நம்மை வாரிச்சுருட்டிக் கொள்ள இருக்கிறது மக்களே! 

சமீபத்தில் நான் பார்த்த ஒரு படத்தினோடு மான்டெக் அலுவாலியாவின் 12வது ஐந்தாண்டுத் திட்டத்தையும் அள்ளிக்கொட்டிக் குழைத்து புரிதலின் உணர்வுசம்பந்தப்பட்டப் பகுதி இதோ!

கொலம்பஸ் தங்கவேட்டையாடுவதற்காக முதன்முதலில் தென்னமரிக்காவிற்குள் புகுந்து சூதுவாது தெரியாதப் பூர்வகுடி இந்தியர்களை அடிமைகளாக்கி, தங்கத்தை வேட்டையாடும் அட்டூழியத்தை இசியார் போலாய்ன் 2000த்தில் நடந்த கொச்சபம்பா தண்ணீர் புரட்சியோடு கலந்து even the rain (மழையும்) என்ற திரைப்படத்தை இயக்கியிருப்பதில் முடிந்துபோன கதையானது இப்போ இந்தியாவில் வால் நுழைத்திருக்கும் முகத்தைக் காணலாம். 


கதையில், மிகக்குறைந்த செலவில் கொலம்பஸ் பற்றிப் படமெடுக்க கோஸ்டாவும் (தயாரிப்பாளர்) செபஸ்டியனினும் (இயக்குனர்) தென்னமெரிக்கவிலுள்ள கொச்சபம்பா எனும் ஊர் ஏற்றதாக தேர்ந்தெடுக்கக் காரணம் அங்கு வாழும் பூர்வகுடி இந்தியர்கள் இரண்டு ரூபாய்க்கு கூலிக்கு நாள் முழுக்க கடுமையாக உழைப்பார்கள் என்பதுதான். 

படவேலைகள் நடந்துகொண்டிருக்கும் போது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் டேனியல் எனும் நடிகனின் தலைமையில் தண்ணீர் விநியோகத்தைத் தனியார் மயமாக்குவதை எதிர்த்து போராட்டம் தொடங்குகிறது. எங்கே தமது படவேலைகள் தடைபட்டுப்போய்விடுமோ என அஞ்சிய துணை இயக்குநரும் அவரது நண்பரான தயாரிப்பாளரும் பல வழிகளில் டேனியலைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். அவன் போராட்டத்தின் உணர்வில் தொய்ந்தவனாக இருக்கிறான்.அவனது போராட்டத் தாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.

 அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாடுகளோ மழை நீரைக்கூட அவர்கள் பிடிக்கக்கூடாது என்றளவிற்கு உச்சத்தை அடைகிறது அவர்களின் கபளீகரப்போக்கு. படத்தில் நடித்தப் பொரும்பாலான இதர நடிகர்களும் டேனியலும் போராட்டக் களத்தில் மும்முரமாக ஈடுபட்டதால், அவர்களுக்கும் படத்திற்கும் பெருத்தச் சேதம் ஏற்பட்டுவிடுகிறது. பல சிக்கலுகளுக்குப்பின் படமும் முடிவடைக்கிறது, இறுதிக் காட்சியில் தயாரிப்பாளரிடம் தண்ணீர் சீசா ஒன்றை அந்த நடிகன் பரிசாகக் கொடுப்பதோடு, முடிவடைகிறது. 

இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், மக்கள் தமக்குத் தேவையான தண்ணீரைப் பெற தமது மலைக்கு ஏழு கிலோமீட்டருக்கு கால்வாய் தோண்டி குழாய் வைத்து மலையிலிருந்து தண்ணீர் கொண்டுவர, தனியார் நிறுவனமோ அரசு உதவியோடு போலீஸ் பாதுகாப்போடு கொச்சபம்பா மக்களின் பூட்டை உடைத்தெரிந்துவிட்டு தாம் கொண்டு வந்த பூட்டை மாற்றிவிடுகிறார்கள், அவர்களது உழைப்பிற்கு தாம் கூலிபெற. 

அவர்களது கிணற்றிலிருந்து அவர்கள் போட்ட பைப்பிலிருந்து வரும் தண்ணீரை திறந்துவிட்டு பணம் பறிப்பதை, “இரண்டு ரூபாய் சம்பாதியத்திற்கு பாடாதபாடு படுகிற இந்த மக்கள் எப்படி தண்ணீருக்காக 300 ரூபாய் கொடுக்க முடியும்” என்று தயாரிப்பாளர் அரசின் உயர்பதவியில் இருப்பரிடம் கேட்கும் போது மழுப்பிவிடுகிறார், அவர். அந்த மழுப்பல் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர்களுக்கு நிம்மதியைக்  கொடுத்திருக்கிறது. ஆனால், இந்தியாவிலோ, மான்டெக் சிங் அலுவாலியா 12வது ஐந்தாண்டுத் திட்டத்தினில் குறிப்பிட்டிருக்கும் அனைத்து கருத்துக்களும் ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பத்திற்கினங்க, அவற்றின் கம்பெனிகள் செழித்தோங்க வேண்டியும், இந்திய மக்களின் முதுகில் எவ்வளவு காலம் ஏறி சவாரி செய்யலாம் என்பதற்கேற்றவாறும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பொய்யை விதைக்கத் தெரிந்ததினால் மக்களை இலவசங்களில் திணறடிக்கும் ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் தூண்டில் போடும் சூட்சுமத்தை மோப்பம் பிடித்துவிட்ட தனியாரோ அந்நியரோ சுலபமாக உள்ளே நுழைந்து இந்திய ஆட்டக்காரர்களின் நாக்கில் கோலாவைத் தடவி,  தமது பொருளுக்கு அவர்களை விளம்பரக் கோமாளிகளாக்கி, அவர்களைக் காணும் கோடாணுகோடி இந்தியப் பிரஜைகளின் அறைக்குள் நுழைந்து கண்களில் கலர் கண்ணாடிகளைப் பொறுத்தி சார்புக்குருடர்களாக்கி கோலாவின் நுறைக்குள் மூழ்கடித்துக் கொன்றுகொண்டிருக்கும் சமயத்தில், இடம் கேட்டு நுழைந்தால் வரலாறு ஞாபகத்திற்கு வந்துவிடும் என்று அஞ்சி பங்குதாரர்களாக அவதாரம் எடுக்கிறார்கள். தவிட்டை ஊதி எடுத்துக்கொள்ளச் சொல்லும் ஒப்பந்தங்கள் வழியாக நிர்மூலமாக்கலாம் என அந்நிய முதலைகள் கோட்டுசூட்டுப் போட்டுக்கொண்டு நெருப்பில் தகிக்கும் நம் பகுதிக்குள் நுழைந்துவிட்டார்கள் ஏ.சி கேபின்களைக் கூடவேக் கொண்டுவந்து நட்டு வைத்துக்கொண்டு.

ஒவ்வொரு நரியாக கேபினுக்குள் நுழைகிறது. நம் எஜமானர்கள் பிச்சைக்காரர்களை கோட்டுச் சூட்டுப் போட்டிருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவும், நமக்கு நாகரீகம் கற்றுத் தருகிறார்கள் என்ற மயக்கத்தில் கலர் சாராயத்தில் குடல் எறிந்து வாய் குழறி அவர்களுக்காக ஆள ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறார்கள். 

ஐந்தைந்து ஆண்டுகளாக திட்டத்தை நிறைவேற்றுவதாகப் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தில், காப்பீட்டு நிறுவனங்களை காவு கொடுக்கிறார்கள். அதிலே நோய்ப்பட்டவன் மருத்துவமனையிலிருந்து கதறுகிறான், “எங்கே என் பணம், எங்கே..எங்கே” என்று. காப்பீட்டு நிறுவனத்துக்கோ அதனுடைய நாட்டிலேயே அட்ரஸ் இருக்காது. அதை நம்பிப் போட்டப் பணம்? இவன் பிணமாகும்வரை வராது. அதை நம்பி இவர்கள் அந்த அந்நிய காப்பீட்டு நிறுவனத்தில் பணம் போடவில்லை. உடனே நமது நரிகளுக்குச் சுரணை வந்துவிடுகிறது. 

“அதிவேக வளர்ச்சி மற்றும் வருவாய் பெருக்கம் ஆகியவற்றின் மூலமாகத்தான் சமூக மற்றும் பொருளாதார ஆதரவு திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.” என மான்டெக்  கருத்தைக் கவனித்தால், வெளிநாட்டு வங்கிகளுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும். அவர்கள் நமக்குக்கொடுக்கும் கடன்களுக்கு அதிக வட்டி பெற்றாலும், நாம் போடும் சேமிப்புக் கணக்கிற்கு குறைந்த வட்டி கொடுத்தாலும், அவர்களை நம்புவோம் எனும் மான்டெக்கின் திட்டத்தில் நாம் காவு வாங்கப்படும் எதிர்காலக் காட்சி தென்படுகிறது.

மேலும், “வேளாண்துறை வளர்ச்சியின் பெரும்பகுதி உணவு தாணிய உற்பத்தியிலிருந்து கிடைப்பதில்லை. மாறாக தோட்டக்கலை, பால் மற்றும் மீன்தொழில் ஆகியவற்றின் மூலம்தான் வேளாண் துறையின் வளர்ச்சி எட்டப்படுகிறது. பால், மீன் தொழில் போன்றவை எளிதில் அழுகக்கூடியவை ஆகும். எனவே இந்தப் பொருட்களை அவை உற்பத்தி செய்யப்படும் இடத்திலிருந்து நுகர்வோருக்கு எவ்வளவு விரைவாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.இதற்கு தனியார் துறையின் தீவிர பங்களிப்பு தேவை. இத்தகைய பங்களிப்பை ஏற்படுத்துவதற்காக, மாறில அரசுகள் வேளாண் உற்பத்திப் பொருள் சந்தைக் குழு விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளிடம் நேரடியாக பொருட்களை வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை அகலும். இந்த திருத்தங்களை செய்வதற்கு பெரும் தடையாக இரப்பது, சந்தைகளைக் கட்டுப்படுத்தும் சில சக்திகள் தான். கிராமப்புரங்களில் சாலைகளை ஏற்படுத்துவதன் மூலம் தோட்டத்தில் பறிக்கப்படும் காய்கறிகளை நிறுவனங்களே வந்து வாங்கிச் செல்லும். இதற்கு பிரதம மந்திரியின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.” எனக் கட்டுரை எழுதும் மான்டெக், “சிறுவிவசாயிகள் தமது நிலங்கள் முழுமையான பயனை அடையுவிதத்தில் விவசாயம் செய்யத்திறானியற்றவர்களாக இருக்கிறார்கள்.

 சிறுசிறு நிலங்களை வைத்துக்கொண்டு விவசாயம் செய்வதினால் பெரும் நஷ்டம் தான் ஏற்படுகிறது. அதனால் அந்நிய முதலீட்டார்களிடம் குறு நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள் கொடுத்துவிட்டு அவர்களிடம் வேலைக்குச் சேர்ந்துவிட்டால் விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்க வழியிருக்கிறது; அதன்படி இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக தான் நிர்னயிக்கும் இலக்கை அடையும் எனும் அவர் கருத்தின் படி நிலம் அந்நியர்களுக்கு விற்கப்படாமல் ஓசியிலேயே விடப்படுவதாகிறது. அவர்கள் நம் நிலத்தில் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் வெற்றிபெரும் முயற்சிகளை தமது நாட்டிற்குக் கொண்டு போய் லாபகரமாக விவசாயம் செய்வார்கள். நாம் ஆராய்ச்சிக்கூட எலியாவோம். நிலத்தையும் கொடுத்துவிட்டு அவனுக்கு வேலைக்காரனாகவும் அடிமைப்பட்டு, நிலத்தையும் பாழ்படுத்திக்கொண்டு கடைசியில் இன்னொரு சோமாலியாவை இந்திய மண்ணில் உருவாக இதுவெல்லாம் காரணிகளாம்” என சூசுகமாகக் தெரிவிக்கும் (அ)அறிவிக்கிறார். கவனம். “Even the rain” காட்சிகளை நேரில் காணப்போகும் நேரம் வெகுதூரத்தில் இல்லை. 

மகிழி

2 comments:

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)