"எழுத்து, இசை, நாடகம் போன்ற ஊடகங்கள் ஒரு சராசரி இந்தியக் குடிமகன்மீது ஏற்படுத்தும் உடனடித் தாக்கத்தோடு சினிமா என்ற ஊடகம் அவன்மீது ஏற்படுத்தும் தாக் கத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில், சினிமாவின் தாக்கம் அசுரத்தன மானது என்பதை உணரலாம். வேறு எந்த மாநிலத்து மக்களையும் விட தமிழக மக்கள்மீது சினிமாவுக்கு இருக்கும் ஆதிக்கம் மிகமிகப் பெரிதாக இருக் கிறது.
நமது இளைஞர்களுக்கு இசை என்றால் அது சினிமாப் பாடல்கள் என்று ஆகி விட்டது. கவிதை என்றால் அது அந்தப் பாடல்களுக்கென எழுதப்படும் வரிகள் என்று ஆகிவிட்டது. நடனம் என்றால் அது சினிமா நாயகனும், நாயகியும் அரை குறை ஆடை அணிந்த 50, 60 பேர்களும் சேர்ந்து போடும் குத்து, கும்மாளம் என்று ஆகிவிட்டது. ஓவியம் என்றால் அது சினிமாவுக்காக வைக்கப்படும் சாலையோர விளம்பர பேனர் கள் என்று ஆகிவிட்டது. உடை என்றால் நட்சத்திரங்கள் திரையில் என்ன உடுத்திக் கொள்கிறார்களோ அதுதான் என்று ஆகிவிட்டது.
சினிமாவில் பிரயோகிக்கப்படும் வார்த்தையாடல்கள் தமிழர்களது அன்றாடப் பேச்சு வழக்கில் சர்வ சாதாரணமாகக் கலந்து போய்விடுகின்றன. இவை போக அறிஞர் அண்ணா முதல் கலைஞர் வரை (இப்போது ஜெயலலிதா) அத்தனை முதல் வர்களும் சினிமாக்காரர்கள்தான்.’’
அஜயன்பாலா சித்தார்த் பிறந்த இடம்: காஞ்சீபுரம் தொடர்புகளுக்கு: முகவரி: அஜயன்பாலா 18/9 தரைத்தளம், நான்காவது தெரு, தசரதபுரம், சென்னை 93. மின்னஞ்சல்: ajayanbala@gmail.com |
மேற்கூறியது அஜயன் பாலாவின் ‘உலக சினிமா வரலாறு’ புத்தகத்துக்கு பாலு மகேந்திரா எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. இதைவிட தமிழ்நாட்டில் சினிமா வுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை விளக்கிவிட முடியாது. இந்தச் சூழலில் தமிழ் மக்களில் பெரும்பாலோர் அந்த வலுவான ஊடகத்தின் வரலாறு என்னவென்று அறியா மலேதான் உள்ளனர். அதைப்பற்றிய நல்லது கெட்டதையும், தரத்தையும் அறிந்து கொள்ள வும், புரிந்து கொள்ளவும் அந்த ஊடகம் பற்றிய அடிப்படை அறிவு தமிழர்களுக்கு அவ சியமாகிறது. அந்த வகையில் அஜயன் பாலாவின் இந்தப் புத்தகம் முக்கியமான பங்கை வகிக்கிறது. 1894ல் துவங்கி 1929 வரையிலான காலகட்டத்தில் சினிமாவின் வளர்ச்சியை எளிய வார்த்தைகளில் விளக்கிச் செல்கிறது இந்தப் புத்தகம்.
‘மேஜிக் லாண்டர்னில்’ துவங்கி சிறிது சிறிதாக சினிமா புராஜக்டர் வளர்ச்சி யடைந்தது என்பதும் விளக்கப்பட்டுள்ளது. இந்த ஒரே ஒரு இயந்திரத்தை உருவாக்கு வதில் எடிசன், லுமியர் சகோதரர்கள், டிக்சன் என பலர் பங்கு வகித்துள்ளனர். இதில் எடிசனின் பங்கு ஆச்சரியம் அளிக்கிறது. பிறகு துண்டு துண்டாகக் காட்டப்பட்ட படங்களை இணைத்து கதை சொல்வதில் துவங்கி, பிறகு கதைகளையே எப்படித் திரைப்படமாக எடுத்தனர் என்பதும் சுவாரஸ்யமாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களைத் தவிர இவை குறித்த ஏராளமான படங்களையும் தேடிப் பிடித்து தொகுத்தளித்திருக்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகத்தின் மூலம் தினத் தந்தியில் அஜயன் பாலா எழுதிய தொடர். அந்தத் தொடரை எழுதியபோது வலைதளங்கள் கிடையாது. அந்த நிலையில் ஆசிரியர் விவரங்களைச் சேகரிக்கவும், புகைப்படங்களைத் தேடித் தொகுக்கவும் மிகவும் சிரமப்பட்டிருப்பார் என்பதை விளக்கத் தேவையில்லை. அதற்கு அவருக்கு ஒரு ‘சபாஷ்’. இது தவிர முத்திரை பதித்த பல படங்கள் குறித்தும், நடிகர், நடிகைகள் குறித்தும் சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர். சாப்ளின் உட்பட பலரின் திரை வாழ்க்கை மீது இது வெளிச்சம் பாய்ச்சுகிறது.
‘புதிய கோணம்’ என்ற தலைப்பில் சினிமா குறித்த புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் பாரதி புத்தகாலயம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. முன்பே கூறியது போல சினிமா வரலாறை அறிவதற்கு, எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் ஒரு பங்கையாற்றும் என்பது நிச்சயம். இதைத் தொடர்ந்து இன்று வரையிலான வளர்ச்சியையும் அஜயன் பதிவு செய்ய வேண்டும். பாரதி புத்தகாலயம் அதை வெளியிட வேண்டும் என்பது அவா. நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
புத்தகம் வேண்டுவோர்.
BHARATHI PUTHAKALAYAM.
421, Anna Salai, Teynampet,
Chennai-600 018. Phone: 044-24332424, 24332924, 24339024.
Email: thamizhbooks@gmail.com
புத்தகத்தை பற்றிய தங்களது பதிவே ஆவலை தூண்டுகிறது..அருமை..நன்றி.
ReplyDeleterate how much
ReplyDelete