Wednesday, February 1, 2012

உண்மைக்கு புறம்பான ஆளுநர் உரை



தமிழகச் சட்டமன்ற கூட்டம் 30.01.2012 ல் நடைபெற்று, ஆளுநர் உரை ஆளுநரால் வாசிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரை என்று அழைக்கப்பட்டாலும், ஆளுநரால் வாசிக்கப் பட்டாலும் ஆளுநர் உரை ஆளும் அரசின் உரை தான். அதில் பல்வேறு அறிவிப்புகள், சாதனைப் பட்டியல், கொள்கை அறிவிப்புகள் என பல உள்ளன. அதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கருத்துக்களை அறிக்கை வாயிலாகவும், சட்டமன்ற உறுப்பி னர்களின் உரைகள் வாயிலாகவும் பதிவு செய்யும்.

ஆனால் ஆளுநர் உரையில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்பது தான் நகைப்பிற்கு உரிய ஒன்றாக உள் ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர் கள் பொறுப்பேற்ற உடனேயே வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் இருந்த கொள் ளையர்களும், கொலைகாரர்களும், ரவுடி களும் வண்டி ஏறி ஆந்திராவிற்குச் சென்று விட்டார்கள் என்று பெருமையுடன் குறிப் பிட்டிருந்தார். ஆனால் கடந்த 6 மாத காலமாக தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அவரது கூற்றை மறுதலிக்கன்றன. கடந்த 6 மாதங்கள் நடை பெற்ற சம்பவங்களையெல்லாம் பட்டிய லிடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மாறாக கடந்த ஒரு மாதத்தில், அதாவது ஆளுநர் உரை தயாரிப்பு காலமான 2012 ஜன வரி மாதத்தில் நடைபெற்றுள்ள சம்பவங் களே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எவ் வளவு சீர்கெட்டுள்ளது என்பதை வெளிப் படுத்தும்.

ஆளுநர் உரை நாளன்றே

ஆளுநர் உரை நிகழ்ந்த 30.01.2012 தமி ழகம் சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் சம் பவங்களுக்குப் பஞ்சம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியது.30.01.2012 ல் சென்னை அருகே மதுரவாயல் அருகில் வேனில் பணத் துடன் சென்றுகொண்டிருந்த தனியார் நிறு வன வேனை வழிமறித்து, ஊழியர்களை அடைத்துப் போட்டு, அதிலிருந்த ரூ.22 லட்சம் பணத்தைக் கொள்ளையர்கள் அள் ளிச் சென்ற செய்தி பத்திரிகைகளில் வந்துள் ளது.அதே நாளில் வேலூர் அருகே ஆம் பூரில் சத்தியமூர்த்தி என்பவரின் எஸ்.ஆர். நகை அடகுக் கடையின் புறச்சுவரில் துளை போட்டு, ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென் றுள்ளனர்.அதே 30 ம் தேதியில் ஒசூரில் வீட் டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை நாகரத்தினத்தின் வீட்டில் நுழைந்து, அவரை மிரட்டி 40 சவரன் நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஆளுநர் உரையில் சட்டம்-ஒழுங்கு குறித்து பெருமையடித்த நாளிலேயே அதற்குச் சவால் விடும் வகை யில் இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

பதற வைக்கும் கொலைச்சம்பவங்கள்

2012 ஜனவரி மாதத்தில் மட்டும் நடை பெற்ற படுகொலை சம்பவங்களைப் பார்க்க லாம். ஜனவரி 2ல் சென்னை நுங்கம்பாக்கத்தில் சீதாலட்சுமி எனும் வங்கி அதிகாரிபடு கொலை செய்யப்பட்டு, அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஜனவரி 3ல் துடிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பட்டப்பகலில் வெட்டிப்படு கொலை செய்யப்பட்டார். இவர் அ.இ.அ.தி. மு.க. பிரமுகராக இருந்து கட்சியின் அதிகாரப் பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு, வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 6 ல் பாளையங்கோட்டையில் அரசு பொறியியல் கல்லூரி அலுவலர் மணிராஜ், அவரது மனைவி பார்வதி ஆகியோர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு கொள் ளையடிக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 8ல் சென்னை மைலாப்பூரில் ஆட்டோ ஓட்டுநர் அரிகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஜனவரி 9ல் சென்னை அம்பத்தூரில் ஆந்திராவைச் சார்ந்த பெண்மணி புவனாரெட்டி படுகொலை. ஜனவரி 10ல் சென்னை கொளத்தூரில் ரியல் எஸ்டேட் அதிபர் புவனேஸ்வர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அதே நாளில் கூடலூர் அருகே மணலி கிராமத்தில் கூலித் தொழிலாளி பாலசந்திரனின் 37 வயது மனைவி ராதாமணி, 15 வயது மகள் சம்யா, 12 வயது மகன் விஷ்ணு ஆகியோர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட் டுள்னர்.

ஜனவரி 10ல் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகேயுள்ள நந்தவனம்பட்டி கிராமத்தில் அவர் வீட்டருகே வெட்டிப் படு கொலை செய்யப்பட்டார். ஜனவரி 12ல் சென்னை முகப்பேர் அருகே ஒரு வாலிபர் முகம் சிதைந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 16 ல் கோபி செட்டிபாளையத்தில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை படுகொலை செய் யப்பட்டு, உடல் கிடைத்தது. ஜனவரி 17ல் செங்கல்பட்டில் தே.மு.தி.க. கவுன்சிலர் சுரேஷ் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். ஜனவரி 18ல் திருச்சி உப்பிலியபுரம் அருகே கோஷ்டி மோதலில் சிக்கிய ஆசிரியர் கும ரேசன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். ஜனவரி 19ல் சைதாப்பேட்டையில் ராஜ சேகர் எனும் ஆட்டோ ஓட்டுநர் கழுத்து அறுக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட் டுள்ளார்.

ஜனவரி 21ல் சென்னை தீவுத்திடல் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் மரத் தில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அதே நாளில் விருத்தாசலத்தில் 10 சவரன் நகைக்காக தமிழ்ச்செல்வி எனும் பெண் கழுத்து அறுக்கப்பட்டு, படுகொலை செய்யப் பட்டுள்ளார்.ஜனவரி 23 ல் புதுக்கோட்டை விராலிமலை அருகே அய்யப்பன், ரமேஷ் என்பவர்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளனர். ஜனவரி 23 ல் கோட்டூர்புரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கார்த்திக் என்ற ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

ஜனவரி 24ல் சென்னை போரூரை அடுத்த மாங்காட்டில் மகளிர் சுய உதவிக்குழு தலைவி அம்பிகா கழுத்தறுக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டார்.ஜனவரி 26 ல் வண் டலூர் தவுஷிக் நிஷா எனும் பெண் அவரது வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்யப் பட்டுள்ளார். ஜனவரி 27ல் ஆலந்தூர் ஜல்ல டியன் பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் வெட் டுக் காயங்களுடன் ஒரு ஆண்பிணம் கண்டு பிடிக்கப்பட்டது.

கொள்ளைச் சம்பவங்கள்

ஜனவரி புத்தாண்டில் வழிபாட்டுக்காக சென்ற மேரி வினோமிகா எனும் பெண்ணை வழி மறித்து 12 சவரன் நகை பறித்துச் செல் லப்பட்டது. ஜனவரி 3ல் சென்னை அசோக் நகரில் தனியாக இருந்த அனுராதா அகர்வால் எனும் பெண்ணிடம் ரூ.2 லட்சமும், நகை களும் கொள்ளையடிக்கப்பட்டது. ஜனவரி 7ல் வில்லி வாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து டேவிட் என்பவரின் வீட்டில் 21 சவரன் நகையும், ரூ.6000 மும் கொள்ளை அடிக்கப்பட்டது. வேளச்சேரியில் ஜெய லட்சுமி எனும் பெண்ணிடம் வழிமறித்து, 10 சவரன் நகை பறிக்கப்பட்டது. ஜனவரி 8ல் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் ரூ.2.5 லட்சம் பணமும், 3 கிலோ வெள்ளியும் கொள்ளை அடிக்கப்பட்டது.

ஜனவரி 12 ல் ஆலந்தூர் ஆலம்பாக்கத் தில் தனியாக இருந்த புஷ்பா எனும் பெண் ணைக் கட்டிப் போட்டு, அவரது கழுத்தில் கிடந்த 11 சவரன் நகையை திருடர்கள் தட்டிச் சென்றனர். ஜனவரி 18ல் சென்னை கொடுங் கையூரில் லாரி அதிபர் ராஜ்குமார் வீட்டில் பூட்டை உடைத்து, 27 சவரன் நகை, ரூ.10000 தொகையும் கொள்ளை அடிக்கப்பட்டது.அதே நாளில் சென்னை வளசரவாக்கத்தில் வெங் கடேச பெருமாள் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு, ரூ.1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.

அன்றைய தினம் குமரி மாவட்டம் திட்டு விளையில் மெயின் ரோட்டில் உள்ள தோ வாளை கூட்டுறவு வீட்டுவசதி சங்க வங் கியில் 2 கேஸ் சிலிண்டருடன் வந்த கொள் ளையர்கள் லாக்கரை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர்.

ஜனவரி 23 ல் ஆலந்தூர் பெருங்குடியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் பட்டப் பகலில் துப்பாக்கியால் மிரட்டி ரூ.24 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. ஜனவரி 25-ல் சிவகங்கையில் அடகுக்கடையில் கள்ளச் சாவி போட்டு திறந்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இவ்வாறு இந்த ஒரு மாதத் தில் மட்டும் நடைபெற்ற சம்பவங் களில் ஒரு சில மட்டும் தரப்பட்டுள்ளது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் கடந்த 6 மாத ஆட்சியின் லட் சணத்தை இந்த ஒரு மாத நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

காவல்துறையினரின் நிலை

இத்தகைய படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் சிலவற்றில் குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டாலும் பல வழக்குகளில் காவல்துறை குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, கைது செய்யவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட் டச் செயலாளர் தோழர் கனகராஜ், செல்வம் எனும் நபரின் நில மோசடிக்கு எதிராக குரல் கொடுத்தார் என்பதற்காக அவரது வீட்டில் 2012 ஜனவரி 6 ல் நள்ளிரவு நேரத்தில் பெட் ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் குற்றவாளி யார் என்பது வெளிப்படையாகத் தெரிந்தும் காவல்துறை இதுவரை குற்றவாளிகள் எவ ரையும் கைது செய்யவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் 29 ல் விழுப்புரம் அருகே திருக்கோவிலூரில் 4 இருளர் இன இளம் பெண்கள் காவல்துறையைச் சார்ந்த 8 காவலர்களால் கொடூரமான முறையில் பாலி யல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியும் கூட குற்றவாளி களான காவலர்கள் இதுவரை கைது செய்யப் படாதது வெட்கக்கேடானது. ஒரு பெண் முத லமைச்சராக இருக்கும் மாநிலத்தில் இத் தகைய கொடூரம் நிகழ்ந்துள்ளது.

அதிரடி இடம் மாற்றங்களையும், அரசியல் தொடர்புடையவர்கள் கைது நிகழ்வுகளையும் சந்திக்கும் தமிழகத்தில் ( நில மோசடி, கட்டப் பஞ்சாயத்து, அராஜகச் செயல்களில் ஈடு படும் அரசியல் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் நமக்கு ஆட்சேபணை இல்லை) இத்தகைய சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் குற்றச்சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும், அத்தகைய குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் நடவ டிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, வீண் தம் பட்டம் அடிப்பதில் பலனில்லை.
எஸ்.நூர்முகம்மது

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)