Monday, January 30, 2012

பிரதமரே, குறுக்கு வழிகளால் பயனில்லை!



பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்கள் 2012-ம் ஆண்டை குறிப்பிடும்படி யான இரு உரைகளோடு தொடங்கியுள் ளார். ஜனவரி மாதம் 3ம் தேதி இந்திய அறிவியல் காங்கிரசில் உரை நிகழ்த் தினார். மீண்டும் 10-ம் தேதி, இந்நாட்டின் வறுமை மற்றும் சத்துணவுக்குறைபாடு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள அறிக்கைகளை அவர் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். இரு உரைகளும் வெவ்வேறு பிரச்சனை களைக் குறிக்கின்ற போதிலும், இணைத்துப் பார்க்கையில், இந்தியாவின் தகுதிகளைச் செயல்வடிப்பதில் கவலைய ளிக்கும் அணுகுமுறையையே உணர்த்துகிறது. 

சீனா முந்தி விட்டதாம்!

கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் 125-வது பிறந்த தின உரையிலும், பிரபஞ்சத்தின் நுண்ணணுப்பொருட்கள் குறித்து ஆய்வு செய்த விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ் (போசோன் என்று இவரது பெயரிலேயே ஒரு நுண்ணணுப்பொருள் அழைக்கப் படுகிறது) அவர்களைப் பாராட்டி உரை நிகழ்த்தும் போதும், அறிவியல் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான செலவினம் மிகக் குறைவாகவும் தேக்கமடைந்த நிலையில் இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். தற்போது, ஆய்வு மற்றும் வளர்ச்சிக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீதத்திற்கும் குறைவாகவே செல விடப்படுகிறது. இவ்விஷயத்தில் சீனா நம்மை முந்திவிட்டதாக வருந்திய பிரதமர், 12-வது திட்டக் காலம் முடிவு றுவதற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் குறைந்தபட்சம் 2 சதவீதமாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகச் செலவிடவேண்டுமென்று வற்புறுத்தி யுள்ளார்.

பிரதமரின் பாராட்டத்தக்க நோக்கங்களை மறுக்க இயலாது. இத்தகைய செலவினங்களை அதிகரிக்க, அவர்கள் வலியுறுத்தும் வழிமுறைகளில்தான் பிரச்சனை இருக்கிறது. “மொத்த ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான செலவினத்தில் மூன்றல் ஒரு பங்கினை மட்டுமே அளிக்கும் தொழிற்சாலைகள் தங்களது பங்களிப்பைக் குறிப்பிடும்படியாக உயர்த் தினால் மட்டுமே அதை எட்டிட இயலும்; மேலும் அரசின் பிரபலமான தாரக மந்திரமான, பொதுத்துறை-தனியார்துறை பங்கிணைப்பின் மூலமே இந்நோக்கங்களை அடைய இயலும்” என்று பிரதமர் கூறுகிறார். ஆய்வு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் தனியார்கள் காட்டும் ஆர்வத்தின் பின்புலம் லாப நோக்கங்களை அதிகரிப்பதே என்பது உலகெங்கும் அங்கீ கரிக்கப்பட்ட விஷயமாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதில் அறிவியலின் பங்கு என்று பிரதமர் கூறியிருப்பது முரண்பட்டதாக இருக்கிறது. செயல்முறைசார் அறிவியல் ஆய்விற்கு நிதியைத்திரட்டுவது சுலபமாக இருப்பதால், அரசு, தனியார் நிதியைப் பெறுவதற்கான கொள்கைகளை வடிவமைக்கும் என்று கூறியுள்ளார். இத் தகைய எண்ணப்போக்கைப் பலப்படுத்த, “தற்போது, ஆய்வு மற்றும் வளர்ச் சிக்காக அரசு அளிக்கும் நிதி, செயல் முறை சார் அறிவியல் ஆய்வினைக்காட் டிலும் அடிப்படை ஆய்விற்கே பயன் படுகிறது என்று பிரதமர் வருத்தம் தெரி வித்தார். அப்படியெனில், அடிப்படை ஆய்வினைப் பலப்படுத்துவதற்கு பதி லாக தனியார்களின் லாபங்களை ஊக்குவிக்கும் தனியார்-பொதுத்துறை இணைப்பை பிரதமர் வலியுறுத்துகிறார் என்பதே இதன் பொருள். இப்போக்கிலே சிந்தித்தால், இராமானுஜன் மற்றும் போஸ் போன்ற விஞ்ஞானிகள் இந்தியா வில் உருவாவது சாத்தியமல்ல. 

மெலிந்துவரும் தேசம்! 

பிரதமர், அவரது இரண்டாவது உரை யில், ஊட்டச்சத்துக் குறைபாட்டுப் பிரச் சனை நாட்டின் அவமானமாகும் என வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையின்படி, 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளுள் 42 சதவீதம் எடை குறைவாகவும் 59 சதவீதம் வளர்ச்சி குறைவாகவும் காணப்படுகிறது. இருப்பினும், இத்தகைய கண்டு பிடிப்புகள் ஒன்றும் புதிதல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிதி மந்திரியான மன்மோகன்சிங் அவர்க ளால் கொண்டுவரப்பட்ட பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள், பொருளாதார வேறு பாட்டின் அடிப்படையில் இரு வேறு இந்தியாவை உருவாக்குவதிலேயே வெற்றி கண்டுள்ளன என்ற உண்மை யினை பரந்த ஆய்வைக்கொண்ட அறிக் கைகள் சில ஏற்கனவே உறுதிப்படுத் தியுள்ளன. 

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுள் 50 சதவீதத்தினர் சத்துக்குறை வுடன் காணப்படுவது மிகவும் பின்தங்கி யுள்ள ஆப்பிரிக்காவின் தென்சஹாரா பகுதியைவிட மோசமானதாக இருக் கிறது. குழந்தைகளுள் பாதிப் பேருக்கு தடுப்பு ஊசி போடப்படுவதில்லை. எனவே, தடுக்கக்கூடிய நோயினால் இறக்கின்றனர். மருத்துவத்துறையில், அரசு மற்றும் தனியாரின் மொத்த செல வினத்தை எடுத்துக் கொண்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், அந்த சதவீதம் ஆப்பிரிக்கா முழுவதையும் விட குறைவாக உள்ளது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளான பிறகும் கூட 50 சதவீத இந்தியர்கள் கழிப்பறை வசதியில்லாத பரிதாப நிலையில் இருக்கின்றனர். 

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் செய்யப்பட்ட தேசிய குடும்ப உடல்நல ஆய்வின் மூன்றாம் பதிப்பில் வெளிவந்த நிலைமைகள், அதன் இரண்டாம் பதிப்பில் வெளிவந்ததை விட மோச மாகியிருப்பது கவலையளிப்பதாக உள் ளது. 6- லிருந்து 35 மாதங்களுக்குள் உள்ள குழந்தைகள் இரத்தசோகை யினால் பாதிக்கப்படும் சதவீதம் 74.2 லிருந்து 79.2 ஆக உயர்ந்திருக்கிறது. இவ் விகிதம், 15-49 வரை வயதுடைய திரு மணமான பெண்களை எடுத்துக் கொண் டால் 51.8 சதவீதத்திலிருந்து 56.2சதவீத மாக அதிகரித்திருக்கிறது. இரத்த சோகையினால் பாதிக்கப்படும் இதே வயதையுடைய கர்ப்பிணிப் பெண்களின் சதவீதம் 49.7 லிருந்து 57.9 ஆக உயர்ந் துள்ளது. நமது தாய்மார்கள் மற்றும் குழந் தைகளின் நிலை இதுதான். 

அரசின் வறட்சியான திட்டம்

இந்தியாவின் ஊட்டச்சத்துக்கான தேசியக்குழுவின் தலைவராக பிரதமர் இருப்பது இதில் வேடிக்கையான விஷயம். இத்தகைய கடுமையான நிலையை சீர்செய்ய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவையை இந்தியா முழுமைக்கும் அமலாக்குவது என அரசு அறி வித்துள்ளது. ஆனால் இத்தகைய அறிவிப்பும் உச்ச நீதிமன்றத்தின் உத்தர வின் பேரிலேயே நடைபெற்றது. இருப்பினும், நம் நாட்டில் ஐசிடிஎஸ் கண்காணிப் பாளர்களின் பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு காலியாகவே இருக்கிறது. மதிப்பிடப்பட்டுள்ள 14 லட்சம் மையங்களுள் 1 லட்சத்து 10 ஆயிரம் அங்கன் வாடிமையங்கள் செயல்படுவதேயில்லை. பெரும்பாலான அங்கன்வாடி மையங்கள் பரிதாபமான நிலையில் உள் ளன. பலருக்கு, அதிலும் குறிப்பாக பீகா ரின் 90சதவீத மையங்களுக்கு சொந்தக் கட்டிடம் இல்லை. பாதிக்கும் மேலான வற்றிற்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி யில்லை.

நாடாளுமன்றத்தில் கட்டாயமாக கல்வி பெறும் உரிமைக்கான சட்டம் இயற்றப்பட்ட பின்னரும், அங்கன்வாடிகளை ஆரம்பப்பள்ளிகளுடன் இணைப்பதற்கான கோரிக்கை இயக்கங்கள் தொடரும் நிலையிலும் அங்கன் வாடிப்பணியாளர்களின் நிலை மிக மோசமாகவே இருக்கிறது.

ஐசிடிஎஸ் திட்டத்தை பலப்படுத்து வதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது. ஆனால் மதிய உணவுத் திட்டத்தை பொதுத் துறை - தனியார் கூட்டு பங்கேற்பு (பிபிபி -ஞஞஞ) மூலம் தனி யாருக்கு தாரை வார்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா, மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 1 சதவீதம் மட்டுமே பொது சுகாதாரத் திற்காக செலவிடுகிறது. உடல்நல பட் ஜெட்டிற்கான தொகை ரூ. 22,300 கோடி மட்டுமே. இதை விட 8 மடங்கு அதிக மாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மட்டும் அரசு இழந்திருக்கிறது. 

படிப்பினை

பிபிபி மூலம் குறைபாடுகளை களைய எடுக்கும் முயற்சிகளும், அதற்காக அரசு, தனியாரைச் சார்ந்திருப்பதும் கவலை யளிக்கும் அம்சமாகும். நான் ஒரு விஷ யத்தினை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறேன். மீண்டும் வலியுறுத் துவதும் அதுதான். செல்வந்தர்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்ட சலுகைகளை விலக்கி, உரிய வரிகளை கறாராக வசூலிக்க வேண்டும்; அதன் மூலம், நமது பொருளாதார சமூகக் கட்டமைப்பிற்காக அரசு பயன்படுத்து மானால், பெருமளவில் வேலைவாய்ப்பு பெருகும். அதைஅவ் வகையில் பெருக்கி னாலொழிய, இந்தியாவின் உள்ளார்ந்த சக்தியினை செய லாக்கிட முடியாது.

சீத்தாராம் யெச்சூரி எம்.பி.
தமிழில் : ஜெ. விஜயா 

நன்றி:‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ (16.1.2012)

2 comments:

  1. இந்தியாவின் பிரதமர் ஓ!ஓ! சாரிங்க கார்பரேட் கம்பெனிகளின் பிரதான பாது காவலரின் வழக்கமான நீலிக்கண்ணீர் தாணுங்கோ!

    ReplyDelete
  2. You have given an analytical political view.

    Thanks for sharing.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)