Monday, January 23, 2012

நம் மக்களுக்கான கோட்பாடுகள்:நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

அறிவியல் எதற்காக என்ற கேள்வியுடன் ஆரம்பிக்க விரும்புகின்றேன். என்னைப் பொறுத்த வரையில் அறிவியல், மக்கள் மகிழ்ச்சியுடனும், வளங்களுடனும் வாழ்ந்திடுவதற்காக பயன்பட வேண்டும். அறிவியல், இயற்கையைப் புரிந்து கொள்ளவும், அதன் பலன்களைப் பெற்று பயனடையவும் உதவுகிறது.

அறிவியல் ஆபத்தானது, அணு குண்டையும் மற்ற அழிவுக் கருவிகளையும் தயாரிக்க வல்லது என்று சொல்லி சிலர் இதனை மறுத்திடலாம். அறிவியல் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக அதன் பயன்பாட்டை நிராகரிக்க முடியாது. அறிவியல் இல்லாவிடில் வாழ்க்கை பாதுகாப்பற்றதாகவும், கடினமானதாகவும் இருந்திடும். அறிவியல் தொழில் நுட்பம் மக்களுக்கு உதவிடுவதுபோல் அடிப்படை அறிவியல் உதவிடுவது இல்லை என்று சிலர் கருதலாம். அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் தங்களின் ஆராய்ச்சியின் பயன் மக்களைச் சென்றடையுமா என்று எண்ணிப் பார்ப்பதில்லை. நியூட்டனும், ஐன்ஸ்டீனும் தங்களின் ஆராய்ச்சி மக்களுக்கு எந்த அளவுக்கு பயன்படப்போகிறது என்பது பற்றி சிந்திக்கவேயில்லை. இருப்பினும் அவர்களின் ஆராய்ச்சி இன்று மக்க ளுக்கு பெரிதும் பயன்படுகின்றன.

இன்று நம் நாடு சந்திக்கும் பிரச்சனை களை அறிவியல் மூலமே தீர்க்க முடியும். இந்தியாவின் 80 சதவீத மக்கள் வறுமையில் உழலுகிறார்கள். வேலையின்மை, விலைவாசி ஏற்றம், போதிய சுகாதார, மருத்துவம், கல்வி மற்றும் வீடு வசதி யின்மை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 48 விவசாயிகள் தற் கொலை செய்து கொள்கிறார்கள். 47 சதவீத குழந்தைகள் ஊட்டச் சத்து இல்லா மல் அவதிப்படுகிறார்கள். இக்குறை களையெல்லாம் நீக்கி, நாட்டில் அனை வரையும் வளமுடன் வாழவைப்பதே நம் நாட்டின் லட்சியமாக இருக்க வேண்டும். 

சன் யாட் சன் என்ற சீனா நாட்டுத் தலைவர், சீனாவின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மூன்று மக்கள் கோட்பாடுகளை முன்வைத்ததுபோல், நான் நம்நாட் டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண நான்கு மக்கள் கோட்பாடு களை முன் வைக்க விரும்புகிறேன். அறிவியல், ஜனநாயகம், வாழ்வாதாரம், மக்கள் ஒற்றுமை ஆகிய இந்த நான்கு கோட்பாடுகளே நமது வழிகாட்டும் நெறி முறைகளாக இருக்க வேண்டும்.

அறிவியல்

பண்டைக் காலத்தில் இந்தியா அறிவியல் பாதையில் பயணித்து வளர்ச்சி பெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கிரேக்கமும், ரோமானியமும் தவிர பிற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் அநாக ரிகமாக இருந்தபோது, தன்னுடைய அறி வியல் ஞானத்தின் உதவியுடன் இந்தியா நாகரிக வளர்ச்சி பெற்ற நாடாகத் திகழ்ந் தது. மிகப் பெரிய அறிவியல் கண்டு பிடிப்புகள் இங்கு தோன்றின. ஆனால், சிறிது காலத்திற்குப் பின்னால், அறிவி யல் பாதையைக் கைவிட்டு, மூட நம்பிக் கைகளுக்கும், சடங்குகளுக்கும் இட மளித்தோம். ஆரியபட்டா, பிரம்மகுப்தா, சுசுருதா, சாரக்கா போன்ற நம் மூதாதையர் தேர்ந்தெடுத்த அறிவியல் பாதையில் மீண்டும் நாம் பயணிக்க வேண்டும். பண்டைக் கால இந்தியாவின் அரிய சாதனைகளாக மூன்று முக்கிய அறிவியல் கண்டு பிடிப்புகளைச் சுட்டிக் காட்டலாம்.

1. தசாம்ச முறையைக் கண்டுபிடித்தது இந்தியாவின் மிகப்பெரிய சாதனை யாகும். ஐரோப்பியர்கள், தசாம்ச முறையிலான எண்களை அரேபிய எண்கள் என்று தவறாக அழைத்தனர். ஆனால், அரேபியர்கள் இதை இந்தியர்களிட மிருந்து பெற்றதால், இந்திய எண்கள் என்று அழைத்தனர். இதுவே தசாம்சமுறை இந்தியர்களின் கண்டுபிடிப்பு என் பதற்கான சான்றாகும். தசாம்ச முறையின் மூலமே ஒரு எண்ணுக்குப் பின் னால் பூஜ்யங்களைச் சேர்த்து மிகப் பெரிய எண்களையும் குறிப்பிடமுடியும். எடுத்துக்காட்டாக ஒரு கோடி என்ப தனை 1க்கு பின்னால் 7 பூஜ்யங்களைச் சேர்த்துக் குறிப்பிடலாம். (10,000000). அதே போல் பத்து கோடியைக் குறிப்பிட 1க்குப் பின்னால் 8 பூஜ்யங்களைச் சேர்த் துக் குறிப்பிடலாம். ரோமானியர்கள் பூஜ் யத்தைக் கண்டுபிடிக்காததால் பெரிய எண்களைக் குறிப்பிட மிகவும் சிரமப் பட்டார்கள். பூஜ்யம் இந்தியா, உலகிற்கு அளித்த பரிசாகும்.

2. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்து வெளி நாகரிகத்தில் மிக உன் னதமான முறையில் நகரங்களை இந்தி யர்கள் அமைத்திருந்தார்கள்.

3. ஐரோப்பியர்கள் இரு நூறு ஆண்டு களுக்கு முன்னால் கண்டுபிடித்த சீர மைப்பு அறுவைச் சிகிச்சையை இந்தியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித் திருந்தனர். 

பண்டைக் கால இந்திய விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் பற்றி  வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இன்றைய இந்தியா அறிவியல் வளர்ச்சியில் மிகவும் குன்றியுள்ளது. நம் நாட்டில் உள்ள சமூகக் கொடுமைகளுக்கும், கொடிய வறுமைக்கும் இதுவே காரணம். இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களைக் கற்பித்தால் மட்டும் போதாது. மக்களிடையே அறிவியல் பார்வையை உண்டாக்கிட வேண்டும். பொது மக்களிடையே நிலவும் பிற்போக்குத்தனத்தையும், மூட நம்பிக்கைகளையும் அகற்றிட பகுத்தறிவுப் பார்வையை வளர்த்திட வேண்டும். மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ள சாதிய, வகுப்புவாத சிந்தனைகள் மாறிட வேண்டும். அறிவியல் வளர்ச்சி என்றால் வெறும் இயற் கை அறிவியல் மட்டுமல்லாது, சமூக அறிவியலும் சேர்ந்ததே. உலகெங்கிலும் இன்று ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியி லிருந்து மீளுவதற்கு பொருளாதாரக் கோட்பாடுகளையே நாம் தெரிந்திருக்க வேண்டும். இயற்கை அறிவியலோ, பொறியியலோ இந்நெருக்கடியிலிருந்து மீண்டுவரக் கைகொடுக்காது.

ஜனநாயகம்

இன்றைக்குத் தேவையான இரண்டாவது கோட்பாடு ஜனநாயகம் ஆகும். பண்டைக் காலத்தில் இந்தியாவில் ஜனநாயகம் எந்த அளவிற்கு வளர்ந்திருந்தது என்பதற்கு வரலாற்றில் பல்வேறு சான்றுகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் மகதநாட்டு அரசனாக இருந்த அஜட்டாசத்ரு, அருகாமையிலிருந்த வஜ்ஜி யின் குடியரசு மீது படை எடுக்க எண்ணினான். போரைத் தொடங்குவதற்கு முன் புத்தரிடம் ஆலோசனை பெற தன்னுடைய தூதுவனை அனுப்பினான். தூதுவனிடம் நேரடியாக பதில் அளிக்காமல், புத்தர் தன்னுடைய சீடன் ஆனந்தனிடம் வஜ்ஜியின் நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு தழைத்து வருகிறது என்பது பற்றி பேசினார். “உனக்கு தெரியுமா ஆனந்த், வஜ்ஜியின் நாட்டு மன்னன் அடிக்கடி மக்கள் சபையைக் கூட்டி பிரச்சனைகள் குறித்து குடி மக்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறான். இத்தகு ஜனநாயகம் நீடித்து இருக்கும் வரையில் வஜ்ஜியின் நாட்டை யாரும் வென்றிட முடியாது” என்று புத்தர் தன் சீடரிடம் கூறியுள்ளார். 

இதே போன்று வரலாற்றில் இன் னொரு சான்றும் உள்ளது, கி,பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “அவதன் சடக்” என்ற சமஸ்கிருத நூலில் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. வட இந்தியாவிலிருந்து வரும் வணிகர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு மன்னனைச் சந்திக்கிறார்கள். வட இந்தியாவில் எத்தகு அரசாட்சி நடைபெறுகிறது என்று கேட்கும் மன்னனிடம் “ஒரு சில பகுதிகளில் மன்னராட்சியும் ஒரு சில பகுதிகளில் மக்களாட்சியும் நடக்கிறது”, என்று பதிலளிக்கிறார்கள் வணிகர்கள். இவ்வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து இந்தியாவிற்கு ஜனநாயகம் புதியதல்ல என்பதை அறியலாம். பண்டைக்கால இந்தியாவில் மன்னர்கள் மக்களிடையே மனம் திறந்த விவாதங்களை நடத்தியுள்ளனர். இதனால்தான் அன்றைய இந்தியாவில் மருத்துவமும், கணிதமும், வானவியலும், தத்துவமும் வளர்ச்சி பெற்றன. 

இன்றைய இந்தியாவிற்கு ஜனநாயகம் உகந்ததல்ல என்று சிலர் சொல்லுகிறார் கள். இது ஏற்றுக் கொள்ள முடியாத வாத மாகும். இந்தியாவில் போதிய அளவு ஜன நாயகம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். அறியாமையிலிருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் கல்வி மற்றும் கலாச் சாரத்தை உயர்த்திட வேண்டும். நாட்டின் மறுகட்டமைப்பு பணியில் அவர்களை ஈடுபடுத்திட வேண்டும். அறிவியலும், ஜனநாயகமும் ஒன்றோடொன்று இணைந்து செல்வன. அறிவியல் வளர்ச்சி ஏற்படு வதற்கு ஏதுவான சூழலை நாம் உரு வாக்கிட வேண்டும். சுயமாக சிந்திக்க வும், வாதிடவும் பழகிட வேண்டும். சகிப் புத்தன்மையும், பிறருடைய வாதத்தை ஏற்கவும், மறுக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஜனநாயகத் திற்கு இவைகள் எல்லாம் தவிர்க்க முடியாத தேவைகள்.

வாழ்வாதாரங்கள்

மக்களுக்கான வாழ்வாதாரங்கள் மூன்றாவது முக்கிய கோட்பாடாகும். 80 சதவீத இந்தியர்கள் வறுமையில் வாடு கின்றனர். வேலையின்மை, போதிய கல்வி, மருத்துவ மற்றும் வீடு வசதி யின்மை போன்ற பிரச்சனைகளை மக் கள் அன்றாடம் சந்திக்கிறார்கள். சமீப காலமாக பணக்காரர்களுக்கும், ஏழை களுக்குமான இடைவெளி அதிகரித்துள் ளது. ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி யும் மிகச் சிலரையே சென்றடைந்துள்ளது. 

பிரான்சு நாட்டு சிந்தனையாளர் ரூசோ, “சமுதாயத்தின் பெரும்பான்மை மக்கள் வறுமையில் வாடும்போது ஒரு சிறு பகுதியினர் அனைத்து வசதிகளையும் பறித்துக்கொள்வதென்பது இயற்கை நியதிக்கு புறம்பானதாகும்” என்று கூறியுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நாம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். நாம் வாழ்கின்ற சமுதாயம் முதலாளித்துவ சமுதாயமா, சோசலிச சமுதாயமா என்பதல்ல பிர்ச்சனை. மக்களின் வாழ்க்கைத் தரம் உயருகிறதா, இல்லையா என்பதே முக்கியம். கடந்த பதி னைந்தாண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என்பதும், நாட்டின் பெரும் பகுதி மக்கள் கொடிய வறுமையில் உழல்கிறார்கள் என்பதும் சகிக்க முடியாத கசப்பான உண்மைகளாகும். 

பதினெட்டாம் நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பாவில் தொழிற்புரட்சி தோன்று வதற்கு முன்னர் நிலப்பிரபுத்துவம் வியாபித்திருந்தது. நிலப்பிரபுத்துவ காலத்தில் உற்பத்தி முறை மிகவும் பின்தங்கியிருந்த தால், செல்வமும்,வசதியும் பெரும் பகுதி மக்களுக்குக் கிடைக்காமல், மிகச் சிலர் கைகளிலேயே செல்வம் குவிந்திருந்தது. ஆனால், நவீன தொழிற்சாலைகள் சக்தி வாய்ந்ததாகவும், அசுர வேகத்தில் பொருட் களைத் தயாரிக்கும் திறன் கொண்டவை களாகவும் இருப்பதால், அனைத்து மக்க ளுக்கும் தேவையான செல்வத்தையும், வசதிகளையும் உருவாக்கலாம். எல்லா நாட்டு அரசுகளும் இதனை உறுதிப் படுத்திட வேண்டும்.

மக்கள் ஒற்றுமை

இந்தியாவில் பல்வேறு இன மக்கள், பல்வேறு மொழிகள் பேசி, பல வகையான மதங்களைப் பின்பற்றி பன்முகக் கலாச்சாரத்துடன் வாழ்கிறார்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியாவிற்குள் குடிபெயர்ந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் பன்முகத்தன் மை குறித்து அறிந்திட, காளிதாஸ் காலீப் எழுதியுள்ள “பரஸ்பர புரிதலுக்கான கல்வி நிலையம்” என்ற கட்டுரையும், வலை தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் “எது இந்தியா” என்ற காட்சிப் படமும் உதவிடும். இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திட அனைத்துச் சமூக மக்களையும் நேசமுடன் ஏற்றுக் கொள்ளும் மதச்சார்பின்மையே சிறந்த வழியாகும். நவீன இந்தியாவை உருவாக்கிய பேரரசர் அக்பர் கடைப்பிடித்த கொள்கையாகும் இது. இக்கொள்கையினையே நேருவும் அவருடன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களும் தொடர்ந்து பின்பற்றினர். 

1947ல் நாடெங்கிலும் மதவெறி கொளுந்துவிட்டு எறிந்தது. பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்தியது. நேருவுக்கும், அவருடன் இருந்து பணியாற்றியவர்களுக்கும் இந்தியாவை ஒரு இந்து தேசமாக அறிவிக்கும்படி நெருக்கடி இருந்திருக்கும். ஆனால், மதவெறி தலை விரித்தாடிய இத்தருணத்தில் நமது தலைவர்கள் நிதானத்துடன் செயல்பட்டு, இந்தியாவை இந்து தேசம் என்று அறிவிக்காமல், மதச் சார்பற்ற நாடு என்றே பிரகடனப்படுத்தினார்கள். இந்தக் காரணத்தினாலேயே இந்தியா, பாகிஸ்தானைவிட வலுவான நாடாக இன்றும் திகழ்கிறது.

இந்தியாவின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்து, நாட்டு மக்களிடையே இன, மத, மொழி, சாதிய மோதல்களை உருவாக்கிட முயலுகின்றன சில தீயசக்திகள். நாட்டுப்பற்றுள்ள அனைவரும் இப்பிரிவினைச் சக்திகளின் சுய ரூபத்தினை தோலுரித்திக் காட்டி, நாட்டின் ஒற்றுமையைக் காத்திட வேண்டும். இல்லையேல் நாம் வளர்ச்சி பெற முடியாது.


தில்லியில் சிஎஸ்ஐஆர் ஏற்பாடு செய்திருந்த  ஒரு சர்வதேசக் கருத்தரங்கில் ஆற்றிய உரை
‘இந்து’ கட்டுரை (11-1-2012)
தமிழில் : பேரா.பெ.விஜயகுமார்

1 comment:

  1. மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.- - "நீதிபதி மார்கண்டேய கட்ஜு"

    ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள் தான் என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன.

    அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.

    எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?

    முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.

    எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.

    மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.

    நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.

    மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?

    குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது
    என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்? - "நீதிபதி மார்கண்டேய கட்ஜு"


    .

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)