tag:blogger.com,1999:blog-7807683879105758420.post4618542030737606478..comments2023-09-19T18:38:40.971+05:30Comments on மாற்று: நம் மக்களுக்கான கோட்பாடுகள்:நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூUnknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7807683879105758420.post-221760257269758652012-01-24T09:12:40.128+05:302012-01-24T09:12:40.128+05:30மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.- - "நீதிபதி ...மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா.- - "நீதிபதி மார்கண்டேய கட்ஜு" <br /><br />ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள் தான் என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன. <br /><br />அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். <br /><br />எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது? <br /><br />முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. <br /><br />எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை. <br /><br />மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். <br /><br />நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.<br /><br />மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?<br /><br />குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது <br />என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்? - "நீதிபதி மார்கண்டேய கட்ஜு" <br /><br /><br />.UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.com