“நன்மையிலேயே, உடல் வன்மை யிலேயே - செல்வப்
பன்மையிலேயே” சிறந்த நாடு பாரத நாடு என்று அடிமை இந்தியாவில் வாழ்ந்த
மகாகவி பாரதி பாடிவிட்டுப் போனார்.
1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்திய
திருநாட்டின் மக்கள் உடல் வன்மையிலேயே சிறந்து விளங்குகிறார்களா என்று
கேள்வி எழுப்பினால், இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. இந்திய
குழந்தைகளில் 42 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைவு என்ற நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை
வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இது “ஒரு தேசிய அவமானம்”
என்று மனம் வெடித்து கூறியிருக்கிறார். மத்திய அரசின் உணவுக் கிடங்குகளில்
கோடிக்கணக்கான டன் உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டு, யாருக்கும் தரப்படாமல் மக்கி மண்ணாகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது,
இதுபோன்ற அரசின் கொள்கை முடிவுகளில் நீதித்துறை தலையிடலாகாது என்று கூறிய
பிரதமர் மன்மோகன்சிங்கின் அதே திருவாய்தான், இப்போது தேசிய அவமானம்
என்றும் கூறியிருக்கிறது.
இந்தியா
வளர்கிறது என்று அவ்வப்போது மத்திய ஆட்சியாளர்கள் குதியாட் டம்
போடுவார்கள். பளபளக்கும் பன்னாட்டு நிறுவன கார்கள் அதிகரித்துவிட்டதாக
வாய்நீளம் காட்டுவார்கள். ஆனால், மறுபுறத்தில் மழலை இந்தியா எழுந்து நடக்க
சக்தியின்றி நலிந்து கிடக்கிறது.
வருமானம்
குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள்தான் ஊட்டச்
சத்தின்மையால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு
முடிவு கூறுகிறது. நகர்ப்புற மக்களில் நாளொன்றுக்கு ரூ.31 செலவிடுவோரும்,
கிராமப்புறங்களில் ரூ.29 செலவிடுவோரும் வறுமைக்கோட்டுக்கு மேலே தாண்டி
சென்றுவிட்டார்கள் என்று மத்திய திட்டக்குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை
தாக்கல் செய்தது. இவர்களது கணக்குப்படி, இந்திய மக்களில் பெரும்பகுதியினர்
வறுமைக் கோட்டை வளைத்து தாண்டி தப்பித்து விட்டார்கள் என்று பொருள். இதன்
சூட்சமம் என்னவென்றால், வறுமைக்கோட்டுக்கு மேலே சென்றவர்களுக்கு உணவு
மானியம் உள்ளிட்ட எந்த மானியமும் கிடையாது. இவர்கள் பொதுவிநியோக முறையி
லிருந்து தள்ளிவைக்கப்படுவார்கள். இதற் காகத்தான் இந்த மோசடி கணக்கு
தயாரிக்கப்படுகிறது. ஆனால், ஊட்டச்சத் தின்மை குறித்த கணக்கு இந்த பொருளா
தாரப் புலிகளின் முகத்தில் ஓங்கி அறைந் திருக்கிறது.
இந்த
ஆய்வு முடிவு மேலும் சில இருட்டுப் பகுதிகள் மீதும் வெளிச்சம்
பாய்ச்சியிருக்கிறது. ஊட்டச்சத்து குறை வால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்
சிறு பான்மை முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்
குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்பதையும் ஆய்வு முடிவு
தெளிவுபடுத்தியிருக்கிறது.
இந்தியாவில்
உள்ள சிறுபான்மை முஸ்லிம் மக்களின் வாழ்நிலை மிக மிக மோசமாக உள்ளது என்று
நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு அறிக்கை கூறியபோது, ஆர்எஸ்எஸ் - பாஜக
பரிவாரம் இதில் உண்மையில்லை என்றது. முஸ்லிம்களுக்கு குறிப்பிட்ட சதவீதம்
இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரை
செய்தபோது, அதைக் கண்டித்து கலகம் செய்தது ஆர்எஸ்எஸ் பரிவாரம். ஆனால்,
ஊட்டச்சத்து குறை வால் அதிகம் பாதிக்கப்படுவது சிறுபான்மை முஸ்லிம்
குடும்பங்களைச் சேர்ந்த குழந்தை கள்தான் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்
ளது. முஸ்லிம் குழந்தைகள் மட்டுமல்ல, பெரும்பகுதி முஸ்லிம் சமுதாயமே ஊட்டச்
சத்தின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது என் பதுதான் உண்மை.
இந்த
நாட்டின் வளர்ச்சிக்கு எதிரியே இட ஒதுக்கீடுதான் என்றும், எனவே
இடஒதுக்கீட்டை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என்ற குரல்களும் அவ்வப்போது
எழுகின்றன. இடஒதுக்கீட்டினால் திறமைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவும்,
சிலர் புலம்புகின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச்
சேர்ந்த குழந் தைகள் ஊட்டச்சத்தின்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று இந்த
ஆய்வு தெரிவிக் கிறது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் முன்னேற
வேண்டுமானால் இட ஒதுக்கீடு மட்டுமல்ல, உரிய உணவு ஒதுக்கீடும், நில
ஒதுக்கீடும் நிலை பெற வேண்டும் என் பதையும் இந்த ஆய்வின் வெளிச்சத்தில்
புரிந்து கொள்ளலாம்.
நாடாளுமன்றம்
மற்றும் சட்டமன்றங் களில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க மத வாத, சாதிய
சக்திகள் தொடர்ந்து முட்டுக் கட்டை போடுகின்றன. இந்த சமூகத்தில்
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை கள் கொஞ்சநஞ்சமல்ல. கருவறையிலேயே துவங்கி
விடுகிறது பெண்களுக்கு எதிரான கொடுமைகள். ஊட்டச்சத்தின்மை குறித்த இந்த
ஆய்வும் பெண் குழந்தைகள் சமூக வாழ்வில் ஒடுக்கப்படுவதை உறுதி செய் துள்ளது.
குழந்தைகளின் எடை மற்றும் உய ரத்தைக் கொண்டு ஊட்டச்சத்து போதிய அளவு
உள்ளதா என்று கணக்கிடப்படு கிறது. குழந்தை பிறந்து முதல் மாதத்தில், பெண்
குழந்தைகள் இந்த விகிதத்தின் அடிப்படையில் ஊட்டச்சத்து உள்ளவை யாக
இருந்தபோதும், வளர வளர ஊட்டச் சத்தின்மையால் பாதிக்கப்படுகின்றன என்று இந்த
முடிவு கூறுகிறது. அதாவது, பெண் குழந்தைகளுக்கு போதிய அளவு ஊட்டச்சத்து
வழங்கப்படுவதில்லை. இத னால் அவர்களது வளர்ச்சி எதிர்விகிதத் தில் செல்கிறது
என்பதுதான்.
ஆய்வு
நடத்தப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான ஏழைத் தாய்மார்கள் ஊட் டச்சத்து
என்பது குறித்து அறிந்திருக்க வில்லை என்றும், போதிய கல்வி அறிவு இல்லாததே
இதற்கு காரணம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களுக்கு கல்வி அறிவு
தரப்படாதது குறித்த அடிப்படை கேள்வியையும் இந்த ஆய்வு எழுப்புகிறது.
பெரும்பாலான இந்திய பெண்கள் இரத்தசோகையால் பாதிக்கப் படுகிறார்கள் என்பது
ஏற்கெனவே வெளி வந்துள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் உண்மையாகும்.
இந்த
ஆய்வு முடிவு தெரிவிக்கும் ஆறுதலான செய்திகளில் ஒன்று, ஊட்டச்சத்து
விஷயத்தில் கேரளம், தமிழ்நாடு, இமாச்சலப்பிரதேச மாநிலங்கள் ஒப்பீட்டு
அளவில் பரவாயில்லை என்பதுதான். கேரளத்தில் தொடர்ச்சியாக இடதுசாரிகள்
தலைமையிலான அரசு இருந்து வந்துள்ளதும், பொது விநியோக முறை சிறப்பாக உள்
ளதும் காரணமாக இருக்கலாம். தமிழ் நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்
துணவு திட்டம் அமலில் இருப்பதும், ஒப் பீட்டு அளவில் பொதுவிநியோக முறை
நன்கு செயல்படுவதும் காரணமாக இருக்கலாம்.
வயிறும்,
தலையும் வீங்கி, கைகால்கள் சூம்பிப் போய் இளைத்து கிடக்கிறது நாளைய
இந்தியா. குளிரூட்டப்பட்ட அரங்குகளில் இந்தியா வளர்வதாக வாய்கிழிகிறது.
- மதுக்கூர் இராமலிங்கம்
is there any statistics on the number of children a Muslim family has and its correlation to the poverty? We should take that also into account while analyzing such problems.
ReplyDeleteஅந்த புகைப்படம் ஆயிரம் சேதிகளை சொல்லுகிறது புகைப்படம் அருமை
ReplyDelete