முதல்வர் ஜெயலலிதா மாட்டுக்கறி உண்பதாகவும், அதைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்துவது போலவும் வெளியிடுகிறது நக்கீரன் பத்திரிகை. தமிழக அரசியலில் ஒரு உப்புக்குப் பெறாத தகவல் அது. அந்தச் செய்தியால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஒரு மண்ணாங்கட்டி பிரயோஜனமுமில்லை. பாதிப்புமில்லை. ஆனால் கொதித்து எழுகிறது ஒரு கூட்டம்.
கருத்துச் சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமை என்ற முறையில், வன்முறைத் தாக்குதல் கண்டனத்திற்குரியது. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அதற்குத் தொடர்பில்லாத செய்தியின் சிறுமையும் விமர்சனத்திற்குரியது. இதைத்தாண்டியும் இந்த விஷயத்தில் முக்கியமாக பேச வேண்டியது வேறு இருக்கிறது.
அந்தத் தகவல் உண்மைதான் என்றால் "ஆம், நான் மாட்டுக்கறி சாப்பிட்டது உண்மைதான், அதற்கு என்ன இப்போது" என்று கம்பீரமாக அறிவித்திருக்கலாம். முன்பு சாதி அடிப்படையில் தாக்குதல் வந்தபோது, தான் அந்தச் சாதிதான் என்று பெருமிதத்தாடு அறிவிக்க அஞ்சவில்லையே! இப்போதும் ‘மாமி’ என்று அழைக்கப்பட்டதற்கு வருத்தமில்லை. மாட்டுக்கறி சாப்பிட்டார் என்பதில்தான் கோபம்.
செய்தியில் உண்மை இல்லையெனில் "இது ஒரு அற்பத்தனமான எழுத்து" என்று புறக்கணித்திருக்கலம். அப்படியொரு உணவுப்பழக்கம் தனக்கு இல்லையென அலட்சியப்படுத்தி இருக்கலாம். ஆனால் என்னமோ இதனால் பெரும் இழுக்கும் அவமானமும் ஏற்பட்டுவிட்டதாக தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்குவதை அலட்சியப்படுத்திவிட முடியாது.
பெங்களுரு தனி கோர்ட்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தவுக்கு மேல் வாய்தா கேட்டு, வழக்கை திசை திருப்ப எத்தனையோ சால்ஜாப்புகள் செய்து என்று இழுத்தடித்து, ஒன்றும் முடியாதபோது, தனிவிமானத்தில் இறங்கி, கார்கள் படைசூழ இரண்டு விரல்களை காட்டிக்கொண்டு போவது அவமானமில்லை. சமச்சீர் கல்வியில் தானடித்த மூப்பாய் அதனை ரத்து செய்ய, உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என அனைத்து நிலைகளிலும் கொட்டு வாங்கியது அவமானமில்லை. “ஐயோ! இதற்கா உங்களுக்கு ஓட்டு போட்டோம்” என மக்கள் நலப்பணியளர்கள் தெருவில் விழுந்து துடித்தது அவமானமில்லை. இப்படி எத்தனை அவமானகரமான காரியங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டார் என்பது அவமானகரமான விஷயமாம். சகித்துக்கொள்ளவே முடியாத அவதூறாம்.
இதன் முலம் இரு தரப்பிலும் ஒரே விஷயத்தை முன்வைக்கிறார்கள். மாட்டுக்கறி உண்பது கேவலமான செயல் என்பதும், மாட்டுக்கறி உண்பவர்கள் இழிவானவர்கள் என்பதும் சமுகத்தின் புத்திக்குள் அழுத்தமாக பதிய வைக்கிறார்கள். பார்ப்பனியத்தின் சதி இது. உண்மையில் மாட்டுக்கறி உண்ணும் மக்கள்தாம் ஆவேசத்துடன் எழுந்து நக்கீரன் பத்திரிகைக்கும், அ.தி.மு.கவினருக்கும் எதிராக தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருக்க வேண்டும்.
மாட்டுக்கறி உண்பது ஒன்றும் மக்களுக்கு கேடு விளைவிக்கும் செயல் அல்ல. ஒரு சமுகக் குற்றமும் அல்ல. பெரும்பகுதி மக்களின் உணவுப் பழக்கம். அவ்வளவே.
உங்கள் வாதம் சரியானதே. தான் உண்ணவில்லை என்றால் இல்லை என்று சொல்லிவிட்டு கடலூர் புயல் நிவாரண வேலைகளை கவனிக்கப் போகவேண்டியதுதானே.
ReplyDeleteஒரு சாரரின் உணவுப் பழக்கத்தை கீழ்த்தரப் படுத்துவது நியாயமல்ல. இதே வெள்ளைக்காரன் நாயையும் பன்னியையும் உண்பதை கீழ்தரப்படுத்தமாட்டர்கள்.
ஆஹா என்னா ஒரு சமூக உணர்ச்சி...!
ReplyDeleteஉப்பு மட்டுமில்லை,அரிசியே பெறுகிற மாபெரும் விஷயம் இது.
ReplyDeleteதவறான செய்தி எனில், சற்று மனம் வர்த்தமுறல் இயல்பு. ஆனால் பொது வாழ்வில், தனது தலைமை பெரிது என எண்ணுபவர்கள், இதனை ஒரு பெரும் பிரச்சாரமாகச் செய்து, வம்பை விலைக்கு வாங்குவதுடன், அது உண்மைதான் போலிருக்கிறது..அதைவிட இன்னும் மேலான் அசிங்கங்கள் இருக்குமோ என எண்ண வைக்கும் செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.....Ramamoorthy, Camp: California State (UA)
ReplyDeleteமாட்டுக்கறி உண்பது பெருங்குற்றம் எனில், அதையே மூன்று வேளையும் தின்னும் மேலை நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பார்ப்பணர்களுக்கு குற்றமாக தெரியவில்லையா.
ReplyDeleteமாட்டுகறி தின்னும் மைக்ரோ சாப்டிலும், நாசாவிலும், பெண்டகனிலும், வேலையில் இருக்கும் நம்மவாள்கள் வேலையை ரிசைன் செய்வார்களா?
//மாட்டுக்கறி உண்பது கேவலமான செயல் என்பதும், மாட்டுக்கறி உண்பவர்கள் இழிவானவர்கள் என்பதும் சமுகத்தின் புத்திக்குள் அழுத்தமாக பதிய வைக்கிறார்கள். பார்ப்பனியத்தின் சதி இது// உண்மையிலேயே சொல்லப்போனால் நமது இன்றைய சாதீய சமூகத்தின் ஒட்டு மொத்த பொதுப்புத்தி எனலாம்.
ReplyDelete