Thursday, December 8, 2011

பெண்ணெழுத்து: களமும் அரசியலும்

வரலாற்றுப் போக்கில் பெண் அடிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து சமூக நிறுவனங்கள் அவளை மிகத் தந்திரமாகக் கட்டுக்குள் வைத்தே வந்திருக்கின்றன. அவ்வப்போது எழுந்த பெண்களின் குரல்கள், ஆணாதிக்கத்தின் காட்டுக்கூச்சலில் அமிழ்த்திச் சாகடிக்கப்பட்டிருக்கின்றன. அக்கூச்சல் பகடிகளாகவோ அல்லது அதிகார வன்குரலாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றில் பெண் குரல் அடக்கி ஒடுக்கப்பட்டுக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. காலவெள்ளத்தில் சில புதைமேடுகள் மட்டுமே சிதைவுற்று வெளித்தெரிகின்றன. அவற்றைக் கொண்டே பெண்ணுரிமைக் குரல்களின் வரலாற்றைத் தொகுக்க வேண்டியதாக உள்ளது.

இந்தியச் சாதி அமைப்பில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய மாமேதை அம்பேத்கரின் நூற்றாண்டு நிகழ்வுக்குப் பிறகு, அதாவது தொன்னூறுகளுக்குப் பிறகு எழுந்த தலித்திய எழுச்சியின் உடனிகழ்ச்சியாகப் பெண்ணிய எழுச்சியும் உருவானது. தொன்னூறுகளில் சிற்சில பெண் கவிஞர்கள் எழுத்துக் களத்துக்கு வர, தொடர்ந்த சில ஆண்டுகளிலேயே ஏராளமான பெண்கள் எழுத்துத் துறைக்கு வந்தனர்.

தமிழின் எழுத்து அசைவியக்கத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் பெண்களின் எழுத்துக்களில் கவிதை முதன்மையாக உள்ளது. அக்கவிதைப் போக்கினையும் கவிஞர்களையும் மதிப்பீடு செய்யும் அரும்பணியைச் செய்துள்ளார் ‘பெண்ணெழுத்து’ நூலாசிரியர் ச.விசயலட்சுமி. செம்மலர் இதழில் தொடராக வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு செம்மைபடுத்தப்பட்டு நூலுருவாக்கம் பெற்றிருக்கின்றது.

பெண்ணெழுத்துக்களில் கவிதை சிறப்பிடம் பெறுவதையும் மற்ற இலக்கிய வடிவங்களில் ஈடுபடுவதைக் காட்டிலும் கவிதை எப்படிப் பெண்களுக்கு உகந்த வடிவமாக இருக்கிறது என்பதையும் ச.விசயலட்சுமி நூலின் முதல் கட்டுரையில் எடுத்துக்காட்டுகிறார். சமூக அடிப்படையிலும் பாலின அடிப்படையிலும் ‘இரட்டைச் சுமையைச் சுமக்கும் பெண்களுக்கு நகாசு வேலைகள் அதிகம் செய்யத் தேவையற்ற, இயல்பாக ஈர்ப்பை உருவாக்குகிற கவிதை வடிவமே இலகுவாக உள்ளது’ என்கிறார்.

பெண்களின் படைப்புகள் எவ்வாறு இதுவரை எழுதப்படாத பெண்களின் வாழ்க்கையை, நோக்கை, போக்கை முன்வைக்கிறதோ, அவ்வாறே பெண் கவிஞர்களை அறிமுகப்படுத்தும் இந்நூலும் புதிய வகையிலான விமர்சனச் செல்நெறியைக் கைக்கொண்டிருக்கிறது. பெண்கவிஞர்கள் குறித்த பெண் நோக்குநிலை விமர்சனம் என்ற அடிப்படையில் இந்நூல் தனித்துவம் மிக்கதாகிறது.

தனித்துவம் மிக்க பதிமூன்று பெண்கவிஞர்களையும் அவர்தம் படைப்பின் தன்மையையும் போக்கினையும் அறிமுகப்படுத்தும் விசயலட்சுமி, இறுதிப் பகுதியில் விடுபட்டுப்போன பிற தமிழின் பெண் கவிஞர்களைத் தொகுத்துச் சொல்லி, நூலினை நிறைவுள்ளதாக்கியுள்ளார்.

இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதை மரபில் பெண்களுக்கான இடம் குறித்துப் பருந்துப் பார்வையில் விமர்சித்துச் செல்லும் விசயலட்சுமி, காத்திரமான தனது அவதானிப்புகளை அழுத்தமாகப் பதிந்து செல்கிறார். பிரதியினைக் குறித்த வாசிப்பு மட்டுமின்றி, பிரதியின் மீள் வாசிப்பும், மீள்வாசிப்பின் மீதான வாசிப்பும் அவசியமாகிறது என்கிறார். புதுக்கவிதையில் ஈடுபடத் தொடங்கிய பெண்கள் தொடக்கத்தில் பொதுத் தன்மையிலேயே எழுதியமையையும் பின்னர் அவற்றின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்களையும் அடையாளப்படுத்துகிறார். ‘மெல்ல மெல்ல நிலம் கீறி விதை முளைத்து வெளிவருவது போலத் தங்கள் சுயத்தை முன்னிலைப் படுத்தும் கவிதைகளை’ அவர்கள் எழுதியதாகக் குறிப்பிடுகிறார்.

மாலதி மைத்ரியின் கவிதைகளை மதிப்பிடும் விசயலட்சுமி, அவரது கவிதைகளில் பெண் உடல் எல்லையற்றதாகி மிதப்பதுடன் இயற்கையின் கூறாகவும் விளங்குகிறது என்கிறார். பெண் உடல்மீது சமூகம் கட்டமைத்த நிர்பந்தங்களை உடைத்துப் பார்ப்பது, தாய்மை உணர்வைக் கொண்டாடுவது, உடல் உடைமையாகவும் வணிகமாகவும் முன்வைக்கப்படுவதை எதிர்ப்பது என்ற தளங்களில் மாலதி மைத்ரியின் கவிதைகள் இயங்குவதை அடையாளப்படுத்துகிறார்.

பெண்ணின் மனச்சாட்சியாக வெளிப்படுபவை சுகந்தி சுப்பிரமணியனின் கவிதைகள் என்று மதிப்பிடும் விசயலட்சுமி, அவரது கவிதைகளில் மனப்போராட்டம், அதை வென்றெடுக்கும் முயற்சி, தோல்வி இவைபற்றிய விவரிப்புகள் பரந்து கிடப்பதை எடுத்துக்காட்டிப் பேசுகிறார். பெண் கவிஞர்களின் கவிதைகளில் பெண்ணுக்கான உலகைத் திறந்துகாட்டிய முன்னோடிகளுள் மிக முக்கியமானவராக சுகந்தி சுப்பிரமணியத்தை மதிப்பிடுகிறார். பெண்களின் அடுக்களை சார்ந்த உழைப்பை, குடும்பத்திற்குள் சுருங்கிப் போகிற திணறலை, சுதந்திரத்தின் வெளியை எட்டமுயற்சித்தலை இவரது கவிதைகள் வெளிக்காட்டுவதாகக் குறிப்பிட்டெழுதுகிறார்.

மண் சார்ந்த கவிஞராகக் கவிதைக் களத்திற்குள் வந்தவர் தமிழச்சி தங்கபாண்டியன். ‘எஞ்சோட்டுப் பெண்’ என்ற தனது முதல் கவிதைத் தொகுதியில் புறவயமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்த தமிழச்சி, பிந்தைய தொகுப்புகளில் புறத்தாக்கங்களை அகமனத்தின் அனுபவங்களாக மாற்றி, உட்கிடையான எண்ணவோட்டத்தினை அதற்கேற்ற வலுவான மொழியோடும் பொருத்தமான உத்தியோடும் பேசுவதாகச் சொல்கிறார் விசயலட்சுமி. வனப்பேச்சி என்னும் பருண்மையான படிமம் தமிழச்சியின் கவிதைகளில் பெறுமிடத்தையும் சிறப்பையும் நுட்பமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

சாதாரண மனிதர்கள் சந்திக்கும் சவால்களைத் தனது கவிதைக் களமாகக் கொண்ட பாலபாரதி, சமையலறையின் சூக்குமத் தன்மையினை மிக ஆழமாக அடையாளப்படுத்திய கவிஞர் என்று அறிமுகப்படுத்தப்படுகிறார். பாலபாரதியின் அரசியற் புரிதலும் செயல்பாடுகளும் கவிதைகளில் ஊடாடி, கவிதையைப் போராடும் கவிதையாக ஆக்கியிருப்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

அன்பும் அன்பு சார்ந்த தன்மைகளையும் அனைத்து நிலைகளிலும் வற்புறுத்தும் ரத்திகாவின் கவிதைச் செல்நெறியினை விளக்கிச் செல்கிறார் விசயலட்சுமி. மூன்று தொகுப்புகளை வெளியிட்டுள்ள பாரதி கிருஷ்ணனின் காதல் கவிதைகளிலும் அரசியல் துணைக்கு அழைக்கப்பட்டுள்ளமையை அடையாளங்காட்டுகிறார். தாய்மையைக் கொண்டாடுதலையும் குழந்தைகளின் மீதான கவன ஈர்ப்பின் அவசியத்தையும் வலியுறுத்தும் கலை இலக்கியாவின் கவிதைகளை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார். மொழியின் மூலம் அழகியலை வயப்படுத்தியிருக்கும் கனிமொழியின் கவிதைகள் மனதின் திமிறல்களைப் பதிவு செய்துள்ளமையை அழகுற விளக்கிச் செல்கிறார்.

வேட்கையின் நிறம் என்ற தொகுப்பின் மூலம் கவனம் பெற்ற உமாசக்தியின் கவிதைகளில் காதல்மீது ஏற்றப்படும் புனித்தத்தின் முகம் கிழிக்கப்படுவதைக் குதூகலத்துடன் விவரித்துச் செல்கிறார். பெண்கள் காலங்காலமாக அனுபவித்து வரும் புறக்கணிப்புகள், ஏமாற்றங்கள், தன்னிரக்கம், தாய்மை ஆகிய பொருண்மைகளில் உமாசக்தியின் கவிதைகள் மையங்கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறார்.

ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட அலைந்துழல்வு காரணமாக ஏதிலியாய் கனடாவுக்கும் தமிழ்நாட்டுக்குமிடையே அல்லாடும் தமிழ்நதியின் மொழி பலத்தைச் சிறப்புற எடுத்துக்காட்டிப் பாராட்டும் விசயலட்சுமி, கவிஞரின் உலகலாவிய ஆதிக்கத்துக்கெதிரான குரலையும் மதிப்பிட்டுப் பாராட்டுகிறார். போர்ச்சூழலில் பாதிக்கப்படும் பெண்களையும் குழந்தைகளையும் அவரது கவிதைகள் பதிவு செய்திருப்பதை எடுத்துக்காட்டி நெகிழ்கிறார். இலங்கையைச் சேர்ந்த ஃபஹீமா ஜஹான் என்ற இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்த தமிழ்ப் பெண் கவிஞரையும் அவர்தம் கவிதையையும் போர்ச்சூழல் பதிவுகளையும் எடுத்துக்காட்டி விவாதிக்கிறார்.

பதினாறு கவிதைகளைக் கொண்ட சிறு தொகுப்பினை வெளியிட்ட சுபமுகியின் அக்கறைகள் பல்வேறு தளங்களில் இயங்குவதையும் இளைஞர்களின் உலகில் அக்கவிதைகள் கவனம் கொள்ளுவதையும் சிறப்புற எடுத்துக்காட்டுகிறார். குடும்பம் உறவு சார்ந்த விஷயங்களையும் அவை சார்ந்த உளவியல் நெருக்கடிகளையும் பதிவு செய்துள்ள கீதாஞ்சலி பிரியதர்ஷினியின் கவிதைகளை எடுத்துக்காட்டுகிறார்.

பெண்ணுடலை அரசியலாக்கும் முயற்சியில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சுகிர்தராணியின் மூன்று கவிதைத் தொகுப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு நுட்பமாக ஆராய்ந்து மதிப்பிட்டிருக்கிறார் விசயலட்சுமி. சாதியம், மதம் ஆகியவை பெண்ணின் உடல்மீது செலுத்தும் ஆதிக்கம், வன்முறை ஆகியவற்றை உடலை ஆயுதமாக்கி எதிர்கொள்ளுவதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார்.

இறுதிக் கட்டுரையில் லீனா மணிமேகலை, தி.பரமேசுவரி, இளம்பிறை, அ.வெண்ணிலா, ஏ.இராஜலட்சுமி, எஸ்.தேன்மொழி, உமா மகேஸ்வரி, குட்டி ரேவதி, கு.உமாதேவி, அரங்க மல்லிகா, புதிய மாதவி என விடுபட்ட கவிஞர்களின் கவிதைகளையும் மதிப்பிட்டுள்ளார்.

பெண் கவிஞர்கள் பெண்ணியச் சிக்கல்கள் மட்டுமின்றி உலகலாவிய பல்வேறு பிரச்சினைகள் குறித்துத் தங்களது அக்கறைகளைப் படைப்பாக்கியிருப்பதனையும் விசயலட்சுமி எடுத்துக்காட்டியுள்ளார். பெண்களின் கவிதைகள் சுய இரக்கம் கொள்ளும் நிலையை மிக எளிதாகத் தாண்டி விட்டமையையும் அடையாளப்படுத்துகிறார். பெண்ணியக் கோட்பாடுகளிலும் தங்களுக்கென்றொரு பாதையினைப் பற்றியவர்களாக அவர்களிருப்பதனை வலியுறுத்திக் கூறுகிறார். பெண் கவிஞர்கள் உடல்சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதுவதாகவும் அதனால் பண்பாட்டுச் சூழல் சீர்கெட்டுப் போவதாகவும் சாமியாடும் விமரிசனக் கோமாளிகளுக்குப் பதில் தருவதாக அமைந்துள்ளது இந்நூல். உடலரசியல் ஆணாதிக்கத்தை வெட்டிச்சாய்க்கும் ஆயுதம் என்று உரத்துப் பேசுகிறது இந்நூல்.

பெண்ணெழுத்தின் போக்குகள் குறித்த ஆழமான, நுட்பமான பார்வையினைக் கொண்டவராக ச.விசயலட்சுமியினை இந்நூல் அடையாளப்படுத்துகிறது. தமிழின் விமரிசன பீடங்கள் கவனம் குவிக்காத பல கவிதைகளை இவர் அடையாளங்கண்டு விவரித்துப் பேசுகிறார். விரிவாக அறிமுகப்படுத்துவதற்கு இவர் தேர்ந்தெடுத்த கவிஞர்களும் தனித்துவமானவர்கள். பிரபலமானவர்கள் என்ற வசதியான தெரிவினை விசயலட்சுமி மேற்கொள்ளவில்லை; மாறாக, ஒரு கவிதை நூல் வெளியிட்டவர்களைக் குறித்தும் மிகவும் விரிவாக ஆராய்ந்துள்ளார். பெண்ணெழுத்தின் பன்முகத் தன்மையை அடையாளப்படுத்த முயற்சி செய்துள்ளார். அம்முயற்சியில் குறிப்பிட்டுப் பாராட்டத்தக்க வகையில் வெற்றியும் பெற்றிருக்கிறார் எனல் வேண்டும்.

பெண்ணெழுத்தின் சிறப்புக்களை அதன் விரிந்த தளத்திலிருந்து அறிமுகப்படுத்தும் அதேநேரத்தில், போதாமைகள் குறித்தும் திசை விலகல்கள் குறித்தும் கவனப்படுத்தியுள்ளார். இப்போக்கு இந்நூலைப் பெண்ணெழுத்து குறித்த அறிமுகமாக மட்டுமிற்றிக் காத்திரமான விமரிசன நூலாகவும் ஆக்கியுள்ளது. சுகிர்தராணியின் ‘கைம்மாறு’ கவிதையை எடுத்துக்காட்டும் விசயலட்சுமி, ‘அரசியலைத் தொடும் கவிதை, அதிலிருந்து முற்றாக விலகிவிடுகிறது. உடலரசியலைப் பேசிய கவிதைகள் மீண்டும் துவங்கிய புள்ளியில் சேர்வதைத் தவிர்க்க வேண்டும். கவிதைகள் உடலரசியலின் முக்கியப் புள்ளிகளைத் தொட்டிருக்கிற நிலையில் உடலரசியலின் பரிமாணங்களைத் தொடர்ந்து பேச வேண்டிய அவசியத்தைக் கொள்ள வேண்டும்’ என்றும் விமரிசித்துள்ளார்.

பெண் கவிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் இந்நூலில் தொகுத்துப் பார்க்கும்போது, இருபதாண்டுத் தமிழ்க்கவிதைப்போக்கில் பெண்ணெழுத்தின் அழுத்தமான தாக்கத்தை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. பெண்ணெழுத்துக்கள் குறித்த விரிந்த புரிதலுக்கான வித்தாக இந்நூல் விளங்குகிறது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய இரண்டாயிரம் ஆண்டுக்காலக் கவிதைப்பரப்பில், தற்காலக் கவிதையில் பெண்களின் இடத்தை, கெஞ்சுதலின்றி தர்க்கப்பூர்வமாக வற்புறுத்திப் பெற்றுத் தந்துள்ளார் ச.விசயலட்சுமி. அதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

-கி.பார்த்திபராஜா

பெண்ணெழுத்து: களமும் அரசியலும்
ச. விசயலட்சுமி
பக்:128 | ரூ.70
பாரதி புத்தகாலயம்

1 comment:

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)