Friday, December 30, 2011

முதலி யார்? பிள்ளை யார்?

தமிழ்நாட்டில் பிராமணியம் முழுமையாகச் செல்வாக்குப் பெறும் முன்னர் தோன்றிய தொல்காப்பியம், வடமொழி நூல்கள் குறிப்பிடும் பிராமணர், சத்திரியர் வருணப் பாகுபாடுகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாது சில மாறுபாடு களுடன் தமிழ் மக்களைப் பாகுபடுத்தியுள்ளது. அதன்படி அரசர், அந்தணர், வணிகர் வேளாளர் என நான்கு பிரிவுகள் தொல் காப்பியத்தில் இடம் பெறுகின்றன: இவற்றுள் வேளாளர் குறித்து வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது /      இல் என மொழி - என்கிறார் தொல்காப்பியர். உழுது உண்ணும் வாழ்க்கையே வேளாண் மாந்தருக்குரியது. வேறு தொழில்கள் அவர்களுக்குக் கிடையாது என்பதே தொல்காப்பியரின் கருத்தாகிறது. இந்நூற்பாவின் அடிப்படையில் நோக்கினால் வேளாண்மையை மேற்கொண்டு வாழ்வோர் மட்டுமே வேளாளர் என்ற வகைப்பாட்டிற்குள் அடங்குவர் என்பது புலனாகிறது.

காலப்போக்கில் வேளாளர் என்ற தொழிற் பிரிவு, வேளாளர் என்ற சாதியாக மாற்றமடைந்துவிட்டது. வேளாளர் என்ற சாதி பல்வேறு சாதிகளை உள்ளடக்கிய பொதுச்சொல்லாகவே இன்று வழக்கிலுள்ளது. இதில் அடங்கிய சாதியினர் சிலர் தம்மைத் தனி யாக அடையாளப்படுத்திக்கொள்ளும் முகமாக கொங்கு வெள்ளாளர், சோழிய வெள்ளாளர், சைவ வெள்ளாளர், பாண்டி வெள்ளாளர், நாஞ்சில் வெள்ளாளர், துளுவ வெள்ளாளர், கார் காத்த வெள்ளாளர், இசை வெள்ளாளர் என்று அடைமொழி யிட்டுக் கொண்டுள்ளனர். இவர்களது சாதிப்பட்டங்கள், கவுண்டர், முதலியார், பிள்ளை, பிள்ளையன் என உள்ளன. இன்றுபோல் ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்கும் சொல்லாக வேளாளர் என்ற சொல் தொடக்கத்தில் வழக்கிலில்லை. வேளாண்மைத் தொழிலுக்குள் புதிதாக நுழைந்தோர் தம் பழைய குழு அல்லது சாதிய அடையாளத்தைத் துறந்துள்ளனர்.

“கள்ளர் மறவர் கனத்ததோர் அகமடியர் /  மெள்ள மெள்ள வந்து வெள்ளாளரானார்” - என்ற பழமொழியை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். தமிழ்ச்சமுகத்தின் பழமையான தொழில்கள் வரிசையில் போர் புரிதல், கால்நடை வளர்ப்பு, கால் நடை கவர்தல் என்பன இடம் பெறுகின்றன. இத்தொழில்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு உணவு உற்பத்தி செய்யும் வேளாண் தொழிலுக்குள் புதிதாக ஒருபிரிவினர் வந்துள்ளதையே இப்பழமொழி சுட்டுகிறது. இவ்வாறு வந்தோர் வெள்ளாளர் என்ற பொது அடையாளத்தைப் பெற்றுள்ளனர்.    இதுபோன்றே கொங்குப்பகுதியில் வேட்டுவக் கவுண்டர், வெள்ளாளக் கவுண்டர் என இரு பிரிவுகள் உள்ளன. ஒரு சாதிப்பிரிவு தொடக்கத்தில் வேட்டையாடுதலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வேளாண் தொழிலுக்குள் நுழைந்த பிறகு தன்னை ‘வெள்ளாளக் கவுண்டர்’ என தனித்து அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது என்று கருதயிடமுள்ளது. இவ்வாறு வெள்ளாளர் என்ற பொது அடையாளத்திற்குள் அடங்கும் சாதிகளுள் ‘முதலியார்’, ‘பிள்ளை’ என்ற சாதிப்பட்டங்களைக் கொண்டுள்ள இரு சாதிகளும் அடங்குகின்றன. இவ்விரு சாதிகளின் தோற்றம் குறித்து சில கருதுகோள்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலியார்

தென்னிந்தியச் சாதிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எட்கர் தர்ஸ்டன் என்பவர் நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூலில் முதலியார் சாதி குறித்து அவர் எழுதியுள்ள செய்திகளின் சுருக்கம் வருமாறு:

1.வட மாவட்டத்தைச் சேர்ந்த வேளாளர், ‘முதலி’ என்ற பட்டப்பெயரைக் கொண்டுள்ளனர்.
2.தேவதாசிகள், கைக்கோளர், வேளாளர் ஆகியோருக்குப் பிறந் தோர் ‘முதலி’ என்ற பட்டத்தைத் தரித்துக் கொள்ளுகின்றனர்.
3.நெசவாளர்களில் ஒரு பிரிவினரும், சமணர், கபடர், ஒச்சன், பள்ளி வன்னியன் பணிசவன் ஆகியோரும் ‘முதலி’ என்பதை, தம் சாதிப்பட்டமாகக் கொள்ளுகின்றனர்.

தர்ஸ்டன் குறிப்பிடும் இச்செய்திகள் பல்வேறு சாதிப்பிரிவினருக்கும் உரிய சாதிப்பட்டமாக ‘முதலியார்’ என்ற சொல் உள்ளதை உணர்த்துகிறது. முதலியார் என்ற சொல்லின் மூலச் சொல் ‘முதலி’ என்பதாகும். முதலி என்ற சொல் தலைவன் என்ற பொருளைத் தருவதாக, சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் குறிப்பிடுகிறது.

முதலி என்ற சொல்லே அர் விகுதி பெற்று முதலியார் என்றாகி யுள்ளது. முதலி என்ற சொல் தலைவன் என்ற பொருளிலேயே தமிழ்க் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. படைக்குத் தலைவனாக இருந்தவன் ‘படை முதலி’, ‘சேனை முதலி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளான். சாதிகளின் தலைவர்களாக விளங்கியோரும் முதலி என்ற பட்டத்தைப் பெற்றிருந்ததையும் தமிழ்க் கல்வெட்டுக்களின் வாயிலாக அறிய முடிகிறது. ‘பறை முதலி’, ‘அகம்படிய முதலி’ என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் திருமய்யம் வட்டத்திலுள்ள திருக் குளம்பூர் ஊரிலுள்ள கல்வெட்டில் ‘முதலிமை செய்கிற குலதிபரா யரும்’ என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. இங்கு ‘முதலிமை’ என்பது தலைமைப் பதவியைக் குறிப்பிடுகிறது.  கி.பி. 14ம் நூற் றாண்டுக் கல்வெட்டில் (1347) பிரம்மராயன் என்பவன் ‘பிள்ளை’, ‘முதலி’ என்ற பட்டத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளான்.

கன்னியாகுமாரி மாவட்டம் கோட்டாறு பள்ளிவாசல் ஒன்றுக்கு இஸ்லாமியர் ஒருவர் தூண்களைக் கொடையாக வழங்கியுள்ளார். இக் கொடையைக் குறிக்கும் 1767 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் கொடையாளியின் பெயர் சேகுநூர் முதலியார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழர் காலத்தில் அரசு வழங்கிய பட்டங்களில் முதலி என்பதும் ஒன்று என நொபுருரோஷிமா குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணப் பகுதியில் உடையான் என்பது ஊர்த்தலைவர்களின் பதவிப் பெயராக இருந்துள்ளது. முதலி பட்டம் வேண்டுமென்று கேட்ட கந்த உடையான் என்பவனுக்கு கி.பி.1781 ஆண்டு நியமனப் பத்திரம் வாயிலாக முதலி பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அப் பத்திரத்தில் ‘சகலரும் இவனைத் தங்கள் முதலியாரென்கிற தறிந்து அடுத்த சங்கை பண்ணிப் பேர் சொல்லி அழைக்கவும்’ என்று குறிப்பிடப்பட்டள்ளது. இவ்வாறு ‘முதலி’ பட்டம் பெற்றவர்களால் தன் குழந்தை மதிக்கப்படுவது சிறப்பு என்று கருதிய ஒரு தாயின் உணர்வை ‘முத்துப் பதித்த முகம்/  முதலிமார் மதிக்கும் முகம்- என்ற ஈழத்து நாட்டார் பாடல்வரிகள் வெளிப்படுத்துகின்றன.

பிள்ளை:

தமிழ்நாட்டில் வெள்ளாளர் சாதிக்குரிய பட்டங்களில் ‘பிள்ளை’ என்பதும் ஒன்று. ஆனால் ஆங்கில ஆட்சியின் போது எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பல்வேறு சாதியினரும் இப்பட்டத்தைப் பயன்படுத்தியுள்ளது வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பாக எட்கர் தர்ஸ்டன் எழுதியுள்ள செய்தி வருமாறு:

அண்மைக்காலக் கணக்கெடுப்புகளில் அகமுடையார், அம்பலக்காரர், கொல்லர், இடையர், நாயர், பறையன், நோக்கன், பணிசவன், பணக்கன், சாயக்காரன், செம்படவன், சேனைக்குடியர் ஆகிய சாதியினருக்குரிய பட்டப்பெயராக இது பதியப்பட்டுள்ளது. தேவதாசிகளின் ஆண் சந்ததியினரும் பிள்ளை என்ற பட்டத்தைத் தரித்துக் கொள்ளுகின்றனர். ஐரோப்பியரிடம் பட்லர்களாகப் பணிபுரியும் பல பறையர்கள், பிள்ளை என்ற பட்டப்பெயரைத் தங்கள் பெயரோடு இணைந்துக் கொள்கின்றனர்.

இச்செய்தி உண்மை என்பதற்குச் சான்றுகள் உள்ளன. டியூப்ளேயிடம் தலைமைத் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை, யாதவர் குலத்தைச் சார்ந்தவர். சென்ற நூற்றாண்டில் புகழ் பெற்றி ருந்த நாயனக்கலைஞர் ராஜரத்தினம் பிள்ளை இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டின் சட்டமன்றத் தலைவராக விளங்கிய சிவசண்முகம் பிள்ளை ஆதிதிராவிடர் சமுகத்தைச் சேர்ந்தவர். இன்றும் தஞ்சை மாவட்டக் கள்ளர் சாதியினரிடமும் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சாதியினரிடமும் ‘முதலி’, ‘பிள்ளை’ என்ற பட்டங்கள் வழக்கிலுள்ளன.

இதன் அடிப்படையிலேயே ‘காயில கெட்டது கத்தரிக்கா(ய்) சாதியில கெட்டது பிள்ளை’ என்ற பழமொழி வட மாவட்டங்களில் வழக்கிலுள்ளது. கூட்டு பொரியல், கொஸ்து எனத் தனியாக மட்டுமின்றி அவியல், குழம்பு என்பனவற்றில் இடும் பொருளாகவும் கத்தரிக்காய் பயன்படுகிறது. இதுபோல் ‘பிள்ளை’ என்ற பட்டம் பல்வேறு சாதியினருக்கும் உரியதாக விளங்குகிறது என்பது இப்பழமொழி வெளிப்படுத்தும் பொருளாகும்.

மன்னர்கள் வழங்கிய பட்டம்

மன்னர் ஆட்சிக்காலத்தில் கணக்கெழுதி வந்த கணக்கர்கள், ‘பிள்ளை’ என்ற பட்டத்தைப் பெற்றுள்ளனர். ‘ஊர்க்கணக்கு நல்லாப் பிள்ளை மச்சினன் அழகப்ப பிள்ளை எழுத்து’ என்ற கல்வெட்டுத்தொடரை இதற்குச் சான்றாகக் கூறலாம். இதன் அடிப்படையிலேயே ‘கணக்கப்பிள்ளை’ என்ற சொல்லாட்சி கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது. இப்பட்டத்தை இஸ்லாமியர்களும் பெற்றுள்ளனர். அச்சுத தேவராயன் காலத்தியக் கல்வெட் டொன்று ராவுத்தனாயன் என்ற இஸ்லாமியர் எழுதியதை ‘கணக்கப்பிள்ளை ராவுத்தன் எழுத்து’ என்ற குறிப்பிடுகிறது. கி.பி.14ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்றில் தகியுடின் என்ற இஸ்லாமியர் ‘பிள்ளை’ பட்டம் பெற்றவராகக் குறிப்பிட்டள்ளார். ஆர் விகுதியிட்டு ‘பிள்ளையார்’ என்ற பதவிப்பெயர் இருந்ததை சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது.

இவ்வாறு பதவிப்பெயராகவும், மன்னர்களால் வழங்கப்பட்ட பட்டமாகவும் ‘முதலி’, ‘பிள்ளை’ என்பன விளங்கியுள்ளன. இவ்விரு சொற்களும் சாதியடையாளமாக எப்படி மாறின என்பது குறித்து இனி ஆராய்வோம்.

(தொடரும்)

- பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்

4 comments:

  1. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. தகவல் மிக்க கட்டுரை வழங்கியதற்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. முதலியார் முதலியார் ஜாதி அல்லாத சமூகங்களிலும் உண்டு.

    ReplyDelete
  4. சான்றுகளோடு கூடிய நல்ல தகவல். தொடருங்கள். தொழில் வேளாண்மை, தெய்வம் சிவன், தமிழில் மிதமிஞ்சிய ஆர்வம் என்றிருந்தவர்கள் சென்ற நூற்றாண்டு சைவ வேளாளர்கள். இந்த மூன்றும் மிக முக்கியம் என்று கருதியவர்கள். நிலப்புரபுத்துவத்துடன் நெருங்கிய தொடர்புடையது.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)