Saturday, December 31, 2011

“மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை”


நாடாளுமன்ற மாநிலங்களவையில் வியாழனன்று (டிசம்பர் 29) லோக்பால் சட்டமுன்வடிவு பரிசீலனைக்காகவும், விவாதத்திற்குப் பின் நிறைவேற்று வதற்காகவும் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

‘‘லோக்பால் சட்டமும் லோக் அயுக்தா சட்டமும் வலுவானதாக அமைந்திட வேண்டும். நான் முன்பே பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல நாம் ஒரு பக்குவமான ஜனநாயக அமைப்பைக் கொண்டிருக்கிறோம். அதனை உறுதி செய்யக்கூடிய விதத்தில் அவை அமைந்திட வேண்டும். அரசாங்கம் கொண்டு வந்திருக்கிற சட்டமுன்வடிவிலும், அன்னா ஹசாரே குழுவினர் கொண்டுவந்துள்ள ஜன்லோக்பால் சட்டமுன்வடிவிலும் உள்ள நல்ல அம்சங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு புதியதொரு சட்டமுன் வடிவை உருவாக்கிட வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின் ஜீவநாடி உயர்த்திப்பிடிக்கப்படக்கூடிய வகையில் அது அமைந்திட வேண்டும்.

நம் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை என்ன கூறுகிறது? ‘‘பாரத் எனப்படும் இந்தியா என்பது மாநிலங்களின் ஓர் ஒன்றியமாகும். அதாவது இந்தியாவின் எல்லை என்பது அனைத்து மாநிலங்களின் எல்லைகளை உள்ளடக்கியதாகும். பின்னர் இதனுடன் யூனியன் பிரதேசங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறு மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. தயவுசெய்து நினைவில் கொள்க. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா இல்லை. எனவே மாநிலங்களின் நலன்களைப் பாதிக்கக்கூடிய விதத்தில், மாநிலங்களுக்கு எதிராக ஒரு சட்டம் உருவாக்க முயற்சித்தீர்களானால், அது இந்தியாவின் நலனுக்கே எதிரானதாகப் போகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே, நாட்டின் நலன்களைப் பாதிக்கும் எதையும் செய்யாதீர்கள். நம் அரசமைப்புச் சட்டத்தின் ஜீவநாடிக்கு எதிராக - அதாவது இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மறுதலிக்கக்கூடிய வகையில் - எதையும் செய்யாதீர்கள்.

நாம் ஓர் உயர்ந்த அரசமைப்புச் சட்டத் தைப் பெற்றிருக்கிறோம். அமெரிக்க அதிபர் ஒபாமா இங்கே வந்து நம் நாடாளுமன்றத்தில் பராமரிக்கப்படும் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திடும்போது, ‘‘உலகின் மாபெரும் நாட்டிற்கு, உலகின் மிகப்பழைய ஜனநாயக நாட்டின் வாழ்த்துக்கள்’’ என்று எழுதி கையொப்பமிட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அமெரிக்காவில், அவர் பிறந்த பின்னர்தான் அமெரிக்காவில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது என்பதை அப்போது அவருக்கு நாம் நினைவுபடுத்த முயற்சித்தோம். ஆனால், நாம் சுதந்திரம் பெற்ற உடனேயே நாட்டில் வயது வந்த அனைவருக்கும் ‘‘ஒருவர் - ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு’’ என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நம் அரசமைப்புச்சட்டத்தின் தந்தை அம்பேத்கார் கூறினார்.

ஆனாலும் அவர், ‘‘ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு’’ இன்னும் கொடுக்கவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் கூறிப் புலம்பினார். நாட்டில் உள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு வசதிகளை அளிக்காதவரை நாம் நம் அரசமைப்புச் சட்டத்தின் ஜீவநாடியை முழுமையாக நிறை வேற்றியதாகக் கூறுவதற்கில்லை.

இந்தியா என்பது மாநிலங்களை உள்ளடக்கிய ஓர் ஒன்றியமாகும். எனவே இச்சட்டமுன்வடிவின் கூட்டாட்சித் தன்மை முதலில் சரிப்படுத்தப்பட வேண்டும். மாநிலங்களுக்கு லோக் அயுக்தா சட்டம் தேவை என்று நாம் கூறுகிறோம். இது தொடர்பாக இச்சட்டமுன்வடிவில், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில சட்ட மன்றப் பேரவை பரிசீலிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதனைச் செய்திட வேண்டும். இது தொடர்பாக தரப்பட்டிருக்கும் திருத்தங்களை முறையாக அரசு இணைத்திட வேண்டும்.

இதற்காக ஒரு முன்மாதிரி சட்ட முன்வடிவை உருவாக்குங்கள். அவற்றை மாநிலங்களுக்கு பரிசீலனைக்காக அனுப்பி வையுங்கள். அவர்கள் லோக் அயுக்தா சட்டமுன்வடிவை உருவாக்கிக் கொள்ளட்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் அயுக்தா சட்டம் இருக்க வேண்டும் என் பதைக் கட்டாயமாக்கிட வேண்டும். ஆனால் எப்படி? என்ன முறையில்?

மத்திய-மாநில உறவுகள் சீர்கேடு அடையாதவிதத்தில், மாநில சட்டமன் றங்களின் உரிமைகளை பாதுகாக்கக் கூடிய விதத்தில் அது அமைந்திட வேண்டும். நம் அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு அளித்துள்ள உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்தில் அது அமைந்திட வேண்டும்.

அடுத்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பது தடை செய்யப்பட வேண்டும். அரசியலில் ஊழல் உருவாவதற்கான மூலக் காரணம் இதுதான். எனவே கார்ப்பரேட்டுகளையும் அந்நிய நாடுகளிலிருந்து உதவி பெறும் அரசு சாரா நிறுவனங்களையும் இதன் அதிகாரவரம்பெல்லைக்குள் கொண்டு வர வேண்டும். இதனை நீங்கள் செய்யவில்லை என்றால், இந்தச் சட்டமுன் வடிவை உங்களால் வலுவான ஒன்றாக மாற்றிட முடியாது.

அடுத்து ஒரு முக்கியமான அம்சம், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) தொடர்பானதாகும். மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும். சுதந்திரம் என்றால், அரசின் கட்டுப்பாட்டிலிருந்து சுதந்திரம். அதே சமயத்தில் அது பதில்சொல்லக்கூடிய விதத்திலும் அமைந்தி ருக்க வேண்டும். அது தன் இஷ்டத்திற்கு செயல்படலாம் என்று நாங்கள் எப்போதுமே சொன்னதில்லை. எனவே அதன் இயக்குநர்கள் ஓர் குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட நடவடிக்கை எடுத்திட முன்வருவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும்.

நாட்டின் உயர்மட்டத்தில் நிலவும் ஊழல்கள் குறித்துப் புலனாய்வு செய்திட லோக்பால் அமைப்பே முன்வருவது என்பது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் எந்தப் புலனாய்வு அமைப்பையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. லோக்பால் அமைப்பே புலனாய்வும் மேற்கொள்ளும் என்பது சரியல்ல. இது சரிசெய்யப்பட வேண்டும். இல்லாவிடில் லோக்பால் என்னும் அமைப்பே வலுவற்றதாகிவிடும்.

மத்தியப் புலனாய்வுக் கழகம் எப்படியெல்லாம் அரசாங்கத்தால் துஷ்பிரயோகமாக உபயோகப்படுத்தப்பட்டன என்பதற்கு எண்ணற்ற உதாரணங்களைச் சொல்ல முடியும்.

சிபிஐ, ஊழல் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் தொடர்பான அனைத்து அம்சங்களும் லோக்பால் சட்டத்தின் அதிகார வரம்பெல்லைக்குள்ளும், கண்காணிப்பிற்குள்ளும் கொண்டுவரப்பட வேண்டும். இது தொடர்பாக நாங்கள் துல்லியமான திருத்தங்களைக் கொடுத்திருக்கிறோம்.

லோக்பால் சட்டம் வலுவானதாக அமைந்திட நாங்கள் முன்வைத்துள்ள திருத்தங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்திருத்தங்கள் அனைத்தையும் சேர்த்துக் கொண்டு ஒரு வலு வான லோக்பால் சட்டத்தை நிறை வேற்றி, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ள அனைவருக்கும் இப்பிரச்சனையில் நாடாளுமன்றம் தன் பொறுப்பை செம்மையாக நிறைவேற்றி இருக்கிறது என்பதைக் காட்ட வேண்டும்.

2 comments:

  1. நல்ல சமூக சிந்தனை உள்ள பதிவு !

    ReplyDelete
  2. மாநில உரிமைபற்றி தற்போது பேசும் சி பிஐ _ சி பி ம் விடுதலைக்கு முன் தங்கள் கட்சி திட்டத்தில் வைத்ருந்த தேசிய இனங்கள் பற்றிய வரையறுப்பை மாற்றியது ஏன்? விளக்கம் உண்டா?

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)