Thursday, December 22, 2011

மே.வங்கத்தில் திரிணாமுல் அட்டகாசம்!


மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல பிரிவினரின் மீது திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் தாக்குதல் தொடுத்து வருகிறார்கள். அண்மையில் நடந்த சம்பவமொன்றில் மாணவர் சேர்க்கையில் தலையிட முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் மாநகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் வன்முறை வெறியாட்டம் ஆடியுள்ளனர்.

ஜாதவ்பூர் வித்யாபீடம் என்கிற பள்ளிக்கூடம் ஒவ்வொரு ஆண்டும் 100 மாணவர்களை ஐந்தாம் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறது. அடுத்த ஆண்டில் ஐந்தாம் வகுப்பு படிக்க விரும்பும் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதாக விண்ணப்பங்களையும் அப்பள்ளிக்கூடம் வழங்கியது. அக்டோபர் மாதத்திலேயே இந்தப் பணி துவங்கியது. 1,200 பேர் இந்த விண்ணப்பங்களைப் பெற்றதால், மாணவர்களுக்கு தேர்வு வைப்பது என்று பள்ளிக்கூட நிர்வாகம் முடிவெடுத்தது. ஆனால் அத்தகைய தேர்வு எதையும் நடத்தக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டு, குலுக்கல் முறையில் தேர்வு செய்யுங்கள் என்றும் கூறியது. அரசின் இந்த உத்தரவை பள்ளியின் தகவல் பலகையில் ஒட்ட தலைமையாசிரியர் ஏற்பாடு செய்தார். இதையடுத்து, பள்ளிக்கூடத்தின் அருகில் வசிப்பதாகச் சொல்லிக் கொண்டு தலைமையாசிரியரைச் சந்தித்த ஒரு கும்பல், அவர்கள் சொல்லும் 100 பேருக்குதான் மாணவர் சேர்க்கை செய்ய வேண்டும் என்று மிரட்டியது.

ஜாதவ்பூர் வித்யாபீடத்தின் தலைமையாசிரியர் மாவட்ட கல்வி அதிகாரிகளோடு ஆலோசனை செய்தார். அவர்களும் மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னவுடன்தான் இதற்குப் பின்னணியில் ஏதோ இருக்க வேண்டும் என்று அவர் தெரிந்து கொண்டார். மாநில கல்வித்துறை செயலாளர் விக்ரம் சென்னை அவர் தொடர்பு கொண்டு பேசினார். அவரும் ஏற்கெனவே மாணவர் சேர்க்கை பற்றி நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று தலைமையாசிரியரிடமே கூறியிருக்கிறார். ஆனால் அடுத்து நடந்த கூட்டத்திலும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் தங்கள் கருத்தில் பிடிவாதமாக இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் தலைமையாசியரும் தனது முடிவில் பிடிவாதமாக இருந்துவிட்டார்.

ஜாதவ்பூர் வித்யாபீடம் இருக்கும் அதே வளாகத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களையும் ஐந்தாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்கள் இருவர் பள்ளித் தலைமையாசிரியரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். மறுக்கவே, பெற்றோர்கள் என்ற போர்வையில் சிலரைத் தூண்டிவிட்டு கலாட்டா செய்ய அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு, தாஸ்குப்தா(95வது வார்டு கவுன்சிலர்) உள்ளிட்ட மூன்று பேர் தலைமையாசிரியர் அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள். தாங்கள் சொல்லும் 100 பேருக்கு உடனடியாக சேர்க்கை நடக்க வேண்டும் என்று அவர்கள் கூறியதற்கு தலைமையாசிரியர் மறுப்பு தெரிவித்தார். அங்கிருந்து வெளியேறும்போது, மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார்கள்.

சிறிது நேரத்திலேயே தாஸ் குப்தா மற்றும் அனிதாகர் மஜூம்தா(113வது வார்டு கவுன்சிலர்) ஆகிய இருவரும் சுமார் 60 ரவுடிகளுடன் பள்ளிக்குள் நுழைந்தனர். தலைமையாசிரியரின் அறையை சூறையாடினர். தலைமையாசிரியர் மற்றும் அப்போது அங்கிருந்த ஆசிரியர்கள் அனைவரையும் அடித்து உதைத்தனர். அப்போது தலைமையாசிரியர் அறைக்கு வெளியே வந்து கொண்டிருந்த ஆசிரியை மிகவும் கேவலமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்கள். பள்ளிக்கூடத்தில் உயர்வகுப்புகளில் படிக்கும் சில மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் அடிவாங்குவதைப் பொறுக்க முடியாமல் தடுக்க முனைந்திருக்கிறார்கள். அவர்களையும் வன்முறையாளர்கள் விட்டுவைக்கவில்லை. இத்தனைக்கும் பள்ளிக்கூட வளாகத்தில் காவல்துறையினர் பணியில் இருந்தனர். பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடக்கலாம் என்று பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள் அங்கு இருந்தார்கள்.

வன்முறை வெறியாட்டத்தை அவர்கள் வேடிக்கையே பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களை ஆசிரியர்கள் அவமானப்படுத்தி விட்டனர் என்று வெளியில் காத்திருந்த பெற்றோர்களிடம் பொய்ப்பிரச்சாரத்தையும் திரிணாமுல் கவுன்சிலர்கள் செய்திருக்கிறார்கள். அப்போது அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்களிடம் இதையே திரும்பத் திரும்பத் தெரிவித்துள்ளனர். ஆனால் தொலைக்காட்சி நிருபர்களும், பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்களும் நடந்த நிகழ்ச்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள். தொலைக்காட்சி சேனல்களில் நடந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று கேட்டதற்கு, வன்முறை வெறியாட்டம் நடத்திக் கைது செய்யப்பட்டவரை, காவல்நிலையத்திற்குள் நுழைந்து முதலமைச்சரே விடுவிக்கவில்லையா... பின்னர் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்களில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


கிடப்பில் மக்கள் பிரச்சனைகள்


உள்ளுர் பிரச்சனைகளில் தலையிடும் சமூக விரோதிகளில் பெரும்பாலானவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அந்த நடவடிக்கையை நீக்க வரிசையில் வருகிறார்கள். இதில் கவனம் செலுத்தும் ஆளுங்கட்சியினர் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. மருத்துவமனையில் தீ, கள்ளச்சாராயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு, மாநிலத்தில் 350 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த அவலமும் அடங்கும். நான்கு மாதங்களை வெட்டியாகக் கழித்து, மக்கள் பிரச்சனைகளைக் கிடப்பில் போட்டுள்ளனர் திரிணாமுல் காங்கிரசார்.

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)