அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய பல்கலைக்கழகம் மூடநம்பிக்கையை பாடம் மூலம் கற்பித்து வளர்க்க நினைப்பது கொடுமையாக உள்ளது. ‘ஜோதிடம்தனை இகழ்’ என்று மகாகவி பாரதியும், ‘அறிவினை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை’ எனப் பாடிய பாவேந்தரும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் கலகக்குரல் எழுப்பிய பெரியாரும் பிறந்த தமிழ்நாட்டில்தான் இந்த பித்துக்குளித்தன முயற்சிகள் நடக்க இருப்பது வேதனையாகவும் உள்ளது.
ஏற்கனவே தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் ஜோதிடத்தை தூக்கி வைத்துக் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றன. சமீபத்தில் சனிப்பெயர்ச்சிக்கு நடந்த நேரடி ஒளிபரப்புக்களும், பக்கம் பக்கமாய் வந்த ராசிபலன்களும் விஞ்ஞான உலகைக் கிண்டல் செய்வதாகவே இருந்தன. இனி, பல்கலைக்கழகங்களும் அந்தக்காரியத்தைச் செய்யப் போகின்றன!
ஏற்கனவே ஒருமுறை காமராசர் பல்கலைக் கழகத்தில் இதுபோன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டது. பல்கலைக்கழக செனட் மற்றும் கல்விக்குழு சபை மூலமாக, கடுமையான விவாதங்கள் நடத்தி, போராடியது தமிழ்நாடு அறிவியல் இயக்கம். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன், சட்டமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்பி அங்கு விவாதிக்கப்பட்டு உயர்கல்வித்துறை இதில் தலையிட்டு இப்பாடத் திட்டம் கைவிடப்பட்டது.
தற்பொழுது மீண்டும் பழைய குருடி கதவைத் தட்டியிருக்கிறது. அதுவும் கொல்லைப்புறக் கதவை. ஜனநாயக முறையில் பல்கலைக்கழக சபைகளில் விவாதித்து முடி வெடுக்காமல் துணைவேந்தர் இல்லாத போது, சிண்டிகேட் கூடி பாடத்திட்டம் குறித்து முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இம்முடிவினை கைவிட்டு சோதிடக்கல்வி பாடத்திட்டம் துவங்குவதை விட்டுவிடுமாறு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மீண்டும் கண்டனக்குரல் எழுப்பியிருக்கிறது. இப்பாடத்திட்டத்தை கைவிடும் வரை உரிய இயக்கங்களை மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்துத்துவா சக்திகள்தான் ஜோதிடத்தை பாடமாக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மக்களின் பயங்களையும், பலவீனங்களையும் சாதகமாகப் பயன்படுத்தும் ஏமாற்று வேலைதான் ஜோதிடம். ஜோதிடம் என்பது மோசடி என்பதையும், மக்களின் தன்னம்பிக்கைகளை குலைக்கும் தகிதத்தம் என்பதையும் விஞ்ஞான உலகம் ஆதாரங்களோடு நிரூபித்திருக்கிறது. ஆனால் ஜோதிடம் ஒரு கணிதம் என்றும், விஞ்ஞானம் என்று சொல்லி அதற்கு அறிவுமூலாம் பூசுகிற முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்கலைக் கழகங்களில் ஜோதிடத்தை பாடமாக்கும் முயற்சியில் அப்படியொரு அரசியல் இருக்கிறது.
பெரியாரை வாய்க்கு வாய் பேசுகிற திராவிடக் கட்சிகள் இதுகுறித்து மௌனம் சாதிப்பதும், பெரியாரின் கொள்கைகளின் வழிவந்தவர்கள் நாங்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் தலைவர்கள் இதனை ஒரு பிரச்சினையாகவே பார்க்காத போக்கும் நிகழ்காலத்தின் அவலங்களில் ஒன்று. அறிவுலகம் திரண்டு நின்று எதிர்த்து முறியடிக்க வேண்டிய முக்கியமான காரியம் இது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அதனைத் துவக்கி வைத்திருக்கிறது.
Thadukkap pada vendiya visayam. Arumaiyana vizhippunarvu pathivu.
ReplyDeleteஅங்கு இருக்கும் பாடஞ்சொல்லித்தருபவர்களை அனுப்பிட்டு, கிளி, எலி, குரங்குகளை வைத்து ஜோசியம் பார்க்க சொல்லி கொடுங்கையா! நாடு ரொம்ப உருப்பட்டுடும். நல்லாதாயா இருக்குது ஒங்க அப்ரோச்சி.
ReplyDeleteபோன மாதம் அவர்கள் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழாவைக்கொண்டாடினார்கள்.
ReplyDeleteஇப்பல்கலைக்கழகம் மூடநம்பிக்கைகளைமட்டுமல்ல, சாதி சண்டைகளையும் கற்றுக்கொடுக்கத்தான் நிறுவப்பட்டிருக்கிறது.