இந்தியில் வெற்றிகரமாக ஓடிய த்ரீ இடியட்ஸ் படத்தைத்தான் தமிழில் நண்பன் படமாக ஆக்கியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். அந்தப் படத்தின் பாடல் வெளியீடு இன்று கோவையில் நடந்தது. அதில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சில முக்கியமானக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டதும் நமது குப்பன் தனது ஆறாவது அறிவை உபயோகித்து, இயக்குனர் ஷங்கர்தான் ‘வெரி பிக் இடியட்’ என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். குடித்துவிட்டு உளறுவதாக குப்பனை உடனடியாக ஷங்கரின் அபிமானிகள் அவ்விடத்தை விட்டு அகற்றியிருக்கின்றனர். இச்செய்தியினை யாரும் வெளியிட முன்வராத நிலையில் நாம் மட்டுமே குப்பனுக்காக இங்கு பதிவிடுகிறோம்.
இனி ஷங்கரின் கருத்துக்கள் கொட்டை எழுத்துக்களிலும், நமது குப்பனின் சந்தேகங்கள் சாதாரண எழுத்துக்களிலும்....
"எந்திரன் படத்தை மறந்து விடுங்கள். அது போல நண்பன் இருக்காது. எந்திரனை மறந்து விட்டு நண்பன் படத்தைப் பார்க்க வாருங்கள் "
அப்படியானால், எந்திரன் படம் மறக்க வேண்டிய படம் என்கிறாரா? எந்திரனை மனதில் வைத்துக்கொண்டு நண்பனை பார்க்க போக வேண்டாமா? கோடி கோடியாய் கொட்டி எடுக்கப்பட்ட அந்தப் படத்தின் மீது ஷங்கருக்கு இருக்கும் மரியாதை இவ்வளவுதானா?
“நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார்.”
ஓஹோ, நாயகன்& இந்தியன் கமல், அந்நியன் விக்ரம், ஜெண்டில்மேன் அர்ஜூன் எல்லோரும் கடமையுணர்வு இல்லாதவர்களா?, சரி, கடமையுணர்வு என்றால் என்னங்க?
“நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்.”
அனைவருக்கும் பிடிக்கும் என்ற பிறகு யாருக்கெல்லாம் பிடிக்காதோ என்ற சந்தேகம் ஏன் இவருக்கு? படத்தைப் பார்த்த பிறகு விஜய்யைப் பிடித்தவர்களுக்கு பிடிக்காமல் போகாது என்பதற்கு என்ன நிச்சயம்?
“சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.”
ரஜினிகாந்த் போன்ற சீனியர் நடித்த படங்களுக்கு நடிக்க மறுத்து, விஜய் போன்ற ஜூனியர்கள் படத்திற்கு வில்லனாக நடித்ததின் மூலம் சத்யராஜ் எப்படி சீனியர் நடிகராக நிரூபித்து விட்டாராம்?
“நண்பனில் நல்ல கதை உள்ளது. எனவே எந்திரனை மறந்துவிட்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பன் படத்தை பார்க்க வாருங்கள்”
எந்திரனில் நல்ல கதை இல்லையென்பதை திரும்பத் திரும்ப ஒப்புக் கொள்கிறாரா? படம் பார்க்க வருகிறவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் தேவையில்லை என்பதுதான் ஷங்கரின் கருத்தா? அப்படியானால் ஏன் கோடி கோடியாய் செலவழித்து விளம்பரம் செய்கிறாராம்?
யாராவது நமது குப்பனைத் தெளிய வையுங்களேன்!
தொடர்புடைய பதிவுகள்
|
நல்லா கேட்டிங்க? அதானே காசுக்காக எப்படி வேணுமினாலும் பேசுவானுங்க - தமிழன் என்றால் இளிச்சவாயன் என்ற நினைப்பு - இருக்குடி உங்க எல்லாத்துக்கும் ஆப்பு
ReplyDeleteசினிமாவிற்கு வருவதற்கு முன்பு வரை கஞ்சா விற்று பிழைத்தவர்களிடமிருந்து, எப்படிப்பட்ட இந்தியனைத்தான் எதிர்பார்க்க முடியும்? சினிமாக்காரர்களை (கூத்தாடிகளை) நிழலில் பேசும் வசனத்திற்காகவும், வீரத்திற்காகவும் அப்படியே அவர்களை நாயகனாக நம்பும் கூட்டம் இருப்பதால், அவர்களின் நிஜம் அறியாது அலைகிறது தமிழகம் அலைக்கழிக்கிறார்கள் இவர்கள்.
ReplyDeleteஅதிகாலை நாலரை மணிக்கும் படம்பார்க்கப் போன ஒவ்வொரு நடிகனனின் ரசிகரும் (குறிப்பாய் ரஜினி ரசிகர்கள்)புரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. படத்துக்கு படம் கல்லா கெட்ட இந்த கெட்ட திரை(மறைவு)உலகம் செய்யும் கெட்டதனங்கள் ஏராளம்.