Friday, December 9, 2011

படுகொலைகளுக்கு பழி தீர்க்கும் மனித இனம்!


வெள்ளை மாளிகையின் பாதாளச் சாக்கடையில் பதுங்கி, ஒளிந்து கொண்டிருந்த பராக் ஒபாமாவை நேட்டோ படைகள் வெளியே தரதரவென இழுத்து சுட்டுக்கொன்றன. அமெரிக்காவில் அரசு அமைக்கும் அதிகாரத்தை வால்ஸ் டிரிட்டை கைப்பற்றுவோம் குழுவின் கையில் ஒப்படைத்தன நேட்டோ படைகள். பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்னராக நடந்துமுடிந்து மக்கள் மறந்துபோயிருக்க வேண்டிய செய்தியிது. ஆயினும், நடக்கப்போவதில்லை.

வேலை கொடு, உணவு கொடு, ஆட்சியை விட்டு வெளியேறு என குரல் எழுப்பும் பெருந்திரள் போராட்டங்கள் ஒடுக்கப்படும் முயற்சியில்  போராட்டக்காரர்கள் கைவிலங்கிட்டு இழுத்து செல்லப்படுவது அமெரிக்காவாக இல்லாமல் ஆசியா அல்லது அரபுநாடாக இருந்திருந்தால் இந்நேரம் அந்நாட்டின் அதிபர் நடுத்தெருவில் சுட்டுக்கொல்லப்பட்டு அவரின் பிணம் சாக்கடையில் வீசப்பட்டிருக்கும். அந்த நாட்டு மக்களின் போராட்டத்தை, ஜனநாயக உரிமைகளை அமெரிக்கா மதிக்கிறதென கிலாரி கிளிண்டன் புதிய அதிபரின் பக்கத்தில் அமர்ந்து பேட்டியளித்திருப்பார்.

நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் உள்ள நாடாக இருந்தாலும் கூட அமெரிக்கா இப்படி செய்யத் தயங்காது. ஏனெனில், நேட்டோவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மட்டுமே அமெரிக்காவின் நோக்கமாக இருக்குமெயொழிய அதன் அதிபர்களை அல்ல. நேட்டோ, உலகை தன் துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்திருக்க வேண்டும், அமெரிக்கா நேட்டோவை தன் சட்டைப்பையில் வைத்திருக்க வேண்டும். இது தான் அமெரிக்காவின் பொருளாதாரக்கொள்கை, அயல்நாட்டுக்கொள்கை, உள்நாட்டுக்கொள்கை, இராணுவக் கொள்கை என அனைத்தும் ஆகும்.

வால்ஸ் டிரீட்டை கைப்பற்றுவோம் எனும் இலட்சிய அறிவிப்புடன் 100 பேர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை முதலில் அத்தனை முக்கியமானதாக அதிபரும் கண்டு கொள்ளவில்லை, ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. எங்கிருந்து தீப்பொறியாய் வெளிச்சம் கிளம்புமென எதிர்பார்த்திருந்த அமெரிக்கத் தொழிலாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும் தங்கள் எண்ணங்களுக்குள் பற்றவைத்துக்கொண்ட அந்த தீ இன்று உலகின் வீதியெங்கும் பரவத்துவங்கிய பின்னர், அடக்குவது அவ்வளவு சுலபமாக இல்லை அமெரிக்க அரசுக்கு. தன்னெழுச்சியாக செப்.17 அன்று துவக்கிய போராட்டத்தை முதலில் கிள்ளியெறிந்து விடலாம் என்று நினைத்தவர்கள், இன்று போராட்டக்காரர்களை விலங்கிட்டு அள்ளிவீசிட எடுக்கும் அராஜக முயற்சிகளும் அவ்வளவாக பலனிக்கவில்லை. நாங்கள் 99 என்ற முழக்கத்துடன் துவங்கிய எழுச்சி இன்று ஒராயிரம் கோஷங்களை உலகெங்கும் எழுப்பியுள்ளது.

அரபு எழுச்சியின் தொடர்ச்சியாய், அதன் அனுபவங்களைக் கொண்டு போராடும் எங்களுக்கு வால்ஸ்டிரீட் தேவையில்லை. அரசியல்வாதிகளும் தேவையில்லை. போராட்டம் மூலம் எங்களின் இறுதி இலட்சியத்தை அடைந்தே தீர்வோம். ஒரே தீர்வு புரட்சி மட்டுமே என்ற அறைகூவலுடன் துவங்கியுள்ள போராட்டம் ஒரு நாளில் திடீரென உதயமானதல்ல. 2011, ஆகஸ்டு 2 முதல் பலவித பிரச்சாரங்கள், கூட்டங்கள், பல குழுக்களை இணைத்த விவாதங்கள், தொடர் போராட்டங்கள் மூலம் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போராட்டமாகும். ஆர்ப்பாட்டங்கள் சம்பிரதாயமானதென நினைத்து அவமரியாதையாய் பிரச்சாரம் செய்யும் ஆட்சியாளர்களுக்கு வரலாறு கற்றுக்கொடுத்த பாடம் மட்டுமல்ல, எச்சரிக்கையாகவும் எதிரொலிக்கும் இப்போராட்டம் முதலில் 100 பேருடன் துவங்கிய ஆர்ப்பாட்டம் தான் எனினும், அதன் அதிர்வுகள் உலகில் நாளை நடக்கப்போகும் அசாதாரண நிகழ்வுகளுக்கான முன்னறிவிப்பைத் தான் எடுத்துரைக்கின்றன.

வரலாற்றின் படிப்பினைகளை உள்வாங்கிக்கொண்டு, ஆழமான மாற்று அரசியல் உணர்வுடன் துவங்கியுள்ள இப்போராட்டத்தில் சோசலிஸம் என்பது தீர்வாக முன்வைக்கப்படவில்லையெனினும், புரட்சி எனும் தீர்வு சோசலிஸமே எதிர்காலம் என கட்டாயம் கற்றுக்கொடுக்கும். இளைஞர்களும், மாணவர்களும், தொழிலாளர்களும் இணைந்த கூட்டணியாக போராட்டம் உருவாகியுள்ளதால் மட்டுமல்ல, உலகெங்கும் போராட்டத்தை விதைத்து, தலைமையேற்கும் இக்கூட்டணியின் பெரும்பாலோர் ஏற்கனவே சோசலிஸத்துக்காக போராடுபவர்கள் தான். உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற கோஷமே புதிய கவிதையாய் நாங்கள் 99 என்று மாறி ஒலிக்கிறது. உலகப்புரட்சி (அமெரிக்கா புரட்சியை அப்படித்தான் கூறவேண்டும்) அறிவிக்கப்படும் தினத்தில் பெரும் கோஷமாய் ஒலிக்க வேண்டிய வார்த்தையான அமெரிக்காவின் வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் என்ற வார்த்தைதான் இன்று ஒலிக்கப்பட்டிருக்கிறது.

உலக நிதி மூலதனத்தின் தலைமையகத்தை கைப்பற்றுவதன் மூலம் உலகில் நிதி மூலதனமே இல்லாத சூழலை உருவாக்கவேண்டும், உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் எனும் கோஷத்தின் இறுதி இலட்சியம் அதுவே. சோவியத் ஒன்றியத்தை திட்டமிட்டு வீழ்த்தி, அதைத் தொடர்ந்து கம்யூனிச நாடுகளையெல்லாம் பிரித்தாண்ட உலக  முதலாளித்துவத்தின் ஆயுதம் உலக நிதிமூலதனம் எனில், அது வீற்றிருக்கும் கருவறை தான் வால்ஸ்டிரீட். இன்று அங்கே ஒலிக்கும் இந்தக்குரல்கள் காலத்தின் குரல்களாய் பெரும் சத்தமாய் ஒலிப்பதை உலகம் உற்றுக்கேட்கிறது. வால்ஸ்டிரீட் இருக்கும்வரை உலகில் ஜனநாயக நாடு, சுதந்திரநாடு என சுயமரியாதையோடு எத்தேசமும் இருக்க முடியாது என்ற வரலாற்றின் பாடத்தை கற்றுக்கொண்ட உலகத்தொழிலாளர் வர்க்கம் வால்ஸ்டிரீட்டுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் புதிய சரித்திரத்தை படைக்கத் துவங்கியுள்ளனர். இது மிகப்புதியது மட்டுமல்ல, வரலாற்றின் மகத்தான பங்களிப்புமாகும். உலகின் முகத்தை மாற்றப்போகும் போராட்டங்களுக்கான துவக்கமென இதை நாம் வரவேற்கலாம்.

உலக நிதி மூலதனத்தை ஒழிப்பதன் மூலம் முதலாளித்துவ நாடுகளுக்கிடையேயான பொருளாதாரக் கூட்டமைப்பு மட்டுமல்ல, இராணுவக் கூட்டமைப்பின் அவசியமும் அப்போதுதான் அழியும். நாடுகளின் மீது படையெடுத்து ராஜ்ஜியம் அமைத்து ஆண்ட காலனியாதிக்க ஆட்சிக்கு எதிரான போராட்டங்களுக்கு பின்னர், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட முதலாளித்துவம் ஜனநாயகம் என்ற வார்த்தையைத் தான் முதலும், பெரியதுமான மூலதனமாக இன்று வரை கருதுகிறார்கள். பிரிட்டிஷ் போல் ஏதேனும் ஒற்றை நாடு உலகை ஆள்வது என்பதும் ஒரு ஆபத்தென உணர்கிற முதலாளித்துவம், ஆளநினைப்பவர்களைக் கொண்ட ஒரு கூட்டணியை உருவாக்கி அதை ஜனநாயக நாடுகளின் கூட்டணி என நாகரிகமாய் பரப்புவதற்காக திட்டமிடுகிறது. உலக முதலாளித்துவத்தின் தலைமையாக மாறத்துவங்கும் அமெரிக்கா தானே, அக்கூட்டணியை உருவாக்க நினைக்கிறது. 1949ல் வட அமெரிக்கா-, ஐரோப்பியாவின், 12 நாடுகளை இணைத்து வட அட்லாண்டிக் நாடுகளின் கூட்டமைப்பாக, பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸில் உருவாகையில், அது ஒரு இராணுவக்கூட்டமைப்பாக தன்னை அறிவித்துக்கொண்ட போது, அதன் மறைமுக அடிப்படை நோக்கம் உலகை மீண்டும் நவீன காலனியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதுதான். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் இவ்வமைப்பு உருவாகியிருந்தாலும், அதன் பின்னணி இதில் எள்ளளவும் இல்லை. ஆனால், உலகில் மிக வலுவான நாடாக மட்டுமல்ல, உலக நாடுகள் பலவுடன் நேச சக்தியாகவும் விளங்கிய ரஷ்யாவை தனிமைப்படுத்தும் நோக்கம் நேட்டோவில் உண்டு. அதனால் தான், நேட்டோ உருவாகையில், அதன் நோக்கத்தை பின்வருமாறு விளக்கினர்.

அமெரிக்காவை உள்ளேயும், ரஷ்யாவை வெளியேயும், ஜெர்மானியர்களை கீழேயும் வைத்துக்கொள்வதற்காக துவங்கும் அமைப்பே நேட்டோ. அதாவது, அமெரிக்காவின் மறைமுக ஆட்சியின் கீழ் உலகை கொண்டுவரவேண்டும். பொதுவுடைமை நாடான ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இங்கு வெளிப்படையாகவே கூறப்படுகிறது. ஆகையால் தான் இது அரசியல் கூட்டமைப்பாகவும் விளங்கியது. இதனால் அன்று சோவியத் ரஷ்யா, 8 கம்யூனிச நாடுகளை இணைத்து 1955ல் வார்சா உடன்படிக்கை என்ற அமைப்பை உருவாக்கியது. 1991ல் சோவியத் ரஷ்யா திட்டமிட்டு உடைக்கப்பட்ட பின்னர், இதிலிருந்த நாடுகளையும் நேட்டோ தன்னுடன் இணைத்துக்கொண்டு, உலகின் ஒரே இராணுவக் கூட்டமைப்பாக தன்னை மாற்றிக்கொண்டது.

1949--1991 வரை நோட்டோ சோவியத் ரஷ்யாவை மிகத் தீவிரமாக எதிர்த்தது. சோவியத் ரஷ்யாவும் நேட்டோவின் போர் நடவடிக்கைகளை எதிர்த்தே வந்ததால், எந்த நாட்டையும் அன்று நேட்டோவால் அடிமைப்படுத்த இயலவில்லை. அதனால்தான், இன்று சோவியத் ரஷ்யா இல்லாத சூழலில், ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, என நேட்டோ போர் ஆக்கிரமிப்பு செய்கின்றன. ஜனநாயகம் என்ற வார்த்தைதான் இன்று நேட்டோ கூட்டமைப்பின் கடவு வார்த்தை. முதலில், நேட்டோ செல்லும், அதன் பின்னாடியே வால்ஸ்டிரீட் மூலதனமும் செல்லும். இன்று அந்த நிதிமூலதனத்தை எதிர்த்தே போராட்டம் என்பது இராணுவக் கூட்டமைப்பின் மூலம் கட்டியமைக்கப்பட்ட முதலாளித்துவ கூட்டமைப்புக்கு எதிரான போராட்டமாகும். வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் என்ற இப்போராட்டத்தின் பன்முகங்களில் இன்னும் பல உள்ளன. ஆக, இதுவரையான உலக வரலாற்றை மாற்றிஎழுதப்போகும் போராட்டமென நாம் இதை வர்ணிப்பதில் அர்த்தங்கள் ஆயிரமுண்டு.

உலக வங்கியும், சர்வதேச நிதி ஆணையமும் அடுத்த சில ஆண்டுகளில் இருக்குமா என்பதும் இப்போராட்டத்தின் திசைவழிகளில் எழும் கேள்விகளில் சிலவாகும். ஆம், இவை மட்டுமல்ல, ஜி7, ஜி20-\22 ஆகிய அனைத்து அமைப்புகளும் வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ச்சியடையும் நாடுகள் மீதான பொருளாதார ஆக்கிரமிப்புகளுக்கு வழியேற்படுத்திக் கொடுத்த அமைப்புகள் தான். நேட்டோ ஒரு இராணுவக் கூட்டமைப்பு என்பது போல், இவை பொருளாதாரக் கூட்டமைப்புகள், அவ்வளவுதான். ஆனால், நோக்கம் அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் வளர்ச்சிதான். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் நடந்த போர் அனைத்தின் மூலமாகவும் தன்னை வளர்த்துக்கொண்ட உலக நிதிமூலதனம், உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு மட்டும் முதல் எதிரி அல்ல, உலக சமாதானத்திற்கும் தான்.

லிபியாவில் மக்கள் போராடியபோது, அங்கே யாரும் அழைக்காமல் சென்று,ஆயுதக் கலவரம் செய்து, ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி போராடியவர்களிடம் ஒப்படைக்கிறோம் என்ற பெயரில் அறிவித்த, நேட்டோ இப்போது அமெரிக்கா என தனது அடுத்த இலக்கை அறிவித்திருக்கவேண்டும். ஆனால், சிரியா என அறிவிக்கப்பட்டுள்ளது, அறிவித்திருப்பதும் நேட்டோ அல்ல, எப்போதும் அறிவிப்பது அமெரிக்கா தான். ஈரான், வடகொரியா, கியூபா என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் புதிய நாடாக தற்போது சேர்க்கப்பட்டுள்ளதில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவும், சீனாவும் ஆசிய நாடுகளில் பெரிய நாடுகளாக வளர்ந்தால் அமெரிக்காவுக்கு ஆபத்தாம். அதனால். இங்குள்ள கடற்பகுதிகளில் நேட்டோவின் கப்பற்படைகள் எப்போதும் நிற்குமாம். இந்தியா, சீனாவுடன் பொருளாதார உடன்பாடுகள் மேற்கொண்டவுடன், அமெரிக்கா புதிய மிரட்டல்களை இந்தியாவுக்கே விடுகிறது. ஆசிய நாடுகள் ஆசியாவில் நட்பாக இருந்தால், வளர்ந்தால் அமெரிக்காவுக்கு என்ன ஆபத்து? கியூபாவில் உள்ள ஏராளமான குழுக்களை திரட்டிவருகிறோம், விரைவில் அங்கு ஜனநாயகத்தை மலரச் செய்வோம் என கிலாரி அறிவித்துள்ளார். காரணம், லத்தீன் அமெரிக்கா நாடுகள் கியூபாவின் பின்னால் சேர்ந்து ஒரணியாக திரள்வதால், தன்னுடைய ஜனநாயகம் என்ற கடவுச்சொல்லை பயன்படுத்தி அங்கு நுழைய முயல்கிறது அமெரிக்கா. அமெரிக்கா எனில் அமெரிக்க மக்கள் அல்ல, அமெரிக்க வால்ஸ்டிரீட் என்பதால்தான், நாங்கள் 99 - ஒரு சதத்துக்காக அமெரிக்காவா அல்லது எங்களுக்காகவா என கேள்வியெழுப்பி நடக்கும் போராட்டம் முக்கியமானதாக மாறியுள்ளது. உலக நாடுகளின் ஆதரவு பெருக இப்படியொரு உலக அரசியல் தேவை அதிகம் உள்ளதால் பெருகி வளர்கிறது ஆதரவுப் போராட்டங்கள்.

ஆக, வால்ஸ்டிரீட்டிற்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த ஆதரவு என்பது தற்செயலான ஒன்றல்ல. இதுவரையான உலக வரலாற்றை மாற்றுவதற்கான மகத்தான போராட்டம். மாற்றம் என்ற வார்த்தையைத் தவிர உலகில் அனைத்தும் மாறும் என்ற மார்க்ஸின் வரிகளை வழிமொழிந்து உரக்கப்பேசும் போராட்டம். முதலாளித்துவத்தின் இறுதி சாசனம் விரைவில் எழுதப்படும் என நம்பிக்கை விதைக்கும் போராட்டம். உலகில் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த போர் மரணங்கள், பட்டினிச் சாவுகள், வேலையிழப்புவிவசாயம் -கடன் தொல்லையால் நடந்த தற்கொலைகள், மருத்துவ வசதி இல்லாமல் நடந்த மரணங்கள் என அனைத்தும் உலக நிதி மூலதனத்தினால் நடந்தவைதான், என்பதால் வால்ஸ்டிரீட்டை ஓய்க்காமல் மனிதஇனம் தன் மீதான படுகொலைகளுக்கு பழி தீர்த்துக்கொள்ள இயலாது.

உடனடியாக இவை அனைத்தும் நடந்துவிடும் என நாம் கூறவில்லை. ஆனால், இவையெல்லாம் நடக்கப்போகின்றன, அதற்கான காலம் துவங்கி விட்டது என்பதை உலகம் உணரத்துவங்கிவிட்டது. வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் போராட்டக்காரர்கள் துவக்கிவைத்திருக்கிறார்கள். ஆம், துவக்கி மட்டுமே வைத்திருக்கிறார்கள். உலகத்தொழிலாளர் வர்க்கம் அதை முன்னெடுத்து செல்லும்.

- இல.சண்முகசுந்தரம்

1 comment:

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)