குடுகுடுப்பைக்காரர்கள் வாழ்க்கை
தாண்டவக்கோனே படத்தை இயக்கிய சுப்பு சுஜாதா, குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்க்கையை திரைப்படமாக்கவிருக்கிறார்.
இதில் வித்தியாசமான அம்சம் என்னவென்றால் கதையின் பின்பகுதி இலங்கை சிறைகளில் நடப்பதாகப் படமாக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில்தான் குடுகுடுப்பைக்காரர்கள் மிகவும் பிரபலமானவர்கள். அவர்கள் வந்து சொல்வது பலிக்கும் என்று நம்புகிற மக்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.
குடுகுடுப்பைக்காரர்களை நேரில் சந்தித்து பல தகவல்களை சேகரித்துள்ள சுப்பு சுஜாதா, கடந்த ஆறு ஆண்டுகளாகவே அவர்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். கதையின் பின்பகுதி இலங்கை சிறைகளில் நடப்பது போன்று படமாக்குவது பற்றி அவரே கருத்து தெரிவித்துள்ளார். குடுகுடுப்பைக்காரர்கள் குறி சொல்லும் வழக்கத்தைக் கற்றுக் கொண்டதற்கும், இலங்கை சிறைக்கும் தொடர்புள்ளது. அதுதான் இப்படத்தில் காட்டப்படுகிறது என்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
வாச்சாத்தி
தர்மபுரி மாவட்டத்தி வாச்சாத்தி கிராமத்தில் சோதனை என்ற பெயரில் பலதுறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், ஊழியர்களும் கோரத் தாண்டவம் ஆடினார்கள். ஜூன் 20, 1992ல் இந்த சம்பவம் நடந்தது. மாநிலக் காவல்துறை சரியான விசாரணையை மேற்கொள்ளாத நிலையில், மத்திய புலனாய்வுக்குழு விசாரணையில்தான் குற்றவாளிகள் மீது வலுவான வழக்குப் பதிவு செய்வதற்கான தகவல்கள் கிடைத்தன. 19 ஆண்டுகள் கழித்து வந்துள்ள தீர்ப்பு, அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு நம்பிக்கைத் தருவதாக அமைந்திருக்கிறது.
மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்ட இந்த சம்பவத்தை திரைப்படமாக்கும் நாஞ்சில் முருகேசன் என்ற தயாரிப்பாளரின் குமாரி டாக்கீஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்திற்கும் வாச்சாத்தி என்றே பெயர் சூட்டியுள்ளனர். இச்சம்பவத்தால் காதல் ஜோடி ஒன்று பாதிக்கப்பட்டதாகத் திரைக்கதை செல்கிறது. வரும் 21ம் தேதி வாச்சாத்தி கிராமத்தில் வைத்தே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
ஏழை-நடுத்தர மக்கள் வசிக்கும் நகர்ப்பகுதி வாழ்க்கையை அனுபவித்து வாழத்துடிக்கும் இளைஞர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். அரசு திட்டம் என்று சொல்லி ஒரு முதலாளிக்கும்பல் அந்தப் பகுதியைக் காலி செய்து அபகரிக்க முயற்சி செய்கிறது.
விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட கைக்கலப்பில் எதிர்பாராதவிதமாக அரசு அதிகாரி தாக்கப்படுகிறார். இதையடுத்து போலீசுக்குப் பயந்து இளைஞர்கள் நண்பனைத் தேடி கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கு வித்தியாசமான ஒரு விழா நடப்பதைப் பார்த்து நண்பனின் தாத்தாவிடம் அது பற்றி கேட்க, தாத்தா விவரிக்கின்றார்.
1943ல் விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது கையூர் என்ற அந்த கிராமத்தில் நான்கு இளைஞர்கள், அந்த ஊர் விவசாயிகள் மற்றும் இளைஞர்களைத் திரட்டி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் உள்ளூர் பண்ணையாருக்கு எதிராகவும் கலகம் செய்கிறார்கள். பிரிட்டிஷ் போலீசும் பண்ணையாரும் சேர்ந்து ஒரு போலீஸ்காரன் மரணத்தை கொலை வழக்காக சதி செய்து இளைஞர்கள் மீது சுமத்தி தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்குகிறார்கள்.
வாழ வேண்டிய 20, 21 -வயதுகளில் நாட்டிற்காக துணிச்சலுடன் தூக்குமேடை ஏறிய இளைஞர்களின் வீரமிக்க வரலாற்றைக் கேட்ட நகரத்து இளைஞர்கள்,தங்கள் பிரச்சனைகளை தாங்களே எதிர்கொள்வதாகக் கூறி ஊர் திரும்புகிறார்கள். உழைக்கும் மக்கள் மீது அன்று தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறை இன்றும் தொடர்கிறது என்பதை அழுத்தமான ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் மூலம் சொல்ல வருகிறது “நினைவுகள் அழிவதில்லை” திரைப்படம்.
நாயகர்கள் நான்குபேர், இரண்டு கதாநாயகிகள் என புது முகங்கள் நடிக்கிறார்கள். தமிழகம் முழுவதிலுமிருந்து வீதி நாடக, தெருக்கூத்து கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இசை பி.ஆர். ரஜினி, படத்தொகுப்பு பீ.லெனின், ஒளிப்பதிவு புதுயுகம் நடராஜன், பாடல்கள் தனிக்கொடி, அருள், குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- பகத்சிங் கண்ணன். தஞ்சை ஆம் பலாபட்டு குடிகாடு, ஒரத்தநாடு, ஈரோடு, பவானி, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடியும் தருவாயில் உள்ளது. ஒரு வரலாற்று உண்மைச் சம்பவத்தை வித்தியாசமான முறையில் பதிவு செய்து உள்ளோம். டிசம்பரில் திரைக்கு வரும் என்கிறார்கள் படக்குழுவினர்.
தாண்டவக்கோனே படத்தை இயக்கிய சுப்பு சுஜாதா, குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்க்கையை திரைப்படமாக்கவிருக்கிறார்.
இதில் வித்தியாசமான அம்சம் என்னவென்றால் கதையின் பின்பகுதி இலங்கை சிறைகளில் நடப்பதாகப் படமாக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில்தான் குடுகுடுப்பைக்காரர்கள் மிகவும் பிரபலமானவர்கள். அவர்கள் வந்து சொல்வது பலிக்கும் என்று நம்புகிற மக்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.
குடுகுடுப்பைக்காரர்களை நேரில் சந்தித்து பல தகவல்களை சேகரித்துள்ள சுப்பு சுஜாதா, கடந்த ஆறு ஆண்டுகளாகவே அவர்களைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார். கதையின் பின்பகுதி இலங்கை சிறைகளில் நடப்பது போன்று படமாக்குவது பற்றி அவரே கருத்து தெரிவித்துள்ளார். குடுகுடுப்பைக்காரர்கள் குறி சொல்லும் வழக்கத்தைக் கற்றுக் கொண்டதற்கும், இலங்கை சிறைக்கும் தொடர்புள்ளது. அதுதான் இப்படத்தில் காட்டப்படுகிறது என்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
வாச்சாத்தி
தர்மபுரி மாவட்டத்தி வாச்சாத்தி கிராமத்தில் சோதனை என்ற பெயரில் பலதுறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும், ஊழியர்களும் கோரத் தாண்டவம் ஆடினார்கள். ஜூன் 20, 1992ல் இந்த சம்பவம் நடந்தது. மாநிலக் காவல்துறை சரியான விசாரணையை மேற்கொள்ளாத நிலையில், மத்திய புலனாய்வுக்குழு விசாரணையில்தான் குற்றவாளிகள் மீது வலுவான வழக்குப் பதிவு செய்வதற்கான தகவல்கள் கிடைத்தன. 19 ஆண்டுகள் கழித்து வந்துள்ள தீர்ப்பு, அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு நம்பிக்கைத் தருவதாக அமைந்திருக்கிறது.
மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்ட இந்த சம்பவத்தை திரைப்படமாக்கும் நாஞ்சில் முருகேசன் என்ற தயாரிப்பாளரின் குமாரி டாக்கீஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்திற்கும் வாச்சாத்தி என்றே பெயர் சூட்டியுள்ளனர். இச்சம்பவத்தால் காதல் ஜோடி ஒன்று பாதிக்கப்பட்டதாகத் திரைக்கதை செல்கிறது. வரும் 21ம் தேதி வாச்சாத்தி கிராமத்தில் வைத்தே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
நினைவுகள் அழிவதில்லை
ஏழை-நடுத்தர மக்கள் வசிக்கும் நகர்ப்பகுதி வாழ்க்கையை அனுபவித்து வாழத்துடிக்கும் இளைஞர்கள் ஜாலியாக இருக்கிறார்கள். அரசு திட்டம் என்று சொல்லி ஒரு முதலாளிக்கும்பல் அந்தப் பகுதியைக் காலி செய்து அபகரிக்க முயற்சி செய்கிறது.
விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட கைக்கலப்பில் எதிர்பாராதவிதமாக அரசு அதிகாரி தாக்கப்படுகிறார். இதையடுத்து போலீசுக்குப் பயந்து இளைஞர்கள் நண்பனைத் தேடி கிராமத்திற்கு வருகிறார்கள். அங்கு வித்தியாசமான ஒரு விழா நடப்பதைப் பார்த்து நண்பனின் தாத்தாவிடம் அது பற்றி கேட்க, தாத்தா விவரிக்கின்றார்.
1943ல் விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது கையூர் என்ற அந்த கிராமத்தில் நான்கு இளைஞர்கள், அந்த ஊர் விவசாயிகள் மற்றும் இளைஞர்களைத் திரட்டி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் உள்ளூர் பண்ணையாருக்கு எதிராகவும் கலகம் செய்கிறார்கள். பிரிட்டிஷ் போலீசும் பண்ணையாரும் சேர்ந்து ஒரு போலீஸ்காரன் மரணத்தை கொலை வழக்காக சதி செய்து இளைஞர்கள் மீது சுமத்தி தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்குகிறார்கள்.
வாழ வேண்டிய 20, 21 -வயதுகளில் நாட்டிற்காக துணிச்சலுடன் தூக்குமேடை ஏறிய இளைஞர்களின் வீரமிக்க வரலாற்றைக் கேட்ட நகரத்து இளைஞர்கள்,தங்கள் பிரச்சனைகளை தாங்களே எதிர்கொள்வதாகக் கூறி ஊர் திரும்புகிறார்கள். உழைக்கும் மக்கள் மீது அன்று தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறை இன்றும் தொடர்கிறது என்பதை அழுத்தமான ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் மூலம் சொல்ல வருகிறது “நினைவுகள் அழிவதில்லை” திரைப்படம்.
நாயகர்கள் நான்குபேர், இரண்டு கதாநாயகிகள் என புது முகங்கள் நடிக்கிறார்கள். தமிழகம் முழுவதிலுமிருந்து வீதி நாடக, தெருக்கூத்து கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இசை பி.ஆர். ரஜினி, படத்தொகுப்பு பீ.லெனின், ஒளிப்பதிவு புதுயுகம் நடராஜன், பாடல்கள் தனிக்கொடி, அருள், குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- பகத்சிங் கண்ணன். தஞ்சை ஆம் பலாபட்டு குடிகாடு, ஒரத்தநாடு, ஈரோடு, பவானி, ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடியும் தருவாயில் உள்ளது. ஒரு வரலாற்று உண்மைச் சம்பவத்தை வித்தியாசமான முறையில் பதிவு செய்து உள்ளோம். டிசம்பரில் திரைக்கு வரும் என்கிறார்கள் படக்குழுவினர்.
லெனின் ராஜேந்திரன் என்ற இயக்குனர் "மின மாசத்திண்டே சூரியன்" என்று கையூர் தியாகிகள் கதையை படமாக எடுத்துள்ளார்.---காஸ்யபன்
ReplyDelete