முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமை, சோதனை என்கிற பெயரில் ஷூ, கோட்டை கழற்றச் சொல்லி 2வது முறையாக அமெரிக்க அதிகாரிகள் அவமதித்துள்ளர் என்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டும் இதேபோல அமெரிக்கர்கள் அவ மரியாதை செய்தனர்.
கடந்த 2009ம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கலாமை தில்லி விமான நிலையத்தில் வைத்தே அவமதித்தனர். இந்த சம்பவத்தை அப்போது மத்திய அரசு பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஊடகங் களில் செய்திகள் வெளியான பின்னர்தான் நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 29ம் தேதியன்று கலாம் மீண்டும் அவமதிக்கப்பட்ட சம்பவம் நியூயார்க் விமான நிலையத்தில் நடந்துள்ளது. அன்றைய தினம் தில்லி திரும்புவதற்காக ஜான் எப் கென்னடி விமான நிலையத்திற்கு அப்துல் கலாம் வந்தார். அப்போது விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கலாமை சோதனையிட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அவரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.
இதையடுத்து கலாமின் கோட், சட்டையைத் தடவிப் பார்த்து வெடி குண்டு இருக்கிறதா, வெடிபொருள் இருக்கிறதா என்று சோதனையிட் டனர். பின்னர் அவரை அனுமதித் தனர்.
அதன் பின்னர் கலாம் ஏர் இந்தியா விமானத்திற்குள் ஏறி வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். இந்த சமயத்தில் திடீரென பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் புகுந்தனர். கலாமை மீண்டும் சோதனையிட முயன்றனர். இதற்கு ஏர் இந்தியா விமானிகள் கடும் ஆட்சேபணை தெரிவித் தனர். கலாம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, மிக மிக முக்கியப் பிர முகர், பாதுகாப்பு சோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர் என்று வாதிட்டனர்.
ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத அமெரிக்க அதிகாரிகள் கலாமிடம் ஷூவைக் கழற்றுமாறும், கோட்டைக் கழற்றுமாறும் கூறியுள்ளனர். அப்போதும் கலாம் எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்காமல் சொன்னதைச் செய்தார். ஏர் இந்தியா விமானிகளுக்கும், விமானத்தில் இருந்தவர்களுக்கும் அமெரிக்க அதிகாரிகளின் செயல் பெரும் கொதிப்பை ஏற் படுத்தியது.
ஷூவை பெற்ற அமெரிக்க அதிகாரிகள் அதை முழுமையாக பரிசோதித்தனர். கோட்டையும் பரிசோதித்தனர். பின்னர் அதை கலாமிடம் கொடுத்து விட்டுத் திரும்பிச் சென்றனர்.
இந்தியா திரும்பியதும் கலாமின் அலுவலகம் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு முறைப்படி தெரிவித்தது. இதையடுத்தே மத்தியவெளியுற வுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது ஏற்றுக் கொள்ள முடியாதது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப் துல் கலாம் சோதனைகளுக்கு அப் பாற்பட்டவர். அவருக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை யும் மீறி இரண்டாவது முறையாக அவர் அவமதிக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட அளவில் தொடர்பு கொண்டு இந்தியாவின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்யுமாறு அமெரிக்காவுக் கான இந்தியத் தூதர் நிருபமா ராவுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா உத்தரவிட்டுள் ளார்.
கலாமை அவமதித்ததற்காக அமெ ரிக்க அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடை பெறாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற அவமரியாதை நிகழ்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. “சுயமரியாதை உள்ள அரசென்றால் பதிலடி கொடுக்கும்” என சி.பி.எம் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சாடினார்.
அமெரிக்கா எத்தனை முறை அவமதித்தாலும் அமெரிக்க நாட்டை நம்மவர்கள் மதிக்கின்றனரே. இது அச்சத்தின் வெளிப்பாடா? அன்றி அடிமைத்தனத்தின் செயல்பாடா? சீ கேவலமாக இல்லை.குடியரசு தலைவருக்கே இப்படி என்றால் ஒரு குடிமகனுக்கு எப்படியோ? "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" இது தானா?
ReplyDelete