Monday, November 14, 2011

மனிதக் கண்களை மதிக்கிறதா காமிரா கண்கள்?



காமிரா - ஒளிப்பதிவுக் கருவி அறிவியலின் ஓர் அற்புதக் குழந்தை. பெரிய திரையிலும் சிறிய திரையிலும் நம் கண்களைக் கொள்ளை கொண்டதோர் விந்தைக் கருவி. இப்போதெல்லாம் திரைப்படங்களின் காட்சிகள் சர்சர் என்று அடுத்த காட்சிக்குத் தாவுகின்றன. காமிராவின் ஓட்டம் என்பது அதிவிரைவு என்பதாகிவிட்டது. குறிப்பாகப் பாடல் காட்சிகளை எடுத்துக் கொள்வோம். ஒருபாடலின்போது காட்டப்படும் காட்சிகள் நாம் நமது கண்களால் உள் வாங்கி அது மூளைக்குச் சென்று பதிவாகி ஆணை வரும் முன்னரே ஓடிவிடுகின்றன.

பாடலின் 3 அல்லது 4 நிமிடங்களுக்குள் ஏராளமான விஷயங்களை சொல்லிவிட வேண்டும் எனும் துடிப்பு. ஆனால் இறுதியில் எதுவும் தெளிவாகக் கண்களில் பதிவாகவில்லை என்பதே இன்று நாம் காணும் உண்மை.

பழைய பாடல்களை விரும்பிப் பார்ப்பவர்கள் இன்றும் ஏராளம். இளையவர்களும் இதில் அடக்கம். கண்ணுக்குக் குளிர்ச்சி, மனதுக்கு அமைதி, உணர்வுக்கு இனிமை தருவது இன்றும் பழைய பாடல்களே. குறிப்பாய், கறுப்பு - வெள்ளையின் பாடல் காட்சி இதமாகவே இருக்கும். ஒரு பாடலில் தோன்றும் காட்சிகளால் கவரப்பட்டே மீண்டும் மீண்டும் படம் பார்த்தவர்கள் உண்டு. இன்றோ, தொலைக்காட்சி ஆதிக்கம், கட்டணக் கொள்ளை, மட்டுமின்றி பாடல் காட்சிகளின் ஒட்டாத தன்மையும் கூட திரையரங்குகள் வெறிச்சோடிப் போகக் காரணமாகின்றன.

புதுமையான மாற்றங்கள்  நிச்சயம் வேண்டும். ஆனால் புரியாத புதுமையில் என்ன வாழும்? பாடல் காட்சிகளுக்காக பல இடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. அதாவது லொக்கேஷன்! ஒருவரிக்காக மட்டுமே இரண்டு மூன்று நாடுகள் செல்வதுண்டு. இவ்வாறு பல நாடுகள் பயணம் செய்து அள்ளி வரும் காட்சிகள், பாடல் காட்சிகளில் விழலுக்கிறைத்த நீராய் விரயமாகி வருவதே கண்கூடு. பல்வேறு இரைச்சலுடன் காமிராவை கன்னாபின்னாவென்று சுழற்றுவதுடன் பாடல் முடிந்து விடும்.

பேசும்படம் வந்த காலத்தில், பாடல்காட்சி, நகர்தல் இல்லாமல் ஒரே இடத்திலேயே, நடிகர் பாடி ஆடும் காட்சி பதிவு செய்யப்பட்டன. சில படங்கள் இருபது பாடல்களுக்குமேல் கொண்டவை. அனைத்துமே பார்க்க பார்க்க ஆவலும், ஆசையும், ஆர்வமும் மிகும் தன்மை கொண்டவை. கண்ணில் கண்டவை திரையில் தெரிந்தபோது மகிழாதார் யாருமில்லை.

காமிரா நுட்பம் வளரத் துவங்கிய காலம். படப்பிடிப்பின் போதே பாடகர்கள் பாடினார்கள். பாடுபவர்கள் பாடிக் கொண்டிருக்க, பின்னணி வாசிப்பவர்கள் கேமிராவின் கண்ணில் படாமல் டிராலியின் மேல் அமர்ந்து வாத்தியங்களை, இசைப்பார்கள். அதாவது கல்யாண ஊர்வலங்களில் நடந்து கொண்டே நாதவரம் வாசிப்பதைப் போல! அந்த பாடல் காட்சிகள் நாம் இப்போது பார்த்தால் அது நாடகத் தன்மை கொண்டது போல் தோன்றினாலும், ஆற அமர காட்சியின் அழகு, நடிகரின் பாவனை, ஆடை ஆபரண அலங்காரம், இன்னும் பலவற்றை ரசிகர்கள் கண்டுணர முடிந்தது. இப்போதைய பாடல்களில் ஹீரோவைப் தவிர வேறு யார் முகமும் சரியாகத் தெரியவில்லை. டக்டக்கென்று காட்சி மாறுவதால், யாராவது முன்னேறத் துடிக்கும் நடிகர் முகம் காட்டியிருந்தால் பாவம் அம்பேல்தான்.

1960க்குப் பிறகுதான் காமிரா வெளியே செல்லத் துவங்கியது. அன்னை, பாவைவிளக்கு படங்களில் காமிரா அவுட்டோர் செல்லும் நிலை வந்தது. பாவை விளக்கு படத்தின் காவியமா ஓவியமா எனும் தாஜ்மகால் பாடலே தென்னகம் தாண்டி முதன்முதலாகச் சென்று படம் பிடித்தது. ஊட்டி, மைசூர், ராஜதான், காஷ்மீர் என்று இந்தியாவின் அழகு, காமிராவில் நிரப்பப்பட்ட பின், சிவந்தமண் படத்திலிருந்து வெளிநாடுகளுக்கும் காமிரா சுற்றுப் பயணம் செய்தது.

அன்று காமிராவில் பிடித்த இடங்களெல்லாம் ரசிகர் மனதில் நன்கு பதியன் போடப்பட்டது. காதலிக்க நேரமில்லை படத்தின் அந்தப் பாடல் ஆழியாறு அணையின் முழு அழகையும் நமக்குக் காட்டியது. ஒளிப்பதிவு சுந்தரம். பக்திப் படங்களின் பாடல்கள், பல தெய்வத்திருத்தலங்களை, அவற்றில் நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கு காட்டின. இன்று வெளிநாடுகளில் எத்தனையோ பாடல்கள் எடுக்கப்பட்டாலும் அது எந்த நாடு, எந்த இடம் என ஏதாவது பத்திரிகையில் தயாரிப்பாளரோ இயக்குநரோ நமக்குத் தெரிவித்தால்தான் உண்டு. ஜப்பானில் கல்யாண ராமன் என்ற கமல் படம் ஜப்பான் தேசத்தை மிக அழகாகக் காட்டிய படம். ஒளிப்பதிவு டி.எ.விநாயகம்.
ஒரே வானம் ஒரே பூமி - ஜெய்சங்கர் படம். மாலை ராணி முந்தானை எனும் பாடலில் கே.ஆர்.விஜயா நடிக்க, பாடல் முழுவதும் அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சி அழகு சொட்டச் சொட்டப் படமாக்கப்பட்டிருக்கும். இது சமீபத்தில் ஜீன் வரை தொடர்ந்தது. பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்ற வைரமுத்துவின் பாடல் உலகின் ஏழு அதிசய இடங்களில் படமாக்கப்பட்டிருந்தது.

ஜெய்சங்கரின் கௌபாய் படங்களில் வேகமாக ஓடும் குதிரைகளின் மேல் அமர்ந்து பாடும்காட்சிகள் கூட நிதானமாய் நகருமேயன்றி நம் கண்களைப் பாதிக்காது. கர்ணன் ஒளிப்பதிவு.

ஜி.விட்டல், பாலுமகேந்திரா, நிவா (சிகப்பு ரோஜாக்கள்) பி.சி.ஸ்ரீராம் போன்றோரின் பதிவுகள் கண்களுக்குத் துன்பம் தராதவை.
முன்பெல்லாம் எம் டிவியிலும், வி டிவியிலும் ஆல்பம் பாட்டுகள் வரும். கசமுசாவென்று ஒன்றுமே புரியாது. ஏதோ பாட்டு, அவ்வவுதான். அதனைக் கொண்டு வந்து சினிமாவில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தியாகராஜ பாகவதர், பியூ சின்னப்பா, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் இவர்களின் பாடல் காட்சிகளில் குரல் மட்டுமே மக்களுக்குப் போதுமானதாயிருந்தது. பின்னாளில் சில நடிக, நடிகையரின் தோற்றப் பொலிவு பாடல் காட்சிகளுக்கு அழகு சேர்த்தன. ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு விதமான அழகை காமிரா மக்களுக்கு அக்கறையுடன் அள்ளி வழங்கியிருக்கிறது. இப்போது எதை வழங்குகிறது? அதன் இலக்குதான் என்ன? கன்னாபின்னாவென்று காமிரா சுழன்று தன் தொழில் நுட்ப வளர்ச்சியை மட்டும் காட்டிக்கொண்டால் போதுமா?

மாற்றம் என்பது எங்கும் உண்டுதான். மாற்றம் இல்லையேல் வளர்ச்சியும் இல்லைதான். ஆனால் அந்த மாற்றத்திற்கு என ஒரு நோக்கம் இருக்க வேண்டாமா? காமிராவின் இந்த மாற்றம் ஏதாவது பலன் தருகிறதா?

மொழியின் உயிர் அதன் உச்சரிப்பில் இருக்கிறது என்று கூறினார் ரூசோ. அது போல் சினிமாவின் உயிர் காமிராவில் வாழ்கிறது. இன்று ஏராளமான புதியவர்கள் காமிராவை நம்பி தொழில் செய்ய வருகிறார்கள். ஆரோக்கியத்தின் அறிகுறியாக சில நல்ல படங்களும் வருகின்றன. புது ரத்தம் பாய்கிறது. இவர்களில் சிலரது படங்களிலும் கூட பாடல் காட்சிகள் கண்ணேறு போல அமைந்து விடுகின்றன. மக்கள் விரும்புகிறார்கள் கொடுக்கிறோம் என்று சொன்னால் அது ஏற்புடையதல்ல. பாடலே இல்லாமல் வந்த நல்ல படங்களையெல்லாம் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மக்களை நேசிக்கும் பல நல்ல கலைஞர்கள் வித்தியாசமான முயற்சிகளில் இயங்கி பல தடைகளை உடைத்தெறிந்திருக்கிறார்கள்.

நமது கண்கள் நிமிடத்திற்கு இருபத்திரண்டு முறை துடிக்கும். ஆனால் பாடல் காட்சியின் போது ஏழுமுறை மட்டுமே துடிக்கிறது. கண்ணீர் ஆவியாகிறது. ஈரப்பதம் குறைகிறது இது ஒரு புள்ளி விபரம். காமிராவின் அதிவிரைவு மனிதக் கண்களுக்கு செல்லுபடியாகாது. ஆனாலும் கண்ணைக் கொடுத்துக் கொண்டுதான் பாடலை ரசிக்கின்றனர். காமிராவின் கண்கள் ரசிகனின் கண்ணுக்குக் கண்ணாடியாக அமைய வேண்டுமேயன்றி, கண்ணாடியே கண்ணைப் பதம் பார்க்கக் கூடாது அல்லவா?

இனியாவது கலையென்னும் இனிய உலகின் சிறப்புக் கருவியான காமிரா நிதான நடைபோடட்டும்; நிஜங்களை மட்டுமே, அல்லது நிஜமாக்குவதற்கான கற்பனைகளை மட்டுமே நம்மிடம் சேர்க்கட்டும்.

-ஆர்.மீனா
வண்ணக்கதிர்


0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)