Sunday, November 13, 2011

பறவையியல் அறிஞர் சாலிம் அலி வாழ்வும், பணியும்...

இன்று நாம் பார்த்து மகிழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் காடு, மலைகள், ஏரிகள், பறவைகள், விலங்குள், பூச்சிகள் யாவும் சாலிம் அலி என்ற ஒற்றை சொல்லின் பின்னணியில் அடங்கியுள்ளது.
   

பத்தாவது வயதில் தனது தாய் மாமா பரிசாக கொடுத்த காற்று விசை துப்பாக்கி மூலம் இயற்கையுடனான தமது நேசத்தை தொடங்கிய சாலிம் அலி,  இறக்கும் வரை, சற்றேறக் குறைய எண்பது ஆண்டுகள் பறவையியல் துறையில் கடுமையாக களமாற்றினார்.   
   

சாலிம் அலி யார் என்று கேட்டால், பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் இன்று தெரியாத நிலை. இதுதான் நமது சூழல் அறிவு. நமக்கான சூழல் பாடங்களும் பொத்தாம் பொதுவாகவே உள்ளது. சூழல் ஆர்வலர்களுக்கு மட்டுமே தெரிந்தவராக சாலிம் உள்ளார் என்பது பள்ளிகளின் தோல்விகளில் ஒன்றாகும். கி.பி 1896ஆம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி மும்பையில் சாலிம் அலி பிறந்தார். ஐந்து சகோதரர்கள், நான்கு சகோதரிகளுக்கு கடைக்குட்டியாக பிறந்தார். பிறந்த சில வருடங்களில் தாய், தந்தை இருவரையும் இழந்த சாலிம் அலி, குடும்பத்தை அவருடைய மாமா அமரிருத்தீன்  குழந்தைகள் அனைவரையும் கல்வி கற்பித்து வளர்த்தார்.
   

தனது பத்தாவது வயதில் வீட்டில் கூடு கட்டியிருந்த மஞ்சள் குருவியை சுட்டு, அது குறித்து விளக்கம் பெற பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தை அணுகியதில் இருந்து அவருடைய இயற்கை வரலாறு தொடங்கியது எனலாம்.
  

பள்ளியில் சாதாரண மாணவனாகவே பள்ளிப் படிப்பை முடித்த சாலிம் அலி, உறவினர்களின் வற்புறுத்தலுக்காகவே மேற்படிப்பு படித்தார். ஆனால், மனம் முழுக்க இயற்கை மீதே இருந்தது. பழைய மியான்மரில் (பர்மா) தனது சகோதரர் நடத்தி வந்த தொழிலை நிர்வகிக்க பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்த போதும் விடுமுறை நாட்களில் குதிரையை எடுத்துக் கொண்டு காடு, மலைகள் என சுற்றியலைவது தான் அவருக்கு பிடித்தமான பொழுது போக்காக இருந்தது.
   

மும்பை திரும்பிய பின் 1918 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தெஹ்பினாவை கரம் பிடித்தார் சாலித் அலி. பறவைகள் பற்றிய தேடல், காடு, மலைகள் என சுற்றுவது என அனைத்திலும் தெஷ்பினா கணவரின் மனம் ஒத்து பங்கேற்றார்.
   

சாலிம் அலிக்கு பல நேரங்களில் வேலை கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்த உறவினர்கள் மிகவும் கேவலமாக பேசினர். தெஹ்பினா அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கணவரின் வேலைகளுக்கு உதவிகரமாக இருந்தார்.
   

1929ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பறவையியல் குறித்து முறையானதொரு கல்வி கற்க கடும் பொருளாதார சிரமத்தல் புறப்பட்டுச் சென்றார். பேரா. இர்வின் ஸ்ட்ரிங்ஸ்மர் அவர்கள் வழிகாட்ட கல்வியுடன் அனுபவ அறிவை பக்கத்தில் அமைந்துள்ள தீவுகளில் வலசை வரும் பறவைகள் பற்றி சுற்றியலைந்து கற்றுத் தேர்ந்தனர்.
   

1930ம் ஆண்டு இந்தியா திரும்பிய பிறகும் சரியான வேலை கிடைக்காமல் மிகவும் அவதியுற்றார். பறவைகளை பற்றி கணக்கெடுக்க ப.இ.வ.க சாலிம் அலியை கேட்க உடனடியாக ஒப்புக் கொண்டார். அதே சந்தர்ப்பத்தில் அதற்குரிய நிதியை டீசவைடிடடிபல ளுரசஎநல என்ற தலைப்பின் கீழ் தர ஐதராபாத் சமஸ்தானம் சம்மதம் தெரிவித்தது.
   

5 மாதங்கள் கடுமையான காட்டுப் பாதை, ஏரி, குளம், மாட்டு வண்டி சவாரி, மலைகள், சதுப்பு நிலங்கள் என பல்வேறு பறவைகளின் வாழ்விடங்களில் நேரிடையாக பார்த்து குறிப்புகள் எழுதி, அதை ஆவணமாக்கினார். இந்த பெரும் பணி அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது.
   

1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரது அன்பு மனைவி தெஹ்பினாஅறுவை சிகிச்சையில் எதிர்பாராத விதமாக இறக்க சாலிம் அலி மிகவும் சோர்வுற்றார். சிறிது கால இடைவெளியில் அவரது பணி மீண்டும் தொடங்கியது.
   

1941ம் ஆண்டு க்ஷடீடீமு டீகு ஐசூனுஐஹசூ க்ஷஐசுனுளு என்ற சாலிம் அலியின் புகழ் பெற்ற முதல் நூல் வெளியானது. இந்நூல் இதுவரை 20 பதிப்புகளை கண்டுள்ளது. பாராம்பரிய மூடநம்பிக்கைகள், பத்தாம் பசலித் தனமான கருத்துக்கள் நிரம்பியுள்ள இந்திய சமூகத்தில் பறவையியல் துறையில் விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்தினார்.
   

குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதியில் 50 லட்சம் பூ நாரைகள் ஒன்று கூடி, கஞ்முகப் பகுதியில் இனப்பெருக்கம் செய்வதை கண்ட சாலிம் அலி, ஆசியாவின் பெரிய பூ நாரைகள் நகரம் என குறிப்பிட்டார்.
   

1938 நவம்பரில் இந்திய பிரதிநிதி (வைஸ்ராய்) வின் லித்கோ பிரபு தமது நண்பர்களுடன் இணைந்து ஒரே நாளில் 4233 வாத்துக்களை சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்து வேதனையுற்ற சாலிம் அலி, ஆழமில்லாத அபூர்வமான ஏரியை காக்க போராடி வென்றார். அந்தப் பகுதியே இன்று உலகப் புகழ்பெற்ற பரத்பூர் பறவைகள் சரணாலயம் ஆகும். இது இராஜஸ்தானில் அமைந்துள்ளது.
   

இந்திய பறவைகளின் வலசை முறையை ஆராய வளையமிடுதலை பரத்பூரில் தான் சாலிம் அலி அறிமுகப்படுத்தினார். சைபீரியக் கொக்கு, சரகக் கொக்கு, பட்டை தலை வாத்து போன்ற பல பறவையினங்களுக்கு ஏற்ற உறைவிடமாக பரத்பூர் அமைந்துள்ளது.
  

சர்குஜா மன்னர் 1970ம் ஆண்டு வரை தமது பிரதேசங்களில் 1170 க்கும் மேற்பட்ட புலிகளை கொன்றிருக்கிறார். அங்கு சென்ற சாலிம் அலி இந்திய புலிகளின் நிலையை எண்ணி அதனை காக்க அரசியல் தலைவர்களுக்கு தமது கருத்தாழமிக்க கடிதங்கள் மூலம் புரிய வைத்து. அந்த பகுதியை காப்பாற்றினார். அந்தக் காடுகள் தான் இன்று கன்ஹா புலிகள் சரணாலாயம் மற்றும் தேசிய பூங்கா வாக உலகப் புகழ்பெற்று விளங்குகிறது.
  

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள அமைதி பள்ளத்தாக்கு சாலிம் அலியின் கடின போராட்டத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு இன்று புகழ்பெற்று விளங்குகிறது.
   

சாலிம் அலி தனது நண்பரான தில்லானின் உதவியோடு இந்தியா, பாகிஸ்தானின் பறவைகள் கையேடு என்ற நூலை 10 தனித் தனி தொகுதியாக வெளியிட்டார். அனைத்து நூல்களும் உலகப் புகழ் பெற்றன.
   

சாலிம் அலியின் திறமைகளை அங்கீகரித்த இந்திய அரசு, நிலையானதொரு ஆய்வுக் கூடம் கட்டுவதற்கான ஒப்புதலை வழங்கி கட்டியது தான் இன்று அமைந்துள்ள ஹார்ன் பில் பவனாகும்.
   

சாலிம் அலியின் இந்தியா என்ற தலைப்பில் அவரது வாழ்வை 1983ம் ஆண்டு ஆவணப்படமாக்கி சிறப்பித்தது இந்திய அரசின் செய்தி, தகவல் தொடர்புத் துறை. ஒரு சிட்டுக் குருவியின் வீழ்ச்சி என்ற சுயசரிதையை நண்பர்கள் உதவியுடன் தமது கடைசி காலத்தில் சாலிம் அலி செய்து முடித்தார்.
   

தனது 70 வது வயதில், ஆரம்ப பாடம் கற்ற பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அவரது உழைப்பிற்கான அங்கீகாரமாக கருதப்பட்டது. முனைவர் சாலிம் அலியை பல்வேறு பரிசுகள் பதவிகள் தேடிச் சென்று புகழ் ஈட்டிக் கொண்டன. இந்திய அரசின் பத்மபூசன் 1958, பத்ம விபூசன் 1976 விருதுகளை தமது பறவையியல் சேவைக்காக பெற்றார்.
   

நோபல் பரிசுக்கு இணையான ஜே. பால்கெய்பு பன்னாட்டு பரிசை 1976ம் ஆண்டு காட்டுயிர் பாதுகாப்புக்காக பெற்றார். இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினர் பதவியை சாலிம் அலிக்கு வழங்கி கௌரவித்தது. இதுபோல் எண்ணற்ற விருதுகள் அவரை தேடிச் சென்றன. 1987 ம் ஆண்டு தாம் இறக்கும் வரை 10 க்கும் மேற்பட்ட நூல்களை இந்திய சமூகத்திற்கு அளித்துள்ளார்.
   

தமது வாழ்நாள் முழுவதும் இயற்கை, காட்டுயிர் பாதுகாப்பு என்று விளங்கிய சாலிம் அலி, தாம் அனுபவித்த எழிலார்ந்த இயற்கை, காடுகள், மலைகள், காட்டுயிர்கள் என அனைத்தையும் காப்பாற்றி நம் கையில் ஒப்படைத்துள்ளார்.
  

நாம் அதை எந்த விதத்திலும் கெடுக்காமல் அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதே அந்த மாமனிதருக்கு செய்யும் மரியாதையாகும். செய்வோமா?


- சா. செயக்குமார், விரிவுரையாளர்

2 comments:

  1. Salim Ali>>>சாலிம் அலி>>>is NOT CORRECT...சலிம் அலி>>> is Correct

    ReplyDelete
  2. சாலிம் அலி அன்று சொல்லிக்கொள்ளவே அவர் விரும்புவர் என்று அவர் வாழ்க்கை குறிப்பில் கூறபட்டுள்ளது

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)