Friday, November 25, 2011

பெட்ரோல் விலைக்கும் சனீஸ்வரனுக்கும் என்ன சம்பந்தம்?


பெட்ரோல், டீசல் விலைகளை கன்னாபின்னா என்று உயர்த்துகிற மன்மோகன் சிங் அரசுக்கு, “உலகச் சந்தையில் எண்ணை விலை உயருகிறபோது இந்தியாவிலும் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று சொல்வது வழக்கமாகிவிட்டது. கூட்டாளிக் கட்சிகளும் கூட தாங்கள் மக்களின் கோபத்திற்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், எல்லோரையும் ஏற்க வைக்கிற வழி என்ன என்பது தெரியாமல் பிரதமரும் மற்றவர்களும் விழி பிதுங்குகிறார்கள். யாராலும் மறுக்க முடியாத விளக்கம் ஒன்றைச் சொல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் இவர்களுக்கு இருக்கக் கூடும்.

அந்த ஏக்கத்தைப் போக்குவதற்கு ஒருவர் புறப்பட்டிருக்கிறார். சற்றே வளைந்த நேர்கோடு போல மட்டுமே புன்னகை செய்து வந்திருக்கிற மன்மோகன் சிங் “ஹய்யா” என்று விசிலடிக்காத குறையாகக் குதூகலிக்கும் ஆலோசனை அவரிடமிருந்து  வந்திருக்கிறது. அந்த ஆலோசனையை அரசு கடைப்பிடிக்குமானால் பொது மக்களிலும் கூட ஆகப் பெரும்பாலானோர், “ஓ இதுதான் காரணமா, அப்படியானால் நம்மால் என்ன செய்ய முடியும்,” என்று அடங்கிப் போவார்கள்!

எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் சனி பகவான் பார்வைதான்! அன்னாருடைய நாட்டாமை காரணமாகத்தான் பெட்ரோலியா பொருள்களின் விலை எகிறுகிறது! கச்சா எண்ணை இறக்குமதிக்கு மத்திய அரசு விதிக்கிற எக்கச்சக்கமான சுங்கவரி, எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் விதிக்கப்படும் ஆயத்தீர்வை, பல்வேறு மட்டங்களில் விதிக்கப்படும் வரிகள், மாநில அரசுகளின் விற்பனை வரி, எண்ணை விலை கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிடுவது ஆகிய எதுவுமே விலை உயர்வுக்கு காரணம் அல்ல! எல்லாம் கிரக சாரம்! இந்த விசித்திர விளக்கத்தை அளித்திருக்கிற அவர் ஒரு சோதிட வல்லுநர்!

‘ஜோதிட ரத்னா’ என்ற (யாரோ கொடுத்த, அல்லது தனக்குத்தானே கொடுத்துக்கொண்ட) பட்டத்தைச் சூட்டிக்கொண்டுள்ள “முனைவர்” க.ப.வித்யாதரன் என்பார் இந்த வானிலை ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுகிறார்.

“எரிபொருள் விலை குறையுமா?” - இப்படியொரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் கூறியிருக்கிற பதில் வருமாறு:

“எரிபொருள் விலை டிசம்பர் 21க்குப் பிறகு இன்னும் விண்ணைத் தொடும் அளவிற்கெல்லாம் வரும். பெட்ரோலைப் பற்றி பேசப்படும் அளவிற்கு வாய்ப்பு உள்ளது. 100 ரூபாயைக் கூட எட்ட வாய்ப்புள்ளது. ஏனென்றால் சனி கனிம, கரிம பொருட்களுக்கு உரிய கிரகம். அவர் இதற்குமேல் பற்றாக்குறையைத்தான் எல்லா இடங்களிலும் ஏற்படுத்துவார்.”

கேள்வியை கேட்டது ‘தமிழ்.வெப்துனியா.காம்’ என்ற ஒரு இணைய ஏடு. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக மக்களுக்குக் கிடைத்திருக்கிற இணையம் என்ற நவீன வசதியை எவ்வளவு எளிதாக, கூச்சமே இல்லாமல் இப்படியொரு அறிவியல் மறுப்புச் சிந்தனைக்குப் பயன்படுத்துகிறார்கள்!

இதே இணைய ஏடு அரசின் இப்படிப்பட்ட முடிவுகளை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் வெளியிட்டதுண்டு. சனிப் பார்வையால்தான் விலை உயர்கிறது என்றால் அதை எதிர்த்துக் கட்டுரை வெளியிடலாமோ?

பெட்ரோல் விலையோடு மட்டும் இந்த ஜோதிட ரத்னாவின் கணிப்பு முடிந்துவிடவில்லை. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தும், அத்வானிஜி ரதயாத்திரை நடத்தியும் ஒழித்துக்கட்ட விரும்புகிற ஊழல் விவகாரம் குறித்தும் இவரது கிரகக் கணக்கு விளக்கம் தருகிறது.
“இந்தியாவில் ஊழல்: எங்குபோய் முடியும்?” -இது தமிழ்.வெப்துனியா கேட்டுள்ள கேள்வி.

ஜோதிட ரத்னா வித்யாதரன் கூறியுள்ள பதில் இது:  “தற்போதைய இந்திய ஜாதகத்தைப் பார்க்கும் போது, ஊழலிற்கு எதிரான முழக்கம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு இன்னமும் அதிகமாக இருக்கும். 21.12.2011 அன்று சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. அதற்குப் பிறகு இதன் தாக்கம் இன்னும் அதிகமாகும். ஏனென்றால் இந்திய ஜாதகம் கடக ராசிக்கு 4வது வீட்டிற்கு சனி வருகிறார்...” - இப்படியாக சொல்லிக்கொண்டே போகிறார்.

இடசாரி உள்ளிட்ட பல்வேறு மக்கள் இயக்கங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்களின் பலனாக, அரசு அலுவலகங்களிலிருந்து அவ்வளவு லேசில் பெயராது என்றிருந்த தகவல்களைப் பெற முடியும் என்பதற்கான தகவல் உரிமைச் சட்டம் வந்தது. அதுவும் மன்மோகன் சிங் அரசின் முதல் சுற்று ஆட்சி இடதுசாரிகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயச் சூழல் இருந்ததால், அவர்கள் மக்கள் நலனையும் உரிமையையும் பாதுகாக்கும் உன்னத நோக்கத்தோடு, தகவல் உரிமைச் சட்டத்தை கொண்டுவந்தாக வேண்டும் என உறுதியாக வலியுறுத்தியதால்தான் இது நடந்தது. ஆனால் இந்த முனைவர் சொல்கிறார் தெரியுமா?

“இந்திய ஜாதகம் கடக ராசிக்கு 4வது வீட்டிற்கு சனி வருகிறார். அதனால், யாராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும்சரி, தப்பு செய்தால் தண்டனையை அதிகரித்தே தீரவேண்டும் என்ற அமைப்புகள் இனிமேல் அதிகரிக்கத் தொடங்கிவிடும். தற்போது கேள்வி கேட்கும் வீடான புதனில்தான் சனி உட்கார்ந்திருக்கிறார். அதனால்தான், யாராக இருந்தாலும் கேட்டுவிடுவது என்ற நிலை வந்தது. அதன்பிறகு, கன்னிக்கு சனி வந்த பிறகுதான் தகவல் அறியும் சட்டம் என்ற சட்டம் வந்தது. சாதாரணமானவர்கள் கூட ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் அஞ்சல் தலை ஒட்டி அனுப்பினால், 10 நாள், 15 நாள் ஒரு அலுவலகத்திற்குச் சென்று சேகரிக்க முடியாத தகவல்களைக் கூட பெறக்கூடிய தகவல் அறியும் சட்டம் என்பது வந்தது. யார் யார் என்ன செய்கிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள், எந்தப் பதவிக்கு எந்தப் பணிக்கு யார் யார் வருகிறார்கள் என்பதை சாதாரண, எளிய மக்களும் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் சட்டம் வந்துள்ளது. அந்த சட்டத்தின் மூலமாகத் தெரிந்த விஷயங்களைத் தண்டிக்கக்கூடிய வீடுதான் துலாம். இந்த துலாத்துக்குதான் சனி வருகிறார். துலாம் என்பது நீதிக்கோள். நீதிபதிக்கு மேல் நீதி தேவை தராசுடன் இருப்பார்களே அதுதான் நடக்கும். டிசம்பரில் இருந்து நிறைய பேர், பெரிய பெரிய ஆட்களெல்லாம் தண்டனையை அனுபவிக்கக் கூடிய நிகழ்வுகள், தப்பித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தப்பிக்கவே முடியாது என்கின்ற நிலை வரும். கடந்த இரண்டரை ஆண்டுகளில் கன்னியில் சனி இருப்பதால்தான், உலகத்தையே ஒரு சுற்று வந்து பார்த்தால் பல நாடுகளில் ஆள்பவர்களை எதிர்த்துக் குரல்கள் எழுந்துள்ளது தெரியும். அதில் நியாயமான விஷயங்களும் நிறைய இருக்கிறது. இப்பொழுது துலாத்திற்கு சனி வரும்போது, தவறு செய்தவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கக்கூடிய காலமாக அமையும். மேலும் எளியவர்களும் பெரிய பதவியில் போய் உட்காரக்கூடிய காலமும் வரப்போகிறது.”

பல நாடுகளில் ஆள்பவர்களை எதிர்த்துக் குரல்கள் எழுவதில் நியாயமான விஷயங்களும் நிறைய இருக்கிறது, என்று சொல்லிவிட்டு, அதன் பிறகு துலாம், சனி, கன்னி என்று ஓட்டுவதில் நியாயமான விஷயம் எதுவும் இல்லை. கிரகங்களின் சஞ்சாரத்தால்தான் எழுச்சிகள் ஏற்படுகின்றன, தவறு செய்பவர்களுக்குத் தண்டனைகள் கிடைக்கின்றன என்று ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொள்வது என்றால், மக்களின் குமுறல் எதுவும் இல்லாத இடத்தில் கடகமும் புதனும் புகுந்து விவகாரம் செய்து பார்க்கட்டுமே!

அரசியல், சமூக நிகழ்வுகளையும், அன்றாடச் செய்திகளையும் கவனிக்கக் கூடிய எவரும் ஊகித்துத் சொல்லக் கூடிய கணிப்புகளைத்தான் இந்த ஜோதிட ரத்னாக்கள் கூறுகிறார்கள். கூடவே ஆங்காங்கே சனியின் பார்வை, கன்னியின் கண்வீச்சு, துலாம் நிலை, புதனின் இடம் என்று ஒட்ட வைத்துக்கொள்கிறார்கள். இப்படியெல்லாம் அனுபவத்தின்  அடிப்படையில் ஊகிக்கக் கூடியவர்கள், தங்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாதபட்சத்தில் இப்படி ராசிபலன் கணிக்கிற லாபகரமான சுய தொழிலில் ஈடுபடலாம்! என்ன, யாரையாவது பிடித்து ஜோதிடஸ்ரீ, ஜோதிடப்புலி, ஜோதிடரத்ன, ஜோதிடமரகத, ஜோதிடப்பவள என்றெல்லாம் பட்டங்களை ஒட்டவைத்துக் கொள்ளவேண்டியிருக்கும்! அதற்குக் கொஞ்சம் செலவாகும்!

சோதிடம் என்றால் சோதனையின்போது திடம் சொல்வது என்று முன்பொருமுறை கவிஞர் கண்ணதாசன் கூறினார். ஆனால் இது சும்மா திடம் சொல்கிற பிரச்சனை மட்டுமல்ல. நட்சத்திரங்களும் கோள்களும் இருக்கிற இடத்தைப்  பொறுத்துதான் அரசியல், பொருளாதார, சமூக நிகழ்வுகள் முதல், சொந்த வீட்டு விவகாரங்கள் வரை எல்லாம் தீர்மானிக்கப்படுகின்றன என்று சோதிடம் சொல்வதன் அடி ஆழத்தில், நடந்துகொண்டிருக்கிற எதையும் மாற்றமுடியாது என்ற தலைவிதித் தத்துவம் மக்களின் தலையில் அழுத்தமாகக் குடியேற்றப்படுகிறது. மாறுதல் ஒன்றைத் தவிர எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டது என்ற உண்மைத் தத்துவம் மறைக்கப்படுகிறது.

அடிப்படையில், மக்களின் இன்றைய நிலைமைகள் எதுவும் மாறக்கூடாது, எவரும் தட்டிக்கேட்கிறவர்களாகப் பரிணமிக்கக்கூடாது என்ற சுரண்டல் கூட்டத்தின் விருப்பத்தையும், ஆதிக்க சக்திகளின் ஆசையையும் நிறைவேற்றுகிற ஏவலாக சோதிடம் பயன்படுத்தப்படுகிறது.

“சோதிடந்தனை இகழ்” என்றான் முண்டாசுக் கவிஞன். சோதிடத்தை நவீன தொழில் நுட்பத்தில் புகுத்திக் கொடுக்கிற கைங்கர்யமும் இகழத்தக்கதுதான்.

- அ.குமரேசன்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)