செப்டம்பர் 17 ஆம் தேதியன்று வெறும் 150 பேர் திட்டமிட்ட கைப்பற்றுவோம் போராட்டம், ஓரிரு வாரங்கள் நடந்துவிட்டு அப்படியே காணாமல் போய்விடும் என்ற அமெரிக்க ஆட்சியாளர்களின் எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, நூறாவது நாளை நோக்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவான அதிருப்தியாக இருந்த நிலை மாறி, கல்வி, சுகாதாரம், வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சனைகளை முன்வைத்த போராட்டக்களமாக உருவெடுத்துள்ளது. பேராசை, லாபவெறி, சொத்துக்குவிப்பு, சுரண்டல் என்பதன் மொத்த உருவமாக முதலாளித்துவம் உள்ளது என்று முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்கள் வீதிகளில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நியூயார்க் நகரில் உள்ள சிட்டி வங்கி மற்றும் சேஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகளைக் கைப்பற்றும் போராட்டம் வியாழனன்று நடைபெற்றது. வேலைகளுக்காகக் கைப்பற்றும் போராட்டம் என்று இதை போராட்டக்காரர்கள் அழைத்தனர். வங்கிகளை மீட்பதில் கவனம் செலுத்துவதைவிட, வேலைகளை உருவாக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்று வங்கிக்கிளைகளை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பெடரல் ரிசர்வ் என்று அழைக்கப்படும் மத்திய வங்கியையே இழுத்து மூடுங்கள் என்று ஆவேச முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். மத்திய வங்கியின் முன்பாகவும் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரும், சமூக ஆர்வலருமான லாரி ஹோல்ம்ஸ், இந்த நாட்டில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் தகுதிக்கேற்ற வேலையின்றி உள்ளனர். இந்த உண்மையான, துயர நிலை பற்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியே நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். அத்தகைய நடவடிக்கைகள் துவங்கும்வரை, இதுபோன்ற கைப்பற்றும் நடவடிக்கைகள் நடந்துகொண்டே இருக்கும் என்றார்.
மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நியூயார்க் காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டல்களை விடுத்துக் கொண்டே இருந்தனர். இத்தகைய போராட்டங்களின் வெற்றி, மற்ற பகுதியினரையும் களத்திற்குக் கொண்டு வந்துவிடும் என்பதுதான் நிர்வாகத்தின் கணிப்பாகும். சுகாதாரத்துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக இருக்க வேண்டும், மருத்துவக்காப்பீடு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது. அத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் சுகாதாரத்துறையைக் கைப்பற்றுவோம் என்ற முழக்கத்துடன் போராடத் தயாராகி வருகிறார்கள். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களும் பங்கேற்கவிருக்கிறார்கள்.
“துறைமுகங்களைக் கைப்பற்றுவோம்”
அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள அனைத்துத் துறைமுகங்களையும் கைப்பற்றுவோம் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கான தேதியாக டிசம்பர் 12 என்று தீர்மானித்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு துறைமுகத் தொழிலாளர்கள் சங்கங்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் போராட்டக்குழுவினர் இறங்கியுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஓக்லாந்து துறைமுகத்தைக் கைப்பற்றும் போராட்டம் பெரும் வெற்றி அடைந்தது. அந்தப் போராட்டம் அளித்த உத்வேகம்தான் மேற்குக் கடற்கரை முழுவதையும் கைப்பற்றும் போராட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. மேலும், காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைகள் எதுவும் தங்கள் போராட்டத்தின் தீவிரத்தைக் குறைத்துவிடாது என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கல்விக்கட்டண அதிகரிப்பு மற்றும் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்கள் திரண்டுள்ளனர். அமெரிக்கா முழுவதுமுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் கைப்பற்றும் போராட்டங்களுக்கு திட்டமிட்டு வருகிறார்கள்.
மிரட்டும் பிரிட்டன்
அமெரிக்கா எட்டு அடி பாய்ந்தால் பதினாறு அடி பாயத்துடிக்கும் பிரிட்டன் அரசு, கைப்பற்றுவோம் போராட்டங்களை ஒடுக்க தொழிலாளர்கள் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்போவதாக மிரட்டியுள்ளது. குறிப்பாக, வேலை நீக்கம் செய்யப்படும் தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் கேட்கும் முறையை மிகவும் கடுமையானதாக மாற்றப் போகிறோம் என்று வெளிப்படையாகவே பிரதமர் கேமரூன் கூறியுள்ளார். கேட்டால், புதிய பொருளாதாரம், புதிய வளர்ச்சி என்பது வேண்டுமென்றால் இதெல்லாம் தேவைதான் என்கிறார் கேமரூன். ஏன், அதை முதலாளிகளுக்குக் கொண்டு வந்தால் என்ன என்று திருப்பிக் கேட்கிறார்கள் தொழிற்சங்கத் தலைவர்கள். நவம்பர் 30 ஆம் தேதியன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் 30 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் நகரில் உள்ள சிட்டி வங்கி மற்றும் சேஸ் வங்கி ஆகியவற்றின் கிளைகளைக் கைப்பற்றும் போராட்டம் வியாழனன்று நடைபெற்றது. வேலைகளுக்காகக் கைப்பற்றும் போராட்டம் என்று இதை போராட்டக்காரர்கள் அழைத்தனர். வங்கிகளை மீட்பதில் கவனம் செலுத்துவதைவிட, வேலைகளை உருவாக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தாருங்கள் என்று வங்கிக்கிளைகளை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பெடரல் ரிசர்வ் என்று அழைக்கப்படும் மத்திய வங்கியையே இழுத்து மூடுங்கள் என்று ஆவேச முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர். மத்திய வங்கியின் முன்பாகவும் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரும், சமூக ஆர்வலருமான லாரி ஹோல்ம்ஸ், இந்த நாட்டில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் தகுதிக்கேற்ற வேலையின்றி உள்ளனர். இந்த உண்மையான, துயர நிலை பற்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியே நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். அத்தகைய நடவடிக்கைகள் துவங்கும்வரை, இதுபோன்ற கைப்பற்றும் நடவடிக்கைகள் நடந்துகொண்டே இருக்கும் என்றார்.
மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் நியூயார்க் காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டல்களை விடுத்துக் கொண்டே இருந்தனர். இத்தகைய போராட்டங்களின் வெற்றி, மற்ற பகுதியினரையும் களத்திற்குக் கொண்டு வந்துவிடும் என்பதுதான் நிர்வாகத்தின் கணிப்பாகும். சுகாதாரத்துறை அரசின் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக இருக்க வேண்டும், மருத்துவக்காப்பீடு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது. அத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் சுகாதாரத்துறையைக் கைப்பற்றுவோம் என்ற முழக்கத்துடன் போராடத் தயாராகி வருகிறார்கள். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களும் பங்கேற்கவிருக்கிறார்கள்.
“துறைமுகங்களைக் கைப்பற்றுவோம்”
அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள அனைத்துத் துறைமுகங்களையும் கைப்பற்றுவோம் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கான தேதியாக டிசம்பர் 12 என்று தீர்மானித்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு துறைமுகத் தொழிலாளர்கள் சங்கங்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் போராட்டக்குழுவினர் இறங்கியுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஓக்லாந்து துறைமுகத்தைக் கைப்பற்றும் போராட்டம் பெரும் வெற்றி அடைந்தது. அந்தப் போராட்டம் அளித்த உத்வேகம்தான் மேற்குக் கடற்கரை முழுவதையும் கைப்பற்றும் போராட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. மேலும், காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைகள் எதுவும் தங்கள் போராட்டத்தின் தீவிரத்தைக் குறைத்துவிடாது என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கல்விக்கட்டண அதிகரிப்பு மற்றும் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் வெட்டு ஆகியவற்றிற்கு எதிராக மாணவர்கள் திரண்டுள்ளனர். அமெரிக்கா முழுவதுமுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் கைப்பற்றும் போராட்டங்களுக்கு திட்டமிட்டு வருகிறார்கள்.
மிரட்டும் பிரிட்டன்
அமெரிக்கா எட்டு அடி பாய்ந்தால் பதினாறு அடி பாயத்துடிக்கும் பிரிட்டன் அரசு, கைப்பற்றுவோம் போராட்டங்களை ஒடுக்க தொழிலாளர்கள் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்போவதாக மிரட்டியுள்ளது. குறிப்பாக, வேலை நீக்கம் செய்யப்படும் தொழிலாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் கேட்கும் முறையை மிகவும் கடுமையானதாக மாற்றப் போகிறோம் என்று வெளிப்படையாகவே பிரதமர் கேமரூன் கூறியுள்ளார். கேட்டால், புதிய பொருளாதாரம், புதிய வளர்ச்சி என்பது வேண்டுமென்றால் இதெல்லாம் தேவைதான் என்கிறார் கேமரூன். ஏன், அதை முதலாளிகளுக்குக் கொண்டு வந்தால் என்ன என்று திருப்பிக் கேட்கிறார்கள் தொழிற்சங்கத் தலைவர்கள். நவம்பர் 30 ஆம் தேதியன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் 30 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment