தமிழகக் காவல்துறையின் இன்னொரு கொடூரமான நடவடிக்கை குறித்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மாதம் நவம்பர் 22ம் தேதி, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் போலீஸாரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றனர். வாச்சாத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் நீதி கிடைத்திருக்கிறது. அந்த செய்தி தந்த நம்பிக்கைகளை உடைத்துப் போடுவது போல, காவல்துறையின் செயல்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. இந்தக் காவல்துறையைத்தான் நவீனப்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 47 கோடி வழங்குகிறாராம். இதுதான் இவரது ஆட்சியின் லட்சணம்!
வாச்சாத்தி மக்களுக்காக போராடிய, மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அவர்கள் இன்று (26.11.2011) பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை இது:
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் காவல் சரகத்திற்குட்பட்ட டி. மண்டபம் கிராமம், இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த காசி என்பவரை திருட்டுக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு திருக்கோவிலூர் காவல்நிலையத்தைச் சார்ந்தவர்கள் கடந்த நவம்பர் 22ந் தேதி பிடித்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த காசியை விடுவிக்குமாறு அவருடைய தாயார் வள்ளி காவல் நிலையம் சென்று கெஞ்சியுள்ளார். அவரிடம், உங்களுடைய நெருங்கிய உறவினர்களை அழைத்து வந்தால் விசாரணை செய்து விட்டு அவரையும் அனுப்பி விடுகிறோம் என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு வள்ளி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில் போலீஸ் வேனை நிறுத்தி வள்ளியை வண்டியில் ஏற்றியுள்ளனர். போலீஸ் வேனில் காசியின் மனைவி லட்சுமி (20 வயது), காசியின் தம்பி மனைவி கார்த்திகா (வயது 18), காசியின் தங்கை ராதிகா (17 வயது) மற்றொரு உறவுப் பெண் மாதேஸ்வரி (20 வயது) ஆகியோர் வண்டியினுள் இருந்துள்ளனர். 22-ந் தேதி இரவு முழுவதும் தைலமரக்காட்டில் வைத்து வள்ளியின் கண்முன்னாலே அவருடைய மகள், மருமகள்களை 4 காவலர்கள் வண்புணர்ச்சிக்குள்ளாக்கி கொடுமை செய்துள்ளனர்.
விடியற்காலையில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி விரட்டியுள்ளனர். மீண்டும் 23ந் தேதி போலீஸ் வேன் தெருவுக்குள் வருவதைப் பார்த்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஓடியுள்ளனர். இதைத் தொடர்ந்து மற்றவர்களின் உதவியுடன் இன்று (26.11.2011) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சம்பந்தப்பட்ட பெண்கள் புகார் செய்துள்ளனர்.
காவல்துறையினரின் கொடூரமான இச்செயலை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த வண்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவதோடு, இவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்; காசி உட்பட காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதுடன், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பும், மருத்துவ உதவியும் வழங்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்தி கோருகிறோம்.
காவல்துறையினரின் இந்த அராஜகத்திற்கு எதிராக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் வலுவான கண்டன போராட்டங்களை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
/ஒப்பம்
(பெ. சண்முகம்)
மாநிலத் தலைவர்
காவல்துறையினரின் இந்த கொடூர செயலைக் கண்டித்தும், நீதி கிடைத்திட ஆதரவு அளித்தும் குரல் எழுப்புமாறு மனித உரிமை ஆர்வலர்களையும் முற்போக்கு இயக்கங்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
இருளர் பழங்குடியினர் மீதான அடக்குமுறை, பாலியல் வன்முறை ஒரு தொடர் செயலாகவே விழுப்புரம் மாவட்டத்தில் நடந்து வருகிறது. பேரா. கல்யாணி போன்றோர் இருளர் பாதுகாப்பு அமைப்பில் தொடர்ந்து போராடி வரும் நிலையில் மீண்டும் ஒரு அதிகார வன்முறை.காவல் துறையினருக்கு எல்லையில்லா அதிகாரம் என முதலமைச்சர் முழங்குவது இப்படி எல்லை மீறுவதற்கு தானா?
ReplyDeleteஎங்கேயடா தமிழ் உணர்வு எம் பெண்கள் தமிழர்களால் சூறையாடப் படும்போது எங்கேயடா தமிழ் தேசியம்? இனியாவது திருந்துங்கள் தமிழ் தேசியம் பேசும் தலித்களே! ஜாதி ஒழிப்பும் தீண்டாமை ஒழிப்பும் தான் நமது அடுத்த நூற்றாண்டுக்கும் போராட்டக்கருவேயொழிய தமிழ் தேசியம் அல்ல. தமிழ் தேசியம் பேசி ஏற்கனவே ஒரு இருளர் சமூக பெண்ணை கொலை வாங்கிய தமிழ் தேசியம் இன்று தமிழர் போலிசால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை தடுக்க முடிந்ததா? இன்று பழங்குடிகள் தொடர் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்; இதை தடுக்க முடிந்ததா செங்கொடியின் தியாகம்? இது தான் நடைமுறை. சூத்திர ஜாதிகளை எதிர்ப்பதற்கு தமிழ் தேசியம் ஆயுதம் அல்ல. புரட்சியாளர் அம்பேத்கரியமே சூத்திரர் ஜாதி வெறியை ஒழிக்கக் கூடிய ஆயுதம். சிந்தியுங்கள் சகோதரர்களே! எந்த "மாவீரன்" போற்றுதலும் சூத்திரர்க்கு வலு சேர்க்குமேயொழிய, தலித் குடிகளை வலுவடையச் செய்யாது. மாறாக, தலித் மற்றும் பழங்குடி சமூகத்தை மேலும் ஒடுக்கக்கூடியதாகவே தமிழ் தேசிய அரசியல் அமைய முடியும். செங்கொடியை இழந்த சோகத்தோடு தமிழ் போலிசால் பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்கள் சோகமும் உங்கள் "மாவீரன்" விழாவுக்கு அணி சேர்க்கட்டும் நாம் இன்னும் அடிமை விலங்கை உடைக்காமல் எந்த மசுரு தேசியமும் நம் பெண்களை காப்பாற்றாது எனும் உண்மையையும் உள்வாங்கியபடி!
ReplyDeletethalithdukal enne KILLUKEERAIYA ? Aadu maadukal meindhida ............ paramakudiel sutdu thallavum ,, vaasathi , vilupurathil ena paaliyal vanpunarchiel thodaravum JEYA vin police enna kaarthi masathdu NAAIKALA , VELIYE PAEIRAI MEIKIRADU . thaddi koduthdu parisu vazhanki uchi mukarndu azhaku paarpaar JEYA . entha veri naikaluku npathavi uyarvu koduparoe J .
ReplyDelete