Friday, November 11, 2011

இலங்கை: தீர்வின் திசை வேண்டி!

மாலத்தீவில் சார்க் நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. மாலத்தீவு புறப்படும் அவசரத்தில் கூட பிரதமர் மன்மோகன் சிங் ஒரு விஷயத்தை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டுத்தான் புறப்பட்டார். அதாவது, உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அதுமட்டுமல்ல, இனியும் உயர்த்தப் போவதில்லை என்ற உத்தரவாதத்தையும் வழங்க முடியாது என்பதுதான் அது.

அந்த அளவுக்கு செயல்திறனும் பொறுப் புணர்ச்சியும் மிக்கவர்தான் பிரதமர் மன்மோகன் சிங். ஆனால் இவரை சிலர் செயல் திறன் அற்றவர் என்று பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பதுதான் வேதனை.

சார்க் கூட்டமைப்பில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி ராஜபக்சேவும் மாலத்தீவு மாநாட்டில் பங்கேற்கிறார். இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்து, இந்தியா அளிக்கும் உதவி தமிழர்களுக்கு சரியான முறையில் சென்று சேருகிறதா என்பது குறித்து ராஜபக்சேவுடன் பேசுவேன் என்று ஒரு வார்த்தை கூட மன்மோகன் சிங் கூறவில்லை.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காமன் வெல்த் நாடுகளின் மாநாடு நடை பெற்றது. அந்த மாநாட்டிற்கும் ராஜபக்சே வருகை தந்தார். அவரை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் வாழும் இலங்கை தமிழர்கள் மட்டுமின்றி அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களும் கூட ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கே ராஜ பக்சேவை சந்தித்த போது, இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அவருடன் விவாதிக்கவில்லை.

இலங்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்சே, பத்திரிகைகளில் வருவதைப் பற்றி தமக்கு கவலை இல்லை என்றும் பல பத்திரிகைகள் குப்பை என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

எதைத்தான் மதித்தார் மகிந்த ராஜபக்சே? இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை அமைத்த குழு வெளியிட்ட அறிக்கையை கூட குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் இருந்து வருகிறார் அவர். சித்ரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 47வது அமர்வு ஜெனிவாவில் 2011 நவம்பர் 8 அன்று நடைபெற்றது. இலங்கையிலும் வடக்குப்பகுதியிலும் ஏழு ரகசிய சித்ரவதை முகாம்கள் இயங்கி வருவதாகவும், அதில் 700க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் இளை ஞர்கள் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அக்கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வவு னியாவில் ஐந்து முகாம்களும், முல்லைத் தீவில் இரண்டு முகாம்களும் செயல்படுவதாக ஐ.நா. குழுவின் உதவித் தலைவர் பெரிஸ்கேர் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகில் அதிக அளவில் காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள அவர், இவ்வாறு சட்டவிரோத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோர் பெயர்ப் பட்டியலை ஐ.நா. சபை பலமுறை கோரியபோதும் இலங்கை இன்னமும் தரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் சார்பில் இந்த விசாரணையில் பங்கேற்ற முன்னாள் சட்ட அமைச்சர் மொகான்பிரீஸ், ஐ.நா. சபையின் சித்ரவதைக்கு எதிரான உடன்பாட்டின் சில அம்சங்களில் இலங்கை கையெழுத்திடவில்லை என்று வாதிட்டுள்ளார். அதாவது சித்ரவதைக்கு எதிரான உடன்பாட்டில் நாங்கள் கையெழுத்திடவில்லை. எனவே அப்பாவி தமிழ் மக்களை சித்ரவதை செய்வதை ஐ.நா. தடுக்க முடியாது, விசாரிக்கக் கூட முடியாது என்பது அவரது வாதம். ஆனால் சித்ரவதைகளை சகிக்க முடியாது என்பதை 110 சதவீதம் ஒத்துக் கொள்வதாக அவர் வாய்ப்பந்தல் போட்டுள்ளார்.

இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. சபை அமைத்த குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விவரங்கள் கண்ணீரை வரவழைக்கிறது என்றால், லண்டனைச் சேர்ந்த சேனல் 4 வெளியிட்ட காணொளி காட்சிகள் இதயத்தில் உள்ள இரத்தத்தை முற்றாக வற்றிப்போகச் செய்கிறது.

இறுதிக்கட்டப்போரின்போது இலங்கை ராணுவத்தின் குண்டுமழையில் அப்பாவி தமிழ் மக்கள் 40 ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது ஐ.நா. குழு அளித்துள்ள விவரம். போர் நிறுத்தப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களை மட்டுமல்ல, செஞ்சிலுவைச் சங்க கட்டிடங்கள், மருத்துவமனைகள் எதையும் இலங்கை ராணுவம் விட்டு வைக்கவில்லை. நரவேட்டையாடியது என்பது ஐ.நா. குழு வெளியிட்டுள்ள அறிக்கை. இவர்களது கொலைவெறிக்கு பெண்கள், குழந்தைகள் கூட தப்பவில்லை. மிகக்கடுமையான முறையில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பது ஐ.நா. குழுவின் குற்றச்சாட்டு. ஆனால் இதுகுறித்து முறையான எந்தவொரு விசாரணைக்கும் ராஜபக்சே அரசு தயாராக இல்லை.

மாறாக, சர்வதேச சதுரங்கக் களத்தில் சாதுர்யமாக காய் நகர்த்தி தன்னுடைய குற்றங்களை முற்றாக மறைத்துவிட, நியாயப்படுத்த ராஜபக்சே அரசு முயலுகிறது. இலங்கையில் காணாமல் போகிறவர் பட்டியலில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல. உண்மையை பேசும் சிங்கள மொழி பத்திரிகையாளர்களும் உள்ளனர்.  இத்தகைய கடத்தலும் காணாமல் போவதும் இன்னமும் தொடர்கதையாக நீடிக்கிறது.

சேனல் 4 காட்டிய காட்சிகள் உலக மனித சமூகத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. ஒரு காகம் இறந்தால் கூட சக காகங்கள் கூடி கூச்சலிட்டு தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தும். ஆனால் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்ட மனிதச் சதைகளை காகங்கள் கொத்தித் தின்கிற காட்சியும் இதுவரை அவல இலக்கியங்களில் கூட சொல்லப்படாத அளவுக்கு பிணந்தின்னி கழுகுகள் வட்டமிட்டு, சதைகளை தூக்கிச் செல்லும் காட்சிகளும் மனித நாகரிகத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

இன்னமும் கூட முள்வேலி முகாம்களிலிருந்து தமிழ் மக்களுக்கு முற்றாக விடுதலை கிடைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மீள் குடியமர்த்தப்படுகிறார்கள் என்று இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சாகடிக்கப்படுகிறார்கள் என்பதை பல்வேறு ஊடகங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன.

அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளவர்கள் மனச்சிதைவுக்கு ஆளாகி வருகின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான ராணுவத்தினரின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்கதையாக நீடிக்கிறது. 12வயது சிறுமி ஒருத்தியை ராணுவத்தினர் “விசாரணைக்காக” தூக்கிச்செல்ல முயன்றபோது அவளுக்கு அம்மை நோய் கண்டிருப்பதாகக் கூறி தற்காலிகமாக தனது மகளை தப்பவைத்தேன் என்று கூறியுள்ளார் ஒரு தந்தை. குண்டுவீச்சில் தான் பலியானால் தனது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுமாறு கூறியுள்ளார் ஒரு பெண். தனது சடலத்தின் மீது ராணுவத்தினரின் கைகள் ஊர்வதை தான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் அந்தப்பெண். பிணங்களை லாரியில் ஏற்றிய போது தானும் பிணம்போலக்கிடந்து முகாமிலிருந்து தப்பித்ததாக கூறியுள்ளார் ஒரு இளைஞர். இவை ஒன்றிரண்டு நிகழ்ச்சிதான். மொத்த பயங்கரத்தையும் தொகுத்துப் பார்த்தால், இலங்கைத் தீவே கண்ணீரால் மூழ்கிவிடும்.

இலங்கை தமிழ் மக்களுக்கு அந்நாட்டு மத்திய அரசு மீது அதிருப்தி ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னமும் நீடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை. மொழிவழி தேசிய இன மக்களான தமிழ் மக்களின் சம உரிமை மறுக்கப்பட்டது. சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று தமிழ் தள்ளி வைக்கப்பட்டது. நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை என அவர்களது பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டது. மக்களாட்சியில் கூட அவர் களுக்கு உரிய உரிமை கிடைக்கக்கூடாது என்பதற்காகவே நாடாளுமன்ற ஜனநாயக முறை அகற்றப்பட்டு, அதிபர் ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது.

யாழ்ப்பாணம் நூலக எரிப்பு உட்பட அவர்களது பண்பாட்டு அடையாளங்களும் அழிக்கப்பட்டன. இதனால்தான் கனன்று கொண்டுதான் இலங்கை தமிழர் பிரச்சனை 1983ல் பெரும் தீயாக உருவெடுத்தது. போரில் வெற்றிபெற்றுவிட்டதாக கெக்கெலி கொட்டும் ராஜபக்சே அரசு, தனது நாட்டின் சொந்த குடிமக்களான தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத்தைக் கூட வழங்க முன்வரவில்லை.

முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய தமிழ் மக்கள் தங்களது முந்தைய சொந்த வாழ்விடங்களில் மீள்குடி அமர்த்தப்படவில்லை. மாறாக அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் ராணுவத்தினர் மற்றும் பெரும்பான்மை இன மக்களை குடியமர்த்துவதாக தகவல்கள் வருகின்றன. போருக்குப் பிறகும் கூட தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கல்வி நிலையங்கள் முழுமையாக செயல்படவில்லை. மாறாக ராணுவமுகாம்கள் செயல்படுகின்றன.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தமிழ்மக்கள் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றது. ராஜபக்சே அரசை தமிழ் மக்கள் நம்பவில்லை என்பதையே இந்த முடிவு உணர்த்தியது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் பொருளாதாரம், பண்பாட்டு செயல்பாடுகள் பேணப்பட வேண்டும் என்பதை இந்த முடிவு உணர்த் தியதாக குறிப்பிட்டார். தாங்கள் கோருவது மாநில சுயாட்சியே என்றும் இந்த அரசியல் தீர்வுக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் இந்த கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிரந்தர அமைதி நிலவ வேண்டுமானால் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து, கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி வழங்க வேண்டும்; தமிழ்மொழியும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்; தமிழ் மக்க ளுக்கு நாடாளுமன்றம் உட்பட அனைத்து நிலைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்; அரசு நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை உள் ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ் மக்க ளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் அரசியல் சாசனத்தின் அனைத்துப் பிரிவுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். அவர்களது பண்பாட்டு அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அவர்களது வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். நில உரிமை உள்ளிட்ட அவர்களது அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். சட்டவிரோத காவல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளாகும்.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட, சுயேட்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

இலங்கையுடனான பொருளாதார, வர்த்தக உறவுகள் குறித்து இந்தியா கவலைப்படுகிறது. ஆனால் இந்தியாவின் சார்பில் வழங்கப்படும் உதவி தமிழ் மக்களுக்கு உரிய முறையில் சென்று சேருகிறதா என்பது குறித்து கவலைகொள்வதில்லை. இந்தக் குற்றச்சாட்டை அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயே முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதில் சார்க் அமைப்பின் அங்கம் என்ற முறையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கை தமிழர் பிரச்சனை தமிழ்நாட்டில் உணர்வுப்பூர்வ மான பிரச்சனையாக நீடிக்கிறது, அது நியா யமானது என்ற அடிப்படையிலும் இந்தியா உண்மையான அக்கறையுடன் தலையிட வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் தொடர்ச்சியாக, முன்பின் முரணின்றி போராடி வந்துள்ளது. உணர்ச்சி ஊட்டக் கூடிய முழக்கங்களை மட்டும் முன் வைக்காமல் காரியசாத்தியமான தீர்வை முன் வைத்து போராடி வந்துள்ளது. தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கத்தை நடத்தியது. விருதுநகரில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் முதல் தீர்மான மாக இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்; அவர்களது கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இதயத்தில் ரத்தம் வடியச்செய்யும் இந்த பிரச்சனையில் மத்திய அரசு உரிய முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்திற்கும் விருதுநகர் மாநாடு அறை கூவல் விடுத்தது. மத்திய அரசின் பிரதிநிதியாக விளங்கும் ஆளுநர் மாளிகை முன்பு நவம்பர் 12ந்தேதி தமுஎகச சார்பில் ஆர்ப்பாட்டமும், கையெழுத்துப் படிவங்களை வழங்கும் இயக்கமும் நடை பெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. எழுத்தாளர்கள், கலைஞர்கள் சமூகத்தின் மனசாட்சி. தமிழகத்தின் மனசாட்சியாக விளங்கும் தமுஎகச கேட்கிறது, மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?
- மதுக்கூர் ராமலிங்கம்
(மாநிலத் துணைத் தலைவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்)

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)