நடைமுறை அறிவும் தொலை நோக்குப் பார்வையும் கொண்ட முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தலைமையிலான மாநில அரசு நீண்டகாலக் கண்ணோட்டத்துடனும் உறுதி யாகவும் பிரச்சனைகளை எதிர்கொண்டது. சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு ஆக்கப்பூர் வமான விதத்தில் பன்முகப்பட்ட பரிமாணம் கொண்ட நுண்ணோக்குத்திட்டத்தை வகுத் தது. கலகக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பகுதிகளை விடுவிப்பதற்கு உளவி யல் அடிப்படையான செயல்பாடுகள் அரங் கேற்றப்பட்டன. ஆதிவாசி மக்களின் மனங்க ளில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்ப குதிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல், ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல், பாதுகாப்புப்படைகள் பங்கேற்ற வளர்ச் சித்திட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ் முறை களும் அத்திட்டத்தில் இணைக்கப்பட்டி ருந்தன.
கலகக்காரர்களைக் கட்டுப்படுத்துவதில் திரிபுரா மாநிலம் வெற்றி பெற்றது எவ்வாறு என்ற தலைப்பில் ‘இந்து’ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக 2003 முதல் 2009 வரை பொறுப்பு வகித்த டி.என். சகாயா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சில வடகிழக்கு மாநிலங்கள் ஆயுதந்தாங்கிய கலகக்காரர்களை சமாளிக்க முடியாமல் திணறிவரும் வேளையில் திரிபுரா மாநிலத் தால் அதனை எவ்வாறு வெற்றிகரமாக சமா ளிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்பி விட்டு, அதற்கான பதிலையும் அவரே அளிக் கிறார்.
கலகக்காரர்களைக் கட்டுப்படுத்துவதில் திரிபுரா மாநிலம் வெற்றி பெற்றது எவ்வாறு என்ற தலைப்பில் ‘இந்து’ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக 2003 முதல் 2009 வரை பொறுப்பு வகித்த டி.என். சகாயா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சில வடகிழக்கு மாநிலங்கள் ஆயுதந்தாங்கிய கலகக்காரர்களை சமாளிக்க முடியாமல் திணறிவரும் வேளையில் திரிபுரா மாநிலத் தால் அதனை எவ்வாறு வெற்றிகரமாக சமா ளிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்பி விட்டு, அதற்கான பதிலையும் அவரே அளிக் கிறார்.
1971ல் திரிபுரா உபஜாதி சமிதி என்ற அமைப்பு உருவானதுடன் கலகத்துக்கான விதை ஊன்றப்பட்டது. 1989ல் திரிபுரா தேசி யத் தொண்டர் படையும் அதன் ராணுவப் பிரிவு 1990லும் துவங்கப்பட்டன. அம்மாநிலத் தில் ஆதிவாசிகள் 33.5 சதமானமும் வங்காளி கள் உள்ளிட்ட மற்றவர்கள் 66.5 சதமான மாகவும் இருந்து வருகின்றனர். வங்காளி களுக்கும் ஆதிவாசிகளுக்கும் இடையே பகைமைப் போக்கை வளர்ப்பதே இடதுசாரி களைத் தவிர்த்த பிற அரசியல் கட்சிகளின் அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பலமான தளமாக திரிபுரா மாநிலம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. 1978 முதல் 1988 வரை நிருபன் சக்ரவர்த்தியின் தலைமையில் இடது முன் னணியின் ஆட்சி நடைபெற்றது. இடதுமுன் னணியை ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கு வதற்காக பிரிவினைக்கோரிக்கையை முன் வைத்து வந்த திரிபுரா உபஜாதி சமிதியுடன் கூட்டணியை அமைத்துக்கொள்வதற்கும் வன்முறை மற்றும் தேர்தல் முறைகேடுகள் மூலமும் ஒரு கூட்டணி அரசை ஏற்படுத்து வதற்கும் காங்கிரஸ் கட்சி சிறிதும் தயக்கம் காட்டவில்லை. இது தீவிரவாதத்தின் வளர்ச் சிக்கு வழிகோலியது. 1993ல் மீண்டும் ஆட்சி யைக் கைப்பற்றிய இடதுமுன்னணி தொடர்ந்து நான்காவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் நீடித்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வழிகாட் டுதலின் அடிப்படையில் செயல்பட்டுவரும் இடது முன்னணி கடைப்பிடித்துவரும் சரி யான கொள்கைகளே திரிபுரா மாநிலத்தில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு காரணமாக இருந்துவந்துள்ளது.
ஆயுதந்தாங்கிய கலகக்காரர்களைக் கட்டுப்படுத்துவதில் வெறும் படைபலத்தைப் பயன்படுத்துவதை மட்டும் இடது முன்னணி நம்பியிருக்கவில்லை. சொல்லப்போனால் பிற மாநிலங்கள் இந்திய ராணுவத்தைக் களத்தில் இறக்குவதன் மூலம் தீவிரவாதத் தை நசுக்குவதற்கு முயற்சித்து வந்துள்ள நிலையில், மத்திய துணை ராணுவப்படை மற்றும் மாநில காவல் துறை ஆகியவற்றையே திரிபுரா மாநிலம் பயன்படுத்தியுள்ளது. இதற் காக, சிறப்புக்காவல்படை அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களில் ஆதிவாசிப்பிரிவைச் சேர்ந்தவர்களும் அடங்கியிருந்தனர். ஆயுதந்தாங்கிய கலகக் காரர்களின் நடவடிக்கை காரணமாக சாதா ரண ஆதிவாசிமக்கள் எவ்வாறு பாதிக்கப் படுகின்றனர் என்பது விளக்கப்பட்டது. அதே நேரத்தில் கலகத்தலைவர்கள் ஆடம்பர வாழ்வு வாழ்வதும் பெண்களிடம் பாலியல் ரீதி யாக தவறாக நடந்து கொள்ளுதல், ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளை பின்தங்கிய நிலையில் வைத்திருக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதும் விளக்கப்பட்டன.
ஆதிவாசிகளுக்கு உதவும் விதத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அமைதியான வாழ்க்கைமுறைக்கு திரும்பத் தயாராக உள்ள கலகக்காரர்களுக்கு நிதியுதவி, தொழிற்பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு குறிப்பிட்ட பகுதி கலகக் காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப் பட்டு விட்டால் அங்கே அரசின் நலத்திட் டங்கள் காலதாமதமின்றி அமல்படுத்தப் பட்டன. பொதுசுகாதாரம், மருத்துவ வசதிகள், வருமான அதிகரிப்பு போன்ற அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாழ்க் கைத்தர மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யப் பட்டன. ஆதிவாசிப் பகுதிகளுக்குச் செல்லும் மத்திய-மாநிலப் படைவீரர்கள், நலத்திட்டங்களை நிறைவேற்றுபவர்களாகவே மக்கள் மத்தியில் அறிமுகமானார்கள். மாணவர்களுக்கு படிப்பதற்கான சாதனங்கள் மற்றும் விளை யாட்டுச் சாதனங்களை வழங்குதல், இடிந்து போன பள்ளிக்கூடங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களைப் புனரமைத்தல், கணினி தொழில்முறைப் பயிற்சி, தையல் பயிற்சி, வலைப்பின்னல் கலைப்பயிற்சி ஆகியவற் றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் மூலம் உள்ளுர் மக்களுடன் அவர்கள் நெருங் கிப்பழகுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. பாதுகாப்புப்படையினர் அரசின் மனிதமுக மாக, மக்களின் நண்பர்களாக, வளர்ச்சிப்பணி களில் ஈடுபடுபவர்களாக அறிமுகமாயினர். இதனால் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை யும் பாராட்டுணர்வும் நன்றியுணர்வும் ஏற்பட் டிருந்தன. பாதுகாப்புப் படைகளைப் பற்றி மக்கள் மத்தியில் இருந்த அச்ச உணர்வும் சந்தேகங்களும் மறைந்து போயின.
மாணிக் சர்க்காரின் தலைமையில் அமைந்த அரசினால் துவக்கப்பட்ட அரசி யல் நிகழ்வுகள், ஆயுதந்தாங்கிய கலகம் என்ற தீமையை இல்லாமல் செய்வதற்கு பெரிதும் உதவின. கலகக்காரர்களின் கட்டுப் பாட்டில் இருந்த தொலைதூரப் பகுதிகளுக்கு அமைதிப்பேரணிகள் நடத்தப்பட்டன. கிராமப் பஞ்சாயத்துக்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை பலப்படுத்தப்பட்டன. இதனால் அவை உயிர்த்துடிப்புடன் செயல்பட ஆரம்பித் தன. அரசின் வளர்ச்சிப்பாதையானது அனைத்து சமூகத்தினருக்கும் குறிப்பாக ஆதிவாசி மக்களுக்கு கணிசமான வாய்ப்பு வசதிகளையும் மனநிறைவையும் ஏற்படுத் தும் விதத்தில் அமைந்திருந்தன. இப்படிப் பட்ட ஆக்கபூர்வ செயல்பாடுகள் காரணமாக ஆதிவாசிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இருந்த பிளவு காணாமல் போயிற்று. ஆதிவாசிகள் தனிமைப்பட்டிருந்த நிலை மாறி பொது நீரோட்டத்தில் இணைந்தனர். இதனால் வளர்ச்சித் திட்டங்களில் மட்டு மின்றி, கலகக்காரர்களுக்கு எதிரான போராட் டத்திலும் அவர்களை அமைதிவழிக்குத் திரும்பக்கொண்டுவருவதிலும் கூட்டுச் செயல்பாட்டுக்கு வழி வகுக்கப்பட்டது.
இவ்வாறுதான் திரிபுரா மாநில அரசு, கலகக்காரர்களை வெற்றிகரமாக சமாளித்தது. அதற்குத் தேவைப்பட்டதெல்லாம், நன்கு வடிவமைக்கப்பட்ட பன்முகத்திட்டம், அசை க்கமுடியாத உறுதி, சரியான பார்வை/ அறிவுக் கூர்மையும் நேர்மையும் நம்பகத்தன்மையும் கொண்ட தலைமை, லட்சியத்தில் மனப் பூர்வமான பற்று, சமுதாயத்தின் அனைத்துப் பகுதியினருக்கும் சமூகப்பொருளாதார உட் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஆதி வாசிகளின் கொந்தளிப்பான மனப்போக்கில் மாற்றம் கொண்டுவருவதற்கான உளவியல் ரீதியான செயல்பாடு.
இவையனைத்தும் கொண்டதாக மாணிக் சர்க்கார் தலைமையிலான திரிபுரா மாநில ஆட்சி இருந்தது என்கிறார் திரிபுரா மாநில முன்னாள் ஆளுநர் டி.என்.சகாயா.
மாணிக்சர்க்கார் மிகச்சிறப்பாக செயல் பட்டு வருகிறார் என்பது உண்மைதான் என்ற போதிலும் திரிபுராவில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தியது ஒரு தனிமனிதரின் தனிப் பட்ட சாதனை அல்ல என்பதை நாம் அறி வோம். திரிபுராவின் புகழ்மிக்க முன்னாள் முதல்வர்களான நிருபன் சக்ரவர்த்தி, தசரத் தேவ் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சியின் வழி காட்டுதலின் கீழ் கடைப்பிடித்து வந்துள்ள அதே கொள்கைகளைத்தான் மாணிக்சர்க்கா ரின் ஆட்சியும் கடைப்பிடித்து வருகிறது. எனவே திரிபுரா மாநிலம் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் பெற்றுள்ள வெற்றியா னது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சரி யான வழிகாட்டுதலுக்குக் கிடைத்த வெற்றி எனவும் அதன் உண்மையான பிரதிநிதியான மாணிக்சர்க்காரின் ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிடலாம்.
-கி.இலக்குவன்
(நன்றி தீக்கதிர்)
0 comments:
Post a Comment