Wednesday, October 12, 2011

தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் திரிபுராவின் வெற்றி


நடைமுறை அறிவும் தொலை நோக்குப் பார்வையும் கொண்ட முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தலைமையிலான மாநில அரசு நீண்டகாலக் கண்ணோட்டத்துடனும் உறுதி யாகவும் பிரச்சனைகளை எதிர்கொண்டது. சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு ஆக்கப்பூர் வமான விதத்தில் பன்முகப்பட்ட பரிமாணம் கொண்ட நுண்ணோக்குத்திட்டத்தை வகுத் தது. கலகக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பகுதிகளை விடுவிப்பதற்கு உளவி யல் அடிப்படையான செயல்பாடுகள் அரங் கேற்றப்பட்டன. ஆதிவாசி மக்களின் மனங்க ளில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்ப குதிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல், ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்ளுதல், பாதுகாப்புப்படைகள் பங்கேற்ற வளர்ச் சித்திட்டங்கள் மற்றும் அரசியல் நிகழ் முறை களும் அத்திட்டத்தில் இணைக்கப்பட்டி ருந்தன.

கலகக்காரர்களைக் கட்டுப்படுத்துவதில் திரிபுரா மாநிலம் வெற்றி பெற்றது எவ்வாறு என்ற தலைப்பில் ‘இந்து’ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக 2003 முதல் 2009 வரை பொறுப்பு வகித்த டி.என். சகாயா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சில வடகிழக்கு மாநிலங்கள் ஆயுதந்தாங்கிய கலகக்காரர்களை சமாளிக்க முடியாமல் திணறிவரும் வேளையில் திரிபுரா மாநிலத் தால் அதனை எவ்வாறு வெற்றிகரமாக சமா ளிக்க முடிந்தது என்ற கேள்வியை எழுப்பி விட்டு, அதற்கான பதிலையும் அவரே அளிக் கிறார்.

1971ல் திரிபுரா உபஜாதி சமிதி என்ற அமைப்பு உருவானதுடன் கலகத்துக்கான விதை ஊன்றப்பட்டது. 1989ல் திரிபுரா தேசி யத் தொண்டர் படையும் அதன் ராணுவப் பிரிவு 1990லும் துவங்கப்பட்டன. அம்மாநிலத் தில் ஆதிவாசிகள் 33.5 சதமானமும் வங்காளி கள் உள்ளிட்ட மற்றவர்கள் 66.5 சதமான மாகவும் இருந்து வருகின்றனர். வங்காளி களுக்கும் ஆதிவாசிகளுக்கும் இடையே பகைமைப் போக்கை வளர்ப்பதே இடதுசாரி களைத் தவிர்த்த பிற அரசியல் கட்சிகளின் அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பலமான தளமாக திரிபுரா மாநிலம் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. 1978 முதல் 1988 வரை நிருபன் சக்ரவர்த்தியின் தலைமையில் இடது முன் னணியின் ஆட்சி நடைபெற்றது. இடதுமுன் னணியை ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கு வதற்காக பிரிவினைக்கோரிக்கையை முன் வைத்து வந்த திரிபுரா உபஜாதி சமிதியுடன் கூட்டணியை அமைத்துக்கொள்வதற்கும் வன்முறை மற்றும் தேர்தல் முறைகேடுகள் மூலமும் ஒரு கூட்டணி அரசை ஏற்படுத்து வதற்கும் காங்கிரஸ் கட்சி சிறிதும் தயக்கம் காட்டவில்லை. இது தீவிரவாதத்தின் வளர்ச் சிக்கு வழிகோலியது. 1993ல் மீண்டும் ஆட்சி யைக் கைப்பற்றிய இடதுமுன்னணி தொடர்ந்து நான்காவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் நீடித்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வழிகாட் டுதலின் அடிப்படையில் செயல்பட்டுவரும் இடது முன்னணி கடைப்பிடித்துவரும் சரி யான கொள்கைகளே திரிபுரா மாநிலத்தில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு காரணமாக இருந்துவந்துள்ளது.

ஆயுதந்தாங்கிய கலகக்காரர்களைக் கட்டுப்படுத்துவதில் வெறும் படைபலத்தைப் பயன்படுத்துவதை மட்டும் இடது முன்னணி நம்பியிருக்கவில்லை. சொல்லப்போனால் பிற மாநிலங்கள் இந்திய ராணுவத்தைக் களத்தில் இறக்குவதன் மூலம் தீவிரவாதத் தை நசுக்குவதற்கு முயற்சித்து வந்துள்ள நிலையில், மத்திய துணை ராணுவப்படை மற்றும் மாநில காவல் துறை ஆகியவற்றையே திரிபுரா மாநிலம் பயன்படுத்தியுள்ளது. இதற் காக, சிறப்புக்காவல்படை அதிகாரிகளும் பணியில் அமர்த்தப்பட்டனர். இவர்களில் ஆதிவாசிப்பிரிவைச் சேர்ந்தவர்களும் அடங்கியிருந்தனர். ஆயுதந்தாங்கிய கலகக் காரர்களின் நடவடிக்கை காரணமாக சாதா ரண ஆதிவாசிமக்கள் எவ்வாறு பாதிக்கப் படுகின்றனர் என்பது விளக்கப்பட்டது. அதே நேரத்தில் கலகத்தலைவர்கள் ஆடம்பர வாழ்வு வாழ்வதும் பெண்களிடம் பாலியல் ரீதி யாக தவறாக நடந்து கொள்ளுதல், ஆதிவாசி மக்கள் வாழும் பகுதிகளை பின்தங்கிய நிலையில் வைத்திருக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதும் விளக்கப்பட்டன.

ஆதிவாசிகளுக்கு உதவும் விதத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அமைதியான வாழ்க்கைமுறைக்கு திரும்பத் தயாராக உள்ள கலகக்காரர்களுக்கு நிதியுதவி, தொழிற்பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு குறிப்பிட்ட பகுதி கலகக் காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப் பட்டு விட்டால் அங்கே அரசின் நலத்திட் டங்கள் காலதாமதமின்றி அமல்படுத்தப் பட்டன. பொதுசுகாதாரம், மருத்துவ வசதிகள், வருமான அதிகரிப்பு போன்ற அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாழ்க் கைத்தர மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யப் பட்டன. ஆதிவாசிப் பகுதிகளுக்குச் செல்லும் மத்திய-மாநிலப் படைவீரர்கள், நலத்திட்டங்களை நிறைவேற்றுபவர்களாகவே மக்கள் மத்தியில் அறிமுகமானார்கள். மாணவர்களுக்கு படிப்பதற்கான சாதனங்கள் மற்றும் விளை யாட்டுச் சாதனங்களை வழங்குதல், இடிந்து போன பள்ளிக்கூடங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களைப் புனரமைத்தல், கணினி தொழில்முறைப் பயிற்சி, தையல் பயிற்சி, வலைப்பின்னல் கலைப்பயிற்சி ஆகியவற் றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் மூலம் உள்ளுர் மக்களுடன் அவர்கள் நெருங் கிப்பழகுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. பாதுகாப்புப்படையினர் அரசின் மனிதமுக மாக, மக்களின் நண்பர்களாக, வளர்ச்சிப்பணி களில் ஈடுபடுபவர்களாக அறிமுகமாயினர். இதனால் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை யும் பாராட்டுணர்வும் நன்றியுணர்வும் ஏற்பட் டிருந்தன. பாதுகாப்புப் படைகளைப் பற்றி மக்கள் மத்தியில் இருந்த அச்ச உணர்வும் சந்தேகங்களும் மறைந்து போயின.

மாணிக் சர்க்காரின் தலைமையில் அமைந்த அரசினால் துவக்கப்பட்ட அரசி யல் நிகழ்வுகள், ஆயுதந்தாங்கிய கலகம் என்ற தீமையை இல்லாமல் செய்வதற்கு பெரிதும் உதவின. கலகக்காரர்களின் கட்டுப் பாட்டில் இருந்த தொலைதூரப் பகுதிகளுக்கு அமைதிப்பேரணிகள் நடத்தப்பட்டன. கிராமப் பஞ்சாயத்துக்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை பலப்படுத்தப்பட்டன. இதனால் அவை உயிர்த்துடிப்புடன் செயல்பட ஆரம்பித் தன. அரசின் வளர்ச்சிப்பாதையானது அனைத்து சமூகத்தினருக்கும் குறிப்பாக ஆதிவாசி மக்களுக்கு கணிசமான வாய்ப்பு வசதிகளையும் மனநிறைவையும் ஏற்படுத் தும் விதத்தில் அமைந்திருந்தன. இப்படிப் பட்ட ஆக்கபூர்வ செயல்பாடுகள் காரணமாக ஆதிவாசிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே இருந்த பிளவு காணாமல் போயிற்று. ஆதிவாசிகள் தனிமைப்பட்டிருந்த நிலை மாறி பொது நீரோட்டத்தில் இணைந்தனர். இதனால் வளர்ச்சித் திட்டங்களில் மட்டு மின்றி, கலகக்காரர்களுக்கு எதிரான போராட் டத்திலும் அவர்களை அமைதிவழிக்குத் திரும்பக்கொண்டுவருவதிலும் கூட்டுச் செயல்பாட்டுக்கு வழி வகுக்கப்பட்டது.

இவ்வாறுதான் திரிபுரா மாநில அரசு, கலகக்காரர்களை வெற்றிகரமாக சமாளித்தது. அதற்குத் தேவைப்பட்டதெல்லாம், நன்கு வடிவமைக்கப்பட்ட பன்முகத்திட்டம், அசை க்கமுடியாத உறுதி, சரியான பார்வை/ அறிவுக் கூர்மையும் நேர்மையும் நம்பகத்தன்மையும் கொண்ட தலைமை, லட்சியத்தில் மனப் பூர்வமான பற்று, சமுதாயத்தின் அனைத்துப் பகுதியினருக்கும் சமூகப்பொருளாதார உட் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஆதி வாசிகளின் கொந்தளிப்பான மனப்போக்கில் மாற்றம் கொண்டுவருவதற்கான உளவியல் ரீதியான செயல்பாடு.

இவையனைத்தும் கொண்டதாக மாணிக் சர்க்கார் தலைமையிலான திரிபுரா மாநில ஆட்சி இருந்தது என்கிறார் திரிபுரா மாநில முன்னாள் ஆளுநர் டி.என்.சகாயா.

மாணிக்சர்க்கார் மிகச்சிறப்பாக செயல் பட்டு வருகிறார் என்பது உண்மைதான் என்ற போதிலும் திரிபுராவில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தியது ஒரு தனிமனிதரின் தனிப் பட்ட சாதனை அல்ல என்பதை நாம் அறி வோம். திரிபுராவின் புகழ்மிக்க முன்னாள் முதல்வர்களான நிருபன் சக்ரவர்த்தி, தசரத் தேவ் ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சியின் வழி காட்டுதலின் கீழ் கடைப்பிடித்து வந்துள்ள அதே கொள்கைகளைத்தான் மாணிக்சர்க்கா ரின் ஆட்சியும் கடைப்பிடித்து வருகிறது. எனவே திரிபுரா மாநிலம் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் பெற்றுள்ள வெற்றியா னது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சரி யான வழிகாட்டுதலுக்குக் கிடைத்த வெற்றி எனவும் அதன் உண்மையான பிரதிநிதியான மாணிக்சர்க்காரின் ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி எனவும் குறிப்பிடலாம்.
-கி.இலக்குவன்
(நன்றி தீக்கதிர்) 

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)