தொழிற்சங்க அங்கீகாரத்திற்கும் தான் விரும்புகிற ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ளும் உரிமைக்காகவும் 2000 தொழிலா ளர்கள் 60 நாட்கள் நடத்திய வீரம் செறிந்த, உலக தொழிற்சங்கங்களின் கவனத்தை ஈர்த்த, ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
* பன்னாட்டு நிறுவனங்களின் கொடுஞ் சுரண்டல் முறைக்கு எதிராக இளம் தொழி லாளி வர்க்கம் மூர்க்கத்தனமாய் எழுந்து வரு வதை அவர்களால் உணர முடிந்தது.
* அதே மூர்க்கத்தோடு பன்னாட்டு நிறு வனங்களும் - அன்றைய திமுக ஆட்சியாளர் களும் - காவல்துறை- நீதிமன்றம்- ஆளும் வர்க்க ஆதரவு ஊடகங்களும் சேர்ந்து ஒன் றாக கைகோர்த்து அந்த போராட்டத்தை ஒடுக்கவும் அதன் மூலம் பன்னாட்டு நிறு வனங்கள் குவிந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத் தில் உருவாகி வரும் தொழிற்சங்க இயக்கத் தை முற்றிலும் அழித்தொழிக்கவும் எதிர்தாக் குதலை தொடுத்தனர்.
* போராட்டத்தில் முன்னணியில் நின்ற 24 தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப் பட்டனர்.
* ஆலைக்கு உள்ளே சென்று போராடிய தொழிலாளர்களை கைது செய்து, சக தொழிலாளிகளையும் கைது செய்தது.
* சிஐடியு தலைவர்கள் அ.சவுந்தரராசன், இ.முத்துக்குமார் உள்ளிட்ட 319 பேர் அக் டோபர் 9ந் தேதியன்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
* கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வெளியே வராமல் தடுக்க, பேருந்துகள் உடைத்தது உள்ளிட்ட 4 கடும் குற்றவியல் பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு, சிறைக் குள்ளேயே மீண்டும் மீண்டும் கைது செய்து அடைக்கப்பட்டனர்.
* நீதிமன்றத்திற்கு அழைத்து வருகிற போது கை விலங்கு போட்டு அழைத்து வந் தனர். 15 தினங்களுக்குப் பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது உள்ளிட்ட போலீஸ் தாக்குதலை அன்றைய திமுக அரசும் பன் னாட்டு நிறுவனங்களும் கூட்டாக தொடர் தாக்குதலை தொடுத்தன.
* ஃபாக்ஸ்கான் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேருக்கு ஒரு வருடம் கடந்த பிறகும் இன்று வரை அவர்களுக்கு நிர்வாகம் வேலை வழங்க மறுத்து வருகிறது.
* ஆளும் வர்க்கமும், பன்னாட்டு நிறுவ னங்களும் அவர்கள் நினைத்தபடி போராட் டத்தை ஒடுக்கவும், தொழிற்சங்க இயக்கத் தை அச்சுறுத்தி தடுக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் இந்த ஒரு வருட காலத்தில் தோல்வியிலேயே முடிந்தன.
* கம்யூனிஸ்ட்டுகள் ரோட்டில் நடமா டவே முடியாது என்றவர்கள், ஆட்சியை இழந்தார்கள். திருப்பெரும்புதூர் உள்ளிட்ட அந்த மாவட்டம் முழுவதிலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் அவர் களை தோற்கடித்தனர்.
* ஃபாக்ஸ்கான் போராட்டத்திற்கு பிறகு 2011 பிப்ரவரியில் சான்மினா நிறுவனத்தில் நடைபெற்ற முப்பது நாள் வேலை நிறுத்தம் வெற்றி பெற்றதுடன் சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் போராடவும் கூட்டம் கூடவும் தொழிலாளர்களுக்கு உரிமை உண்டு என்பதுடன், இதில் காவல்துறையோ, அரசோ, நிர்வாகமோ தலையிடக்கூடாது என்ற நீதிமன்றத்தின் மூலமான உத்தரவு களையும், உரிமைகளையும் இப்போராட்டம் பெற்றுக் கொடுத்துள்ளது.
* கடந்த ஒரு வருடத்தில் ஃபாக்ஸ்கான் போராட்டத்திற்கு பிறகு 15 க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்க அமைப்புகள் உருவாகி விரிவடைந்து கொண் டிருக்கும் காட்சிகளை பன்னாட்டு நிறுவனங் களின் கண்கள் எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருக்கின்றன.
* தமிழகத்தில் புதியதாக ஆட்சிக்கு வந் துள்ள அதிமுக அரசு, புதிய பன்னாட்டு நிறு வனங்களின் வருகைக்காக நிலங்களை வழங்கவும், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வகை சலுகைகள் வழங்கவும் தனது கொள்கை அறிவிப்பாகவே அறிவித்துள்ளது.
* அந்த ஆலைகளில் உற்பத்திக்கு முக் கிய சக்தியாக விளங்கும் நமது தொழிலாளர் களின் சட்ட உரிமைகள் மற்றும் மனித உரி மைகளை இந்த ஆலைகளில் நிலை நாட்டு வது குறித்து அதிமுக அரசு மவுனம் சாதித்து வருவதில் இருந்து திரை விலக வேண்டி யுள்ளது.
* கூடுதல் நேர உற்பத்திக்கு தொழிலா ளர்களை கட்டாயப்படுத்துவது.
* எத்தனை ஆண்டுகள் வேலை செய்தா லும் வேலை நிரந்தரம் என்பது கிடையாது என்ற நிர்வாக நடைமுறை.
* ஆலையின் பிரதான உற்பத்திப் பொருட் களை ஆலைக்கு வெளியே உற்பத்திக்கு விடுவது மற்றும் ஒப்பந்த முறைக்கு விடுவ தும், மலிவான கூலிக்கு ஒப்பந்த முறை தொழிலாளர்களை வைப்பது.
* நோக்கியா நிறுவனத்தில் அம்பிகா போன்று இயந்திர விபத்துக்களால் நிகழும் உயிர்ப்பலிகள்-உறுப்பு இழப்புகள் உலகுக்கு வெளிவராமலேயே மறைக்கப்படும் சம்பவங் கள், காவல் நிலையங்களில் கூட இவர்களை கைது செய்ய இயலாத நிலைமைகள்.
* தொழிலாளர் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த மறுப்பது.
* தொழிற்சங்கங்களை அங்கீகரிக்காமல் தொழிலாளர்களை மிரட்டுவதும் நிர்வாகம் தனது அராஜக சட்டங்களை திணிப்பதும் உள்பட அச்சம் நிறைந்த சூழலில் தொழிலா ளர்கள் நவீன ஆலைகளில் வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளார்களா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது.
* தொழிலாளர் துறை-தொழிற்சாலை ஆய்வாளர் உள்ளிட்ட அரசு நிர்வாகம் செய லற்று, பன்னாட்டு நிறுவனங்களிடம் மண்டி யிட்டுக் கிடக்கிறது.
* தொழிலாளர் பிரச்சனைகள் மற்றும் சட்டம் அமலாக்கம் குறித்து விவாதிக்க பன் னாட்டு நிறுவனங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அழைத்தால் கூட, அக்கூட்டத் திற்கு வராமல் மாவட்ட ஆட்சியரை அவம திப்பது என தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை இந்த நிறுவனங்கள் நமது மண்ணில் நடத்தி வருகின்றன.
* பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் தொழில் அமைதி, நிலைநாட்டவும் தொழில் வளர்ச்சி யை உறுதி செய்திடவும், தொழிலாளர்கள் தாங் கள் மன அமைதியுடன் வாழவும், தாங்கள் செய்யும் வேலையை கவுரவமான வேலை யாக அமைத்துக் கொள்ளவும் தொழிற்சங்க அங்கீகாரச் சட்டத்தை தமிழகத்தில் உடனடி யாக கொண்டு வருவதே அதற்கு ஒரே வழி என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இதை தமிழக முதல்வரிடம் நேரிலும், சட்டமன்றத்திலும் சிஐடியு தலைவர்கள் தெளிவாக எடுத்து வைத்துள்ளனர்.
* ஆட்சியாளர்களிடமும், ஆலை நிறுவ னங்களிடமும் நாம் கோருவது, சட்டப்பூர்வ மான உரிமைகளையே தவிர, சட்டவிரோத மான சலுகைகள் அல்ல.
* ஃபாக்ஸ்கான் போராட்டம் அணைய வில்லை. அது மேலும் ஆயிரம் மடங்கு சக்தி பெற்று ஆயிரங்கால் பூதங்களாக உருவெடுத்து வருகிறது என்பதை ஆட்சியாளர்களும், பன் னாட்டு நிறுவனங்களும் உணர்ந்தால் நன்று.
-இ.முத்துக்குமார்
(நன்றி தீக்கதிர்)
0 comments:
Post a Comment