இது தீர்ப்பல்ல ...
ஆயுதத்தின் நுனி முனை.
கொடுமை தலைதூக்கும் போதெல்லாம்
வெட்டியெறியும் அரிவாளின் கோபம்.
காய்ப்பேறிய தழும்புகளில் கூட
ஆண்டுகள் பலவானாலும்
மருந்திட வைத்த
மார்க்சிஸ்ட்டுகளின் போர்க்குண சாட்சியம்.
நிராயுதபாணிகளின்
கெட்டிப்படுத்தப்பட்ட கண்ணீர்த் துளிகளின்
கலவையில் வடித்த
சுத்தியலின் தகர்த்தெறிப்பு.
ஜோடிப்புகள் ...
ஜோடனைகள் ...
துன்புறுத்தல்கள்
யாவையும் தாண்டி
பத்தொன்பது ஆண்டுகளுக்கு பின்பும்
கிடைத்த உரிமையின் உலைக்களம்.
உண்மையின் ஊர்வலத்தை ....
ஊடகங்கள் மறைக்கலாம்.
ஒரு போதும் மறைக்க முடியாது
நமது போராட்ட ஒளி வெள்ளத்தை.
ஆற்றாமையின் துயரில் புழுங்கும்
மக்கள் இதயங்களில்
நட்சத்திரமென நம்பிக்கையின் ஒளி பாய்ச்சிப் புறப்படுகிறது
சிவந்த நமது பயணம் ...
ஒவ்வொரு சொல்லிலும்
ஒவ்வொரு செயலிலும்
சுழல்கிறது அநீதிக்கெதிரான ஆயுதம்.
நீதிமன்ற வளாகத்திலிருந்து
பேரலையென கைகோர்த்து வரும்
எம் மக்களின் மகிழ்ச்சியில்
பட்டொளி வீசி பறக்கின்றன
செங்கொடிகள்.
ஆயுதத்தின் நுனி முனை.
கொடுமை தலைதூக்கும் போதெல்லாம்
வெட்டியெறியும் அரிவாளின் கோபம்.
காய்ப்பேறிய தழும்புகளில் கூட
ஆண்டுகள் பலவானாலும்
மருந்திட வைத்த
மார்க்சிஸ்ட்டுகளின் போர்க்குண சாட்சியம்.
நிராயுதபாணிகளின்
கெட்டிப்படுத்தப்பட்ட கண்ணீர்த் துளிகளின்
கலவையில் வடித்த
சுத்தியலின் தகர்த்தெறிப்பு.
ஜோடிப்புகள் ...
ஜோடனைகள் ...
துன்புறுத்தல்கள்
யாவையும் தாண்டி
பத்தொன்பது ஆண்டுகளுக்கு பின்பும்
கிடைத்த உரிமையின் உலைக்களம்.
உண்மையின் ஊர்வலத்தை ....
ஊடகங்கள் மறைக்கலாம்.
ஒரு போதும் மறைக்க முடியாது
நமது போராட்ட ஒளி வெள்ளத்தை.
ஆற்றாமையின் துயரில் புழுங்கும்
மக்கள் இதயங்களில்
நட்சத்திரமென நம்பிக்கையின் ஒளி பாய்ச்சிப் புறப்படுகிறது
சிவந்த நமது பயணம் ...
ஒவ்வொரு சொல்லிலும்
ஒவ்வொரு செயலிலும்
சுழல்கிறது அநீதிக்கெதிரான ஆயுதம்.
நீதிமன்ற வளாகத்திலிருந்து
பேரலையென கைகோர்த்து வரும்
எம் மக்களின் மகிழ்ச்சியில்
பட்டொளி வீசி பறக்கின்றன
செங்கொடிகள்.
-அ.இலட்சுமி காந்தன்
சாத்தூர்.
சாத்தூர்.
மக்கள் போராடும் களத்தில் வந்தால் நியாயங்கள் வென்றே தீரும். மார்க்சிஸ்டுகளின் போராட்டம் மக்களின் வாழ்வுரிமைக்காகவே. மீடியாக்கள் என்றும் காசுக்காகவே, முதலாளித்துவ சமூகத்தில்...மாறும் என்பதை தவிர அனைத்தும் மாறும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDelete