Saturday, October 1, 2011

தேர்வாணையம்... நடப்பது என்ன ?


தமிழ்நாடு தேர்வாணையம் என்பது தமிழகத்தில் அரசுப்பணிக்கு ஊழியர்களைத் தேர்வு செய்யும் ஓர் அமைப்பாகும். இது அரசியல் சாசனம் 316 முதல் 319 வரையுள்ள பிரிவுகளின்படி செயல்படுகிறது.

அரசுப்பணியில் ஆரம்பக்கட்டப் பணி யான இளநிலை உதவியாளர் முதல் துணை ஆட்சியர் நிலையில் உள்ள பணியாளர்கள் வரை அனைத்து நேரடி நியமனங்களையும் இத் தேர்வாணையமே தேர்வு செய்கிறது. அரசுப்பணிகளில் ஆரம்பக்கட்டப் பணியான இளநிலை உதவியாளர் போன்ற பணிகளுக்கு எழுத்துத்தேர்வும், குரூப் 2 முதலான பணி களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வும், குரூப் 1 ல் உள்ள பணிகளுக்கு முத னிலைத்தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர் காணல் தேர்வும் உள்ளன.1960 களில் 1:6 என்ற விகிதத்தில் விண்ணப்பிக்கும் நிலை மாறி தற்பொழுது 1:1000 என்ற அளவிலும், குரூப் 4 தேர்வுக்கு இது 90 களில் 1:700 ஆக வும் 90 களின் கடைசியில் 860 என்ற விகி தத்தில் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இவர்களில் பட்டதாரி கள், முதுநிலைப்பட்டதாரிகள் மற்றும் சட்ட பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் கலந்துகொண்டுள்ளனர். அதுபோலவே 6695 குரூப் 2 காலியிடங்களுக்கு 4 லட்சத்தி 80 ஆயிரம் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரி கள் மற்றும் மருத்துவப்படிப்பு முடித்தவர்கள் கூட தேர்வு எழுதியுள்ளனர். ஒருசில காலி யிடங்களுக்குக்கூட பல ஆயிரம் வேலை யில்லா பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இது வேலை தேடும் இளைஞர் பட்டாளத் தின் அடையாளங்கள்.

லட்சக்கணக்கில் பெறப்படும் விண்ணப் பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு எழுத அனு மதிச்சீட்டு வழங்குவது முதல், நியமன ஆணைகள் வழங்குவது வரையான அனைத் தும் தேர்வாணையத்தின் பணிகள் ஆகும். தேர்வுக்கு முன்பாக சிலருக்கு அனுமதிச் சீட்டு சென்றடைவதில்லை. இதனால் தேர்வு எழுதும் முன்பு மாவட்டங்களில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சென்று அனுமதிச்சீட்டிற்காக அலையும் நிலை அவ்வப்பொழுது ஏற்படுகிறது.

எழுத்துத்தேர்வில் வெற்றி பெறும் நபர்கள் நேர்காணலுக்கு தேர்வாணைய அலுவலகத் திற்கு அழைக்கப்படுகின்றனர். அங்கு வந்து காத்திருக்க இடமில்லாமல் கார் செட்டிலும் மரத்தடியிலும் அமர்ந்திருப்பது பரிதாபமான காட்சியாகும். சென்னை அரசினர் தோட்டத் தில் இருந்த சொந்த கட்டிடம் புதிய தலை மைச்செயலகத்திற்காக இடிக்கப்பட்ட நிலை யில் வணிக வரித்துறைக்காக கட்டப்பட்ட கிரீம்ஸ் சாலையில் தற்காலிகமாக செயல்படு கிறது. இங்கு அடிப்படை வசதிகள் உடனடி யாக செய்யப்படவேண்டும்.

அரசுத்துறைகளில் தேர்வாணையம் உட் பட இரண்டு லட்சம் காலியிடங்கள் தற் பொழுது உள்ளன. இக்காலியிடங்களை உட னுக்குடன் நிரப்புவதன் மூலம் வேலையில்லா இளைஞர்களின் வாழ்க்கைப் பிரச்சனையை விரைந்து தீர்க்க முடியும். இதனால் அரசு அலுவலகங்களில் மக்கள் பிரச்சனைகளும் விரைவில் தீரும்.

அரசுத்துறைகளில் ஏற்படும் காலியிடங் களை ஆண்டு தோறும் அதற்கென நிர்ணயிக் கப்படும் தேதியில், துறை தலைமையகங் களில் பெற்று குறிப்பிட்ட தேதியில் அறிவிப் புக்கள் வெளியிட்டு, குறிப்பிட்ட கால வரம்பிற் குள் தேர்வுகள் நடத்தி ஊழியர்கள் நியமனம் செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் தேர்வாணையத்திற்கு உண்டு.

நாடாளுமன்றம், நிர்வாகம், நீதி மற்றும் பத் திரிகை ஆகியவை ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் ஆகும். நாடாளுமன்றத்தில் இயற் றப்படும் சட்டங்களை நடுநிலையோடு அச்ச மின்றி அமல்படுத்தும் மிகப்பெரிய பொறுப்பு நிர்வாகத் துறைக்கு உள்ளது. அதில் குறை பாடுகள் இருந்தால் நீதி மன்றங்கள் அவை களை தீர்த்து வைக்கும். இம்மூன்று அமைப் புக்களில் தவறுகள் ஏற்பட்டால் அவைகளை சுட்டிக்காட்டும் கடமையும் பொறுப்பும் பத்திரி கைகளுடையது. மேற்கண்ட நான்கு தூண்க ளும் அரசியல் சாசனப்படி சுதந்திரமாகவும் அச்சமில்லாமலும் பாரபட்சமில்லாமலும் நடப் பதில்லை. அரசியல் நிர்ப்பந்தமும் ஊழலும் எங்கும் எதிலும் புகுந்து சுனாமியாய் சுழற்றிப் போட்டு விடுகிறது. இது இந்திய நாட்டின் இன்றைய சாபக்கேடு.

அரசு நிர்வாகத்தின் அங்கமான தேர்வா ணையம் மேற்சொன்ன சூறாவளியில் சிக்கித் தவிக்கிறது. இச்சூறாவளியில் சிக்காமல் ஆழ் கடல் போல் சலனமின்றி செயல்பட்டு, தமிழ கத்திற்கு சிறந்த நிர்வாக அமைப்பை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். பாரபட்சமற்ற தேர்வால் அவர்கள் ஆட்சிப்பணியில் நடு நிலையோடு செயல்படமுடியும்.

ஊழல் என்பது மேலிருந்து கொட்டும் அருவி போன்றது என்று கலைஞர் கருணா நிதி அவர்கள் கூட ஒரு முறை தெரிவித்துள் ளார். இக்கருத்து 100 சதவீதம் உண்மை என்பது மத்திய அமைச்சர்கள் தில்லி திகார் சிறையில் உள்ளதன் மூலம் நிரூபணம் ஆகி யிருக்கிறது. பணியாளர்கள் தேர்விலும் ஊழல்கள் நடப்பதாக செய்திகள் தெரிவிக் கின்றன. இது கவலை அளிக்கும் நிகழ்வாகும்.

தேர்வாணையத்தில் நடந்துள்ள ஓர் முறைகேடு சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந் துள்ளது. (2000-2001 ம் ஆண்டு) தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் (குரூப் -1) தொகுதி ஒன்றில் 91 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்வு களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்று உயர்நீதிமன்றத்தில் ஏ.பி.நடராஜன் மற்றும் எஸ்.மாதவன் ஆகியோர் தொடுத்த வழக்கு றுஞ சூடி. 17969/ 2004 மற்றும் றுஞ சூடி.19851/04 தீர்ப்பு நாள் 10.7.2009 வழக்கும் அதனை எதிர்த்து செய்துகொள்ளப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் றுஹ சூடி.1287/09 மற்றும் றுஹ.சூடி. 1063/09 தீர்ப்பு நாள் 4.3.2011 மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 91 பதவி களுக்கு நடைபெற்ற தேர்வுகளில் எட்டு நபர்கள் தேர்வு மட்டுமே சரியானது என்றும் 83 நபர்கள் தேர்வாணைய விதிகள் மற்றும் தேர்வு முறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றும் எனவே அவர்களது தேர்வு செல் லாது (ளநவ யளனைந) எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள் ளது. தேர்வு எழுதியவர்களின் வினாத்தாள் களை மறு மதிப்பீடு செய்து தகுதியானவர்க ளுக்கு பணியிடம் வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதி மன்ற பெஞ்ச் தீர்ப்பளித் துள்ளது. இந்நேர்வில் றுஞ எண். 482/05 ல் இத் தேர்வு குறித்து மத்திய புலனாய்வுத் துறை யின் விசாரணை கேட்டும் வழக்கு தொடரப் பட்டுள்ளது. வழக்கு உச்சநீதி மன்றத்திற்கு சென்றுள்ளது. இவர்கள் அடுத்தகட்ட பதவி உயர்வும் பெற்றுவிட்டனர். அநேகமாக இந்திய ஆட்சிப்பணி (ஐஹளு) அந்தஸ்து கூட பெற்று விடுவார்கள்.

உச்சநீதிமன்றத்தில் 83 நபர்களும் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்ச நீதிமன்றம் தடையேதும் விதிக்கவில்லை.

முறையான தேர்வெழுதியும் பணியிடம் கிடைக்காமல் பாதிப்புக்குள்ளாகியுள்ள 83 நபர்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது ? எவ்வித மான தவறுகளும் இல்லாமல் முதலிலேயே தேர்வு செய்யும் நடைமுறையிருந்தால் இது போன்ற பிரச்சனைகளும் வழக்குகளும் எழாதே. இவர்களுடைய தேர்வு செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் இவர்கள் பணியில் இருப்பதும் நிர்வாக ரீதியில் இவர்கள் கோப்புக்களில் ஆணைகள் வெளியிட அனுமதிப்பதும் சரியா?

இது “ ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்று உதாரணமாக எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு தேர்வும் அதன் தேர்வு முடிவுகளும் நியமனமும் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தால்?

இதுபோன்று தவறுகள் நடந்தால் தேர்வாணையத்தின் மீது எவ்வாறு நம்பகத் தன்மை ஏற்படும். எல்லோரும் பண மூட்டை களோடு தானே அங்கே முற்றுகையிடு வார்கள்.

கேரள மாநில தேர்வாணையத்தில் தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை என்பது உள்ளது. அங்கு தேர்வு முடிந்தவுடன் கேள்விகளுக்கான பதில்கள் தேர்வாணை யத்தின் இணையதளத்தில் வெளியிடப்படு கிறது. தேர்வு எழுதியவர் தான் நன்றாக தேர்வு எழுதியும் மதிப்பெண் குறைந்துள்ள தாகக் கருதினால், அவர் எழுதிய விடைத் தாள்களை வாங்கி பரிசீலித்துக்கொள்ளமுடி யும். இச்செயல் முறையான தேர்வு முறையை உத்தரவாதப்படுத்துகிறது.

இவ்வாறான நடைமுறை தமிழ்நாட்டில் இல்லை. அனேகமாக தகவல் உரிமைச்சட் டத்தின் கீழ் கேட்டால் கூட இங்கு வழங்கப் படுவதில்லை. நீதி மன்றங்களுக்கு சென் றால் கூட உடனடித்தீர்வு கிடைப்பதில்லை.

தமிழ்நாடு தேர்வாணையத்தில் ஒரு தலைவர் (ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி.) மற்றும் 14 உறுப்பினர்கள் உள் ளனர். இவர்கள் ஆட்சியாளர்களின் விருப்பத் திற்கு ஏற்பவே நியமனம் செய்யப்படுகின்ற னர். அவர்களும் தங்களின் செல்வாக்கைச் செலுத்தி இப்பதவிகள் பெறுவதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.

தேர்வு செய்யப்படும் தேர்வாணைய உறுப் பினர்கள் நேர்மையானவர்களாகவும் சட் டத்தை மதிப்பவர்களாகவும் ஒழுக்கமானவர் களாகவும் ஊழலில் ஈடுபடாதவர்களாகவும் இருக்கவேண்டும். அரசியல் நிர்ப்பந்தங்க ளுக்கு அடிபணியாதவர்களாக இருக்க வேண்டும். அரசும் அதன் அமைச்சர் பெரு மக்களும் இவர்களது நியமனத்தில் தலை யிடக்கூடாது.

சமீபத்தில் தேர்வாணையத்தின் செயலா ளராக த.உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண் டாம் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக பத் திரிகை மற்றும் சட்டசபையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் நேர்மை யானவராக அறியப்பட்ட அவருக்கு ஒத்து ழைப்பு கொடுக்கக்கூடாது என்றால், நேர் மையை அவர் வலியுறுத்துவதாலா? அவர் நேர்மையை வலியுறுத்துவதால் தான் என் றால் தேர்வாணையத்திற்கு அவரைப் போன்ற நேர்மையானவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். அதுவும் உடனடியாக. உதயசந் திரன் அங்கு தற்பொழுது நியமிக்கப்பட்டுள் ளது ஓர் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தி யுள்ளது.

தேர்தல் ஆணையம் போல, இந்திய தலைமை தணிக்கை அலுவலகம் (ஊடிஅயீவசடிடடநச யனே ஹரனவைடிச ழுநநேசயட) போல அதிகாரம் கொண்ட ஓர் ஆணையமாக தேர்வாணையம் அமைக்கப்பட வேண்டும். ஊழல் எங்கு நடைபெற்றாலும் அதனைத் தட்டிக்கேட்கும் நிலை வர வேண்டும். குறிப்பாக தேர்வா ணையத்தில் அனுமதிக்கப்படவே கூடாது. 

-மா.அண்ணாதுரை
கட்டுரையாளர், மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு)

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)