கர்நாடக மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் பாஜகவால் அரசு நிர்வாகம் மட்டுமல்ல,
இயற்கை ஆதாரவளங்களும் அழிந்து, பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு
பெல்லாரி மாவட்டத் தை உதாரணமாகச் சொல்லலாம். 10 ஆண்டுகளுக்கு முன்னர்
பூத்துக்குலுங்கும் சோலைவனமாகத்தான் இருந்தது. இந்த மண் ஜனார்த்தன ரெட்டி
சகோ தரர்கள் வரும் வரைதான் பெல்லாரி இயற்கை கிரா மமாக இருந்தது. சாதாரண
சைக்கிளில் வியாபாரம் பார்த்த ஜனார்த்தனரெட்டி, இன்று பல ஆயிரம் கோடிக்கு
சொந்தக்காரர் ஆகிவிட்டார். ஆனால் பெல்லாரி தான் ஏழையாகிவிட்டது. எங்கு
பார்த் தாலும் மணல் தோண்டிக்கிடக்கிறது. குடிசைகள் இருந்த இடத்திலும்,
இரும்புத் தாதுக்காக வீடு பிரிக்கப்பட்டு மண் தோண்டப்பட்டு இருக்கிறது.
2006ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை, 3 கோடி டன் இரும்புத்தாது முறைகேடாக
ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜனார்த்தன ரெட்டியின் ஓபுளாபுரம்
சுரங்க நிறுவனம் 72 லட்சம் டன் இரும்புத்தாதுவை முறைகேடாக ஏற்றுமதி
செய்திருக்கிறது.
தென்னிந்தியாவில் முதன்முறையாக பதவி ஏற்ற பாஜக ஆட்சியின் முதல்வர் என்ற பெருமை பி.எஸ்.எடியூரப்பாவிற்கு கிடைத்தது. ஆனால் முதல்வர் என்பதை மறந்து, சுரங்க முறைகேடு நிறுவனங்களுடன் கைகோர்த்து, பெல்லாரியை நிலைகுலையச் செய்துவிட்டார் எடியூரப்பா. கமி ஷன் ஏஜெண்டு போல, சட்டவிரோத சுரங்கப் பணிகளுக்கு தலையசைத்து இருக்கிறார். ஜே.எஸ். டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் செயல் பட்ட துணை நிறுவனமான சவுத் வெஸ்ட் சுரங்க நிறுவனம் ரூ.10 கோடியை பிரேரனா கல்வி அறக்கட்டளைக்கு அளித்தது. இந்த அறக்கட்ட ளைக்கு எடியூரப்பாவின் மகன்கள் தான் டிரஸ்டி களாக உள்ளனர். 0.4 எக்டேர் நிலத்தை இந்த டிரஸ் டிடம் சவுத் வெஸ்ட் நிறுவனம் வாங்கியது. சந்தை மதிப்பைவிட, ரூ.4 கோடியை கூடுதலாக கொடுத்து, இந்த நிலத்தை அந்த சுரங்க நிறுவனம் வாங்கிய விஷயம் பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்தது. சவுத் வெஸ்ட் நிறுவனம் எடியூரப்பா மகன்களின் கல்வி அறக்கட்டளைக்கு தாராளமாக நிதி உதவி யது. தங்களது இரும்புத்தாது கொள்ளை யை-முறைகேட்டை எடியூரப்பா அரசு கண்டுகொள்ளா மல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சவுத் வெஸ்ட் நிறுவனம் கோடிக்கணக்கில் எடியூரப்பா குடும்ப அறக்கட்டளைக்கு கொட்டிக் கொடுத்தது. கர்நாடகத்தில் சட்டவிரோத சுரங்கப் பணிக்கு மைய நபர்களாக ரெட்டி சகோதரர்களும், அவரது நெருங்கிய கூட்டாளி ஸ்ரீராமுலுவும் இருந்தனர். விதிமுறைகளை கடுமையாக மீறிய நபர்களாக இவர்கள் உள்ளனர் என்று லோக் அயுக்தா தனது விசாரணை அறிக்கையில் கடுமையாக கண்டித் திருந்தது. ரெட்டி சகோதரர்கள் மற்றும் ஸ்ரீராமுலு வுக்கு ஏஎம்சி (அசோசியேட் மைனிங் கம்பெனி) என்ற சுரங்க நிறுவனம் உண்டு.
இந்த நிறுவனம் முறைகேடாக எவ்வளவு இரும்புத்தாதுவை ஏற்றுமதி செய்ய முடியுமோ, அந்த அளவிற்கு ஏற்றுமதி செய்தது. ரெட்டி சகோத ரர்களும், ஸ்ரீராமுலுவும் எடியூரப்பாவின் அமைச் சரவையில் அமர்ந்துகொண்டு, பெல்லாரியை தனி ராஜ்யமாக நிர்வாகம் செய்தனர். இந்த நிர்வாகத்தில் ரெட்டி குடும்பம்தான் மன்னர் குடும்பம் போல அதி காரம் செலுத்தி வந்தது. இவர்களது ஓபுளாபுரம் மைனிங் கம்பெனி (ஓஎம்சி) பெல்லாரி துறைமுகம் வழியாக ரூ.216 கோடி வரி ஏய்ப்புடன் முறைகேடாக இரும்புத்தாதுவை ஏற்றுமதி செய்துள்ளது. இவர் கள் தங்களது நிறுவனமான ஏஎம்சி மற்றும் ஓஎம்சி நிறுவனங்களுக்கான உரிமங்களை புதுப்பித்த முறையும் முறைகேடான வழியிலேயே இருந்தது. ரெட்டி முறைகேடாகவே வாழ்க்கையை நடத்தி, வெளிஉலகிற்கு, பணம் படைத்தவராக தன்னை உயர்த்திக்கொண்டபோதும்,லோக் அயுக்தாவின் கடுமையான குற்றச்சாட்டால், சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கிக்கொண்டார். காலை டிபனுக்கு கூட, பெங்களூரில் இருந்து பெல்லாரிக்கு ஹெலி காப்டரில் பறந்துவரும் ஜனார்த் தன ரெட்டி, சிபிஐ கைது நடவடிக்கையின் போது, பல மணி நேரம் தார்ச்சாலையில் பயணிக்கும் வண்டியிலேயே போலீஸ் காவலுடன் கொண்டுசெல்லப்பட்டார். இந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் அவருக்கு ஹைதராபாத் சிறைவாசம்தான். ரெட்டிக்கு சொந்த பூமி ஆந்திராதான். அங்கு அவரது இளவயது வாழ்க் கை மிக சாதாரணமாகவே இருந்தது. ஏழைக்குடும் பத்திற்கு என்ன வசதி கிடைத்துவிடப்போகிறது? அதேபோன்ற நிலையில் தான் தற்போது மாடி வீட்டு ஏழையாக, ஜனார்த்தன ரெட்டி சாதாரண சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். ரெட்டி சகோதரர்கள் மற்றும் இதர சுரங்க நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து 2007-08ம் ஆண்டு லோக்அயுக்தா அறிக்கையிலேயே கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டுகொண்ட ரெட்டி சகோதரர்கள் போன்ற சுரங்க முதலாளிகள் எலி வளையை தோண்டுவது போல, பெல்லாரியை குதறித்தள்ளி இயற்கை வளத்தை உறிஞ்சி இருக்கிறார்கள். கிடைக்கிற வரை ஆதாயம் என சுரங்க நிறுவனங் கள் தோண்டி எடுத்ததில் பெல்லாரி பாலை வன மாகியிருக்கிறது. விவசாய பூமி என்பது கடந்த கால மாகிவிட்டது.பெல்லாரி இரும்பு தூசியாகி விட்டது. முறைகேடான சுரங்கப்பணிக்கு நிறுவ னங்கள் 50 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தன. இந்த முறைகேட்டை தடுக்க, சில சுரங்க நிறு வனங்களுக்கு தடைவிதிக்கப்பட்ட போது, விவசா யத்தில் இருந்து சுரங்கப்பணிக்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் திகைத்து இருக்கிறார் கள். அன்றா டம் கிடைக்கும் சம்பளத்தை எண்ணி ஏங்கும் தொழிலாளர்கள் தங்களது பழைய விவசாய விளை நிலத்தை ஏக்கத்துடன் பார்க்கிறார்கள். விவசாய நிலம் மிகவும் பரிதாபமாக ஏழைத் தொழிலாளரை போலவே உருகி உருக்குலைந்து கிடக் கிறது. முறைகேடான சுரங்கப் பணிகளால் பெல்லா ரியில் 45 சதவீத வனப்பகுதி அழிந்து இருக்கிறது என மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர் அதிகா ரக்குழு கண்டறிந்திருக்கிறது. பெல்லாரியில் 128 இரும்புத்தாது சுரங்கங்கள் உள்ளன. இதில் 98 தாது சுரங்கங்கள் வனப்பகுதியிலேயே உள்ளன.
சுரங்க முறைகேடுகளில் கோடிக்கணக்கில் பணம் குவிக்க, அவர்களது சட்டவிரோத நடவடிக் கைகளுக்கு சில கர்நாடக அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் திரைமறைவில் ஆதரவு காட்டியதால், பெல்லாரி மாவட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் எல்லாமே பறிக்கப் பட்டிருக்கிறது.
தென்னிந்தியாவில் முதன்முறையாக பதவி ஏற்ற பாஜக ஆட்சியின் முதல்வர் என்ற பெருமை பி.எஸ்.எடியூரப்பாவிற்கு கிடைத்தது. ஆனால் முதல்வர் என்பதை மறந்து, சுரங்க முறைகேடு நிறுவனங்களுடன் கைகோர்த்து, பெல்லாரியை நிலைகுலையச் செய்துவிட்டார் எடியூரப்பா. கமி ஷன் ஏஜெண்டு போல, சட்டவிரோத சுரங்கப் பணிகளுக்கு தலையசைத்து இருக்கிறார். ஜே.எஸ். டபிள்யூ நிறுவனத்தின் நிதி உதவியுடன் செயல் பட்ட துணை நிறுவனமான சவுத் வெஸ்ட் சுரங்க நிறுவனம் ரூ.10 கோடியை பிரேரனா கல்வி அறக்கட்டளைக்கு அளித்தது. இந்த அறக்கட்ட ளைக்கு எடியூரப்பாவின் மகன்கள் தான் டிரஸ்டி களாக உள்ளனர். 0.4 எக்டேர் நிலத்தை இந்த டிரஸ் டிடம் சவுத் வெஸ்ட் நிறுவனம் வாங்கியது. சந்தை மதிப்பைவிட, ரூ.4 கோடியை கூடுதலாக கொடுத்து, இந்த நிலத்தை அந்த சுரங்க நிறுவனம் வாங்கிய விஷயம் பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்தது. சவுத் வெஸ்ட் நிறுவனம் எடியூரப்பா மகன்களின் கல்வி அறக்கட்டளைக்கு தாராளமாக நிதி உதவி யது. தங்களது இரும்புத்தாது கொள்ளை யை-முறைகேட்டை எடியூரப்பா அரசு கண்டுகொள்ளா மல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் சவுத் வெஸ்ட் நிறுவனம் கோடிக்கணக்கில் எடியூரப்பா குடும்ப அறக்கட்டளைக்கு கொட்டிக் கொடுத்தது. கர்நாடகத்தில் சட்டவிரோத சுரங்கப் பணிக்கு மைய நபர்களாக ரெட்டி சகோதரர்களும், அவரது நெருங்கிய கூட்டாளி ஸ்ரீராமுலுவும் இருந்தனர். விதிமுறைகளை கடுமையாக மீறிய நபர்களாக இவர்கள் உள்ளனர் என்று லோக் அயுக்தா தனது விசாரணை அறிக்கையில் கடுமையாக கண்டித் திருந்தது. ரெட்டி சகோதரர்கள் மற்றும் ஸ்ரீராமுலு வுக்கு ஏஎம்சி (அசோசியேட் மைனிங் கம்பெனி) என்ற சுரங்க நிறுவனம் உண்டு.
இந்த நிறுவனம் முறைகேடாக எவ்வளவு இரும்புத்தாதுவை ஏற்றுமதி செய்ய முடியுமோ, அந்த அளவிற்கு ஏற்றுமதி செய்தது. ரெட்டி சகோத ரர்களும், ஸ்ரீராமுலுவும் எடியூரப்பாவின் அமைச் சரவையில் அமர்ந்துகொண்டு, பெல்லாரியை தனி ராஜ்யமாக நிர்வாகம் செய்தனர். இந்த நிர்வாகத்தில் ரெட்டி குடும்பம்தான் மன்னர் குடும்பம் போல அதி காரம் செலுத்தி வந்தது. இவர்களது ஓபுளாபுரம் மைனிங் கம்பெனி (ஓஎம்சி) பெல்லாரி துறைமுகம் வழியாக ரூ.216 கோடி வரி ஏய்ப்புடன் முறைகேடாக இரும்புத்தாதுவை ஏற்றுமதி செய்துள்ளது. இவர் கள் தங்களது நிறுவனமான ஏஎம்சி மற்றும் ஓஎம்சி நிறுவனங்களுக்கான உரிமங்களை புதுப்பித்த முறையும் முறைகேடான வழியிலேயே இருந்தது. ரெட்டி முறைகேடாகவே வாழ்க்கையை நடத்தி, வெளிஉலகிற்கு, பணம் படைத்தவராக தன்னை உயர்த்திக்கொண்டபோதும்,லோக் அயுக்தாவின் கடுமையான குற்றச்சாட்டால், சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கிக்கொண்டார். காலை டிபனுக்கு கூட, பெங்களூரில் இருந்து பெல்லாரிக்கு ஹெலி காப்டரில் பறந்துவரும் ஜனார்த் தன ரெட்டி, சிபிஐ கைது நடவடிக்கையின் போது, பல மணி நேரம் தார்ச்சாலையில் பயணிக்கும் வண்டியிலேயே போலீஸ் காவலுடன் கொண்டுசெல்லப்பட்டார். இந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் அவருக்கு ஹைதராபாத் சிறைவாசம்தான். ரெட்டிக்கு சொந்த பூமி ஆந்திராதான். அங்கு அவரது இளவயது வாழ்க் கை மிக சாதாரணமாகவே இருந்தது. ஏழைக்குடும் பத்திற்கு என்ன வசதி கிடைத்துவிடப்போகிறது? அதேபோன்ற நிலையில் தான் தற்போது மாடி வீட்டு ஏழையாக, ஜனார்த்தன ரெட்டி சாதாரண சாப்பாட்டை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். ரெட்டி சகோதரர்கள் மற்றும் இதர சுரங்க நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து 2007-08ம் ஆண்டு லோக்அயுக்தா அறிக்கையிலேயே கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டுகொண்ட ரெட்டி சகோதரர்கள் போன்ற சுரங்க முதலாளிகள் எலி வளையை தோண்டுவது போல, பெல்லாரியை குதறித்தள்ளி இயற்கை வளத்தை உறிஞ்சி இருக்கிறார்கள். கிடைக்கிற வரை ஆதாயம் என சுரங்க நிறுவனங் கள் தோண்டி எடுத்ததில் பெல்லாரி பாலை வன மாகியிருக்கிறது. விவசாய பூமி என்பது கடந்த கால மாகிவிட்டது.பெல்லாரி இரும்பு தூசியாகி விட்டது. முறைகேடான சுரங்கப்பணிக்கு நிறுவ னங்கள் 50 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தன. இந்த முறைகேட்டை தடுக்க, சில சுரங்க நிறு வனங்களுக்கு தடைவிதிக்கப்பட்ட போது, விவசா யத்தில் இருந்து சுரங்கப்பணிக்கு வந்த ஏழைத் தொழிலாளர்கள் திகைத்து இருக்கிறார் கள். அன்றா டம் கிடைக்கும் சம்பளத்தை எண்ணி ஏங்கும் தொழிலாளர்கள் தங்களது பழைய விவசாய விளை நிலத்தை ஏக்கத்துடன் பார்க்கிறார்கள். விவசாய நிலம் மிகவும் பரிதாபமாக ஏழைத் தொழிலாளரை போலவே உருகி உருக்குலைந்து கிடக் கிறது. முறைகேடான சுரங்கப் பணிகளால் பெல்லா ரியில் 45 சதவீத வனப்பகுதி அழிந்து இருக்கிறது என மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர் அதிகா ரக்குழு கண்டறிந்திருக்கிறது. பெல்லாரியில் 128 இரும்புத்தாது சுரங்கங்கள் உள்ளன. இதில் 98 தாது சுரங்கங்கள் வனப்பகுதியிலேயே உள்ளன.
சுரங்க முறைகேடுகளில் கோடிக்கணக்கில் பணம் குவிக்க, அவர்களது சட்டவிரோத நடவடிக் கைகளுக்கு சில கர்நாடக அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் திரைமறைவில் ஆதரவு காட்டியதால், பெல்லாரி மாவட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் எல்லாமே பறிக்கப் பட்டிருக்கிறது.
-எஸ்.பிரேம்குமார்
(நன்றி தீக்கதிர்)
0 comments:
Post a Comment