Wednesday, May 18, 2011

வெளிநாடுகளுக்கு வேகமாக வெளியேறும் இந்திய வரி பணம்


சர்வதேச நிதியத்தில் (ஐஎம்எப்) பொருளாதார வல்லுநராகப் பணியாற்றிய தேவ்கர் என்பவர் தலைமையிலான குழு ஒன்று சர்வதேச அளவில் நிகழும் நிதித்துறை முறை கேடுகளை ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி விடுதலை பெற்ற இந்தியாவில் 1948 முதல் 2008 வரையிலான காலத்தில் 21300 கோடி டாலர் அளவுக்கு பணம் (ரூபாய்க்கணக்கில் 9,58,500 கோடி ரூபாய்) இந்தியாவிலிருந்து வரி செலுத்தப்படாமல் கடத்தப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையில் 68 சத வீதம் அதாவது சுமார் 6,20,000 கோடி 1991ம் ஆண்டுக்குப்பின் வெளியேறியுள்ளது. 

அதாவது 1991ம் ஆண்டில் நரசிம்மராவ் அமைச் சரவையில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் உலகமயக் கொள்கைகளை அதிரடியாக இந்தியாவில் புகுத்திய பிறகே இது நிகழ்ந்துள்ளது. ஆக 60 ஆண்டுகளில் கடத்தப்பட்ட பணத்தில் 3ல் 2பங்கு 20 ஆண்டு களில் உலகமயக்கொள்கைகள் அமலாக்கப் பட்டபோது வெளியேற்றப்பட்டுள்ளது. மற்றொரு புள்ளி விபரமும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதாவது 1991க்கு முன்பு வெளிநாடுகளுக்கு சராசரியாக கடத்தப்பட்ட பணம் சதவீத அடிப்படையில் 9.1 என்றால் உலகமயக்கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய பிறகு அது 16.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2002 முதல் 2006 வரையிலான நான்கு ஆண்டுகளில் அதாவது பாஜக மற் றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி நடைபெற்ற ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 72000 கோடிரூபாய் வெளியேறியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுருட்டப்பட்ட பணம் 14 வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளி யாகியுள்ள செய்தியும் இதற்குப் பொருத்தமானதாக உள்ளது .

முன்னாள் திட்டக்குழு உறுப்பினரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான எஸ்.பி சுக்லா கூறுகிறார்- நான் நேரடியாக கண்ணுற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இதில் வியப்படைய எதுவுமில்லை. தாராளமயக்கொள்கைகள் அமல்படுத்துதல் துவங்கப்பட்ட பிறகு ஊழல் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்ததற்குக் காரணம் - சந்தையே அரசாங்கத்துக்குள் நுழைந்ததனால்தான். அரசாங்கக் கொள்கைகளையும், அரசு நிர்ண யிக்க வேண்டிய விலைகளையும் தொழில் நிறுவனங்களே தீர்மானிக்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டன. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடுவது மற்றும் அரசு நடவடிக்கைகளில் தொழில் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன என்பது மட்டுமல்ல. அவை அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டு மொத்த ஆட்சி அமைப்புமுறைக்குள்ளேயே நுழைந்து விடுகின்றன.

அமைப்பு முறைக்குள்ளேயே அவை தலையிடுவதற்கு பாஜக ஆட்சிக்கால அனுபவம் ஒன்றை சுக்லா உதாரணமாகக் குறிப் பிட்டுள்ளார். பாஜக ஆட்சிக்காலத்தில் அலைபேசி சேவையை நடத்துவதற்கான அனுமதியை அளிப்பதற்கு ஏலமுறைதான் முதலில் பின்பற்றப்பட்டது. பல பெரும் தொழில் நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்று அனுமதியைப் பெற்றிருந்தன. ஆனால் அந்த ஏலத்தொகைக்கு லாபம் ஈட்ட முடி யாது என்பதை அவை உணர்ந்த பிறகு, மீண் டும் அரசாங்கத்துடன் பேசி லைசென்ஸ் முறைக்கு மாறுவதற்கு அரசாங்கத்தை அவை இணங்க வைத்து விட்டன. அதனால் ஏலத்தொகையை விட குறைந்த விலைக்கு அலைபேசி சேவையைத் தொடரஅந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அர சாங்கம் என்ன செய்திருக்க வேண்டும் ? ஏலத்தொகையைக் கட்ட முடியாத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து விட்டு, அவைகளின் உரிமங்களை ரத்து செய்திருக்கவேண் டும். ஏலத்தில் பங்கேற்ற பிற திறமையான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்க வேண்டும் அல்லது மறு ஏலம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் ஏல நிபந்தனைகளை நிறைவேற்றாத தொழில் நிறுவனங்களே குறைந்த கட்டணத்தில் அலை பேசி சேவை யை நடத்த அனுமதிக்கப்பட்டன. இந்த முறை கேடான முன்மாதிரியைத்தான் நானும் கடைப்பிடித்தேன். குற்றம் எதனையும் இழைக்கவில்லை என்ற பல்லவியை கீறல் விழுந்த ஒலி நாடாவைப்போல ஆ.ராசா மீண்டும் மீண்டும் பாடிவந்தார்.

பொருளாதார தாராளமயமாக்கலுக்கு ஆதரவாக லாவணி பாடிவந்த தொழில் நிறுவனங்கள், உலகமய, தாராளமயம் கொள்கைகள்தான் லஞ்ச லாவண்ய லைசென்ஸ் பர்மிட் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுத்து விட்டதாக வித்தாரம் பேசிவந்தன. ஆனால் கூர்ந்து கவனித்தால் தாராளமய யுகத்தில் ஊழலுக்கான பாதைகள்தான் மாறியுள்ளன என்றும், அதன் பிரம்மாண்டத்தையும் அது எட்டும் தொலைவையும்தான் அதிகரித்துள்ளன என்கிறார் சுக்லா. ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரம்மாண்டம் சுக்லாவின் கூற்றை மெய்ப்பிக்கிறது அல்லவா? பர்மிட் லைசென்ஸ் ஆட்சி யின் போது லஞ்ச ஊழல்கள் திரை மறைவில் நடைபெற்றன. அவை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் இப்போது இதெல்லாம் சகஜமப்பா என்ற பார்வை அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் மத்தியில் காணப்படுகிறது. அதனை சட்டப் பூர்வமாக்குவதைத் தவிர மற்ற அனைத்தையும் அவர்கள் செய்து விட்டார்கள்.

இந்தியாவில் ஊழலை உச்ச மட்ட அள வுக்கு கொண்டு சென்றது உலகமய, தாராள மயக் கொள்கைகளே என்று குறிப்பிடும் முன்னாள் மத்திய கண்காணிப்பு ஆணையர் என்.விட்டல் பின்வருமாறு கூறுகிறார்:- தாராளமயக்கொள்கைகள் பிரம்மாண்டமான ஊழலுக்கு இட்டுச்சென்றுள்ளன. முந்தைய பர்மிட்-லைசென்ஸ் ஆட்சியமைப்பில் ஊழல் என்பது சில்லரை வணிகம் போல நடத்தப்பட்டது. ஏனெனில் அப்போது தனி நபர்கள் உரிமங்களைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். தாராளமயமாக்கல் கொள்கையின் அமலாக்கத்துக்குப்பிறகு பிரம்மாண் டமான ஊழல்கள் மூலம்தான் அரசியல்வாதிகளால் பணம் சம்பாதிக்க முடிகிறது. அதற் கேற்ற வகையில் கொள்கைகளை வகுப்பதன் மூலமே அது சாத்தியமாயிற்று. தாராளமயமாக் கலுக்குப் பிறகு முதலாளித்துவ சந்தையே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. எனவே தான் ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக் போன்றவர்களின் ஊழலை நாடு எதிர்கொண்டது. நாடும் மக்களும் எதிர்கொண்டு வரும் பல்வேறு பிரச்சனைகளுக்குக் காரணமான உலகமயக் கொள்கைகளையும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கொள்கை களையும் முறியடித்து மக்கள்நலன்களை உயர்த்திப்பிடிக்கும் கொள்கைகளுக்காகப் போராடுவதே நம் முன் உள்ள ஒரேவழியாகும். 

-------- நன்றி கி.இலக்குவன் .. தீக்கதிர் நாளிதழ்

1 comment:

  1. உங்கள் ப்ளாக் பற்றிய விமர்சனம் செய்தீயில் வெளியாகியுள்ளது...

    http://inthiya.in/thee/?p=15

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)