தனது அருமை மகனுக்கு முதல் வகுப்பு படிப்பதற்கே பணம் கட்ட முடியவில் லையே என்று மனம் உடைந்து போன தாய், மண்ணெண் ணெய் ஊற்றி தீக்குளித்து விட் டார். காப்பாற்றப் போன அப் பெண்ணின் கணவரும் படுகாய மடைந்தார். கோவையில் நடந் துள்ள இந்த பரிதாப சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மசக்காளிபாளை யத்தில் வசித்து வருபவர் தர்ம ராஜ். இவரது மனைவி சங்கீதா (29). தர்மராஜ் பஞ்சு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளி யாகவும், சங்கீதா கட்டிடத் தொழிலாளியாகவும் வேலை செய்தனர். இவர்களுக்கு தர் ஷன் என்ற 5 வயது மகன் உள் ளார். கடந்த புதனன்று இரவு சங்கீதா சமையலறையில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரை உடனடியாக பதறிச் சென்ற தர்மராஜ் காப்பாற்ற முயன்றுள்ளார். படுகாயம டைந்த கணவன், மனைவி இருவரையும் அக்கம் பக்கத் தினர் உடனடியாக அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் வியாழனன்று இரவு சிகிச்சை பலனின்றி சங்கீதா இறந்துவிட்டார்.
சிகிச்சையின் போது கோவை, இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் சங்கீதா மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
நானும் என் கணவரும் காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். இரு வருமே வேலைக்குச் சென்று வந்தோம். எனது கணவர் எந் தக் கெட்ட பழக்கமும் இல் லாதவர். இவரது சம்பளத்தை அப்படியே என்னிடம் கொடுத் துவிடுவார். எங்கள் இருவரின் வருமானத்தையும் கொண்டு, எங்களது அன்பு மகன் தர்ஷ னை உப்பிலிபாளையத்தில் உள்ள பெர்க்ஸ் பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி படிக்க வைத்தோம். எங்கள் வருமா னத்தில் பெரும் பகுதி பள் ளிக்கு கட்டணம் செலுத்துவ திலேயே கரைந்து போனது. இந்தாண்டு முதல் வகுப்பில் என் மகன் தர்ஷனை சேர்க்க ரூ.12 ஆயிரம் கட்டணம் செலுத் துமாறு கூறினர். அதில் கஷ்டப்பட்டு ரூ.5 ஆயிரம் கட்டி விட்டோம். மீதிப்பணத் தை கட்ட வழி தெரியவில்லை. ஒரு மகனைக் கூட படிக்க வைக்கப்பணம் இல்லையே என்று மனம் வெறுத்து தீக் குளித்தேன். இவ்வாறு சங் கீதா தெரிவித்துள்ளார்.
இந்த பரிதாபம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி களின் கட்டணத்தை வரை முறைப்படுத்த நீதிபதி கோவிந் தராஜன் குழு கடந்தாண்டு கட்டண நிர்ணயம் செய்து, இதன்படி உப்பிலிபாளையம் பெர்க்ஸ் பள்ளிக்கு எல்.கே. ஜிக்கு ரூ.3558 யுகேஜிக்கு ரூ. 3558 என்றும் முதல் வகுப்பிற்கு ரூ. 4190 என்றே நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. இதுவரை அரசு இந்த கட்டண நிர்ண யத்தை மாற்றாத நிலையில், அப்பள்ளி ரூ.12 ஆயிரம் கட்டு மாறு நிர்பந்தித்து உள்ளதாகத் தெரிகிறது. அந்தப் பள்ளிக்கு பன்னிரண்டாம் வகுப்பிற்கே ரூ.11000 தான் அதிக பட்ச கட் டணமாக நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
தனியார் பள்ளிகளின் வரைமுறையற்ற கட்டணக் கொள்ளையால் சங்கீதா தற் கொலை செய்து கொண்ட சம் பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
கோவை மசக்காளிபாளை யத்தில் வசித்து வருபவர் தர்ம ராஜ். இவரது மனைவி சங்கீதா (29). தர்மராஜ் பஞ்சு குடோனில் சுமை தூக்கும் தொழிலாளி யாகவும், சங்கீதா கட்டிடத் தொழிலாளியாகவும் வேலை செய்தனர். இவர்களுக்கு தர் ஷன் என்ற 5 வயது மகன் உள் ளார். கடந்த புதனன்று இரவு சங்கீதா சமையலறையில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரை உடனடியாக பதறிச் சென்ற தர்மராஜ் காப்பாற்ற முயன்றுள்ளார். படுகாயம டைந்த கணவன், மனைவி இருவரையும் அக்கம் பக்கத் தினர் உடனடியாக அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் வியாழனன்று இரவு சிகிச்சை பலனின்றி சங்கீதா இறந்துவிட்டார்.
சிகிச்சையின் போது கோவை, இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் சங்கீதா மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
நானும் என் கணவரும் காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். இரு வருமே வேலைக்குச் சென்று வந்தோம். எனது கணவர் எந் தக் கெட்ட பழக்கமும் இல் லாதவர். இவரது சம்பளத்தை அப்படியே என்னிடம் கொடுத் துவிடுவார். எங்கள் இருவரின் வருமானத்தையும் கொண்டு, எங்களது அன்பு மகன் தர்ஷ னை உப்பிலிபாளையத்தில் உள்ள பெர்க்ஸ் பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி படிக்க வைத்தோம். எங்கள் வருமா னத்தில் பெரும் பகுதி பள் ளிக்கு கட்டணம் செலுத்துவ திலேயே கரைந்து போனது. இந்தாண்டு முதல் வகுப்பில் என் மகன் தர்ஷனை சேர்க்க ரூ.12 ஆயிரம் கட்டணம் செலுத் துமாறு கூறினர். அதில் கஷ்டப்பட்டு ரூ.5 ஆயிரம் கட்டி விட்டோம். மீதிப்பணத் தை கட்ட வழி தெரியவில்லை. ஒரு மகனைக் கூட படிக்க வைக்கப்பணம் இல்லையே என்று மனம் வெறுத்து தீக் குளித்தேன். இவ்வாறு சங் கீதா தெரிவித்துள்ளார்.
இந்த பரிதாபம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி களின் கட்டணத்தை வரை முறைப்படுத்த நீதிபதி கோவிந் தராஜன் குழு கடந்தாண்டு கட்டண நிர்ணயம் செய்து, இதன்படி உப்பிலிபாளையம் பெர்க்ஸ் பள்ளிக்கு எல்.கே. ஜிக்கு ரூ.3558 யுகேஜிக்கு ரூ. 3558 என்றும் முதல் வகுப்பிற்கு ரூ. 4190 என்றே நிர்ணயம் செய் யப்பட்டுள்ளது. இதுவரை அரசு இந்த கட்டண நிர்ண யத்தை மாற்றாத நிலையில், அப்பள்ளி ரூ.12 ஆயிரம் கட்டு மாறு நிர்பந்தித்து உள்ளதாகத் தெரிகிறது. அந்தப் பள்ளிக்கு பன்னிரண்டாம் வகுப்பிற்கே ரூ.11000 தான் அதிக பட்ச கட் டணமாக நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
தனியார் பள்ளிகளின் வரைமுறையற்ற கட்டணக் கொள்ளையால் சங்கீதா தற் கொலை செய்து கொண்ட சம் பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
(தீக்கதிர்)
0 comments:
Post a Comment