பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் மாநிலப் பேரரங்கு செவ்வாயன்று ( மே 10) சென்னையில் நடைபெற்றது. இதில், பொதுப்பள்ளி மூலம் கல்வி உரிமை கோரும் மக்கள் இயக்கத்தை என்.சங்கரய்யா தொடங்கி வைத்து பேசியது வருமாறு:
தமிழகத்தில் சமச்சீர் கல்விக்காக பாடத்திட் டத்தை ஒருங்கிணைத்துள் ளோம். இதில் குறைகள் இருப்பின் அவற்றை சரி செய்து செழுமைப்படுத்த வேண்டும். சமச்சீர் பாடத் திட்டத்தை உலகத்தரத்திற்கு உயர்த்த வேண்டும். அடுத்து வரக்கூடிய அரசு கல்வியா ளர்களை கலந்தாலோசித்து இதனை செய்ய வேண்டும்.
தாய்மொழி வழிக்கல்வி மூலமே சிறந்த சிந்தனையாளர்களை அதிகளவில் உருவாக்க முடியும். சென்னை பள்ளிகள் பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ளன. பெண்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாரதியின் கனவுகள் மெல்ல மெல்ல நிறைவேறி வருகிறது. ஏழ்மையும், வறுமை யும் கல்விக்குத் தடையாக இருக்காது என்பதையே சமீபத்திய தேர்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் சாதாரண மக் களும் உயர்ந்த இடத்தை அடைவார்கள்.
அரசு நியமித்துள்ள கல்விக் கட்டணக்குழு தனது முடிவை அறிவிப்பதற்கு முன்பே அதை ஏற்பதா? இல்லையா? என தனியார் பள்ளிகள் மிரட்டுகின்றன. முன்பெல்லாம் செல்வந்தர் கள் பள்ளிகளைத் தொடங்கி இலவச கல்வி கொடுத்தார் கள். தற்போது கொள்ளைய டிப்பதற்காகவே பள்ளிகளை தொடங்குகிறார்கள். எல்கேஜி படிப்பிற்கு 40ஆயி ரம் கட்டணம் கேட்கிறார் கள். கல்லூரிகளிலும் லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள். இது கொள்ளை யல்லவா? இதனை தடுக்க வேண்டாமா? செல்வந்தர் கள் பணம் செலுத்தி தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியும். சாதாரண உழைப்பாளி மக்களால் முடியுமா?
கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். அதுதான் ஜனநாயகம், மாநில சுயாட்சி. கல்வி என் பது மாநில அரசின் ஏகபோக உரிமையாக இருக்க வேண்டும். மத்திய அரசு ஆலோசனை மட்டுமே அளிக்க வேண்டும்.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகங்களில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் தமிழிலேயே உள்ளன என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்தேன். அதே போன்று தமிழகத்திலும் கொண்டு வர வேண்டு மென்று அன்றைக்கிருந்த அமைச்சரிடம் கோரி னோம். தாய் மொழி வழிக் கல்வி மாணவர்களின் அடிப் படை உரிமை என்பதை அரசு உணர வேண்டும்.
மத்திய அரசு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 6விழுக்காட்டை கல்விக்காக ஒதுக்க வேண்டும். மாநில அரசும் தனது நிதிநிலை அறிக்கையில் கணிசமான அளவிற்கு ஒதுக் கீடு செய்ய வேண்டும். இடை நிற்றலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக் கைகளையெல்லாம் வென் றெடுக்க கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் களை ஒருங்கிணைப்ப தோடு, கிராமம் கிராமமாக சென்று மக்களை அணி திரட்ட வேண்டும்.
0 comments:
Post a Comment