தமிழகத்தில் இன்றைக் கும் கிராமப் பகுதிகளில் தான் பல இடங்களில் தீண் டாமைக் கொடுமைகளைப் பார்க்க முடியும். அது போன்ற கொடுமைகளை வட இந்தியாவில் தில்லி உள்ளிட்ட பெருநகரங் களில் சர்வசாதாரணமாக காண முடியும்.
பகத்சிங் பிறந்த பஞ்சாப் மண்ணில் பிறந்த ஜஸ்பிரீத் சிங், ஒரு தலித் மாணவன். தான் ஒரு டாக்டராக வேண் டும் என்பதைவிடப் பெரிய ஆசை ஒன்றும் அவனுக்குக் கிடையாது. ஜஸ்பிரீத் சிங் சண்டிகரில் உள்ள அரசி னர் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தான். நான்காண் டுகள் படிப்பை முடித்து இறுதி ஆண்டு வரை வந்து விட்டான். அதுவரை எந்தப் பாடப்பிரிவிலும் அவன் தவறியதே கிடையாது.
நன்கு மதிப்பெண்கள் எடுத்து சிறந்த மாணவனாக முன்னேறி வந்தான். ஆயி னும். இறுதியாண்டு வரும் போதுதான் மிகவும் கொடூ ரமான முறையில் பழிவாங் கப்பட்டான்.
அவனது துறைத் தலை வர் அவனிடம் “நீ உன் சாதிச் சான்றிதழை வைத்து மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்திருக்கலாம். ஆனாலும் டாக்டர் பட்டம் பெற்று உன்னை வெளியேற நான் விட மாட்டேன்.’’ என்று கூறியுள்ளார். மருத் துவப்படிப்பில் மிகவும் முக்கிய பாடப்பிரிவான ‘கம்யூனிடி மெடிசன்’ என் னும் பாடப் பிரிவில் அவனை ‘பெயில்’ ஆக்கினார். அதன்பின் தான் ‘பாஸ்’ ஆகி வெளியேற முடியாது என்று தெரிந்து கொண்ட ஜஸ்பிரீத் சிங் தற்கொலை செய்து கொண் டான்.
இவ்விவரங்களை அவன் தன்னுடைய தற்கொலைக்கான காரணங்கள் குறித்து எழுதிவைத் துள்ள குறிப்பில் தெரிவித்திருக்கிறான். பின்னர் ஜஸ்பிரீத் சிங்கின் நண் பர்கள் இவ்விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, ஜஸ்பிரீத் சிங்கின் விடைத் தாள்களை மறு ஆய்வு செய்ய வைத்துள்ளனர்.
இதனை மறு ஆய்வு செய்த ‘கம்யூனிடி மெடிசன்’ பாடப் பிரிவைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்கள், ஜஸ்பிரீத் சிங் நன்றாகத் தேர்வு எழுதியிருப்பதைப் பார்த்து, அவனுக்கு ‘பாஸ்’ மார்க் வழங்கியுள்ளார்கள். ஆயினும் இன்றைய தினம் வரை இவ்வாறு ஜஸ்பிரீத் சிங் சாவுக்குக் காரணமான துறைத் தலைவர் மீதோ அல்லது அந்த நிர்வாகத்தின் மீதோ எந்த நடவடிக்கையும் அரசுத்தரப்பில் எடுக்கப் படவில்லை.
ஜஸ்பிரீத் சிங்கின் சகோ தரியும் தன் சகோதரனுக்கு இழைக்கப்பட்ட கொடு மையைத் தாங்கிக் கொள் ளாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதேபோன்று, பால் முகுந்த் என்னும் மாணவன் புதுதில்லி, எய்ம்ஸ் எனப் படும் ஆல் இந்தியா இன்ஸ் டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவக் கல் லூரியில் படித்து வந்தான். அவனும் தற்கொலை செய்து கொண்டான். பால் முகுந்த் தற்கொலைக் குறிப்பு எது வும் எழுதி வைக்கவில்லை என்ற போதிலும், தன்னை ஆசிரியர்கள் சாதியைச் சொல்லி வேதனைக்குள் ளாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்றும், தான் டாக்டரானபின் இவர்களின் துன் புறுத்தல்களிலிருந்து தப்பித் துக் கொள்வதற்காக, வெளி நாட்டுக்குச் சென்றுவிடு வேன் என்றும் கூறிக் கொண் டிருந்தான் என்று அவனது பெற்றோர்கள் கூறினர்.
‘இன்சைட் ஃபவுண்டே ஷன்’ என்னும் தலித் மாண வர்கள் ஆய்வுக் குழு ஒன்று சமீபத்தில் புலனாய்வு மேற் கொண்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தலித் மற்றும் பழங்குடி இனத் தைச் சேர்ந்த 18 பேர் இவ் வாறு தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று கூறியிருக்கிறது. (ந.நி.)
0 comments:
Post a Comment