சுருக்கமாகச் சொல்வதென்றால், ஜனநாயகப் புரட்சியின் மீதான இந்த கடுமையான தாக்குதல் என்பது புராதன பிற்போக்கு சக்தி களால் மட்டும் ஏற்படுவதில்லை. மாறாக இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளுக் குப்பங்கம் விளைவிக்க முயலுகின்ற, வலிமைவாய்ந்த, மேலும் மேலும் இந்திய செல்வங்களை கொள்ளையடிக்க முயலு கின்ற ஏகாதிபத்தியத்துடன் கை கோர்த்துக் கொண்டு தன்னுடைய நிலையை தூக்கி நிறுத்த முயலும் இந்திய நாட்டின் “நவீன” பெரும் முதலாளித்துவ சக்திகளினாலும் ஏற் படுகிறது. இப்படி சொல்வதனால், “நவீன தாராளமயமாக்கலுக்கு” முந்தைய கால கட்டத்தில் இருந்த முதலாளித்துவ சக்திகள் மக்களின் ஜனநாயக உரிமைகளைத் துண் டாட முயலவில்லை என்று பொருளாகாது. அவையும் முயன்றன. உதாரணமாக இருண்ட கால கட்டமாகிய “அவசர நிலை” பிறப்பிக்கப் பட்டபோது இந்தியாவில் எடுக்கப்பட்ட முயற் சிகளை கூறலாம். தற்போது இந்தியாவில் இதே முயற்சிகள் முறையாக, அதே நேரத்தில் துரித கதியில் அரங்கேற்றப்படுகின்றன. அத னால் இந்தியப் பொருளாதாரத்தின் இடை வெளியும் மேலும் மேலும் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
அரசியலமைப்பு ரீதியாக ஜனநாயக உரிமைகளை மக்கள் பெற்று அனுபவிக்க முடியும் என்ற சூழலில், இந்த பெரும் முதலா ளித்துவ சக்திகளால் எப்படி இத்தனை பெரிய ஏற்றத்தாழ்வுகளை, சமத்துவமற்ற நிலையை உருவாக்க முடிகிறது என்ற கேள்வி எழுவது நியாயமானதே. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இதுபோன்று ஜனநாயக உரிமைகளைப் பறிக்க அனுமதிக்கும் நடை முறை உத்திகள் எவை எவை என்ற கேள்வி யும் எழுகிறது.
உரிமைகளைப் பறிக்க முதலாளித்துவத்தின் உத்திகள்
முதலாவது உத்தி, அரசியலமைப்புச் சட் டத்தின்படி நாம் பெற்றுள்ள சில சம்பிரதாய மான ஜனநாயக உரிமைகளை வெட்டிச் சுருக் குவது. உதாரணமாக இந்திரா காந்தி அம்மை யார் அவசர நிலையை பிரகடனப்படுத்திய போது, ஒரு குறுகிய கால கட்டம் வரையில் இந்த முறையில் உண்மையாகவே வெற்றி கண்டார். ஆனால் கடைசியில் அவர் தோல் வியையே தழுவினார் என்பதை நாம் அறி வோம். அதேபோன்று பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டணி ஆட்சியில் இருந்தபோது அரசியல மைப்புச் சட்டத்திலேயே சில மாற்றங்களை செய்வதன் மூலம் ஜனநாயக உரிமைகளை வெட்டிக் சுருக்க முயன்று தோற்றுப்போனது. அதேபோன்று அவ்வப்போது சில நீதிபதிகள் தங்கள் பங்கிற்கு சில உத்தரவுகளை போடு கிறார்கள். உதாரணமாக பந்த் நடத்துவதற்கு தடை, வேலை நிறுத்த உரிமை மீது சில கட்டுப்பாடுகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை போன்றவை இதில் அடங்கும்.
இரண்டாவது உத்தி, வகுப்புவாத அடிப் படையிலான எதேச்சதிகார அரசினை வளர்த்தெடுப்பது. இது காலக்கி கூறியது போல “அடக்கி வைக்கப்பட்டுள்ள வெறி நாய்”க்கு ஒப்பாகும். ஏனென்றால் அது அவிழ்த்துவிடப்படும்போது, மிகப்பெரிய நாசத்தினை நாட்டில் ஏற்படுத்திச் செல்லும். கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கும்போதோ எங்கே அது அவிழ்த்துவிடப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இதன் காரணமாக வகுப்பு வாத அடிப்படையிலான அரசு அமையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் எழும். அது எங்கே கொண் டுவிடுகிறது என்றால், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவான ஆட்சியமைப் புடன் ஒத்துப்போகச் செய்துவிடுகிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக வளர்ந்துவரும் வேலையில்லாத் திண்டாட்ட மும், துன்பங்களும் வலதுசாரி அதி தீவிரவாத சக்திகளின் போக்கு வளர ஏதுவான செழிப் பானதொரு தளமாக மாறுகிறது. இது நவீன தாராளமயமாக்கல் இயற்கையாகவே ஏற் படுத்தி வைத்துள்ள நடைமுறை உத்தியாகும்.
மூன்றாவது உத்தி, ஒரு செயலை செய்ய உடன்பாடு இல்லாவிட்டாலும், சம்மதமின் மை இருந்தாலும், அதனை உள்ளீடாக ‘செய்யச் சொல்வது’, செய்ய மறுத்தால் அந்த சம்மதமின்மையையே சட்டத்தை மீறும் செயலாக உருவகம் செய்வது, உதாரணமாக இந்திய பொருளாதார சந்தையை அந்நிய நிதி மூலதனச் சூறாவளிக்குத் திறந்துவிடச் சொல் வது என்பது நவீன தாராளமயமாக்கலுக்கு உத விடும் செயலாகும். இதற்கு மாறாக ஏதேனும் மாற்று கொள்கைகளை செயல்படுத்த முனைந்தால், அந்நிய நிதி மூலதனம் பின் வாங்கி தனது சொந்த நாட்டிற்குச் சென்று விடும். இந்த அபாயத்தின் காரணமாக, அனைத்து அரசியல் அணிகளுமே தங்களு டைய கொள்கை திட்டமிடல்களை அதற் கேற்ற வகையில் திட்டமிடுகின்றன. எந்த ஒரு அணிக்கும் தற்போது நாட்டில் உள்ள ஏற்பாடுகளை தாண்டிச்செல்லும் அரசியல் துணிவு இல்லை. அரசியல் கருத்துக்கும் மேலாக “வளர்ச்சியை பாதுகாப்போம்” என் பது போன்ற முழக்கங்கள்தான் முன்வைக்கப் படுகின்றன. “நாம் அனைவரும் ஒன்றி ணைந்து நவீன தாராளமயத்துக்கு எழுத்துப் பூர்வமாக இசைவோம்” மற்றும் “நிதி மூல தனத்தை பெருக்க உழைப்போம்” என்ற கசப் பான உண்மையை நாசுக்காகச் சொல்வது தானே மேற்கூறிய சொல்லாடல். கொள்கை ரீதியாக இதைத்தானே அனைத்து அரசியல் அணிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. இப்படிப் பட்ட கொள்கைகளை “உள்ளடக்கம்” செய்ய மறுத்தால், இந்திய நாடு வல்லரசாக மாறு வதற்குரிய வாய்ப்புகளை நாசம் செய்த குற்றச் சாட்டுக்கு அந்த அணி ஆளாகிவிடும். அத னால் “தேச விரோதச் செயல்” புரிந்ததாகச் சித்தரிக்கப்படும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், கார்ப்பரேட் மீடியாக்களை பயன்படுத்தி, கார்ப்பரேட் மற்றும் நிதி முத லாளிகளின் நலன்களை “தேசத்தின் நலன்” என்று உருவகப்படுத்தி கணக்கிலடங்கா எண்ணிக்கையிலான பிரச்சாரங்கள் தொடர்ந்து கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
நான்காவது உத்தி என்பது, போலியாக மத சம்பந்தமான அடிப்படை உணர்வினை கிளப் பிவிட்டு, நவீன தாராளமயமாக்கலுக்கு ஆதர வாக, நவீன தாராளமயமாக்கலுக்கு முந்தைய கால கட்டத்தில் இருந்த சமூகக் கட்டமைப்பு களான “கட்டப் பஞ்சாயத்து(காப்)” போன்ற வற்றை மீண்டும் உயிர்பெறச் செய்வது. “கட்டப் பஞ்சாயத்து” போன்ற அமைப்புகளை முதலா ளித்துவ சக்திகள் மற்றும் முதலாளித்துவ சார்பு அரசியல் அணிகள் தங்களுக்கு சாதக மாகப் பார்க்கின்றன. ஒரு தனி நபர், அவர் ஆணோ, பெண்ணோ தன்னுடைய தனிப் பட்ட வாழ்க்கையில் எந்த மதத்தையும் சார்ந் திருப்பதற்கான உரிமை உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் போலியாக மத உணர்வினை தட்டி யெழுப்பி, மத ரீதியான பழக்க வழக்கங்களி லும், சடங்குகளிலும் அத்துமீறி தீய எண்ணத் துடன் நுழைவது என்பது சாதாரண மக்க ளின் வாழ்க்கையில் தலையிடுவதாகும். இந்த தலையீட்டின் மூலம் மக்களின் ஒற்றுமையை குலைப்பது மற்றும் அவர்களை அரசியல் படுத்துவதில் இருந்து தடுப்பதே நோக்கம்.
பெரும் முதலாளிகளின் திட்டம்
உண்மையில், மக்களை அரசியல் உணர் வற்றவர்களாக்கி, அவர்களது ஒற்றுமையை குலைத்து, அவர்களை முறைப்படி பயிற்சி பெறாதவர்களாக மாற்றி, அவர்கள் இந்த நாட் டின் குடிமக்கள் என்ற பொறுப்பினையே முழு வதுமாக திருடி, தங்களது ஜனநாயக உரிமை களை பாதுகாப்பதில் இருந்து மாறி அவர் களை பலவீனப்படுத்துவது என்பது தான் பெருமுதலாளிகளின் திட்டம். இந்த அத் தனை சீர்குலைவுகளையும் எதிர்ப்பது என்ப தில்தான் இடதுசாரிகளின் ஒப்பற்ற ஈடு இணையற்ற தன்மையே அடங்கியுள்ளது.
உண்மையில் இடதுசாரிகளின் திட்டம், இதற்கு நேரெதிராக மக்களை ஒற்றுமைப் படுத்துவதிலும், அவர்களை அரசியல்படுத் துவதிலும், அதன் மூலமாக அவர்களது ஜன நாயக உரிமைகளை பாதுகாக்க முயல்வதி லும் தான் அடங்கியுள்ளது. மக்களை அரசி யல்படுத்துவதன் மூலம் மட்டுமே அவர்களது ஜனநாயக உரிமைகளை தக்க வைக்க முடி யும் என்று இடதுசாரிகள் நம்புகின்றனர். சுருக் கமாகச் சொல்வதென்றால், இடதுசாரிகள் நமது நாட்டில் நீண்ட நெடிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியான, தொடர்ச்சியான பங்களிப்பினை ஆற்றிவந்துள்ளார்கள்; வருகிறார்கள். அதை நோக்கிப் பயணப்படுகிறார்கள்.
இடதுசாரிகளின் சிறப்பு
உண்மையில் இடதுசாரிகள், மக்களு டைய ஜனநாயகப் புரட்சியை அடக்க, நசுக்க நினைக்கும் எதிர்ப்புரட்சியை எதிர்த்து தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். மக்கள் ஜனநாயகப் பரட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார்கள். இது ஏதோ இடதுசாரிகளின் “நற்பண்பு” என்பதாலோ அல்லது “நல்ல அம்சம்” என்பதாலோ மட்டு மல்ல; இடதுசாரிகளின் அடிப்படைக் கொள் கை அமைப்பே இதனை முன்னிலைப்படுத் தியதாகும். இதர அனைத்து அரசியல் அணி களும் முதலாளித்துவ எல்லையைத் தாண்டி தங்களுடைய பார்வையை விசாலப் படுத்த தைரியமில்லாதவை. விருப்பமிருந்தா லும், இல்லாவிட்டாலும், பெரும் முதலாளிக ளின் திட்டத்திற்குட்பட்டு சிக்கலான நிலை யை அடைகின்றன. சில நேரங்களில் ஏதோ ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களை எதிர்த்தா லும்கூட, இறுதியில் அவற்றின் எதிர்ப்பென் பது பெரு முதலாளிகளின் அபிவிருத்திக்கு முன்பு பலவீனப்படுத்தப்பட்டு, பின்னர் அவற்றின் பங்கு என்பதே முற்றிலுமாகச் சிதைந்துபோகச் செய்யப்படுகிறது.
இவர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட் டவர்கள் இடதுசாரிகள். அவர்களால் முதலா ளித்துவ எல்லையைத் தாண்டி தங்களுடைய பார்வையை விசாலப்படுத்த முடியும். அவர் களால் தொடர்ந்து ஜனநாயக ரீதியாக செயல் பட முடியும். ஏனென்றால், நிதிமூலதனத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஏகாதிபத்திய முதலாளித்துவ சக்திகளுக்கும், போலியற்ற உண்மையான ஜனநாயகச் சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடு மட்டுமல்ல ; முத லாளித்துவத்தைத் தாண்டிச் செல்லும்போது ஏற்படும் முரண்பாட்டினை எதிர்கொள்ளவும் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக இடதுசாரிகளால் தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியாக நிற்க முடிகிறது; போராட முடிகிறது.
சிற்சில தவறுகள் ஏற்படுகிறபோதிலும், இந்திய நாட்டின் இடதுசாரிகள் தொடர்ந்து ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் விடாமல் பணியாற்றி வருகின் றனர். பழம்பெருமை பேசி பல்லாயிரம் ஆண்டு களாக நமது சமுதாயத்தில் புரையோடிப் போன, கட்டமைக்கப்பட்ட சமத்துவமற்ற சமு தாய நிலையை முறையாக அழித்தொழிப்ப தில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருப் பவர்கள் இடதுசாரிகள். சர்வதேச நிதி மூல தனத்தின் மேலாதிக்க நிலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர்கள் ; சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள மிக ஆழமான சமூக ஏற்றத் தாழ்வினை எதிர்த்துப் போராடி வருபவர்கள் ; மதவாத எதேச்சதிகாரத்தை எதிர்த்துப் போராடி வருபவர்கள் இடதுசாரிகள். ‘சட்டம் - ஒழுங்கு’ என்ற பெயரில், “கலவரங்களுக்கு எதிர் நட வடிக்கை” என்ற பெயரில், “வளர்ச்சி” என்ற பெயரில் சாதாரண மக்களின் ஜனநாயக உரி மைகளை நசுக்க முயற்சிக்கும் நடவடிக்கை களை எதிர்த்து இடதுசாரிகள் போராடி வரு கின்றனர். மேலும், அரசியலைப் பயன்படுத்தி மக்களை துண்டாடுவதை எதிர்த்தும், போலியாக மத உணர்வைத் தூண்டிவிட்டு மக்களை பிளவுபடுத்துவதை எதிர்த்தும் இடதுசாரிகள் போராடி வருகிறார்கள்.
எனவே, இடதுசாரிகளை பலவீனப்படுத் தும் எந்தவொரு முயற்சியும் நமது நாட்டின் ஜனநாயகப் புரட்சியை பலவீனப்படுத்துவதா கும். அது, இந்திய தேசத்தின் “நவீனத் துவத்தை” நோக்கிய பயணத்தை பலவீனப் படுத்துவதாகும். “நவீனத்துவத்தை” நோக் கிய இந்தியாவின் பயணத்திற்கு 8,9,10 மற்றும் 11 சதவீத பொருளாதார வளர்ச்சி தேவை யில்லை. மாறாக அதனுடைய தேவை, ஜன நாயகப் புரட்சியை முன்னெடுத்துச் செல் வதே. இதுதான் தகுந்த உரைகல்லாக முடியும். இந்த உரைகல்லை வைத்துத்தான் அனைத்து அரசியல் அணிகளும் மதிப்பிடப்பட வேண் டும். இந்த அளவுகோலின் அடிப்படையில், இடதுசாரிகள் தங்களுடைய பலவீனங் களைத் தாண்டி, அனைத்து அரசியல் அணி களையும் விட உயர்ந்தவர்களாக எழுச்சி பெற்று நிற்கின்றனர்.
தற்போது இடதுசாரிகளுக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்து வேகமாக ஒரு குவி மையத்தில் வளர்ந்து வருகின்றது. அவர் கள் தங்களை “முற்போக்கானவர்கள்” என்று கூறிக்கொண்டு, மேலே கூறப்பட்ட அத் தனை நடைமுறை உத்திகளையும் பயன் படுத்தி, விவாதங்களை முன் வைத்து, இடது சாரிகளை தாக்கி வருகின்றனர். இதைப் பேசும்போது, “சிங்கூர் என்னவாயிற்று” “நந்தி கிராமம் என்னவாயிற்று?” என்று எதிர்கேள்வி கேட்கிறார்கள்.
சிங்கூரைப் பற்றியும், நந்திகிராமத்தைப் பற்றியும் அதிகம் எழுதியாகிவிட்டது.
ஒரு நிகழ்ச்சியின் விளைவாக நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கும், ஜனநாயக உரிமை கள் குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படு வது என்பதற்கும் ஏராளமான வித்தியாசம் உள்ளது. இடதுசாரிகள் ஒரு போதும் தங் களுடைய வர்க்க நிலைப்பாட்டை குறிப்பாக மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மீதான நிலைப்பாட்டை மாற்றியதில்லை. மாற்றவும் மாட்டார்கள். உண்மையில், இடதுசாரிகள், உரிமைகளை வெட்டிக் குறைக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிராக ஒவ்வொரு நிலையிலும் செயல்பட்டுள்ளனர். (குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னணி செயல் வீரர்களை கொலைவெறியுடன் மூர்க்கத்தனமாக தாக்கிய மாவோயிஸ்ட்டு களின் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தபோதுகூட, அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் இடதுசாரிகள்).
அதேபோல, மேற்குவங்கத்தின் தேர்த லும் அரசியலும் வன்முறை கலந்தவையா கவே வர்ணிக்கப்படுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு அங்கு வலுவாகக் காலூன்றி உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான புதிய அணி ஆட்சிபீடத் தில் அமர்வதற்காக, இடதுசாரிகள் அல்லாத பிற கட்சிகள், வாக்கெடுப்பு நடக்கும்போது வன்முறையை நாடுவதன் காரணமாக இப்படி வர்ணிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் திரிணாமுல் தலைமையிலான அணி தன்னை நிலைப்படுத்திக்கொள்ள வாய்ப்பு இல்லாத நிலையில், இடைப்பட்ட காலத்தில் தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வது கடினம் என்பதால் வன்முறை யைக் கடைப்பிடிக்கின்றனர்.
மேற்குவங்கத்தில் அதிக அடியாள் பலமும், வன்முறை குணாம்சமும் இடதுசாரி களுக்கு உள்ளதாக பொய்ப்பிரச்சாரம் பரப்பப் படுகிறது. அப்படி இருந்தால், தனது எதிரணி கள் தனது அரணி லேயேகூட அதீதமான ஆக்கிரமிப்பை ஏற்படுத்தியபோதும், வன் முறை பலம் கொண்டு ஏன் இடதுசாரிகள் தடுக்கவில்லை என்பது கேள்வி.
இவையெல்லாம் தற்போதைய தேர்தல் களத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் இந்திய நாட்டில் இடதுசாரிகளின் எதிர்காலத்தின் மீது, இடது சாரிகளின் நடைமுறைகள் மீது, இடது சாரிகளின் நிலைப்பாட்டின் மீது, ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.எனவே, நவீன ஜனநாயக இந்தியா பாதுகாக்கப்பட இடதுசாரிகள் வெல்ல வேண்டும் ; வென்றே தீரவேண்டும்!
ஒரு தத்துவார்த்த கண்ணோட்டம் -பகுதி 2
0 comments:
Post a Comment