Tuesday, April 19, 2011

இடதுசாரிகள் ஏன் வெல்லவேண்டும்?


ஒரு தத்துவார்த்தக் கண்ணோட்டம் பகுதி 1

இருபதாம் நூற்றாண்டில் இந்திய நாடு ஒரு உண்மையான சமுதாய மாற்றத்தை அடைந்துள்ளது. பல்லாயிரமாண்டுகளாக “தொடுவதும் சமமாக வாழ்வதும் தவறு. ஏன், கண்ணால் பார்ப்பதே கூட தவறு” என்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் தீண்டாமைக் கொடுமைகளின் பல்வேறு வடிவங்களுடன் கட்டமைக்கப்பட்ட சமத்துவமற்ற சமுதாயம் தான் நமது இந்திய சமுதாயம். இந்த இரு பதாம் நூற்றாண்டிலே நீதியின் முன்பு சமத் துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த நாட் டின் குடிமக்களுக்கான உரிமைகள் அனைத் தும் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டுள் ளது. அதேபோன்று வாக்களிப்பதற்கு உரிய வயதை அடைந்த அனைவருக்கும் வாக்குரி மையும், குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகம் அனைவருக்கும் வழங்கப்பட்டு, தமது அரசாங்கத்தை தாங்களே தேர்ந்தெடுக் கும் உரிமையையும் இந்த சமுதாய மாற்றம் அளித்துள்ளது. உண்மையான சமத்துவம் என்பது வெகு தூரத்தில் இருக்கிறது என்றா லும், இந்த சமுதாய மாற்றத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. இந்த சமுதாய மாற்றமானது நமது நீண்ட கால ஜனநாயகப் புரட்சியை உருவாக்குவதில் ஒரு கணிசமான பங்கினை ஆற்றியுள்ளது.

சாதி எதிர்ப்பு போராட்டமும் காலனியாதிக்கப்போராட்டமும் தொடர்புடையவையே!

இந்தியாவில் ஜனநாயகப் புரட்சி என்பது இந்த இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய அளவிலே, இதுவரை வரலாறு காணாத வகை யிலே அலை அலையாக எழுந்த எழுச்சி யின் காரணமாக ஏற்பட்டதாகும். சுரண்டலுக் கும் அடிமைத்தனத்திற்கும் எதிராக பெரியா ரும், அம்பேத்கரும் நடத்திய சமூக இயக்கங் கள் மிகப் பெரிய அரசியல் போராட்டங்களாக பல்வேறு அவதார மாற்றங்களை இந்த கால கட்டத்தில் அடைந்துள்ளன. சாதி எதிர்ப்பு சமூகப் போராட்டங்களை நடத்திய தலைவர் கள் தங்களை இந்தியாவின் காலனி ஆதிக் கத்திற்கு எதிரான இயக்கங்களில் ஈடுபடுத் திக் கொள்ளவில்லை என்பதும், காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்திய தலைவர்கள் இந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் போதுமான அளவிற்கு அனுதாபம் காட்டவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் ஒடுக்கப் பட்ட மக்களிடையே இந்த இரண்டு இயக் கங்களிலும் அதிக ஆர்வமுள்ள பங்களிப்பு இருந்தது. அவர்கள் இந்த இரண்டு போராட் டங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்புடை யவை என்பதை மிகச் சரியாக புரிந்து கொண் டிருந்தனர். உண்மையில் காலனியாதிக்கத் திற்கு எதிரான போராட்டத்தின் வீச்சு என்பது போதுமான அளவு விரிவடையத் துவங்கியது என்பதே இப்படி அனைத்து விதமான குணாம்சங்களையும் உள்ளடக்கிய போராட் டமாக உருமாறிய பிறகுதான் என்பதும் மறுக்க முடியாது ; குறிப்பாக மேலே கூறப்பட்ட அனைத்து விதமான கட்டமைக்கப்பட்ட அசமத்துவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக் கும் முயற்சிகள் இணைக்கப்பட்ட பிறகுதான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் கார ணமாக சுதந்திர இந்தியாவின் அரசியல மைப்புச் சட்டத்திலும் இதற்குரிய சரியான அந்தஸ்து வழங்கப்பட்டது என்பதும் நாம் கவனிக்கத்தக்கது. இந்தியாவில் ஏற்பட்ட இந்த எழுச்சியானது சோவியத் ரஷ்யாவின் போல்ஷ்விக் புரட்சியினால் தாக்கம் பெற்று, எளிதில் அழிக்க முடியாத அளவிற்கு வலிமை பெற்றது. இதன் காரணமாகவும், சோவியத் யூனியன் கட்டமைக்கப்பட்ட வீர காவியம் உருவாக்கிய தாக்கத்தின் காரணமாகவும், ஒரு எழுச்சி இயக்கம் தோன்றியது. இந்த எழுச்சி இயக்கத்தில் இருந்து பிரிக்க முடி யாத அளவிற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பல செயல்வீரர்கள் மிகவும் அதிகமாக உருவாகினர். அவர்கள் அனைவரும் இணைந்து இடதுசாரி அமைப்பினை உருவாக்கினர்.

ஜனநாயகப் புரட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

இந்த ஜனநாயகப் புரட்சியானது தொடர் ந்து முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டி யது அவசியமாகும். இல்லையென்றால், இதில் ஒரு தொய்வு அல்லது சறுக்கல் ஏற் படுவது என்பது தவிர்க்க முடியாததாகிவிடும். புரட்சிகள் அசைவற்று நிற்பது இல்லை, நின்றும் போகாது. ஒன்று அவை தொடர்ந்து முன்னேறிச் செல்லும், அல்லது அவற்றிற்கு எதிரான எதிர்ப்புரட்சி சக்திகளால் நசுக்கப் பட்டுவிடும். இந்திய ஜனநாயகப் புரட்சி யானது இன்று நசுக்கப்படும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளது. ஜனநாயகப் புரட்சிக்கு எதிராக எதிர்ப்புரட்சி பலமடைந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பாட்டாளி வர்க்கத் திற்கெதிரான முதலாளித்துவ சக்திகளின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும்.

புராதன சமூக சக்திகள், மேலே குறிப் பிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட அசமத்துவ நிலைகளை பாதுகாப்பதிலும் உருக்கொடுப் பதிலும் முக்கிய பங்கு ஆற்றின என்பதும், அவை தீர்மானமாக சிதறடிக்கப்படும் விதத் தில் ஓங்கியடிக்கப்படவில்லை என்ற உண் மையும் நாம் அறிந்ததே. ஒடுக்கப்பட்ட மக்க ளுடைய பொருளாதார பலம் மற்றும் அதன் மூலம் பெறப்படும் சமூக பலம் என்பது, முக் கிய ஆதாரமான நிலத்தின் மீதான அவர்க ளுடைய உரிமையைப் பொறுத்தே அமையும். ஆனால், நிலத்தின் மீதான அவர்களுடைய உரிமையானது போதுமான அளவில் கொடுக் கப்படாமல் அவர்கள் நசுக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை நில உரிமை என்பது கிடைக்கப் பெற்றாலும், பழைய கட்டமைப்புகளை மாற்றுவது என்பது இன்னும் சாதிப்பதற்கரிய ஒரு இலக்காக உள்ளது என்பதோடு, அது சிறிது தாமதமாகத்தான் நிகழும் என்பதும் உண்மையே. ஆனால், இந்த நில உரிமைக் கான போராட்டம் என்பது நடைபெறாவிட் டால், ஜனநாயகப் புரட்சிக்கு எதிரான எதிர்ப் புரட்சி சக்திகளின் பலமானது தடையின்றி எந்தக் குறைவுமின்றி முன்னேறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கும். இருந்த போதும், முதலாளித்துவ சக்திகள் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தையும் மீறி தன்னுடைய தலைமையை தக்கவைத் துக் கொண்டுள்ளன. அதோடு மட்டுமல்லா மல் கூடவே, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் பொருளாதார மற்றும் சமூகத் தளங்களில் அரசாங்கக் கட்டுப்பாடு என்பது உத்திரவாதப்படுத்தப்பட்டு இருந்த நிலையிலிருந்து விலகி, அதற்குப் பதிலாக புதிய பொருளாதாரக் கொள்கைகளை பின் பற்றத் துவங்கியுள்ளனர். புதிய பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றத் துவங்கிய கால கட்டம் முதல் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டு பல படிகள் ஏகாதிபத்தியம் முன்னேறிச் செல்லவும் வழிவகுத்துள்ளனர். இதன் காரணமாக மிகக் குறுகிய கால கட் டத்திலேயே இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம், பொருளாதார ஏற்றத் தாழ்வு ஏற்பட்டுள்ளது. மத்தியதர வர்க்கத்தின் ஆதரவு பெற்றுள்ள மிகச் சிறிய எண்ணிக்கை யிலான நிதி மற்றும் கார்ப்பரேட் முதலாளி களுக்கும், இந்த நாட்டில் மிகப்பெரும் எண் ணிக்கையிலுள்ள தொழிலாளர்கள், விவசாயி கள், சிறு உற்பத்தியாளர்கள், விவசாயக் கூலி கள், கை வினைஞர்கள் மற்றும் முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள அத்தனை மக்களுக்கும் இடையிலான இடைவெளி மேலும் அகன்று போயுள்ளது. அவர்களுடைய வாழ்நிலை தாழ்த்தப்பட்டு வறுமையும் பசியும் பஞ்சமும் அதிகமாகிக் கொண்டே செல்வதை காண முடிகிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் தீவிரமடையும் சமூக இடைவெளியும்

இந்த இடைவெளியே, நாட்டிலுள்ள மிகப் பெரிய முதலாளித்துவ சக்திகள் தங்களை பலப்படுத்திக் கொள்ளவும் ஒன்று சேர்க்கவும் செய்கின்ற முயற்சியை தடுக்க முடியாததாக செய்துவிடுகிறது. அதே நேரம் இந்த முத லாளித்துவ சக்திகளால் வெகுகாலம் சுயாட்சி யுடன் இருக்க முடியவில்லை என்பதையும் நாம் காண்கிறோம். தற்போது சர்வதேச நிதி மூலதனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண் டுள்ள ஏகாதிபத்திய சக்திகளுடன் இணைந்து ஆட்சி புரிய இவை முயன்று வருகின்றன. இது அடிப்படையிலேயே இந்திய ஜனநாயகத் திற்கு விரோதமானதாக மாறும். நம்முடைய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கட்டியமைக்கப்பட்டுள்ள ஜனநாயக அமைப் பிற்குள் இந்த இடைவெளியை புகுத்தும் முயற்சியானது, நமது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளை தகர்ப்பதற்கு வழிவகுக்கும். அதாவது இந்தியாவில் மிக நீண்ட நாட்களாக நடைபெற்ற ஜனநாயகப் புரட்சிக்கு எதிரான எதிர்ப்புரட்சிக்கு வழிவகுக்கும்.


பிரபாத் பட்நாயக்

2 comments:

  1. அட பாவிங்களா! சாதி என்கிற நிலப்பிரபுத்துவ சமுதாய அடயாளத்தின் தன்மை இன்று எல்லா இடத்திலும் கலாச்சார,பண்பாடுரீதியில் இருக்கும்போது,ஜனநாயக புரட்சி நடந்துவிட்டது என்று சொல்ல உங்களால் எப்படிதான் முடிகிறதோ?

    ReplyDelete
  2. ரோபா நீங்கள் கட்டுரையாக முழுமையாக உள்வாங்கவில்லை என்றே கருதுகிறேன். சாதிய என்கிற நிலப்பிரபுத்துவ அடையாளத்தை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். மாற்று வலைப்பக்கம் துவங்கியதில் இருந்து தீண்டாமைக் கொடுமையையும், சாதி ஆதிக்க வெளிப்பாடுகளையும் பலமுறை அம்பலப்படுத்தியே வந்திருக்கிறோம். எனவே சாதி ஆதிக்கம் முடிந்துவிட்டது என்ற தொனியிலான கட்டுரையை மாற்று வலைப்பக்கத்தில் வெளியிடுவோமா என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்

    பிரபாத் பட்நாயக் சொல்லியிருப்பது என்னவென்றால்...

    பெரியார், அம்பேத்கர் போன்ற சமூகப் போராளிகளின் போராட்டமும், காலனியாதிக்க எதிர்ப்பு போராட்டங்களு ஒரு புள்ளியில் இணைவதே கட்டமைக்கப்பட்ட அசமத்துவத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதே.

    கீழ்க்காணும் பகுதியை எடுத்துக் காட்டியுள்ளேன். // சாதி எதிர்ப்பு சமூகப் போராட்டங்களை நடத்திய தலைவர் கள் தங்களை இந்தியாவின் காலனி ஆதிக் கத்திற்கு எதிரான இயக்கங்களில் ஈடுபடுத் திக் கொள்ளவில்லை என்பதும், காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்திய தலைவர்கள் இந்த சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் போதுமான அளவிற்கு அனுதாபம் காட்டவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். //

    //புரட்சிகள் அசைவற்று நிற்பது இல்லை, நின்றும் போகாது. ஒன்று அவை தொடர்ந்து முன்னேறிச் செல்லும், அல்லது அவற்றிற்கு எதிரான எதிர்ப்புரட்சி சக்திகளால் நசுக்கப் பட்டுவிடும். இந்திய ஜனநாயகப் புரட்சி யானது இன்று நசுக்கப்படும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளது. ஜனநாயகப் புரட்சிக்கு எதிராக எதிர்ப்புரட்சி பலமடைந்து வருகிறது.//

    எனவே ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே நமது கருத்தேயன்றி... ஜனநாயகப் புரட்சி முடிந்துவிட்டது என்பதல்ல.

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)