Thursday, April 14, 2011

புரட்சியாளர் அம்பேத்கர்




நோய்நாடி நோய் முதல்நாடி என்பது தானே மருத்துவ இலக்கணம். சாதியின் தோற்றுவாயைத் தெரிந்து கொள்ளாமல் சாதியை ஒழிக்கப் புறப்பட முடியுமா? ஆனால் சாதியை கற்பித்த நூல்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில் அல்லவா இருக்கிறது? சூத்திரன் படித்தாலே காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொன்ன மனுதருமம், பஞ்ச மன் அம்பேத்கரை சமஸ்கிருதம் படிக்க விடுமா? ஆனாலும் பாடத்திட்டத்தில் இல்லாத போதும், மனுதருமம் தடுத்த போதும் சமஸ்கிருதத்தையும், புத்த இலக்கியங்கள் இருந்த பாலி மொழியையும் கற்றுக் கொண்டார்.


சாதியைக் கற்பித்த மனுதருமத்தையும், பகவத் கீதையையும் படித்ததினால்தான் மனு தருமத்தைக் கொளுத்தினார். நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் எனச் சொன்ன கீதையை முட்டாளின் உளறல் என்றார்.


வாழிடம் வேறானால் நாடு பிரிக்கிறது. கடவுள் வேறானால் மதம் பிரிக்கிறது. பொருளாதார நிலை வேறானால் வர்க்கம் பிரிக்கிறது. மொழி, பண்பாடு வேறானால் இனம் பிரிக்கிறது. உடலமைப்பு வேறானால் பால் பிரிக்கிறது. ஆனால், ஒரே நாட்டில் வாழ்ந்து கொண்டு, ஒரே கடவுளை வணங்கிக் கொண்டு, ஒரே பொருளியல் நிலையில், ஒத்த மொழி மற்றும் பண்பாட்டுடன், ஒத்த உடல மைப்புடன் வாழும் மனிதர்களை எந்த அடிப் படைக் காரணியும் இன்றி பிரித்து வைக்கும் சாதி எனும் மிக மோசமான நிறுவனம் எந்த அறிவியல் அடிப்படையும் இன்றி மூவாயிரம் ஆண்டுகளாக நீடிப்பது குறித்து ஆழமாக ஆய்ந்து, சாதி என்பது பண்பாட்டு விழுமியமே அன்றி வேறில்லை என்றார்.


சாதியை வரையறை செய்த சமூகவியல் வல்லுனர்கள் நிறைய உண்டு. ஆனாலும், அடைபட்ட வர்க்கமே சாதிமுறை. சாதி ஒழிப்பின்றி இந்தியப்புரட்சி சாத்தியமில்லை என்ற அம்பேத்கரின் வரையறை முழுமையானது என்றால் மிகையாகாது.


சாதியின் தோற்றம் மற்றும் அதன் இருப்பு ஆகியவற்றோடு தனது ஆய்வை நிறுத்திக் கொள்ளாமல், சாதி ஒழிப்பு குறித்தும் விரிவான ஆய்வை மேற்கொண்டார். 1932ம் ஆண்டு வாக்கில் பஞ்சாப்பில் ஜாத்-பட்-தோடக் மண்டல் எனும் அமைப்பு ஏற்பாடு செய்த சாதி ஒழிப்பு மாநாட்டில் பேசுவதற்காக தயார் செய்து வைத்திருந்து பேச முடியாமல் போன உரையை சாதி ஒழிக்க என்ன வழி எனும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.


பின்னாளில் யாராவது என்னுடைய வழித்தோன்றல்கள் சொல்லிக் கொள்ள விரும்பினால், இந்த நூலைப் படித்து அதன்படி நடந்துகொள்ள வேண்டுமென்று அம்பேத்கர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மேற்கண்ட நூலை முழுவதும் படித்து சாரமாக்கிக் கூற விரும்பினால், இட ஒதுக்கீடு, அகமண முறை ஒழிப்பு, இந்து மத வெளியேற்றம் இம்மூன்றுமே சாதியை ஒழிக்கும் வழி என்பதேயாகும்.


இட ஒதுக்கீடு என்றால், 100 அரசு ஊழியர்களில் 18 பட்டியல் சாதியினரை அரசு ஊழியர் ஆக்குவது என்றும் அதன் வாயிலாக அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது என்றே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு தொழிலுக்கு ஒரு சாதி என நியதி கற்பித்த மனுதருமத்துக்கு மாற்றாகத்தான் இட ஒதுக்கீட்டு கோட்பாட்டை அம்பேத்கர் முன்வைத்தார். இட ஒதுக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அல்ல, மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார வர்க்க அடிமை நிலையிலிருந்து விடுவித்துக்கொள்ளவே என்ற முதல் நோக்கில் இட ஒதுக்கீட்டை சாதி ஒழிப்புக்கு முதல் நிபந்தனையாக்கினார்.


சாதி அமைப்பினால் பாதிக்கப்பட்டோ ரையும் கூட சாதி அமைப்பைக் கட்டிக்காக்க வைத்ததுதான் சாதிய அமைப்பு முறையின் விந்தையான கட்டுமானம். தனக்கு மேலே எத்தனை சாதி இருந்தாலும் தனக்குக் கீழே ஏதாவது ஒரு சாதி இருந்தாலும் போதும் என்ற கழிசடையான திருப்தி மனநிலைதான் இன்றளவும் சாதியைத் தக்க வைத்து நீடித்து நிலைக்கச் செய்திருக்கிறது. தன் மீது திணிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, வன்கொடுமைகளுக்கு எதிராக, இழிவுகளுக்கு எதிராக மூர்க்கமாக போராடும் பட்டியலிடப்பட்ட சாதியினர் கூட தன் சக பட்டியல் சாதியினரோடு திருமண உறவு கொள்வதில்லை. திருமண உறவுகளில் சாதித் தூய்மை கடைப்பிடிக்கிற தூய்மை வாதம் நீடிக்கிறவரை சாதி ஒழிப்பு என்பது கானல் நீரே என்று உணர்ந்த அம்பேத்கர் அவர்கள், அகமண முறை ஒழிப்பை சாதி ஒழிப்புக்கு இரண்டாம் நிபந்தனையாக்கினார். பொதுவாக எல்லா மதங்களும் மக்களை இணைக்கும். நாடு, மொழி எல்லைகளைக் கடந்து மக்களை இணைக்கிற வேலையைத் தான் எல்லா மதங்களும் காலம் காலமாக செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் தன் சொந்த மத மக்களை தங்களுக்குள் தீண்டிக் கொள்ளாமல், ஒருவருக்கொருவர் புழங்கிக் கொள்ளாமல் சாதி சொல்லி பிரித்து வைத் திருக்கிற ஒரே மதம் இந்து மதம்தான். எனக்கு எந்த சாதியும் கிடையாது, நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று யாராலும் சொல்லிக் கொள்ள முடியாது. இந்து என்று சொல்லிக் கொள்கிற யாரும் ஏதாவது ஒரு சாதியில் இருந்தாக வேண்டும் என்கிற கட்டுமானத் தைக் கொண்ட இந்து மதத்தில் நீடித்துக் கொண்டு சாதியை ஒழிக்க முடியாது என்று ஆய்ந்தறிந்த அம்பேத்கர் அவர்கள், இந்து மத வெளியேற்றத்தை சாதி ஒழிப்புக்கு மூன்றாவது நிபந்தனையாக்கினார்.


எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு பாடப்புத்தகங்களையும் நோட்டுப்புத்தகங்களையும் மட்டும் எடுத்துப்போன காலத்தில், உட்காருவதற்காக ஒரு கோணிப்பையை உடன் எடுத்துச் சென்று, தாகம் தணிப்பதற்குக் கூட மேல்சாதி மாணவனின் இரக்கத்தை எதிர்பார்த்து காத்திருந்து, ஒரு எருமை மாட்டிற்கு முடிவெட்டி விட்டாலும் விடுவேன், உனக்கு முடிவெட்டி விட மாட்டேன் என முடிதிருத்தும் நிலையத்தி லிருந்து துரத்தி அடிக்கப்பட்டு, தன் மூத்த சகோதரியிடம் முடிவெட்டிக்கொண்டு, வாடகைக் குதிரை வண்டியில் போகும்போது சாதியைத் தெரிந்து கொண்டதால் வண்டி யோடு தலைகுப்புறக் கவிழ்த்துவிடப்பட்டு மண்டை உடைக்கப்பட்டு என இளம்வயதில் அனைத்து விதமான தீண்டாமைக் கொடுமைகளுக்கு ஆளான போதும், அத்துனை இழிவு களையும் உரமாக்கிக் கொண்டு, வெளிநாடு களுக்கு சென்று சட்டம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டம் பெற்று வந்து நாட்டின் அரசியல் சாசனத்தையே எழுதும் அளவுக்கு உயர்ந்தது, அம் பேத்கரின் அறிவுக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல, முருங்க மரம் விட்டத்துக்கு ஆகாது. சக்கிலியப்புள்ள பட்டத்துக்கு ஆகாது எனும் மனுதருமப் பழமொழிகளுக்கு கொடுத்த சவுக்கடியுமாகும்.


அரசியல் சாசனம் எழுதக் கிடைத்த வாய்ப்பை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பெண்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சிறுபான்மை யினருக்கு என அனைத்து தரப்பட்ட மக்க ளுக்கும் பயன்படுத்தியது நீண்ட நெடிய செய்தி. சவுதார் குளத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் நீர் எடுக்க தடை விதிக்கப்பட்ட போது, நேரடியாகவே போராட்டக் களத்தில் இறங்கி ஒடுக் கப்பட்ட மக்களின் உரிமையை நிலைநாட்டியது உள்ளிட்ட போராட்ட வரலாறும் தனித்த நீண்ட செய்திகளாகும்.


இந்திய அரசியல் சாசனத்தை எழுதி முடித்து அரசியல் நிர்ணய சபையில் வைத்து உரையாற்றுகிறபோது, நாம் வருகிற ஜனவரி 26 (1950) முதல் ஒரு மனிதன் ஒரு வாக்கு எனும் அரசியல் சமத்துவம் நிலவப் போகிற புதிய சமூக அமைப்பில் நுழையப் போகிறோம். அந்த அரசியல் சமத்துவத்தைப் பயன்படுத்தி சமூக சமத்துவத்தை ஏற்படுத்த தவறினால் இந்த அமைப்பை தூக்கி எறியவும் மக்கள் தயங்க மாட்டார்கள் என்று அரசியல் நிர்ணய சபையில் நின்று முழங்கியவர் அம்பேத்கர்.


சமூக அமைப்பை வியாக்கியானம் செய்து கொண்டிருந்த தன் முந்தைய தலைமுறைக்கு மாற்றாக, சமூக அமைப்பை மாற்ற துணிச்சலுடன் போராடிய அம்பேத்கருக்கு புரட்சியாளர் என்ற அடைமொழியும் பொருத்தம்தான்.


புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்ட தீண்டாமை ஒழிந்த, சாதி ஒழிந்த சமூகம் இன்றளவும் அமையவில்லை. அவர் கனவு கண்ட சமூகம் அமைக்க, அவர் விட்டுச் சென்ற பணி முடிக்க வெறும் தலித்துகள் அணிதிரள்வதால் மட்டும் முடியாது.


தலித்துகளின் அவல நிலையைக் கண்டு, அய்யோ பாவம் என்று இரக்கப்படுபவர்களுக்கு மத்தியில், தலித்துகள் உரிமைகளைப் பற்றி முழக்கமிடும் போது, அந்த முழக்கங்களின் அடிப்படையில் உள்ள ஜனநாயக சமத்துவ வேட்கையைப் புரிந்து கொண்டு, தியாகத் தழும்புகளால் நிறைந்த தாய்மை உணர்வுடன் கூடிய முற்போக்கு எண்ணமும் புரட்சிகர நோக்கங்களும் சமூக நீதிக்கோட்பாட்டை, இட ஒதுக்கீட்டு பலனை தாண்டி புரிந்து கொள்கிற தாழ்த்தப்பட்டோர் அல்லாத இதர ஜனநாயக சக்திகளும் தலித்துகளும் தோழமையோடு அணி திரளும் போதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் கனவு கண்ட, தீண்டாமை ஒழிந்த, சாதி ஒழிந்த சமூகம் அமைக்க முடியும்.


அந்த இலட்சியப்பாதையில், சுயநலம் இல்லாமல், எந்தவித இழப்புகளுக்கும் தியாகங்களுக்கும் தயாராய் நடைபோடுவதே புரட்சியாளர் அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்

நீலவேந்தன்

1 comment:

  1. அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

    (இது TIMES வாக்கெடுப்பு அல்ல)

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)