கருணாநிதி அவர்களே! செம் மொழித் தகுதி தமிழுக்குக் கிடைத் திருக்கிறது என்றால் அது உங்கள் கூட்டணியிலே இருக்கின்ற மற்ற கட்சிகளையெல்லாம்விட அதற்கான தனிப் பெருமை தேடிக் கொள்ளக் கூடிய உரிமையும் பெருமையும் உங் கள் ஒருவருக்கே உரியது என்று எனக்கு சோனியாகாந்தி அம்மையார் எழுதிய கடிதத்தை இப்பொழுதும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்
- முரசொலி 5.4.11.
வடசென்னை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் இப்படிப் பேசியிருக்கிறார்.
தமிழுக்கு செம்மொழித் தமிழ் அந்தஸ்து என்ற மத்திய அரசு உத்தரவு வேண்டுமானால் இவரது காலத்தில் வந்திருக்கலாம். ஆனால் இதற்கு முன்னதாக தமுஎகச உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட பிரச்சாரம் - பின்னர் காலவரையற்ற உண்ணாவிரதம் -அதையடுத்து தில்லிக்கே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பதெல்லாம் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாது அல்லது மறந்துவிடுவார் அல்லது மறைத்துவிடுவார். ஏனென்றால் எல்லாப்புகழும் இவருக்கே சேர வேண்டும் என்ற பேராசை கொண்டவர். அது அவரது குணாம்சம்! அது ஒருபுறம் இருக்க, செம்மொழி தமிழுக்காக சோனியாகாந்தி எழுதிய கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்திருக் கிறேன் என்கிறாரே இன்னொரு கடிதத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.
அந்தக் கடிதம் எது தெரிகிறதா? தொழிலதிபர் ரத்தன் டாடா எழுதிய கடிதம். அதிலே என்ன எழுதியிருக்கிறார்? அதை வெளியிடுவாரா முதலமைச்சர் கருணாநிதி. வெளியிடமாட்டார். ஏனென்றால் அது மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச் சர் ஆ. ராசாவைப் பாராட்டி எழுதப்பட்ட கடிதம். இந்தக் கடிதத்தை டாடா யார் மூலமாக அனுப்பியிருக்கிறார். தெரியுமா? ஆ. ராசாவுக்கு பதவி வாங் கிக் கொடுத்த 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலுக்குத் தரகராக இருந்த நீராராடியா மூலமாகத்தான். நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணையில் ரத்தன் டாடாவே முதலமைச்சருக்குக் கடிதம் அனுப் பிய உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது அவருக்கும் தங்க ளுடைய தொழில் நிறுவனத்துக்கும் (டாடா டெலி கம்யூனிகேஷன்) இடையே நல்ல நட்புறவு இருக்க வில்லை என்றும் டாடா ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தச் சூழலில்தான் தினகரன் அலு வலகம் மீது தாக்குதல்; தயாநிதி மாறன் பதவி விலகல்; அந்தப் பதவிக்கு ஆ.ராசா நியமனம் என்ற காட்சிகள் ஓடுகின்றன. 2007ஆம் ஆண்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவி யேற்ற ஆ.ராசா உடனடியாக அலைக் கற்றை ஒதுக்கீடு முறைகேட்டில் குதித்துவிட்டார். ஏலத்தின் கடைசி தேதி முன்கூட்டிய தேதிக்கு மாற்றப்பட்டது. காப்பீட்டுத் தொகை செலுத்தும் நேரமும் அவசர அவசரமாக மாற்றப்பட்டது. இதுபற்றி தொலைத் தொடர்பு அமைச்சகம், பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகம், அமைச்சரவை அலுவலகம் ஆகியவற்றுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்தச் சூழலில்தான் முதலமைச்சர் கருணாநிதிக்கு டாடா கடிதம் எழுதியிருக்கிறார். ராசாவின் ஊழ லுக்கு ஊக்கம் கொடுத்ததா இந்தக் கடிதம்? முதலமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதா இந்தக் கடிதம் என்ற கேள்விகள் எழுகின்றன. அந்தக் கடிதம் முதலமைச்சரிடம் பத்திரமாக இருக்கிறதா?
காஞ்சி ஏட்டில் அண்ணா எழு திய கடிதத்தையெல்லாம் வெளியிட்டு கடந்த காலத்தை நினைவுபடுத்தி பேசும் கலைஞர், டாடாவின் கடிதத்தை வெளியிடுவாரா?
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் விஷயத்தில் தொடர்ந்து அவர் மவுனம் சாதிக்க முடியாது. வெளிவந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் ஆட்சியிலிருந்து மக்கள் வெளியேற்றிவிடுவார்கள்.
- மயிலைபாலு
நன்றி: தீக்கதிர்
0 comments:
Post a Comment