சட்டப்பேரவைத் தேர்தலை நடத்து வதற்கான பணிகளில் தேர்தல் ஆணை யம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அதிலும் ‘திருமங்கலம் பார்முலா’ என்று ஒரு புதிய தில்லு முல்லு உருவாக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தையே திணறடித்த மாநிலம் என்பதனால் கூடுதல் கெடுபிடிகள் காட்டப்படுகின்றன. புதிது புதிதான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என நாள்தோறும் அறிக்கைகள், விளக்கக் கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுள் ளன. இதையெல்லாம் பார்த்து திருமங் கலம் பார்முலாவை உருவாக்கியவர்களே, புதிதாக என்ன தந்திரங்களை கையாள லாம் என்று ரூம்போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்! அந்த அளவுக்கு வானளாவிய அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம், இந்தத் தேர்தலின் கதாநாயகனாக விளங்கக்கூடிய வாக்காளர்களின் அவஸ்தையை தீர்த்துவைக்க தீவிரம் காட்ட வேண்டுமென்பதே நமது வேண் டுகோள்.
மார்ச் 10ம் தேதி பூந்தமல்லி வட்டாட் சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் பிரி விற்கு சென்றேன். கூட்டத்தைப் பார்த்து திகைத்துவிட்டேன். அந்த அலுவலகத் தில் இரண்டு தளங்களில் இப்பிரிவு செயல்படுகிறது. 10க்கும் மேற்பட்ட மேஜைகள், ஒவ்வொரு மேஜையை சுற்றியும் 100 முதல் 200 பேர் மொய்த்துக் கொண்டிருந்தனர். ஒரே கூச்சல். இதற்கு நடுவில் நாற்காலியில் ஊழியர். வந்தி ருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு வந்தவர்கள். தமிழகத்தில் 99 சதவீத வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கியாகிவிட்டதென்று கண்களில் மகிழ்ச்சி துள்ள தேர்தல் ஆணையர் அறி வித்தது கண்களில் இப்போதும் மின்னு கிறது. சிலர் முகவரி மற்றும் தந்தை, கணவர் பெயர் பிழைதிருத்த, வேறு சிலர் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள வந்திருந்தனர். இதற்குத்தான் இவ்வளவு கூட்டமும்! ‘தினமும் இதே மாதிரிதான் கூட்டம் வருகிறது. எங்களால் சமாளிக்க முடியவில்லை. ஆள் பற்றாக்குறை’ என்று ஊழியர்கள் சலித்துக் கொண்டனர். சலிப்பின் விளைவு, அனைவருக் கும் ஏனோதானோ பதில்தான்.
இது ஒருபுறமிருக்க, நான் 1996ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்காளர் பட்டியலில் என் பெயர் இருந்தது. அடுத்து நடைபெற்ற தேர்தலுக் கான வாக்காளர் பட்டியலில் எனது பெயர் ‘இறந்து போனவர்’ பகுதியில் குறிப்பிடப் பட்டிருந்தது. நான் பரலோகம் போய்ச் சேர்ந்துவிட்டதாக தேர்தல் ஆணையமே குறிப்பிட்டுவிட்டதால், நான் உயிரோடு வந்திருந்தாலும் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்று வாக்குச்சாவடி ஏஜெண் டுகள் தெரிவித்துவிட்டனர். அது முதல் எப்படியாவது ‘உயிர்த்தெழுந்து’ விட வேண்டுமென்று வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஒவ்வொரு முறையும் மனுக்கொடுத்தும் பெயர் இடம் பெற வில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், மீண்டும் மனுகொடுத்து வாக்காளர் பட்டியலில் எனது பெயர் உண்மை யிலேயே பதிவாகிவிட்டது கண்டு, எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். ஆனால் அதிலும் ஒரு சிக்கல்! தெரு எண் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, கடந்த ஜூலை மாதம், பிழைத் திருத்தத்திற்கும், எனது முதல் மகன் நெல்சன் மண்டேலாவை புதிதாக வாக் காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் மனுச் செய்தோம். இறுதி வாக்காளர் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் பிரச்சனை! எனது குடும்பம் இருப்பது ஆவடி, ராஜீவ் காந்தி நகர், 6வது தெருவில். 1992ல் இருந்து இந்த இடத்தில்தான் வசித்து வருகி றோம். இப்போது வந்துள்ள வாக்காளர் பட்டியலில் எனது பெயர் 8வது தெருவில் உள்ளது. எனது மகன் பெயர் முதல் தெரு வில் உள்ளது. எனது மனைவியை மட் டுமே உண்மையான முகவரியில் விட்டு வைத்துள்ளனர். எனது குடும்பத்தை பிரிப்பதில் அப்படி என்ன ஆனந்தமோ ஆணையத்திற்கு!
இந்தப் பிழையை சரி செய்யவும், வாக்காளர் அடையாள அட்டைக்காக வும்தான் எனக்கும், எனது மகனுக்கும் ஜூலை மாதம் மனுச் செய்தோம். மேற் குறித்த பிழைகள் சரி செய்யாதது மட்டு மல்ல, அடையாள அட்டையும் இல்லை என்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி யில் தெரிவித்துவிட்டனர். எங்கள் பகு திக்கு யார் பொறுப்பு என்பதும், அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. பிறகு தேர்தலுக்கான வட்டாட்சியரை தொடர்பு கொண்டு கேட்டபோது, உங்கள் ஏரியாவுக்கு கிராம நிர்வாக அலுவலர் தான் பொறுப்பு. அவரிடம் அடையாள அட்டை இருக்கும் என்றார். அப்போது அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டி ருந்தனர்.
மார்ச் 10ம் தேதி காலை கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து கேட்டபோது, எங்களிடம் இருந்ததையெல்லாம் கொடுத்துவிட்டோம். நீங்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்று கேளுங்கள் என்றார். நான் வட்டாட்சியர் அலுவலகம் வந்ததற்கான வரலாறு இதுதான்.
வாக்காளர் பட்டியலிலேயே வாக்கா ளர் அடையாள அட்டை எண் உட்பட குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆகவே, சுலப மாக அடையாள அட்டையை எடுத்து வந்து விடலாம் என்று ஆவலாகச் சென் றேன். ஆனால், அரசு அலுவலகத்தில் அவ்வளவு சுலபத்தில் எந்தக்காரியத்தை யும் செய்துவிட முடியாது என்ற அனுப வமே மீண்டும் கிடைத்தது. வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள தேர்தல் பிரிவுக் கான ஊழியர்கள், இந்த ஏரியா நான் பார்க்கல, பிறகு யார் பார்க்கிறார்கள்? தெரியாது, எப்படித் தெரிந்து கொள்வது? தேர்தல் வட்டாட்சியரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். அவர் எங்கே? அவர் இங்கில்லை! எலக்ஷன் மீட்டிங் போயி ருக்கிறார்! பிறகு என்னதான் வழி? 15 ரூபாய் கொடுத்து விட்டுச்செல்லுங்கள். புதிதாக அடையாள அட்டை தயார் செய்து தருகிறோம் என்றனர். அடையாள அட்டை எண் உட்பட இருக்கிறதே, அப்படியென்றால் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது என்றுதானே அர்த்தம் என்றேன். ‘இந்த மாதிரி விளக்க மெல்லாம் கேட்காதீங்க! உங்களுக்கு அடையாள அட்டை வேணுமின்னா 15 ரூபாய் குடுத்திட்டு மாசக்கடைசியில வந்து பாருங்க’ என்றார். எனக்கும், எனது மகனுக்கும் கொடுத்துவிட்டு வந்தேன். இப்போதும் எனக்கிருக்கும் சந்தேகம் அடையாள அட்டை வாக்களிக்கும் நாளுக்குள் வருமா?
முகவரியில் உள்ள பிழை குறித்து மனுச்செய்தும் மாறவில்லை என்று அதற்குரிய ரசீதை காண்பித்தேன். பட்டியலில் உள்ளபடிதான் அடையாள அட்டை வழங்க முடியும். மாற்றம் செய்யா தது குறித்து தாசில்தாரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். இது ஏதோ எனக்கு மட்டும் ஏற்பட்ட மிக, மிக மோசமான அனுபவமில்லை! ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இதுபோல் அலைந்துகொண்டுள்ளனர்.
வாக்காளர் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிப்பதும், வாக்களிக்க வேண்டி யதன் அவசியம் குறித்து மணிக்கணக்கில் அறிவுரை வழங்குவதும், வாக்குப் பதிவு குறைந்து போனால் வருத்தமடைவதும் வழக்கம்போல் நடைபெறுகிறது; நடைபெறும். ஆனால் வயது வந்த அனைவரையும், வாக்காளர்களாக சேர்ப்பதும் அடையாள அட்டை வழங்குவதும் 100 சதவீதம் எப்போது நடக்கும். கனவுதனோ?
இவ்வளவுக்கும் மத்தியில் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற, எப்படி யாவது தங்களது பெயர் வாக்காளர் பட்டிய லில் இடம் பெற்றுவிட வேண்டுமென்று மெனக்கெடும் பொதுமக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க- வாக்காளர்கள்!
பெ.சண்முகம்
பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
0 comments:
Post a Comment