அத்தியாவிசய உணவுப்பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக தில்லியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் திரண்டிருந்த தொழிலாளர்கள்.
நாடாளுமன்றம் நோக்கி சிஐடியு, ஏஐடியுசி,ஐஎன்டியுசி உட்பட அனைத்து மத்திய தொழிற்சங் கங்களின் சார்பில், பிப்ரவரி 23 அன்று நடை பெற்ற பேரணியில் தொழிலாளர்கள் குவிந்தனர். விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, வேலையில் லாத் திண்டாட்டம், ஒப்பந்த முறை, தொழிலாளர் நலச் சட்டங்கள் மீறல், தனியார்மயம் ஆகியவற்றிற்கு எதிராகவும், ரயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலி யிடங்களை நிரப் பக்கோரியும், புதிய ஓய்வூதியச் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், இன் சூரன்ஸ் முகவர் சட்டத்தில் ஏற்படுத்தவுள்ள திருத்தங் களை ரத்து செய்யக் கோரியும் சிஐ டியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, உட்பட அனைத்துத் தொ ழிற் சங்கங்கள் சார்பிலும், பேரணி நடைபெறுகிறது. பேரணியில் பங்கேற்பதற்காக அங்கன் வாடி ஊழியர்கள் மற் றும் கட்டுமானத் தொழிலாளர் களில் கணிசமான அளவில் பெண் களும் திரண்டிடு முழக்கமிட்டனர்.
சிஐடியு, ஏஐடி யுசி, ஐஎன்டியுசி உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்க ளின் பேரணி நடைபெற்றது. முன்னதாக 22ஆம் தேதி அகில இந்திய மீன்பிடித் தொழி லாளர் சம்மேளனம் சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் பேசிய சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன்: தில்லியில் இன்றையதினம் பல்வேறு சங்கங்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன. சிஐடியு மற்றும் அகில இந்திய விவ சாயிகள் சங்கத்துடன் இணைந்த மீன் பிடித் தொழிலாளர்கள் ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண் டிருக்கிறார்கள். எல்ஐசி முகவர்கள் புதிதாக வரவிருக்கும் முகவர்கள் சட்டமுன்வடிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி எதிரே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதே போன்று தமிழகத்தில் திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடித் தொழிற்சாலை ஊழி யர்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் பணியாற்றும் பாதுகாப்புத்துறை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்திப் போராடிக் கொண்டி ருக்கிறார்கள். இங்கே காலியி டங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அகில இந்தியஅளவில் பேச்சுவார் தைக்கு அழைத்திட வேண் டும் என்று டிஆர்இயு சங்கத்தி னர் போராடிக் கொண்டிருக்கி றார்கள். அதுமட்டுமின்றி ஆசிரியர்கள், போபால் விஷ வாயு பாதிப்புக்குள்ளானவர்கள் உள்ளிட்ட பல பகுதியினரும் போராடிக் கொண்டிருக்கி றார்கள்.
நாட்டிலேயே மேற்குவங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டும்தான் புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட வில்லை. காரணம் அங்கே ஆட்சியில் இருப்பது தொழிலாளர் நல அரசுகள். முறைசாராத் தொழிலா ளர்கள் தங்களுக்கு ஓய்வூதியம் வேண்டும் என்ற கோரிக்கை யை முன்வைத்து போராட் டத்தை நடத்திக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் இதுநாள் வரை வாங்கிக் கொண்டிருந்த மத்திய அரசு ஊழியர்கள், தமிழ் நாடு உட்பட பல மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கப்படுகிறது.
இவ்வாறு இழந்த கோரிக் கைகளை மீண்டும் பெறக் கூடிய முழக்கத்தை எழுப்பும் தொழிலாளர்களின் குரல் அரசின் செவிப்பரையைக் கிழிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
0 comments:
Post a Comment