Wednesday, February 16, 2011

வெறுங்கையோடு துரத்தப்படும் தலித்துகள்!


நான் ஒரு நகர்மன்றத்தின் தலைவராக இருந்தவன்; தற்போது எனது மனைவி நகர்மன்றத் தலைவராக இருக்கிறார். இந்த மாவட்டத்தில் 30 ஆண்டு காலம் மாணவர் இயக்கத்தின் தலைவராக, தற்போது விவசாயிகள் இயக்கத்தின் அனைத்து கிராமங்களுக்கும் சென்று வந்தவன்.

பல்வேறுபோராட்டங்களைநடத்தியவன். இன்றைக்கும் எந்த கிராமத்திற்குச் சென்றாலும் அங்குள்ள மக்கள் நன்றாக பழகுகிறார்கள் என்றபோதிலும், கிராமத்தினரோடு செல்லும்போது அவர்களுடைய வண்டியில் எனக்கு கடைசி இடத்தைத்தான் ஒதுக்குகிறார்கள். அவர்கள் அளிக்கிற தேநீரைஅருந்துகிறபோது, அந்தக்கோப்பையை நான் கழுவி வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கழுவி வைக்காவிட்டால், நான் தலைவர் பொறுப்பில் இருப்பதால் அவர்களால் கேட்க முடியாது; ஆனால் கழுவி வைக்காமல் போய்விட்டானே என்று அவர்களது மனம் கலங்குகிறது. பல தருணங்களில் அவர்கள் எனது சாதி என்ன என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடத்துகிறார்கள்”

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியப்பிரதேச மாநிலக்குழு சமீபத்தில் தலைநகர் போபாலில் கட்சியில் செயல்படும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கான இரண்டுநாள் பயிலரங்கை நடத்தியது. இந்தப்பயிலரங்கில் பங்கேற்று பேசிய கட்சியின் பிந்த் மாவட்ட தலைவர்களில் ஒருவரான பிரேம் நாராயண மகாவூர் பேசிய பேச்சின் ஒரு பகுதிதான் இது.

தலித்துகள் எத்தனை பெரிய பொறுப்புக்கு சென்றாலும், சாதி ஆதிக்க சக்திகளால் அவர்கள் நடத்தப்படுகிற விதம் பற்றிய ஒரு நேரடி சாட்சியே தோழர் பிரேம் நாராயண மகாவூரின் பேச்சு.

நாடு முழுவதும் மக்கள் சமூகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் புரையோடிப்போயிருக்கிற மிகக்கொடிய சாதியச்சிந்தனை, கிராமப்புற மக்களிடம் மட்டுமல்ல; நகர்ப்புறத்திற்கு வந்து மெத்தப்படித்து நவீனத் தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டு சாதிக்கு எந்த வேலையும் இல்லாத வேலைகளுக்கு சென்றாலும் கூட, உயர்சாதியினர் என்று சொல்லிக்கொள்பவர்கள் அவரவர் அளவில் தலித்துகளை நடத்துகிற விதம் மிகவும் குரூரமானது. சாதி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்தியாவில் புதிய பரிணாமங்களை எட்டிக்கொண்டிருக்கிறது.

பிரேம் நாராயண் மகாவூரைப்போலவே இப்பயிலரங்கில் பேசிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் அந்தந்த பகுதிகளில் தாங்கள் எதிர்கொண்ட, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தலித் மக்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்கிற தீண்டாமைக்கொடுமைகளையும், அதன் நுணுக்கமான வடிவங்களையும் பட்டியலிட்டார்கள்.

இந்தூரைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலக்குழு உறுப்பினருமான ஜெகநாத் பாரதி ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்தவர் ராதாகிருஷ்ணன் மாளவியா. இவர் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். காங்கிரசின் மத்தியப்பிரதேச மாநிலத்தலைவராகவும் ஒருமுறை பதவி வகித்தவர். ஆனால், இவரது சொந்த ஊரான தாதோடா கிராமத்தில் தனது மகனுக்கு திருமணம் நடத்தியபோது, மணமக்களை ஊர்வலமாக அழைத்துவரவும், அந்த ஊர்வலத்தில் குதிரையில் ஏற்றி மணமக்களை அழைத்துவரவும் தடை விதிக்கப்பட்ட கொடுமையை அனுபவித்தார். ஒரே காரணம் இவர் தலித் வகுப்பைச்சேர்ந்தவர். தலித்துகள் திருமண ஊர்வலங்கள் நடத்துவதே பாவம்; அதிலும் குதிரை வைத்துக்கொள்வதோ அல்லது பேண்டு வாத்தியம் முழங்கிக்கொள்வதோ எப்படி அனுமதிக்க முடியும் என்பதே இன்றைக்கும் மத்தியப்பிரதேச கிராமங்களில் நீடிக்கிற தீண்டாமை.

குவாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பாபு ஜாதவ் என்ற தோழர் பேசினார். இவர் அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரபலத்தலைவர் இவரது மனைவி குவாலியர் மாவட்டப்பஞ்சாயத்து கவுன்சிலாக இருக்கிறார். ஆனால், மோரியானா மாவட்டத்தில் உள்ள இவரது சொந்த ஊரில் இருக்கிற பூர்வீக நிலத்தை இன்றைக்கு வரைக்கும் விற்க முடியவில்லை. ஏனென்றால் அந்த நிலத்தைச்சுற்றி உயர்வகுப்பினரின் நிலங்கள் இருக்கின்றன. அவர்களிடம் அடிமாட்டு விலைக்கு அந்த நிலத்தை ஒப்படைப்பதை தவிர இவருக்குவேறு வழியே இல்லை. நியாயமான விலைக்கு அவர்கள் வாங்க மாட்டார்கள்.

ராம்பாபுவைப்போலவே உயர்வகுப்பினரின் நிலங்களால் சூழப்பட்ட தங்களது சொந்த நிலத்தில் உழுது பயிரிடவும் முடியாமல், நல்ல விலைக்கு விற்கவும் முடியாமல் வீணாக அவர்களது கைகளில் சிக்கவிட்டுவிட்டு ஏதுமில்லாமல் ஊரைவிட்டு வெளியேறிய தலித்துகள் ஏராளம்.20 ஆண்டுகளுக்கு முன்பு கையில் ஏதோ கொஞ்சம் நிலமிருந்த பெருவாரியான தலித்துகள் கூட, சாதிய ஆதிக்க சக்தியினரின் நெருக்குதலால் அவர்களிடம் நிலத்தை கொடுத்துவிட்டு வெறுங்கையோடு இடம்பெயர்ந்துவிட்டார்கள். மறுத்தால், அவர்களது பயிர்கள் தீவைத்து கொளுத்தப்படும்; வீடுகள் சூறையாடப்படும்; கால்நடைகள் களவாடப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் கூட தலித் விவசாயிகளுக்கு உரம், விதைகள் அல்லது கடன்கள் என எதுவும் கிடைப்பதில்லை. கிராமப்புற வங்கிகளில் நீண்ட காலமாக இந்த மக்களால் சொந்தமாக சேமிப்பு கணக்கு கூட துவங்க முடியவில்லை. கிராமக்கோவில்களில் நுழையவே முடியாது என்பது உட்பட அனைத்துவகையான தீண்டாமைக்கொடுமைகளையும் மத்தியபிரதேச கிராமங்களில் தலித்துகள் அனுபவித்து வருகிறார்கள். குறிப்பாக தலித் பெண்கள் சொல்லொண்ணா துயரத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். கிராமப்பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் பிரதிநிதிகள் செயல்பட முடியாத நிலைமை நீடிக்கிறது.

பள்ளிகளிலும் விடுதிகளிலும் தலித் மாணவர்களும் மாணவிகளும் எதிர்கொள்கிற கொடுமைகள் சொல்லி மாளாது அரசு அலுவலகங்களிலும் கூட தலித்துகளுக்கு எதிரான தீண்டாமை வடிவங்கள் மிகவும் நுணுக்கமாக கடைபிடிக்கப்படுகிறது.

போபால், குவாலியர், பிந்த், குணா, ஷாதோல், ரத்லம் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து பயிலரங்கில் பங்கேற்றிருந்தவர்கள் இப்படி ஏராளமான தகவல்களை பட்டியலிட்டார்கள். தலித் மக்களுக்கு எதிரான இத்தகைய தீண்டாமை கொடுமைகளை எதிர்த்து தொடர் போராட்டத்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 13ம் தேதி போபாலில் மிகப்பெரும் கருத்தரங்கையும் நடத்தியது.

தமிழகம் மட்டுமல்ல, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எண்ணற்ற வடிவங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக உரத்து குரல்கொடுத்து தொடர் போராட்டத்தை நடத்திவருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே என்பதை மத்தியப்பிரதேச அனுபவமும் உணர்த்துகிறது.

(பீப்பிள்ஸ் டெமாக்ரசியிலிருந்து-பிப்.13)

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)