Saturday, February 12, 2011

மொழிகளின் மரணம்


26ஜனவரி, 2010 ... இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம். முக்கியத்துவம் வாய்ந்த தினம். ஆனால், அன்றுதான் அந்தமான் நிக்கோபார் தீவில் பேசப்பட்டு வந்த 65 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த “போ” என்ற மொழி மரணமடைந்தது. ‘சிறப்பு அந்தமான்’ மொழிகளில் ஒன்றான “போ” மொழியை பேசிவந்த போவா சீனியர் என்ற 80 வயது மூதாட்டி மரணமடைந்த போது அந்த மொழியும் மரணமடைந்தது. 2004ம் ஆண்டு டிசம்பர் சுனாமி அந்தமான்நிக்கோபார் தீவுகளை கோரமாக தாக்கிய போது அதில் உயிர் தப்பிய சிலரில் போசீ னியரும் ஒருவர். சுனாமி தாக்கிய போது, ராட்சத அலைகள் எழும்பி தணிந்ததையும், அதன் தாக்கத்தையும் “போ” மொழியில் அவர் பாடி, வீடி யோவில் பதிவு செய்யப்பட்டது தான் “போ” மொழி வாழ்ந்ததற்கு சாட்சியாக உள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வாளர் அன்விதா அபி, “உலகின் மிகப்பழமையான மொழி அழிந்துவிட்டது” என இதுபற்றி குறிப்பிட்டுள்ளார்.


2010 ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி கொச்சியைச் சேர்ந்த வில்லியம் ரொசாரியோ மரணமடைந்தார். அவரது மரணத்துடன் 15ம் நூற்றாண்டிலிருந்து கேர ளாவின் கொச்சி பகுதியில் பேசப்பட்டு வந்த “மலை யாள - போர்ச்சுகீஸ் க்ரியோல்” என்ற மொழி மரண மடைந்துவிட்டது. 400 ஆண்டுகளுக்கும் மேலாக, கொச்சியிலுள்ள கத்தோலிக்கர்களின் அடையாள மாக அம் மொழி திகழ்ந்தது.

“ரெமோ” என்ற மொழி ஒரிசா மாநிலத்திலுள்ள ‘போண்டா’ என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் களால் பேசப்படுகிறது. தற்போது இம்மொழியை பேசுவோர் 5000 பேர் மட்டுமே. இந்த இனமக்கள் தற் போது ‘ஓரியா’ மொழியை பேசத் துவங்கி விட்ட நிலையில் வெகு விரைவில் இந்த மொழி (ரெமோ) மறைந்து விடுமென கணிக்கப்பட்டுள்ளது.

2009ல் யுனெஸ்கோ நிறுவனம் “அழிந்துவிடும் நிலையில் உள்ள மொழிகளின் வரைபடத்தை” வெளியிட்டது. அதில், அழியும் அபாயம் உள்ள மொழிகள், அழிந்து விட்ட மொழிகள் என உலகின் மொழிகளை வகைப்படுத்தியுள்ளது. 2,473 மொழிகள் இதில் அழியும் அபாயத்தில் உள்ளன என்று குறிப் பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 1950க்குப் பின்னர் 5 மொழிகள் அழிந்துவிட்டன. 42 மொழிகள் கிட்டத் தட்ட அழியும் நிலையில் உள்ளன. 63 மொழிகள் நிச்ச யம் அழிந்துவிடும் என்ற பட்டியலிலும், 82 மொழி கள் அழியும் அபாயம் உள்ளவை என்ற பட்டி யலிலும் உள்ளன.

பழங்குடி இன மக்கள் பேசுகின்ற பல மொழிகள் ‘தாய்மொழி’ என்று கருதப்பட்டு அதிகாரபூர்வமாக “மொழி” என்ற வரையறைக்குள் வருவதில்லை. இது தவிர நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் அன் றாட வாழ்க்கைத் தேவைகளையொட்டியும் பொரு ளாதார நிர்ப்பந்தங்களினாலும், அந்தந்த மாநிலத்தில் அரசு மொழியாகக் கருதப்படும் மொழியை கற்று பேசவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலை நிமித்தம், குடி பெயர்வு அதிகரித்துள்ள சூழலில், குறைவான எண்ணிக்கையில் உள்ள மக்கள் பேசு கின்ற மொழிகள் சிறிது, சிறிதாக மறைந்து விடு கின்றன.

மைசூரிலுள்ள இந்திய மொழிகள் கழகம் (சிஐ ஐஎல்) மொழிகள் அழியும் அபாயத்தைக் கருதி, பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. யுனெஸ்கோ நிறு வனம் தயாரித்த வரைபடத்திற்கு உதவிய இந்த அமைப் பின் இயக்குனர் உதயநாராயணசிங், “உலக நாடுக ளின் நிலையோடு ஒப்பிடுகையில், தாய் மொழி அழி யும் அபாயம் இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. எனவே, போர்க்கால அடிப்படையில், மொழிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். யுனெஸ்கோ வரைபடம் வெளியிடப் பட்ட உடனேயே மனிதவள மேம்பாட்டு அமைச்ச கம் பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் மற்றும் மிக வும் பழமையான மறைந்து வரும் மொழிகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ள கமிட்டி அமைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சி. ஐ. ஐ.எல் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ் சச் தேவா “சமூகரீதியில் ஓரங்கட்டப்படுகின்ற மக்க ளுக்கு அவர்களுடைய கலாச்சாரம், கவுரவம் ஆகியவற்றை பாதுகாக்கும் ஆயுதமாக மொழி பார்க்கப்படுகிறது” என்கிறார்.

மொழிகளை பாதுகாப்பதன் மூலமே அந்தந்தப் பகுதியில் தோன்றி, வளர்ந்துள்ள பழக்க வழக்கங் களையும், அறிவியலையும் பாதுகாக்க முடியும். எடுத்துக்காட்டாக, அந்தமானில் மறைந்த போவா சீனியருக்கு அப்பகுதியிலுள்ள செடி, கொடிகள், இலைகள், பழங்கள் என அனைத்தின் மருத்துவ பயன்பாடுகள் பற்றி நன்கு தெரியும். மொழி ஆய் வாளர் அபியும் அவரது குழுவினரும் போவா சீனியருடன் பேசி, அந்த விஷயங்களை எல்லாம் சேகரித்து, ஆவணப்படுத்தும் முயற்சியை மேற் கொண்டுள்ளனர். அந்தமானில் பின்பற்றப்பட்டு வந்த பிரத்யேக பழக்கங்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டன என்பதற் கான வரலற்று சான்றுகள் நிறையவே உள்ளன. இன்று அந்தமானிலும் ‘இந்தி’ பிரதான மொழியாக மாறி விட்டது. இந்தி கற்பது பொருளாதார ரீதியில் முன் னேற உதவி செய்தவாக அம்மக்கள் கருதுகின்றனர். எனவே முன்பு பேசப்பட்டு வந்த மொழிகள் மறைந்து வருகின்றன.

1894 - 1928 வரை இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் குறித்து ஜி.ஏ. க்ரியர்சன் என்பவர் ஆய்வு மேற்கொண்டு விபரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இந்திய அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள மொழிகளுடன் 22 மொழிகள் சேர்க்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசு என்ன சொல்கிறது? குறிப் பிட்ட ஒரு மொழியை குறைந்தது 10000 பேர் பேசி னால்தான், அது ‘மொழி’ என்கின்ற வரையறைக்குட் பட்டதாக கருதப்படும். 2001 மக்கட்தொகை கணக் கெடுப்பின்படி, பட்டியலிடப்படாத 100 மொழிகள் 3 விழுக்காடு இந்திய மக்களால் பேசப்படுகின்றன. (அதாவது 3 கோடி பேரைவிட அதிகம்) “இந்த மொழிகள் பாதுகாக்கப்படாவிட்டால், அமெரிக்க ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மொழிகளுக்கு சென்ற நூற்றாண்டில் ஏற்பட்ட கதிதான் ஏற்படும்” என மொழியியல் வல்லுநர் கிரிகெரி ஆண்டர்சன் கூறி யுள்ளதை யுனெஸ்கோவும் வலியுறுத்தியுள்ளது.

குஜராத்தில் அழியும் நிலையிலிருந்த ‘பிலி’ என்ற மொழியின் பாதுகாப்பு பணியை மேற் கொண்டுள்ள காஞ்சிபடேல் “ஒரு மொழி பாதுகாக்கப்பட மூன்று விஷயங்கள் முக்கியமானவை 1. அந்த மொழியை பயிற்றுவிப்பது, 2, அந்த மொழியில் இலக்கியங்களை வெளியிடுவது, 3 இதர மொழிகளை பேசு வோரிடையே குறிப்பிட்ட மொழி பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்” என்கி றார். மொழி ஆய்வாளர் அபி, “ஒன்று - முதல் மூன்று வகுப்புகள் வரை அனைத்து குழந்தைகளுக்கும் தாய் மொழி மூலம் கல்வி அளித்து, அத்துடன் அந்த மாநில மொழியைக் கற்பிக்க வேண்டும். 4ம் வகுப்பிலிருந்து ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை அறிமுகப் படுத்தலாம்” என்ற ஆலோசனையை முன்வைக்கிறார்.

மொழியை அரசியல் ஆதாயங்களுக் கென பயன் படுத்தப்பட்டுள்ளதற்கான வரலாற்று சான்றுகள் நிறைய உள்ளன. சமீபகாலமாக பழங்குடி மக்கள் பேசுகின்ற மொழி

கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று மாவோயிஸ்டு கள் குரலெழுப்பி வருகின்றனர். இதன் மூலம் பழங் குடி மக்களை தங்கள் வசம் வென்றெடுக்க கருதுகின் றனர். மத்திய இந்தியாவில், மாவோயிஸ்டுகள் கட் டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பட்டியலிடப்படாத, ஆனால் 20 லட்சம் மக்கள் பேசும் ‘கோந்தி’ மொழி மூலம் கல்வி அளிக்கப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலத் தில்தான் கோந்தி மொழி பேசுவோர் அதிகமாக உள் ளனர். இருப்பினும்,ஒரு பள்ளிபாட நூல் கூட இது வரை அந்த அரசால் வெளியிடப்படவில்லை. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகரித்தபின், தற் போது, அம்மாநில அரசு கோந்தி, கொர்க்கு, சத் தீஸ்கரி, ஹல்பி, சர்குஜிய ஆகிய மொழிகளில், 3,4, 5ம் வகுப்புகளுக்கான பாடநூல்களை வெளியிட்டுள் ளது. இது பழங்குடி இன மக்களிடையே பெரும் வர வேற்பை பெற்றுள்ளது.

பட்டியலில்வராத மொழிகளை பாதுகாக்க ‘பாஷா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி கணேஷ் டெவ்வி என்பவர் மொழி பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுவருகிறார் ‘புதன்’ என்ற கலைக்குழு அமைக் கப்பட்டு பாடல், நாடகங்கள் மூலம் மொழிகளை பாது காக்கும் நடவடிக்கைகளை ‘பாஷா’ அமைப்பு மேற் கொண்டுள்ளது. ‘ஹிம்லோக்’ என்ற அமைப்பு இமா லயப் பகுதிகளில் பேசப்படும் பட்டியலிடப்படாத மொழி

களை காக்க, நூல்கள், வார, மாத இதழ்களை வெளி யிட்டு வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்திலும் ‘மண்டரி’, ‘ஹோ’, ‘அசுர்’, ‘க்ரியா’ ‘குருக்ஸ்’ போன்ற அழிந்து வரும் மொழிகளை பாதுகாக்க ‘ஜார்கண்டி பாஷா சாகித்ய சன்ஸ்க்ருதி அக்ரா’ என்ற அமைப்பு அம்மாநில எழுத்தாளர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது வரை இந்த அமைப்பு சார்பில் 25 நூல்கள் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

‘ஜோகர் திசும் கபர்’ என்ற மாத இதழ் மூலமாக வும், மொழி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. 13ம் நூற்றாண்டின் போது வட கிழக்கு சீனாவிலிருந்து அசாம் வந்த ‘அஹாம்’ இன மக்கள் அசாமிய மொழியை பேச ஆரம்பித்து, இன்று ‘அஹாம்’ மொழி அழியும் தருவாயில் உள்ளது. எனவே திப்ருகர் பல்கலைக்கழகத்தில் இம்மொழி கற்பிக்கப்படுகிறது. இதேபோல் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைச் சேர்ந்த ஆங்கில பேராசிரியர் பிரசன்னஸ்ரீ ‘குர்ரு’ இன மக்களின் வரலாற்றை ஆராய்ந்து, அவர்கள் மொழிக்கு எழுத்து வடி வங்களை கண்டுபிடித்து, உயிர் கொடுத்துள்ளார். ஆந் திரா, ஒரிசா மாநிலங்களில் கொண்டா - டொராமொழி பரவ லாக பேசப்பட்டாலும், பழங்குடி மக்கள் ‘ஓரியா’ மொழியை பேச ஆரம்பித்துவிட்டனர். எனவே இந்த மொழியை காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ‘சந்தால்’ இனமக்கள் பெங்காலி பேச ஆரம்பித்து விட்டனர். தற்போது, ‘ஒல்சிக்கி’ என்ற அவர்கள் மொழியில் பேச ஊக்கு விக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் மொழிகள் அழிந்து வருவதை கவனித்து, “லிவிங் டங்க்ஸ்” (அமெரிக்க அமைப்பு) “சர் வைவல் இன்டர் நேஷனல்” (பிரிட்டிஷ் அமைப்பு) “சொரோ சொரோ” (பிரெஞ்சு அமைப்பு) ஆகியவை ஆய்வு செய்து மொழி பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியக் குடியரசு இந்தியாவில் பேசப் படும் மொழிகளை பிரதிபலிக்க வேண்டும். இந்தியா வில் பேசப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழி கள் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப் படுத்துகின்றன. ஒருதுருவ உலகம், உலகமயம் ஆகிய கொள்கைகள் இந்நாட்டின் பன்முகத்தன்மையை அழித்துவிடாமல் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள் ளப்படவேண்டும். மொழிகள் நம் சிந்தனைகளை கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. அதற்கும் மேலாக ஒவ்வொரு தளத்திலும், நமது பன் முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன என்பதால், மொழிகளை பாதுகாப்போம்


பேராசிரியர் ஆர். சந்திரா

2 comments:

  1. //மொழிகள் நம் சிந்தனைகளை கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. அதற்கும் மேலாக ஒவ்வொரு தளத்திலும், நமது பன் முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன என்பதால், மொழிகளை பாதுகாப்போம்//பேராசிரியர் ஆர்.சந்திராவின் கட்டுரை பல செய்திகளை சொல்லும் மிக முக்கியமானது.பயிற்று மொழியாகவும் வயிற்று மொழியாகவும் ஆகாத எம்மொழியும் அழியும் ஆபத்தை விளக்கும் முக்கிய கட்டுரை.பேராசிரியர் பணி இதில் தொடர்ந்து முன் செல்லட்டும்

    ReplyDelete
  2. // மொழிகள் நம் சிந்தனைகளை கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. அதற்கும் மேலாக ஒவ்வொரு தளத்திலும், நமது பன் முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன என்பதால், மொழிகளை பாதுகாப்போம்// சிந்தனையை விசிறும் சிறந்த கட்டுரை;வாழ்த்துகள்

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)