Friday, February 11, 2011

உலகமயத்தின் ஊழல் புரோக்கர் மன்மோகன்சிங்


1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழலுக் கும் பிரதமருக்கும் சம்பந்தமில்லை என் றார்கள். ஆம், சம்பந்தமில்லைதான். ஏனெனில் அவர் இவ்வளவு சின்னத் தொகையிலெல்லாம் கை வைக்க மாட் டார். எதுவாக இருந்தாலும் 2 லட்சம் கோடிக்கு மேல் இருக்க வேண்டும். அது தான் எஸ்- பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல். (எஸ்- பேண்ட் என்பது மிக உயர்ந்த வகை அதிவேக அலைக்கற்றை).

நேரடியாக மன்மோகன் சிங்கின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் விண்வெளித் துறையின் கீழ் இந்திய வானியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஎஸ்ஆர்ஓ) வரு கின்றது. அதன் வர்த்தகப் பிரிவு ‘ஆன்ட் ரிக்ஸ் கார்ப்பரேஷன்’ எனும் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கும் தேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட் என்கிற தனி யார் நிறுவனத்திற்கும் இடையில் 2005ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்படுகின் றது. அதன்படி அந்த தனியார் நிறுவனத் திற்கு 70 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற் றையை வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அளிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக அரசுக்கு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட லாம் என்று மத்திய தணிக்கைத் துறை மதிப்பிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின் றன. எப்படி?

வெறும் 15 மெகா ஹெர்ட்ஸ் அலைக் கற்றை மட்டுமே 3ஜி ஏலத்தில் விற்கப்பட் டது. அதன் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் சுமார் 67,719 கோடி ரூபாய். தேவாஸ் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட விருந்ததோ 70 மெகா ஹெர்ட்ஸ். நான்கு மடங்குக்கும் மேல். ஆனால், வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு.

மேலும், இதே வகை அலைக்கற்றை 20 மெகா ஹெர்ட்ஸ் அளவு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் பயன்படுத்த அனு மதிக்கப்பட்டது. அதற்கு வாங்கப்பட்ட கட்டணம் வெறும் 12,847 கோடி ரூபாய். மன்மோகன் சிங்கின் கொள்கைகள் எப்போதும் மக்களுக்கும், பொதுத்துறைக் கும் எதிரானவையாக இருக்கின்றன என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. மக்களின் சுருக்குப் பைகளிலிருந்து கொள்ளையடித்து, முதலாளித்துவ திமிங் கலங்களுக்கு தீனி போடுவார்.

இந்த செய்தி ‘தி ஹிந்து’ குழும நாளி தழ்களில் வெளிவந்தவுடன் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு மறுப்பு வெளி யிடப்படுகின்றது. மேற்கண்ட நிறுவனத் திற்கு எஸ்-பேண்ட் அறைக்கற்றை ஒதுக்குவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆதலால், அர சுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்ற கேள் வியே இல்லை என்பது அந்த மறுப்பின் சாராம்சம்.

ஆனால், ஒப்பந்தம் போட்டிருக்கின் றீர்களே திருவாளர் பரிசுத்தம் அவர் களே? ஏன், ஒப்பந்தம் போட்டீர்கள்? இப் படி ஒரு விவகாரம் நடந்திருப்பதே இது நாள் வரை மக்களுக்குத் தெரியாது. இப் போது அந்த பத்திரிகைகள் அம்பலப் படுத்தவில்லை என்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கு இதே பிச்சைக் காசுக்கு நாட்டின் இயற்கை வளத்தை விற்றிருப்பீர் கள் இல்லையா? விற்றிருக்க மாட்டோம் என்று நீங்கள் சொன்னால் யாரும் நம்பப் போவதில்லை. ஏனெனில், 2007லிருந்தே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்த மாக புகார்கள் எழுப்பப்பட்டு வந்தன. அதாவது அலைக்கற்றைகள் ஒதுக்கப் படுவதற்கு முன்பாகவே புகார்கள். ஆனால், அந்த புகார்கள் எதையும் பொருட்படுத்தாமல், நீங்கள் முடிவு செய்தபடியே அலைக்கற்றைகள் ஒதுக்கி னீர்கள். எதிர்ப்பு வந்தபோதே அப்படிச் செய்த நீங்கள், விஷயமே வெளியில் தெரி யாமல் இருந்திருந்தால் இந்த ஊழலை யும் செய்யாமலா இருந்திருப்பீர்கள்?

பொதுத் தணிக்கைக் குழு இந்த ஒப் பந்தத்தை இன்னும் ஆராய்ந்து கொண் டிருப்பதாகக் கூறுகின்றது. அது இழப்பு குறித்து இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆனால், வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்றது உண்மைதானே? அப்படி விற்க ஒப்புக் கொண்டதே ஊழல்தானே? பிஎஸ்என்எல்லிடமும் எம்டிஎன்எல் லிடமும் வாங்கப்பட்ட கட்டணத்தைக் கணக்கிட்டாலே ரூ.40,000 கோடிக்கு மேல் வருகின்றது.

பொய்களுக்கு அளவேயில்லை. அலைக்கற்றை எதுவும் ஒதுக்கப்பட வில்லை என்கிறார் பிரதமர் (அலுவலகம்). ஆனால், அந்த தனியார் நிறுவனம் தன் னுடைய அகண்ட அலை வரிசை சேவையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு தொலைத்தொடர்புத் துறை அலைக் கற்றை ஒதுக்கியிருக்கின்றது. அதை இப்போது அந்த துறை திரும்பப் பெறப் போவதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது, தேவாஸ் நிறுவனத்திற்கு விற் பது என்பதை திட்டவட்டமாக முடிவு செய்து விட்டார்கள். இல்லை என்றால், எதற்கு அந்நிறுவனம் தன்னுடைய சேவையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு அலைக்கற்றை வழங்க வேண்டும்?

இந்த ஒதுக்கீட்டுக்கு முன்னர் அதற்கான பொது அறிவிப்போ, ஏலமோ, டெண் டரோ விடப்படவில்லை. 2ஜி ஒதுக்கீட் டிற்கு ஏலம் விடுங்கள் என்று மன்மோகன் சிங் அமைச்சர் ராசாவுக்கு ஆலோசனை வழங்கியதாகவும், ராசா அதையும் மீறி தன்னிஷ்டம் போல் ஒதுக்கீடு செய்தார் என்று சிலர் எழுதி வருகின்றனர். அதா வது, பிரதமர் நல்லவர், ராசா மட்டும்தான் குற்றவாளி என்பதைப் போல. ஆனால், இந்த ஒதுக்கீட்டில் ‘முதலில் வந்தவருக்கு முன்னுரிமை’ என்பது கூட கடைப்பிடிக்கப்படவில்லை. அப்படியானால் மன்மோகன் சிங்கை என்ன செய்ய வேண்டும்?

ஏன் ஏலமோ டெண்டரோ விடப்பட வில்லை என்கிற கேள்விக்கு இஸ்ரோ வின் இந்நாள் தலைவர் ராதாகிருஷ்ண னும், முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனும், ‘2003ல் தேவாஸ் மல்டிமீடியாவு டன் பேச்சு வார்த்தை துவங்கியபோது... வேறு நிறுவனங்கள் எதுவும் இருக்க வில்லை’ என்று பதிலளித்திருக்கின்றனர். வேறு நிறுவனங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது பொது அறிவிப்பு வெளியிட்டால்தானே தெரியும்? அதைச் செய்யாமலேயே வேறு யாரும் இல்லை என்று முடிவிற்கு வருவது எப்படி சரி யாகும்?

இந்த ஒப்பந்தம் பற்றி பிரதமருக்கே தெரியாது என்கிறார்கள். நாங்கள் அரசாங் கத்திற்கே தெரிவிக்கவில்லை என்கிறார்கள். அவர்களது கூற்றுப்படியே இந்த விஷயம் விண்வெளி ஆணையம் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தில் அமைச்சரவைச் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை யின் ராஜாங்க அமைச்சர் (இத்துறைக்கு பிரதமர்தான் காபினட் அமைச்சர்) ஆகி யோர் உறுப்பினர்கள். இணை அமைச் சருக்கும், அமைச்சரவைச் செயலாளருக்கும் தெரிந்த விஷயம் பிரதமருக்குத் தெரி யாது என்றால் யாராவது நம்புவார்களா? கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பொய் சொல்கிறார்கள்.

மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

“2005ல் மத்திய அமைச்சரவையும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு கட்டத்திலும் இஸ்ரோவுடனான எங்களது ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பின்னர்தான் செயற்கைக்கோள் மூலமாக இணையதள சேவை வழங்கும் எங்களது திட்டத்தை வளர்க்கத் துவங்கினோம்’’ என்று தேவாஸ் நிறுவனத்தின் தலைவர் ராமச்சந்திரன் விஸ்வநாதன் ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழுக்கு (ஆகஸ்ட் 23, 2010) பேட்டியளித்துள்ளார். (தி ஹிந்து. 9.2.11). அப்படியெனில், பிரதமருக்குத் தெரியாது என்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் அல்லவா?

ஊழல் மேல் ஊழல் நடந்து கொண்டிருக்கின்றது. அடுத்தடுத்து ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்திய வரலாற்றில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் போல் வேறெப்போதும் இவ்வளவு ஊழல்கள் நடந்ததில்லை. ஆனால், மன்மோகன்சிங் மீது குற்றம் எதுவும் இல்லை என்று சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்ட சிலர் தொடர்ந்து பிதற்றி வருகின்றார்கள். நற்சான்றிதழ் கொடுப்ப வர்களின் யோக்கியதையைப் பார்த்தாலே மன்மோகன் சிங்கின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம்.

இறுதியாக, 1980களில் நிதி வருவாய் தொடர்பான ஊழல்கள் வெறும் எட்டு மட்டுமே நடந்திருந்தன. மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்த 1991-96 கால கட்டத்தில் மட்டும் 26 ஊழல்கள் நடந்தன. அவர் பிரதமராக இருக்கும் இந்த ஆறரை ஆண்டு காலத்தில் சிறுநாடு களின் பட்ஜெட்டையே மிஞ்சுகின்ற அள விற்கு ஊழல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன. (சபா நக்வி, அவுட்லுக், நவம்பர் 29, 2010).

இன்னும் எத்தனை ஊழல் நடந்திருக்கின்றதோ நமக்கு இப்போது தெரியாது. ஆனால், இவை அனைத்தும் உலகமயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட பின்னர் தான் இவ்வளவு பெரிதாகவும், இவ்வளவு அடிக்கடியும் நடந்து கொண்டிருக்கின் றன என்பது மட்டும் நிச்சயம்.

அசோகன் முத்துசாமி

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)