Tuesday, February 1, 2011

தலித் மக்கள் ஆலய நுழைவுக்கு தடை 3 ஆயிரம் பேர் கைது



உத்தப்புரம் தலித் மக் களின் வழிபாட்டு உரிமை யை நிலைநாட்ட ஆலய நுழைவுப்போராட்டத்திற்கு பயணப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன் னணி தலைவர்கள் 500 பேர் மதுரை மாநகரில் காவல் துறையால் கைது செய்யப் பட்டனர். உத்தப்புரம் கிரா மத்தில் காவல்துறையின் 144 தடை உத்தரவை மீறி ஆலய நுழைவுப்போராட்டத்திற்குச் சென்ற 300-க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட் டனர். இதுதவிர தமிழகத் தின் பல்வேறு முனைகளில் இருந்து உத்தப்புரத்தை நோக்கி வந்தவர்களை காவல்துறையினர் இடை யிலேயே மறித்து கைது செய்துள்ளனர்.

உத்தப்புரம் தலித் மக் களுக்கு முத்தாலம்மன் கோவில் அரசமரவழிபாடு என்பது பாரம்பரியமான தொன்றுதொட்ட உரிமை யாகும். 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பஞ்சாயத்து மூலம் தலித்துகளின் இந்த உரிமை பறிக்கப்பட்டது. கட்டப்பஞ்சாயத்து தண்ட னைக்குரியது என நீதிமன்ற மும், தமிழக அரசும் பல முறை உத்தரவிட்டபிறகும் இந்நிலை நீடிப்பது அவ மானகரமானதாகும்.

தலித் மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டு களாக வழிபாடு நடத்தி வந்த முத்தாலம்மன் கோவில் வழிபாட்டு உரிமையை கடந்த 1989 ஆம் ஆண்டு ஒரு கட்டப்பஞ்சாயத்தின் மூலம் தலித்துகளின் வழி பாட்டு உரிமை பறிக்கப் பட்டது.

சட்டரீதியான உரிமை நிலைநாட்டப்பட வேண் டும் என வலியுறுத்தியும், உத்தப்புரத்தில் தலித் மக் களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். கடந்த 3 ஆண்டு களாக தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதற்காக குரல் கொடுத்து பல போராட் டங்களை நடத்தியுள்ளன. முதல்வர் கருணாநிதிக்கும் பல கடிதங்கள் எழுதப்பட் டுள்ளன. மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் தனது தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கியும் உத்தப்புரத்தில் நிழற்குடை அமைக்கப்பட வில்லை. நிழற்குடை அமைத் தால் தலித் மக்கள் தங்கள் முன் அமர்ந்து விடு வார்கள் என்ற சாதி ஆதிக்க உணர் வுக்கு அரசு அதிகாரமும் துணைபோவதை பல முறை சுட்டிக் காட்டியும் இதுவரை உத்தப்புரத்தில் நிழற்குடை அமைக்கப்பட வில்லை. இந்த நிலையில் மதுரையில் டி.கே.ரங்கரா ஜன் தலைமையில் நடை பெற்ற முற்றுகைப் போராட் டத்தின் போது காவல்துறை கடு மையான அடக்குமுறை யை ஏவிவிட்டது. இதன் காரணமாக பலர் படுகாய மடைந்தனர். சென்னையில் உத்தப்புரம் தலித் மக்க ளுக்கு ஜன நாயகரீதியான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது, உத்தப்புரம் தலித் மக்களது சட்டபூர்வமான உரிமைகளை நிலைநாட்ட ஜனவரி 31 காலை 11 மணி யளவில் உத்தப்புரம் முத் தாலம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட் டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஒரு மாத மாகியும் அரசு தரப்பிலி ருந்து எந்த நடவடிக்கையும், பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

அலுவலகம் முன் குவிந்த காவல்துறை

இந்த நிலையில் அறிவிக் கப்பட்டபடி ஜனவரி 31 ந்தேதி காலை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாவட் டக்குழு அலுவல கம் அமைந்துள்ள மகபூப் பா ளையத்திலிருந்து உத்தப் புரம் செல்ல ஏராளமான மக்கள் குவிந்தனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன் னணி மற்றும் பல்வேறு தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குழுமினர்.

அங்கு மாநகர் காவல் துறை உதவி ஆணையர் சின்னச்சாமி, துணை ஆணையர் கணேசன் தலை மையில் அப்பகுதி முழு வதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ், தலைவர்களைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநிலத்தலைவர் பி.சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட் டச்செயலாளர்கள் இரா. அண்ணாதுரை, சி.ராம கிருஷ்ணன் ஆகியோர் ஆட்சியருடன் பேச்சுவார்த் தை நடத்தினர். 144 தடை யாணை பிறப்பித்துள்ள தால் உத்தப்புரம் செல்லக் கூடாது என அவர் கூறியுள் ளார். அறிவிக்கப்பட்டபடி போராட்டம் நடைபெறும் என தலைவர்கள் அறிவித்து விட்டு அலுவலகம் வந்து உத்தப்புரத்திற்கு கிளம்பி னர்.

இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அனைத்திந்திய மாதர் சங்க மாநிலப் பொதுச்செய லாளர் உ.வாசுகி, தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், ஆதித்தமிழர் பேரவை மாநில நிர்வாகி திருச்செந் தூர் சங்கர்,மாநில இளைஞ ரணி செயலாளர் விடுதலை வீரன், இமானுவேல் பேர வை பொதுச்செயலாளர் பூ.சந்திரபோஸ், சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச்செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச்செயலாளர் இரா.அண்ணாதுரை, மாநி லக்குழு உறுப்பினர் இரா. ஜோதிராம், வாலிபர் சங்க மாநிலத்தலைவர் முத்துக் கண்ணன், இந்திய மாணவர் சங்க மாநிலச்செயலாளர் ஜோ.ராஜ்மோகன் மற்றும் தமிழ்ப்புலிகள், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற் கத் திரண்டனர்.

திடீர் செக்ஷன் படி தடையாம்!

கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவர் களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உத்தப்புரம் சென்றால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். ஆகை யால், உங்களை கைது செய் கிறோம் என்று கூறினர். சட்ட ரீதியாக தலித் மக்க ளுக்கு வழங்கப்பட்ட உரி மையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட் டம் நடத்தும் எங்களால் சட்டம் - ஒழுங்கு பிரச் சனை வராது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறி னார். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதியில் வேண்டுமானால் நீங்கள் எங்களைத் தடுத்து நிறுத் துங்கள். மதுரை நகரில் எந்த தடை உத்தரவும் இல்லாமல் தடுப்பது சட்டப்பூர்வமான தல்ல என சுட்டிக்காட்டி னார். ஆனாலும், காவல் துறையினர் 32 செக்ஷன் படி மதுரையில் கூட்டமாக சேர்வதற்கு தடைவிதிக்கப் பட்டுள்ளது என்று கூறினர். 144 தடையாணையை வீடு வீடாகத் தேடி வழங்கிய நீங்கள், இந்த ஆணையை பத்திரிகைச்செய்தியாகவோ, தலைவர்களிடமோ வழங்க வில்லை. ஆகவே, உத்தப் புரத்திற்கு நாங்கள் செல் வோம் என்ற தலைவர்களை மாநகர காவல்துறை ஆணை யாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் குவிக்கப்பட் டிருந்த காவல்துறையினர் தடுத்தனர். இதனால் திரண் டிருந்த மக்களிடம் உணர்ச் சிக்கொந்தளிப்பு ஏற்பட்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அங்கிருந்து முழக்கங்களு டன் மகபூப்பாளையம் ஜின்னா திடலை நோக்கி அனைவரும் முன்னேறினர். அவர்களை அங்கு காவல் துறையினர் மறித்து கைது செய்தனர்.

உத்தப்புரம்

காவல்துறையின் 144 தடை உத்தரவையொட்டி உத்தப்புரத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உத்தப்பு ரம்,எழுமலையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கோடாங்கி நாயக்கன் பட்டியில் இருந்து மாற்றுப்பாதை வழியாக எந்தவித முன்னறி விப்பு மின்றி எம்.கல்லுப்பட்டி பகுதிக்கு பேருந்துகள் திருப்பி விடப்பட்டன. இத னால், இ.கோட்டைப் பட்டி, உத்தப்புரம், எழு மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்தே ஊருக்குள் வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

உத்தப்புரம் முத்தாலம் மன் கோவில் முன்பு ஏராள மான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கண்ணீர்ப் புகைக்குண்டு கள், தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனம், கலவரத்தடுப்பு வாகனமான ரயாட் ஆகிய வாகனம் ஊரில் நிறுத்தப்பட்டிருந்தன.

காவல்துறை குவிப்பு

மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மு.மனோகர், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் உத்தப்புரத் தில் 3 ஏடிஎஸ்பிகள், 14 டிஎஸ்பிகள், 34 ஆய்வாளர் கள், 153 சார்பு ஆய்வாளர் கள், 57 ஆயுதப்படை காவல்துறையினர், 311 சிறப்பு காவல்படையினர் உள்ளிட்ட 1787 பேர் பாது காப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டனர்.

கணவாய்கேட், ராஜாக் காபட்டி, கோடாங்கி நாயக் கன்பட்டி, கச்சப்பட்டி, பொட்டல்காளியம்மன்கோவில், ஆத்தங்கரை கருப்பசாமி கோவில், மல்லப்புலம் விலக்கு, டி.கிருஷ்ணாபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, திருமாணிக்கம் விலக்கு, அல்லிக்குண்டனம், சின்னக் கட்டளை, மங்கள் ரேவு உள்ளிட்ட 14 இடங்களில் காவல்துறை செக்போஸ்ட் அமைத்து உத்தப்புரத் திற்குள் யாரையும் அனும திக்கவில்லை. டி.ஐ.ஜி சந் தீப்மிட்டல், மதுரை மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் மு.மனோகரு டன் ஆலோசனை நடத் தினார்.

குறிப்பாக, உத்தப்புரத் தில் தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிக எண்ணிக் கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஆனாலும், அறிவித்தபடி ஆலய நுழைவுக்காக மாலை, பழம், சூடம், சாம்பிராணி தட்டு, பொங்கல் வைக்க பொருட்களுடன் தலித் மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் அணி வகுத்து வந்தனர். அவர்களை ஏடிஎஸ்பி மயில்வாகனன் தலைமையிலான காவல்துறையினர் முத்தாலம்மன் கோவிலுக்கு 300 மீட்டர் தூரத்திற்கு முன் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப்பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராஜ், சி.சங்கரலிங்கம், பொன்னையா, உத்தப்புரம் நாட்டாண்மைகள் முத்து ராஜ், பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

தே.கல்லுப்பட்டி

விருதுநகர் மாவட்டத் தில் இருந்து சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜ பாளையம், சிவகாசி உள் ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து உத்தப்புரம் ஆலய நுழைவுப் போராட்டத் திற்கு வந்தவர்களை காவல் துறையினர் என்ஜிஓ காலனி யிலேயே தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். ஒவ் வொரு பேருந்தாக ஏறி இந்த சோதனை மேற்கொள்ளப் பட்டது. வேனில் வந்தவர் களை இறக்கி விடச் சொல்லி காவல்துறையினர் கட்டாயப்படுத்தினர். ஆனா லும், போராட்டத்தில் பங் கேற்றவர்கள் அங்கிருந்து நடந்தே தே.கல்லுப்பட்டி பேருந்து நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு திரண்டவர்களை காவல் துறை டிஎஸ்பி சி.பாலசுப்ர மணியன் தடுத்து நிறுத்தி னார். அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, தீண் டாமை ஒழிப்பு முன்னணி யின் விருதுநகர் மாவட் டத்தலைவர் ஏ.சேகர், செயலாளர் எஸ்.ஞானகுரு, பொருளாளர் எம்.முத்துக் குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விருதுந கர், மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 340 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தப் புரம் தலித் மக்களின் உரி மை மீட்பு போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் பேர் மூன்று இடங்களிலும் கைது செய்யப்பட்டனர்.


உத்தப்புரம்

போராட்டக் களத்திலிருந்து....

உசிலம்பட்டி கணவாய் கேட் (எழு மலை பிரிவு) அருகே காவல்துறை யினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர் கள் அவ்வழியே சென்ற எந்த ஒரு வாகனத்தையும் விட்டுவைக்க வில்லை.

உரிமைக்கான போராட்டத்திற்காக செல்பவர்களை, ஏதோ கொள்ளை யர்களை தேடுவது போல் வாகனங் களை நிறுத்தி சோதனைசெய்தனர்.

உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து புறப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் 6 கி.மீ முதல் 8 கி.மீ தூரம் நள்ளிரவில் வயல்வெளிகளில் நடந்தே சென்று உத்தப்புரத்தை அடைந்தனர்.

ஞ நள்ளிரவில் உத்தப்புரம் சென் றடைந்த போராட்டத்தளபதிகளுக்கு தலித்மக்கள் காத்திருந்து வரவேற் பளித்தனர். கிட்டத்தட்ட ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வழங்கு வதற்கான அனைத்து ஏற்பாடுகளு டன் தயார் நிலையில் இருந்தனர்.

உத்தப்புரம் ஆலய நுழைவுப் போராட் டத்தை ஒடுக்க தமிழக அரசு காவல் துறையை குவித்திருந்தது. உத்தப் புரம் கோவிலை மட்டும் பாதுகாப்ப தற்கு விருதுநகர் காவல்கண்காணிப் பாளர் பிரபாகரன் தலைமையில் கோவிலைச் சுற்றி போலீசார் குவிக்கப் பட்டனர். கோவிலுக்குள் வருபவர் களை தடுக்க போலீசார் கையில் ஆளுயுயர தடிகள் இருந்தன. காலை 8.30 மணிக்கு கோவில் சரியாக பூட் டப்பட்டிருக்கிறதா என காவல்துறை பூட்டை இழுத்துபார்த்துக்கொண்டது.

கோவிலுக்குள் மக்கள் வருவதைத் தடுக்கும் வகையில் காவல்துறை வாகனங்கள் அனைத்தும் கோவில் வாசல் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. போதாதென்று சாலைதடுப்புகளை கொண்டு நட்டுவைத்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.மகேந் திரன் நள்ளிரவில் தே.கல்லுப்பட் டியிலிருந்து மேலத்திருமாணிக்கம் வரை காட்டுப்பாதைகளின் வழியே இருசக்கர வாகனத்தில் பயணித்து அங்கிருந்து 3 கி.மீ தூரம் நடந்தே உத்தப்புரத்தை அடைந்தார்.

கைது செய்யப்பட்ட தலித்மக்கள், வாகனங்களில் கைக்குழந்தைகளு டன் ஏறினர். அப்போது அவர்கள் இன்னும் எத்தனை தடைகள் வந்தா லும், எத்தனை முறை கைது செய்து சிறையில் அடைத்தாலும் எங்களது உரிமையை பெற்றே தீருவோம் என்றனர்

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)