Thursday, January 13, 2011

பகுத்தறிவு சகாப்தமும் ஜனநாயகமும்

‘ஒரு அபிப்பிராயத்தை வெளியிட வழியின்றி’ அடக்குவதனால் பெருந் தீமையே விளைகிறது. அது மனித சமூகம் அடையக் கூடிய நன்மையைக் கெடுப்பது போலாகும். அதனால் அந்தத் தலைமுறை மட்டுமின்றி வருங்காலத் தலை முறைகளும் பாதிக்கப்படும். ஆனால் அடக்கப்படும் அபிப்பிராயத்துக்குச் சாதகமானவர்களைக் காட்டிலும் அதற்குப் பாதகமானவர்களுக்குத்தான் அதிக நாட்டம். இந்த அபிப்பிராயம் சரியான தாயின் தனது தவறைத் திருத்திக் கொண்டு சத்தியத்தைத் தெரிந்து கொள்ளும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை மனித சமூகம் இழந்து விடுகிறது. அது தவறாயின்அதை அடக்குவதாலும் முன் சொன்னது போலவே நட்டம் ஏற்படும். ஏனெனில் சத்தியம் அசத்தியத்தோடு மோதும் போது இன்னும் அதிகப் பிரகாசமும் தெளிவும் பெறுகிறது. அந்த நன்மை தவறான அபிப்பிராயத்தை அடக்குவதனால் இல்லாமல் போய்விடுகிறது... நாம் அடக்க முயலும் அபிப்பிராயம் தவறா னது என்று நாம் நிச்சயம் சொல்ல முடியாது. அத்தகைய நிச்சயம் நமக்கு இருக்குமாயின் அதை அடக்குவதனால் தீமையே ஓழிய வேறில்லை”

இது ஜான்ஸ்டுவர்ட் எழுதியவை. அவர் ‘தனிமனித சுதந்திரம் என்ற கருத்தின் பலமான ஆதரவாளர். அவர் எழுதிய ‘சுதந்திரம்’ என்ற சிறிய நூல் மிகப்பெரும் பெயரை ஈட்டியது. அந்நூலில்தான் நாம் மேலே குறிப்பிட்ட வரிகள் இடம் பெற்றுள்ளன. தனிமனித கருத்துக்கு அவர் வழங்கிய முக்கியத்துவம் இதனால் புலனாகும். 1806-1873 காலத்தில் வாழ்ந்த இவர் இவ்வாறு வாதிடக் காரணம் என்ன?

“மிகப் பெரும்பான்மையோருக்கு மிகப்பெரிய சுகம்” என்பதையே ஒரு அடிப் படை அளவு கோலாகக் கொள்ள வேண்டும் என பிரயோஜனவாதிகள் கூறினர். இங்கிலாந்தில் இவர்கள் குரல் ஓங்கி ஓலித்தது. குறிப்பாக மில் என்பவர் இதைப் பிரபலப்படுத்தினார். அதன் எதிரொலி யாகவே ஸ்டுவர்ட் குரல் இருந்தது என்றாலும் தவறில்லை.

19வது நூற்றாண்டு முழுமையும் வாக்குரிமையை அனைவருக்கும் விரிவு படுத்துவது என்ற மைய இழையைச் சுற்றியே ஜனநாயகக் குரல்கள் எழுந்தன. அன்றைய சர்வாதிகாரச் சுழலில் அது மிக மிக முற்போக்கானது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது மட்டுமே போதுமானதாக இல்லை என்பதை நடை முறைகள் காட்டின. இது குறித்து ஜவஹர்லால் நேரு எழுதுகிறார்.

“பசியால் வாடும் ஒருவனுக்கு வாக்கினால் என்ன பயன்? அவனுடைய பசியைப் பயன்படுத்திக் கொண்டு. தங்களுடைய சொந்த நலனுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் கையில்தான் உண்மையான அதிகாரம் இருந்தது. வாக்குரிமை என்பது ஒவ்வொருவருக் கும் அரசியல் அதிகாரத்தை அளிப்ப தாகக் கருதப்பட்டது. ஆனால் அந்த அரசி யல் அதிகாரம் பொருளாதார அதிகாரத் துடன் இணைந்ததாக இல்லாவிடின், அது சாரமற்ற வெறும் சக்கை என்பது தெளிவு. வாக்குரிமையினாலேயே சமத்துவம் ஏற்படும் என்கிற ஆரம்ப ஜனநாயக வாதிகளின் கூற்று வெறும் பகற்கன வாகவே முடிந்தது.

இந்த எண்ணம் வலுப்பெற்று பின்னர் அது சோஷலிசத்தை நோக்கி நகர்ந்தது. அந்த காலகட்டத்தில் ஜனநாயக தத்து வம் வளர் முகத்தில் இருந்தது. பல்வேறு சிந்தனையாளர்கள் அதனை வளப் படுத்தினர்; வலுப்படுத்தினர்.

ஆடம் ஸ்மித்தின் பொருளாதாரக் கருத்துகள் அன்றைய காலகட்டத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. ஏற் கெனவே சமூகம் மதப்பிடியிலிருந்தது. ஆடம்ஸ்மித் பொருளாதாரத்தை அதி லிருந்து விடுவித்து வேறொரு பாதையில் செலுத்தினார். காரல்மார்க்ஸ் இதனை சரியான திசை வழிக்கு கொண்டு செல்லும் வரை ஆடம்ஸ்மித் பார்வையே கோலோச் சியது. அமெரிக்க பிரெஞ்சு சுதந்திரப் பிரகடனங்களில் காணப்பட்ட ஆரவாரச் சொற்கள் மக்கள் மனதில் அடக்கு முறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான எழுச்சியை பறையடித்துச் சொல்லி யிருந்தது. ஆயினும் சுதந்திரம், சமத்து வம், சகோதரத்துவம் என்ற அந்தச் சொற்க ளின் மெய்ப் பொருளை உணர்ந்து அனுபவிக்க முடியாதவர்களாகவே கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். இந்தப் பின்னணியில் 19 ஆம் நூற்றாண் டில் ஜனநாயக வளர்ச்சிக்கு புதிய சிந்த னைகள் உரம் ஊட்டின.

இதற்கு முந்தைய நூற்றாண்டு சிந்தனையாளர்களின் எழுத்தும் கூட உற்சாகம் ஊட்டின. அவர்களில் மிக முக் கியமாகக் குறிப்பிடத்தக்கவர் தாமஸ் பெயின் என்பவராவார். இவர் ஆங்கி லேயர். அமெரிக்க சுதந்திரப் போரின் போது அங்கு இருந்தார். அதற்கு உத வவும் செய்தார். ஒருவகையில் ‘பூரண சுதந்திரம்’என அமெரிக்கர்கள் முழங்க அவரும் காரணம் என்பார் ஜவஹர்லால் நேரு. அவர் இங்கிலாந்து திரும்பிய பின் மனித உரிமைகள் என்ற நூலை எழுதி னார். அதில் முடியரசை தாக்கினார். ஜன நாயகம் அவசியம் என்றார். ஏற்குமா ஆளும் வர்க்கம். அவர் நாடு கடத்தப் பட்டார். பிரெஞ்சு நாட்டில் தஞ்சம் புகுந் தார் அங்கு தேசிய கன்வென்ஷனில் ஒரு அங்கத்தினர் ஆனார்.அங்கும் அவர் வாய்பொத்தி இல்லை. 1793 இல் 16 வது லூயி சிரச்சேதம் செய்யப்பட்டதை ஏற்க வில்லை. எதிர்த்தார். அங்கேயும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபோது அவர் எழுதிய புத்தகம் ‘காமன் சென்ஸ் எனப்படும் பொதுபுத்தி குறித்த விமர்சன நூல் ’ ஆகும். அதில் மதச்சார்பு மனோபா வத்தை கண்டனம் செய்தார். எதையும் பகுத்தறிவோடு யோசிக்க வேண்டிய சகாப்தத்தில் இருப்பதாக வாதிட்டார். பிரெஞ்சு அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது இங்கிலாந்து அரசாங்கம் பெரிதும் கோபம் கொண்டது. ஏனெனில் அவரது ‘பகுத்தறிவு சகாப்தம்’ நூல் அவர்களுக்கு வேப்பங்காயாக கசந் தது. ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், அரசுக்கு எதிராகக் கலகம் செய்யாமல்; கிளர்ந்து எழாமல் இருக்க, அவர்களின் மத மூட நம்பிக்கை பெரிதும் காரணமாயிருந்தது.

அந்த மத நம்பிக்கையை தாமஸ் பெயின் தன் நூலில் தகர்த்து விட்டதால் அது மக்களை தூண்டிவிடும் அபாயகர மான சிந்தனை. அந்தப் புத்தகம் மிகவும் அபாயகரமானது என்று இங்கிலாந்து ஆட்சியாளர்கள் நடுங்கினர் அவர் புத்தகம் தடைசெய்யப்பட்டது. அதை வெளியிட்ட, விற்பனை செய்த அனைவ ரும் பெண்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். மதத்தை எதிர்த்ததால் ஆளும் வர்க்கம் அரண்டு போனது கண்டு ஜனநாயகவாதிகள் கவலைப்பட் டனர். கவிஞர் ஷெல்லி இது குறித்து நீதிபதிக்கு நீண்ட கடிதமே எழுதியதாகத் தெரிகிறது.

ஆயினும் இவர் போட்ட விதை இங்கி லாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு ரூபங்களில் வெளிப்படலாயின. பைபிள், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்ற பழமைவாதம் நொறுங்கிப் போனது. பைபிள் மீதான விமர்சனங்கள் வெளிவரத் துவங்கின. பைபிளை புதிய கோணங்களில் வியாக்கியானம் செய்யத் துவங்கினர். கேள்வி கேட்காமல் குருட் டுத் தனமாக ஒப்புக் கொள்ள வேண்டிய நூல் பைபிள் என்ற பழம் நம்பிக்கை மெல்ல மெல்ல ஆனால் படிப்படியாக உறுதியாக தவிடுபொடியானது.

அகஸ்ட் காம்டோ (1798-1857) எனும் பிரெஞ்சு தத்துவ ஆசிரியர் பழைய ஆத்திக சமயக் கோட்பாடுகள் இன்றைய தேவைக்கு உதவாது என கண்டறிந்து சொன்னார். அறிவியலையும் முன்னேற் றத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய தத்துவத்தை முன்வைத்தார். தன்னுடைய மதம் ஜீவகாருண்ய மதம் என அறிவித்தார். ஒரு வகையான சமத் துவத்தை அவர் கைக் கொண்டது, இவை யும் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட ஸ்டு வட்டை ஈர்த்தது என்பது ஆச்சரிய மில்லை.

பல்வேறு விதமான கற்பனாவாத சோஷலிச கருத்துகளும், சோதனை முயற்சிகளும், பிரெஞ்சு நாட்டிலும் வேறு சில நாடுகளிலும் பல்வேறு அறிஞர்க ளால் மேற்கொள்ளப்பட்டன. ஆக 19ஆம் நூற்றாண்டு ஜனநாயகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி பற்றி கவலைப் படலா யிற்று. அது வெறும் வாக்குரிமை என்ப தோடு நின்று விடாமல் பொருளாதார சமத்துவம் பற்றி கவலைப்படலாயிற்று. அதன் வளர்ச்சிப் போக்கில் மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை விளைந் தது. அதே சமயத்தில் “தனிமனிதர் உரிமை” பற்றிய கருத்தும் வலுப்படலாயிற்று. அதுவே பின்னர் மனித உரிமைப் பிரகடனமாக வெளிப்பட்டது. எந்தவொரு கருத்தும் திடீரென்று அந்தரத்திலிருந்து உதிப்ப தில்லை; யாரும் அருளுவதும் இல்லை; காலவோட்டத்தில் அனுபவ வெளிச் சத்தில் சரித்திர உரைகல்லில் உரசி உரசி தான் பிறக்கும் என்பதையே இவை உறுதி செய்கின்றன.

0 comments:

Post a Comment

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)