Thursday, January 6, 2011

பெண்கள் மனிதர்களா?



''பெண்கள் வானத்தின் பாதியை தாங்கிக் கொண்டிருக்கின்றனர்” என்றார் மாவோ.''

“பெண் இன்றி சூரியன் இல்லை. சந்திரன் இல்லை. விவசாயமில்லை. நெருப்புமில்லை” என்பது அரபு பழமொழி.

தாயாய் ஆண் கருவை சுமந்து, ஆண் மகவை பெற்றெடுக்கிறாள். சகோதரியாய், மனைவியாய், மகளாய், தோழியாய் ஆணோடு, பிறந்து, வளர்ந்து, ஆணுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டாலும், ஆணுக்கு சமமாக பெண் ஏன் பார்க்கப்படுவதில்லை. ஆண்களுக்கென்றே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட பணிகளில் பெண்கள் பணியாற்றத் தொடங்கிவிட்டனர். ‘கண்ணாடி கூரைகளை’ உடைத்து, வெளியேறி முன்னேறி வருகின்றனர் பெண்கள் என்கின்றோம். இருப்பினும், இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு நிறைவுற்ற இத்தருணத்தில் உலகில் பெண்களின் அந்தஸ்து எவ்வாறு உள்ளது என ஆராயும் பொழுது, பல தடை களை தாண்டிய போதும், போக வேண்டிய தூரம் மிகவும் அதிகம் என்று அறிய முடிகிறது. பெண்கள் இன்னும் சக ‘மனுஷிகளாக’ பார்க்கப் படாத நிலை தொடர்கிறது.

“பெண்கள் மனிதர்களா?” என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, “ஆம், பெண்களும் மனிதர்கள்தான்” என 1929ம் ஆண்டு பிரிட்டிஷ் பிரிவி கவுன்சில் தீர்ப்பு வழங்கி 80 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. விநோதமான இந்த வழக்கின் பின்னணி சுவாரசியமானது. 1867ம் ஆண்டு இயற்றப்பட்ட பிரிட்டிஷ் வட அமெரிக்கச் சட்டத்தின்கீழ் ! ‘மனிதர்கள்’ என்ற சொல் ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதனையும், ‘மனிதன்’ (நபர்) என்ற சொல் ‘ஆணை’ மட்டும் குறிக்கிறது. 1876ல் இயற்றப் பட்ட பிரிட்டிஷ் பொதுச் சட்டத்தை பொறுத்தவரை பெண்கள் ‘மனிதர் களாக’ கருதப்படமாட்டார்கள். ஆனால் வலி, தண்டனை ஆகியவை தொடர்பான விஷயங்களில் மனிதர் கள் எனக் கருதப்படுவார்கள் எனச் சுட்டிக்காட்டுகிறது.

1916ம் ஆண்டு ஆல்பர்டாவில் (கனடா) எமிலி மர்பி என்ற பெண் முதல் போலீஸ் மாஜிஸ்ட்ரேட்டாக பதவியேற்றார். ஆனால் பி.என்.ஏ சட்டத்தை சுட்டிக்காட்டி, அவரது நியமனம் செல்லாது என வாதிடப் பட்டது. பிரிட்டிஷ் காமன் வெல்த்தின் முதல் பெண் நீதிபதியாக 1.1.1916 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட எமிலி தொடர்ந்து எதிர்ப்புகளை சந்தித்தார். அவர் நீதிமன்றத்தில், முதல்நாள் எதிர்கொண்ட வழக்கு, ஒருசாராய வியாபாரியின் வழக்கு. எமிலி அவனுக்கு கடுமையான தண்டனை வழங்கினார். அப்பொழுது, சாராய வியாபாரியின் வக்கீல், எமிலி ஒரு பெண் என்றும், பி.என்.ஏ சட்டத்தை சுட்டிக்காட்டி, அவர் ‘நபர்’ என்ற வரையறைக்குவராததால், அவர் அளித்த தீர்ப்பை ஏற்க இயலாது என மேல் முறையீடு செய்ய விரும்புவதாக வாதிட்டார். அவரது எதிர்ப்பை குறித் துக்கொண்ட எமிலி அமைதியாக இருந்தார். விசாரணையை தொடர்ந் தார். இதே போன்று 1917ம் ஆண்டு, இளம் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் நீதிபதியாக செயல்பட்ட ஆலிஸ் ஜேமியன்சன் அளித்த தீர்ப்பையும் வக்கீல்கள் ஏற்க மறுத்தனர்.

1917ல் ஆல்பர்டா நீதிமன்றம் ‘பெண்களும் மனிதர்களே’ என தீர்ப்பளித்தது. எமிலி மர்பி கனடா நாட்டு செனட்டர் பதவிக்கு போட்டியிட விரும்பி, தனது பெயரை பதிவு செய்து கொண்டார். ஆனால், அன்றைய கனடா பிரதமர் சர். ராபர்ட் போர்டென், அதை ஏற்க மறுத்து விட்டார். பி.என்.ஏ சட்டத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், எமிலி செனட்டர் பதவிக்கு போட்டியிட முடியாதென தெரிவித்துவிட்டார். இதையடுத்து, கனடா நாட்டு பெண்கள் குழுக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி, கனடா நாட்டு செனட் பெண் களை உறுப்பினர்களாக ஏற்க மனு அளித்தனர்.

1927ல் எமிலி மர்பி கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு வழக்கு தொடுத்தார். ‘பெண்கள் மனிதர்களா? என்பதே வழக்கின் மையக் கேள்வி. எமிலியுடன் சேர்ந்து ஹென் ரீட்டா எட்வர்ட்ஸ்’ நெல்லி மெக்க்ளங், லூயி மெக்கின்னே மற்றும் ஐரீன் பார்பை ஆகிய நால்வரும் அந்த வழக்கை தொடுத்தனர். ‘பிரபல ஐவர்’, ‘வீரமான ஐவர்’, ‘நபர்/மனிதர் வழக்கு’ என பல பெயர்களில் இந்த வழக்கு பிரபலமடைந்தது. 1928, ஏப்ரல் 4ம் தேதி, கனடா நாட்டு உச்ச நீதிமன்றம் “பெண்கள் மனிதர்கள் என்ற விளக்கத்திற்குள் வர வில்லை” என்று தீர்ப்பளித்தது. பி.என்.ஏ. சட்டம் உருவாகியபோது பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. தேர்ந்தெடுக்கப் பட்ட அதிகாரிகளாக செயல்பட வில்லை. சட்டத்தில் ‘ஆண்’ (ழநு) என்றே அனைத்து பிரிவுகளிலும் குறிப்பிட்டி ருந்தது. பிரிட்டனின் மேல் சபையான ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் (ழடிரளந டிக டுடிசனள) ஒரு பெண் கூட அன்று இல்லை. எனவே கனடாவில் அச்சட்டத்தை மாற்றக்கூடா தென வாதிட்டனர். ஐந்து நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து விட்டு, ‘தகுதியான நபர்கள்’ என்பதில் பெண்கள் இடம் பெறவில்லை என்று தீர்ப்பளித்தனர். பெரும்பான்மை தீர்ப்பு என்பதை பிரான்சிஸ் அலெக்சாண்டர் ஆங்லின் எழுதினார். அதை நீதிபதி கள் லமோல் மற்றும் ஸ்மித் ஏற்றுக் கொண்டனர். ஐந்து வாரம் நீதிமன்றத் தில் விவாதம் நடைபெற்றது பெண்கள் மனிதர்கள் அல்ல என்று இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

மனம் தளராத அந்த ஐந்து பெண்களும் அன்றைய கனடா நாட்டு பிரதமரான மெக்கின்சி கிங் என்பவரின் உதவியுடன் பிரிட்டிஷ் பிரிவி கவுன்சி லில் முறையிட்டனர். 18, அக்டோபர், 1929 அன்று லார்டு சான்கீ “ஆம் பெண் கள் மனிதர்களே” என தீர்ப்பளித்தார். அத்துடன் கனடாவின் செனட்டர் பத விக்கு அவர்கள் போட்டியிடலாமென் றும் அறிவித்தார். அவருடைய தீர்ப்பில், “பொது இடங்கள் பொது வாழ்க்கை யிலிருந்து பெண்களை ஒதுக்கி வைப்ப தென்பது காட்டுமிராண்டித்தனமான செயல். பெண்கள் மனிதர்களா என்று கேள்வி எழுப்புகின்றவர்களே, பெண்கள் மனிதர்கள் இல்லையா என்று நான் கேட்கிறேன்” என்று லார்டு சான்கீ எழுதி யுள்ளார்.

1930ம் ஆண்டு, கனடா பிரதமராக இருந்த மெக்கின்சிகிங், கெய்ரினி வில்சன் என்ற பெண்ணை செனட்டராக நியமித் தார். எமிலிக்கு அந்த பதவி கிடைக்கு மென்ற எதிர்பார்ப்பு இருந்தது. (எமிலி கன்சர் வேடிவ் கட்சி, கெய்ரினி லிபரல் கட்சி). 1918ம் ஆண்டில் கனடாவில் சில பெண்களுக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது. “மனிதர்கள் வழக்கு” கனடா வில் பெண்களின் வாக்குரிமை இயக்கத் திற்கு உத்வேகமளித்தது. 1960ம் ஆண் டில்தான் கனடாவில் அனைத்து பெண் களுக்கும் வாக்குரிமை கிடைத்தது.

1979ம் ஆண்டில் (1929 தீர்ப்பின் 50வது நிறைவு ஆண்டு) ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும், ஆண்-பெண் சமத்துவம் மற்றும் பெண்ணுரிமை போராளிகளாக 5 பேரை தேர்ந்தெடுத்து கவர்னர் ஜெனரல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, ஒவ் வொரு ஆண்டும், இந்த ‘வீரமிக்க ஐவர்’ விருது வழங்கப்படுவது தொடர்கிறது. அதுமட்டுமின்றி 2009ம் ஆண்டில், (80 ஆண்டு நிறைவு விழா) அந்த 5 பெண்களையும் கனடாவின் “முதல் கௌரவ செனட்டர்கள்” என்று கனடா செனட் அறிவித்தது குறிப்பிடத் தக்கது.

உலகின் சட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால், பொறிக்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, உலகெங்கிலுமுள்ள பெண்ணுரிமை போராளிகளை வெகுண்டெழச் செய்யும் என்பதில் ஐயமில்லை. உடலமைப்பில் உள்ள வித்தியாசத்தை மட்டுமே வைத்து, பெண்களை பலவீன மானவர்கள் என சித்தரித்து, சார்பு நிலைக்கு தள்ளி, பெண்களை வார்த் தெடுப்பதை தடுப்போம்.

“பெண்ணடிமைத்தன வேர்களைத் தேடி, பூச்சியரித்து, அழுகிய வேர்களை வெட்டி எரிந்து, சமுதாயம் என்ற மரம் ஆரோக்கியமாக வளர, சமத்துவம் என்ற வேர்கள் ஆழமாக வேரூன்ற முயலுவோம். கல்வி, வேலை, சுயசிந் தனை என்கின்ற உரத்தை இடுவோம்”. 2011 புதிய ஆண்டில் புதியதொரு உயரத்தைத் தொட புறப்படுவோம்.

பேரா. ஆர். சந்திரா

2 comments:

  1. அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய விசயம் .
    நல்ல பகிர்வு .
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நண்டு @நொரண்டு

    தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

    ReplyDelete

Labels

Coca Cola (1) Peak Oil (1) Permaculture (1) Power of Community (1) Renewable energy (1) Solar energy (1) SOPA (1) sustainable agriculture (1) அ.குமரேசன் (6) அங்காடிதெரு (1) அணு ஆற்றல் (2) அணுமின் (1) அண்ணா (4) அண்ணா நூலகம் (1) அதிர்ச்சி (1) அத்வானி (2) அந்நிய முதலீடு (2) அபிநயா (1) அப்துல் கலாம் (1) அப்பணசாமி (2) அமெரிக்கா (20) அம்பானி (1) அம்பேத்கர் (9) அரசியல் (177) அரசியல்.நிகழ்வுகள் (6) அரசு (14) அரசு மருத்துவமனை (1) அரசு விடுதி மாணவர்கள் (1) அரவான் (1) அருந்ததியர் (1) அர்ஜெண்டினா (1) அலசல் (1) அவலம் (19) அழகு (1) அறிமுகம் (1) அனுபவம் (28) அன்னா ஹசாரே (1) அஜயன் பாலா (1) ஆ.ராசா (1) ஆணையம் (2) ஆதவன் தீட்சண்யா (3) ஆப்கானிஸ்தான் (1) ஆப்பிரிக்கா (2) ஆர்.மீனா (1) ஆர்எஸ்எஸ் (2) ஆவணப்படம் (3) ஆனந்தன் (2) இ.எம்.ஜோசப் (1) இ.பா.சிந்தன் (22) இட ஓதுக்கீடு (3) இடஒதுக்கீடு (1) இடதுசாரிகள் (4) இணையம் (2) இதழ்கள் (6) இந்தியா (69) இந்துத்துவா (8) இந்துஜா (1) இமு (2) இமு டிச11 (5) இமு நவமபர் 2011 (6) இயக்கம் (7) இயக்குனர் ஷங்கர் (1) இரா.சிந்தன் (5) இரா.செழியன் (2) இரா.நடராஜன் (3) இராம.கோபாலன் (1) இல.சண்முகசுந்தரம் (2) இலக்கியம் (38) இலங்கை (6) இலங்கைத் தமிழர் (4) இலவசக் கல்வி (1) இலவசங்கள் (1) இளவரசன் கொலை (1) இளைஞர் முழக்கம் (11) இஷ்ரத் (2) இஸ்ரேல் ஆக்கிரமிப்பு (1) இஸ்லாம் (3) ஈராக் (1) ஈரான் (2) உ.வாசுகி (1) உச்ச நீதிமன்றம் (1) உணவு நெருக்கடி (2) உதயசங்கர் (1) உத்தப்புரம் (1) உயர்கல்வி (2) உரையாடல்கள் (2) உலக சினிமா (4) உலகமயம் (5) உலகம் (46) உளவியல் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சித் தேர்தல் (1) ஊடகங்கள் (14) ஊடகம் (8) ஊழல் (30) எடியூரப்பா (1) எம்.எப்.ஹூசேன் (1) எம்.சிவக்குமார் (2) எரிசக்தி (1) எல்.கே.ஜி (1) என்.ஜி.ஓ (1) என்கவுண்டர் (1) எஸ். பாலா (1) எஸ்.கண்ணன் (1) எஸ்.கருணா (3) எஸ்.பி.ராஜேந்திரன் (3) எஸ்.வி.வேணுகோபாலன் (2) ஏகாதிபத்தியம் (13) ஏமன் (1) ஒபாமா (4) ஓம்பிரகாஷ் வால்மீகி (1) ஓளிப்பதிவு (1) ஃபாக்ஸ்கான் (1) கச்சத் தீவு (1) கட்டுரை (51) கட்டுரைகள் (2) கணிணி (2) கணினி தொழில் நுட்பம் (1) கமல்ஹாசன் (1) கம்யூனிசம் (12) கருணாநிதி (11) கருத்து சுதந்திரம் (1) கருத்துரிமை (3) கலைஞர் (6) கல்வி (14) கவிதை (21) கவிதைகள் (1) கறுப்புப்பணம் (3) கனிமொழி (2) காங்கிரஸ் (10) காதல் (2) கால்பந்து (1) காவல்துறை (4) காஷ்மீர் (1) கி.பார்த்திபராஜா (1) கிங்பிஷர் (1) கியூபா (4) கிரீஸ் (1) குடும்பம் (1) குட்டி ரேவதி (1) குப்பன் சுப்பன் (1) குலாத்தி (1) குழந்தைகள் (9) குழந்தைகள் கடத்தல் (1) குஜராத் கலவரம் (1) குஜராத் படுகொலைகள் (1) கூகிள் அந்தரங்கம் (1) கூடங்குளம் (2) கே.சாமுவேல்ராஜ் (1) கே.பாலமுருகன் (1) கேள்விகள் (1) கைப்பற்றுவோம் போராட்டம் (1) கோவில் (1) ச.தமிழ்ச்செல்வன் (1) ச.மாடசாமி (1) சக்திஜோதி (1) சங்கமம் (1) சசிகலா (1) சச்சின் (1) சட்டசபை (2) சட்டம் (4) சத்யஜித் ரே (1) சந்திரகாந்தன் (1) சமச்சீர் கல்வி (4) சமவூதியம் (1) சமூக நீதி (2) சமூக வலைத்தளம் (1) சமூகப் பாதுகாப்பு (2) சமூகம் (177) சம்பு (1) சரத் பவார் (1) சர்வதேச பெண்கள் தினம் (1) சல்மான் ருஷ்டி (1) சா.கந்தசாமி (2) சா.செயக்குமார் (1) சாகித்திய அகாதமி விருது (1) சாக்லேட் (1) சாதீயம் (4) சாரா விஜி (2) சாலிம் அலி (1) சி.பி.எம் (9) சிக்கிம் (1) சிந்தனை (5) சிபி (1) சிராஜுதீன் (1) சில்லரை வர்த்தகம் (4) சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (1) சிறுகதை (12) சினிமா (52) சினிமா செய்திகள் (4) சினிமாச் செய்திகள் (4) சீத்தாராம் யெச்சூரி (2) சு.பொ.அகத்தியலிங்கம் (2) சு.வெங்கடேசன் (1) சுகாதாரம் (1) சுதிர் ரா (1) சுயமரியாதைத் திருமணம் (1) சுவாரசியம் (1) சுற்றுப்புறச் சூழல் (3) சூர்யா (1) செம்மலர் (4) செம்மலர் அக் 2011 (4) செய்திகள் (112) சென்னை (1) சோவியத் (1) சோஷலிசம் (1) டெல்லி (2) டேம் 999 (1) த.தமிழரசி (1) தகவல் உரிமை (1) தகவல் திருட்டு (2) தண்ணீர் (3) தமிழக மீனவர்கள் (1) தமிழகம் (66) தமிழர் (1) தமிழ்ச் சினிமா (1) தமிழ்நதி (1) தமுஎகச (4) தலித் (21) தற்கொலை (1) தனியார்மயம் (4) தனுஷ் (1) தி.க (2) திமுக (1) திரிணாமுல் (1) திருப்பூர் (2) திருமணம் (2) திரைக்குப் பின்னால் (2) திரைத்துறை (1) திரைப்பட விழா (1) திரைப்படம் (4) தினகரன் (1) தினமணி (3) தீக்கதிர் (9) தீண்டாமை (22) தீண்டாமையின் அடையாளங்கள் (1) தீபாவளி (1) தேசியச் செய்திகள் (4) தேர்தல் (4) தொண்டு நிறுவனங்கள் (1) தொலைக்காட்சி (2) தொழிலாளர் (6) ந.பெரியசாமி (1) நகர்ப்புற விவசாயம் (1) நகைச்சுவை (1) நக்கீரன் (1) நதிம் சயித் (1) நந்தலாலா (1) நந்தன் (1) நரேந்திர மோடி (6) நலத்திட்டங்கள் (2) நவம்பர் புரட்சி (1) நாடகம் (1) நாடாளுமன்றத் தேர்தல் 2014 (2) நாணய மதிப்பு (1) நாறும்பூநாதன் (1) நிகழ்வுகள் (154) நிலப்பிரபுத்துவம் (1) நிலமோசடி (1) நீதித்துறை (2) நீலவேந்தன் (2) நுகர்வுக் கலாச்சாரம் (2) நூல் அறிமுகம் (12) நூல் வெளியீடுகள் (1) நெல்சன் மண்டேலா (1) நேட்டோ (2) நையாண்டி (26) நையாண்டி் (14) ப.சிதம்பரம் (3) பசுபதி (1) படுகொலை (3) படைப்புகள் (2) பட்ஜெட் (1) பணவீக்கம் (2) பதிவர் வட்டம் (3) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பரிந்துரைகள் (5) பழங்குடி (1) பள்ளிக்கூடம் (1) பறவைகள் (1) பன்னாட்டுக் கம்பெனிகள் (3) பா.ஜ.க (3) பாகிஸ்தான் (2) பாடல் (5) பாதல் சர்க்கார் (1) பாதுகாப்பு (1) பாரதி (2) பாலபாரதி (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வன்முறை (6) பாலு மகேந்திரா (1) பால் சமத்துவம் (1) பாஜக (1) பி.சுகந்தி (1) பி.ராமமூர்த்தி (1) பிடல் காஸ்ட்ரோ (3) பிரணாப் முகர்ஜி (1) பிரபாத் பட்நாயக் (3) பிரளயன் (2) பிரிட்டன் (1) பிர்தவ்ஸ் ராஜகுமாரன் (1) பிளின் (1) பு.பெ.நவமபர் 2011 (1) புகைப்படங்கள் (1) புதிய பரிதி (2) புது விசை (12) புதுமை (1) புத்தக அறிமுகம் (2) புத்தகக் கண்காட்சிகள் (2) புத்தகம் (18) புத்தகம் பேசுது (17) புத்தகம் பேசுது நவம்பர் 2011 (8) புத்தகாலயம் (2) புத்தாண்டு (1) புபே (2) புபே டிச11 (8) புரட்சி (2) புவி (1) புவி டிச11 (5) புவி நவ 2011 (7) புனைவு (1) புஷ் (1) பெட்ரோல் (7) பெண் (11) பெண் விடுதலை (1) பெண்குழந்தை (1) பெண்ணியம் (9) பெண்ணெழுத்து (1) பெரியார் (2) பெருமுதலாளிகள் (7) பேட்டி (2) பேரா.சிவசுப்பிரமணியன் (2) பேஸ்புக் (1) பொருளாதார நெருக்கடி (2) பொருளாதாரம் (24) போக்குவரத்து (1) போராட்டம் (15) போலீஸ் தாக்குதல் (3) ப்ரிசம் (4) ப்ரிசம் - தகவல் திருட்டு (7) ப்ரியா தம்பி (1) மக்களுக்கான மருத்துவம் (1) மக்கள் நலப்பணியாளர்கள் (2) மக்கானா (1) மத அடிப்படை வாதம் (1) மதவெறி (3) மதுசூதனன் (1) மம்தா (3) மம்முட்டி (1) மரபணு (1) மலாலாய் சோயா (1) மவோயிஸ்டுகள் (1) மன்மதன் அம்பு (1) மன்மோகன்சிங் (10) மா ற்று (1) மாட்டுக்கறி (1) மாதர் சங்கம் (1) மாதவராஜ் (2) மாவோ (1) மாற்ற (1) மாற்று (223) மின்கட்டணம் (1) மின்சாரம் (1) மீள்பார்வை (2) முதலாளி (1) முதலாளித்துவம் (11) முத்தமாக மாறேன் (1) முத்துக்கண்ணன் (1) முல்லைப் பெரியாறு (7) முறைகேடுகள் (5) மெகாசீரியல் (1) மே.வங்க அரசு (1) மே.வங்கம் (1) மேதினம் (1) மேற்கு வங்கம் (1) மொக்கை (1) மொழி (2) மொழிபெயர்ப்பு (1) மோசடி (1) மோடி (3) மோனிகா (1) யுத்தம் (2) ரத யாத்திரை (1) ரமேஷ் பாபு (2) ராகுல் காந்தி (2) ராடியா (2) ராஜ பக்‌ஷே (1) ரிலையன்ஸ் (1) ருமேனியா (1) லட்சுமணப்பெருமாள் (2) லெனின் (2) லோக்பால் (5) வசந்த பாலன் (1) வண்ணக்கதிர் (1) வரலாறு (19) வலைப்பூக்கள் (1) வழக்கு விசாரணை (1) வாசிப்பு (5) வாச்சாத்தி (1) வால் ஸ்டிரிட் (3) வால்மார்ட் (1) வால்ஸ்டிரிட் போராட்டம் (2) வாழ்க்கை (4) வானியல் (2) விக்கிபீடியா (1) விக்கிலீகஸ் (1) விக்கிலீக்ஸ் (7) விஞ்ஞானம் (2) விமர்சனம் (10) விலையேற்றம் (2) விலைவாசி (11) விலைவாசி உயர்வு (2) விவாதங்கள் (1) விவாதம் (9) விளம்பரம் (1) விளையாட்டு (4) வினவு (1) விஜய் (2) விஜய் மல்லையா (1) வீட்டுவசதி வாரியம் (1) வீரமணி (2) வெண்மணி (2) வெள்ளம் (2) வெனிசுவெல்லா (1) வேலையின்மை (2) வோடாபோன் (1) ஜப்பான் நெருக்கடி (2) ஜாக்கிசான் (1) ஜாதி (1) ஜாபர் பனாகி (1) ஜூலியன் அசாங்க (1) ஜெயலலிதா (9) ஜோதிடம் (1) ஸ்டீவ் ஜாப்ஸ் (1) ஸ்பீல்பர்க் (2) ஸ்பெக்ட்ரம் (6)